Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் கடற்படையை மீளமைக்க இந்தியாத்தரப்பிலிருந்து .....
#1
செவ்வாய்க்கிழமை 18.01.05 8.30 மணி தமிழீழம்
திருமலையில் கடற்படையை மீளமைக்க இந்தியாத்தரப்பிலிருந்து பல்வேறு உதவிகள்.

கடற்கோள் அனர்த்தத்தால் திருகோணமலை மாவட்டத்தில் கடற்படையினர் பாரிய சேதங்களை சந்தித்த நிலையில் அவற்றை மீளக்கட்டியெழுப்ப இந்தியா முன்வந்துள்ளது. கடற்கோளினால் திருகோணமலை மாவட்டத்தில்ää கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகம் உட்பட கடற்படை முகாம்கள் பல பெரும் சேதத்திற்குள்ளாகின.

இந்த மாவட்டத்தின் கரையோரத்தில் சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தினுள்ளிருந்த பல கடற்படைமுகாம்கள் அடித்துச்செல்லப்பட்டன. பலபடையினர் காணமால் போனதுடன் ஆயுதக்களஞ்சியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அனைத்து முகாம்களும் இருந்த இடமே தெரியாமல் போனதால் அவற்றை அவசரமாக மீள் நிர்மாணம் செய்ய வேண்டிய நிலையில் இலங்கை கடற்படையினருக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை-இந்தியா கடற்படையினர் இந்தப்பணிகளில் இணைந்து ஈடுபடவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை கடற்கடையின் விஜயபாகு மற்றும் வலகம்பா படையணியினரே இப்பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு இந்தியப் படையினர் உதவவுள்ளதுடன்ää உபகரணங்களையும் வழங்கவுள்ளனர். இலங்கை வந்துள்ள இந்தியாப் படையினர்ää பொது மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை வழங்கினாலும்ää கடற்படையினருக்கும் உதவவுள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தில் ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்திää துறைமுகச் செயற்பாட்டைமீள ஆரம்பித்த இந்தியா கடற்படையினர் இலங்கை கடற்படையினருக்கு ஏற்பட்ட சேதங்களையும் மதிப்பீடு செய்வதுடன் அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளனர். [b]கடற்கோள் அன ர்த்த நிவாரணப் பணிகளுக்கெனக் கூறிää இலங்கைக்கு வந்துவிட்டு தற்போது இராணுவ உதவிகளை வழங்குவதிலும் இந்தியப் படையினர் அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Source: Pathivu
Reply
#2
:evil: :evil: சொறிநாயள் :evil: தெரியும் தானே முன்னமும் IPKF எண்டு உள்ள வந்து செய்ததை
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)