Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு செல்லும் ஜநா செயலர்
#1
<span style='font-size:23pt;line-height:100%'>கனாமியால் பாதிகப்பட்ட பிரதேசங்களை பார்வையிட இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் சபை செயலர் கொபி அனான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கும் செல்வார் என்று தெரிகின்றது.</span>

Annan's Lanka visit to include LTTE controlled areas

Colombo, Jan 4 (UNI) UN Secretary General Koffi Annan will visit the areas of Northern Wani region controlled by the Tamil Tiger rebels during his two-day official visit to the tsunami hit Sri Lanka scheduled this weekend, LTTE sources said this evening.

''Yes, he will be visiting our areas to see the large-scale death and destruction caused by tsunami waves,'' the sources said.

Mr Annan is scheduled to visit Colombo on a two-day official visit after attending the special summit of ASEAN leaders to be held in Jakarta on Thursday.

During his stay in Colombo, the UN Secretary General will be visiting some of the hardest-hit areas in the country, where the death-toll had crossed 30,000 while nearly 4000 people are still missing.

Meanwhile, the US Secretary of State Colin Powell is also expected to visit the Sri Lankan capital on Friday. His visit will coincide with the arrival of 1500 US Marine troops backed by huge helipad assault ship, Bon Homme Richard and at least 20 helicopters, to join the international task force in carrying out the relief operations.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
நல்ல விடயம்.. எந்த தடையும் இல்லாமல் அவர் வந்து போனல் நல்லது தான்... :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<span style='font-size:23pt;line-height:100%'>இன்னொரு செய்தி ....</span>

ஜ.நா சபையின் செயலாளர் கோபி அனான் வன்னி செல்வார்?

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தைப் பார்வையிட அமெரிக்க இராஜதந்திரிகளைத் தொடர்ந்து இந்த வாரம் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோபி அனான் இலங்கை வருகை தருகிறார். இவர் இலங்கையில் இயற்கையால் அளிந்த பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட இருப்பதுடன் தமிழ் மக்கள் பிரதேசத்திற்கும் பயன் செய்து இயற்கை அளிவுகளைப் பார்வையிட இருக்கிறாரா என்ற சந்தேகம் பலர் மத்தியில் உருவாகியுள்ளது. கோபி அனானின் வருகையும் அவருடைய தென்னிலங்கைக்கான பயணங்களும் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் வன்னிப் பிராந்தியம் முல்லைத்தீவு அகிய பிரதேசங்களுக்கான பயணம் தொடர்பாக இதுவரை எந்தவித தகவல்களும் வெளிவராமல் இருக்கின்றமை பாரிய சந்தேகத்தை பலர் மத்தியில் உருவாக்கியுள்ளதுடன் இவர்கள் யுத்தத்தால் அழிந்த தமிழர் பிரதேசங்களை நேரில் சென்று பார்க்க வேண்டுமென்று பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

நிதர்சனம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
ஐ.நா.செயலாளர் நாயகம் கோஃபி அனான் முல்லைத்தீவுக்கும் செல்லவுள்ளார்

இவ்வார இறுதியில் ஸ்ரீலங்கா வருகைதரவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் கோஃபி அனான் இலங்கைத் தீவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவுää அம்பாறைää காலி அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ள கோஃபி அனான் அங்கு நிகழ்ந்துள்ள பாதிப்புக்களையும்ää நடைபெற்றுவரும் நிவாரண மற்றும் மீள்கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிடுவார் என்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவுக்கோ அல்லது வடக்கிற்கோ கோஃபி அனான் புறப்படுவது இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என்று கொழும்பிலுள்ள அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அவரது பயணத்தில் வடக்கும் கிழக்கும் கட்டாயம் உள்ளடக்கப்படவுள்ளதாக ஐ.நா. தரப்பு ஊர்ஜிதம் செய்துள்ளது.

இதற்கிடையில்ää இதுகுறித்துக் கருத்துக்கூறியுள்ள விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்ரர் அவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் கோஃபி அனான் அவர்கள் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும்ää விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விஜயம் மேற்கொள்ளும் அவரைää அரசியற் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரவேற்றுää சுனாமியின் பாதிப்புக்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு விரிவாக நிலைமைகளை ஆராய்ந்த ஐ.நா. கண்காணிப்பில் செயற்படும் யூனிசெஃப் அமைப்பின் தலைவர் கரோல் பெலமி அவர்கள்ää வடக்கு கிழக்கில் மிகவும் பாதிப்படைந்த சில பகுதிகளுக்கு நிவாரணமெதுவும் வழங்கப்படாதிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வார ஆரம்பத்தில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிவாரணப் பணிகளுக்கான விசேட பிரதிநிதி மார்க்கறீற்றா வால்ஸ்ற்ரொம் அவர்களும் சுனாமி அனர்த்தத்தில் பாதிப்படைந்த அனைத்துப் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் விரிவான அறிக்கையொன்றையும் ஐ.நா.விடம் சமர்ப்பித்திருந்தார்.

இதன் அடுத்த கட்டமாகவே கோஃபி அனானின் விஜயம் அமையுமென்று தெரியவருகிறது. கோஃபி அனானுடன் அவரது பாரியாரும் இவ்விஜயத்தில் பங்கெடுக்கவுள்ளார்.
நன்றி:புதினம்
Reply
#5
வாங்கோ அனான் வாங்கோ தமிழீழம் உங்களை வரவேற்க்கிறது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும் இனத்தவர் நாங்கள் வாங்கோ வாங்கோ!!!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#6
http://www.cybertamils.com/forum/viewtopic...hp?t=7&start=45
Reply
#7
வாங்கோ அனான் வாங்கோ தமிழீழம் உங்களை வரவேற்க்கிறது
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
மீண்டும் ஒரு முறை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாங்கோ அனான்.... தமிழீழத்திலிருந்து தமிழரசன் வேற வரவேற்க்கிறான் வாங்கோ
ஆணால் game குடுக்கிற எண்ணத்தில போகாதேங்கோ!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
********* <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#9
என்ன பதிலில வெட்டு கொத்து எல்லாம் விழுது????? :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#10
<span style='font-size:22pt;line-height:100%'>கனடிய பிரதமர் போல் மாட்டீன் அவர்களும் கனாமி நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனிக்க இலங்கை செல்கின்றார். செய்தி முழுமையாக ஆங்கிலத்தில் .....</span>

Canadian PM to visit tsunami disaster zones, relief team heads to Sri Lanka

OTTAWA (AFP) - Canadian Prime Minister Paul Martin will visit areas stricken by the tsunami disaster in Thailand and Sri Lanka later this month, an official said.

Martin will amend a previously scheduled trip to Asia to visit Sri Lanka, the destination of a Canadian disaster relief team which left on Thursday, and Thailand, where most of the 146 Canadians still missing were on vacation.

He will leave Canada on January 15 and then move on from Thailand and Sri Lanka to previously scheduled trips to China, including Hong Kong, Japan and India, an official in the prime minister's office told AFP.

In the immediate aftermath of the tsunami tragedy sparked by an earthquake of Sumatra, Indonesia on December 26, Martin was criticised for refusing to return from his Christmas vacation in Morocco.

But he has since emerged as the figurehead of the Canadian aid effort, and on Sunday announced the government would double its aid to 80 million Canadian dollars (66 million US).

Private donations in Canada have topped 57.4 million US dollars (70 million Canadian) and the government has promised to match that figure dollar for dollar until January 11.

Five Canadians were killed and 146 are still missing in the disaster, according to latest official figures released on Wednesday.

On Thursday, a Canadian disaster relief team headed for Sri Lanka on a mission to pump safe drinking water and provide emergency care for victims.

A massive Russian-made Antonov cargo plane took off from an air force base in Trenton, Ontario, carrying 50 tonnes of military equipment and relief supplies -- the first of four such flights carrying the 200-member team.

The team will travel first to the Sri Lankan capital Colombo, before a painstaking journey over poor roads to the district of Ampara, whose population of 600,000 has been one of those worst affected by the disaster.

Founded in 1996, Canada's disaster response team (DART) can provide basic medical care, drinking water to 5,000 people, has a limited engineering capacity, and a command and control structure allowing communications between DART, the host country and other aid agencies.

The departure of the team follows criticism over the government's failure to deploy it to the disaster zone more quickly, with one newspaper quipping the team was "Canada's slow-moving DART."

Officials have however argued that the team is not intended to provide immediate relief, but was set up to go into disaster areas to get people back on their feet as the rebuilding effort begins.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!


<b>அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!</b>

ஜ. நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வடபகுதிக்கு வராமலேயே திரும்பச்சென்று விட்டார். ஏன் வரவில்லை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லுகின்றனர்.அனான் வடபகுதிக்குச் செல்வதை சிங்கள பௌத்த மேலாண்மை அனுமதிக்காதென்பது முன்னரே தெரிந்ததுதான்.இதனால்தான் கடைசி நிமிடம்வரை தமிழ்மக்கள் தரப்பில் சுனாமி அனர்த்தத்தால் பெரும் அழிவுகளுக்குள்ளான வடக்கு - கிழக்குப் பகுதிகளையும் நேரில் வந்து பார்த்துப்போகும் படி கோரிக்கை விடுத்துவந்தனர். கொபி அனான் பார்க்க வேண்டிய அனர்த்த அழிவுகளை விட சிங்களபௌத்த ஆதிக்க சக்திகளின் அனர்த்தங் களை இன்று உலகம் முழுவதும் அறிந்துகொள்ள முடிந் திருக்கிறது.

இது இப்பொழுது சந்திரிக்கா ஆட்சியில்தான் இலங்கை யில் நடந்திருக்கும் சம்பவமல்ல.1970 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் சர்வதேச நாடாளு மன்ற பிரதிநிதிகளின் மாநாடொன்று நடந்தது.கொழும்பில் பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பிரதிநிதிகள் என்று பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சமயம் இலங்கையில் சந்திரிகாவின் அம்மா சிறிமா பண்டாரநாயகாவின் அரசு ஆட்சியிலிருந்தது. அந்த மாநாட் டில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயும் கலந்து கொண்டார்.

மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசி தமிழர் தாயகத்துக்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் சென்று பார்வையிடவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.இதற்கு வாஜ்பாயும் சம்மதம் தெரிவித்தார். மாநாடு முடிவடைவதற்கு முன் பிரதிநிதிகள்; நாட்டில் விரும்பிய இடங்களுக்குச் சென்று பார்த்தும் பேசுவதற்கும் வழக்கம்போல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வாஜ்பாயும் மற்றும் சிலரும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒழுங்குசெய்யப்பட்டது.கொழும்பிலிருந்து விமானத்தில்
வாஜ்பாய் குழுவினருடன் தமிழ் அரசுக்கட்சியைச் சேர்ந்த வி.என்.நவரத் தினமும் மற்றும் இரண்டொருவரும் யாழ்ப்பாணம் வந்தனர்.
வாஜ்பாய் குழுவைத் தமிழரசுக் கட்சியினரே யாழ்ப் பாணம் அழைத்துவருவதாகவே இந்த ஏற்பாடு அமைந் திருந்தது.வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒரு நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவரை புரட்டக்கோல் என்று அழைப்பார்கள். வாஜ்பாய் குழுவுக்கும் ஒரு புரட்டக்கோல் பொறுப்பாக விமானத்தில் அவர்களுடனேயே வந்தார்.

யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்களுக்கு ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி எம்.பி.வி.என்.நவரத்தினம் வாஜ்பாயிடம் சொல்லித் தங்களுடன் வருமாறு அழைத்தார்.
இதே விமானத்தில் வந்த அரசின் புரட்டக் கோல் அதற்கெல்லாம் நேரமில்லையென்றும்
தங்களுடனேயே வாஜ்பாய் குழு நிற்க வேண்டுமென்றும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதற்கு இடமில்லையென்றும் தெரிவித்து வாஜ்பாய் குழுவை தம்முடன் வருமாறு கேட்டார்.வாஜ்பாய் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்பொழுது கொபி அனான் சொன்னதுபோல இவரும் அரசின் விருந்தின ராகவே வந்திருந்தார்.விமான நிலையத்தில் வி.என்.நவரத்தினத்திடமும் தமிழரசுக்கட்சி எம்பிக்களிடமும் வாஜ்பாய் பிரியாவிடை பெற்றார்.

நான் அடுத்தமுறை தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாணம் வருவேன். அப்பொழுது தமிழ்மக்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் பார்ப்பேன். அவர்களுடன் பேசுவேன் என்று சொல்லி விடைபெற்று புரட்டக்கோலுடன் சென்றார்.
வாஜ்பாய் அதன்பின் தனிப்பட்ட முறையிலும் வரவில்லை. பிரதம மந்திரியாக பதவியேற்ற பின் உத்தியோக ரீதியிலும் யாழ்ப்பாணம் வரவில்லை! யாழ்ப்பாணமே அவருக்கு நினைவிருக்காது.வாஜ்பாய் வந்த காலத்தில் இங்கு விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. போர்க்களமும் இருந்ததில்லை. இந்தியா வின் காந்தி காட்டிய வழியில் அகிம்சையைப் பின்பற்றிய செல்வநாயகம் தலைமையில் ஜனநாயக வழியில் சென்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி;தான். தமிழர் தாயகத்தில் மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டி ருந்தது.

அன்றைக்கு அம்மாவின் ஆட்சியிலேயே வாஜ்பாய் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களைப் பார்த்துப்போகவும் பேசவும் தேநீர் விருந்தில் தமிழர்களின் விருந்தோம்பலை ஏற்கவும் இடமிருக்கவில்லையென்றால் இன்று சுனாமி அனர்த்தத்தின் பின் மகள் சந்திரிகா அனுமதிப்பாரா?

இதுமட்டுமல்ல 1950 ஆம் ஆண்டுகளில் தொண்டமானாறிலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு நவரத்தினசாமி என்ற நீச்சல் வீரன் முதல் தடவையாக நீந்திச் சென்று உலக சாதனை படைத்தார்.இந்தச் சாதனையைப் பெரும் தயக்கத்துடன் பலநாட்கள் கழித்து இலங்கையில் அன்று ஆட்சியிலிருந்த சேர்.ஜோன் கொத்தலாவலையின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பாராட்டுத் தெரிவித்தது.இதன்பின் பிரதமர் சேர்.ஜோனின் வாசஸ் தலத்தில் நடந்த ஒரு வைபவத்தில் நீச்சல் வீரன் நவரத்தினசாமியை பிரதமர் வரவேற்றுப் பாராட்டுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். நீச்சல் வீரனும் அங்கு சென்றிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நவரத்தினசாமியைக் கைகுலுக்கிப் பாராட்டுவதை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கவே மறுத்து விட்டார்கள்.

இது தான் சிங்கள பௌத்த மேலாண்மை வாதிகள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் இதைத்தான் அவர்கள் இன மத மொழி பாகுபாடற்ற ஒரு மைப்பாடு என்று சொல்லுகிறார்கள்.இன்றும் இலங்கை மக்கள் மத்தியில் சுனாமி பேரலைகள் பேதங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாகச் சொல்லி உலகையே ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கென்று ஒரு நாடு இருக்கிறது. அவர்களுக்கான மொழி அரச மொழியாக இருக்கிறது. அவர்கள் சொல்வதை உலகமும் நம்பும்.சிங்கள பௌத்த மேலாண்மைவாத ஊடகங்கள் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிட்டதாகவே நடந்து கொள்கின்றன.

கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலிருந்த சந்திரிகா அரசுக்கு சுனாமி பேரலைகள் உதவி என்ற பெயரில் அள்ளிக்கொடுக்கும் கொடை வள்ளலாகவுமிருக்கின்றது. ஜே.வி.பியின் விமல் வீரவன்ச இதுதான் புலிகளைப் பேச்சுக்கு இழுக்கவேண்டிய தருணம் என்று அலோசனை சொல்கிறார்.அஸ்கிரிய பீடாதிபதியும் அனுஸானம் வழங்குகிறார். எல்லாமே இலவசமாக வந்து கொட்டும்போது சுனாமியின் பேரழிவில் மாண்டவர்களைப் பற்றியோ உறவுகளைப் பலிகொடுத்து பதறி நிற்கும் மக்களைப் பற்றியோ இவர்க ளுக்கென்ன கவலை?

நாங்கள் மட்டுமென்ன? இழந்த தமிழீழ அரசை மீண்டும் அமைப்பதற்கு 1977 இல் தமிழ் மக்களிடம் ஆணைகேட்டுப் பெற்று. நாடாளுமன்றத்தில் ஆறாண்டுகள் பதவி வகித் தோம். கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றதால் வெற்றி பெற்றவர்கள் நியாயமான முறையில் வெற்றிபெறவில்லையென்று நீதி மன்றக் கதவைத் தட்டி தடுத்துநிற்கிறோம். ஆனாலும் எனக் குப் பதவி ஆசை இல்லையென்று இன்றும் சங்கூதிக்கொண்டு சகுனிவேலை செய்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கும்போது மற்றவர்களைச் சொல்லி என்னபயன்?

நன்றி:- ஈழநாடு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
அனான் ஏன் வன்னிக்கு வரவில்லை. - நிலாந்தன்

இலங்கைத்தீவு குறுக்கே இருந்திராது விட்டால் சுனாமியின் தாக்கம் இந்தியக் கரைகளில் மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் இதில் இலங்கை ஒரு முன்தடுப்பாக (பவராக) மாறி சுனாமியால் வரவிருந்த ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவு அழிவில் இருந்து இந்தியாவை காப்பாற்றியது என்றும் ஒரு இந்தியப் பேராசிரியர் கூறியிருந்தார்.

இப்படி இலங்கைத்தீவு சுனாமியிடமிருந்து தனது கரைகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு காப்பாற்றியது குறித்து புதுடில்லி மகிழ்ச்சியடைந்திருக்குமோ இல்லையோ சுனாமியின் விளைவாகத்தோன்றிய சுனாமி அரசியலின் பிரசாரம் இலங்கைத்தீவில் இப்பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள நாடுகள் தமது துருப்புக்களை இறக்கும் ஒருநிலை தோன்றியிருப்பது குறித்து இந்தியா நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருக்காது.

வெளிப்படையாக இது குறித்து இந்தியா தனது எரிச்சலை வெளிக் காட்டாவிட்டாலும்கூட இப்பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகபோக மேலாண்மையை பொறுத்தவரை இது இடறலான ஒரு விசயமே. எனினும் இது விசயத்தில் இந்தியா வெளிப்படையாகத் தனது வெறுப்பை காட்ட முடியாததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்க முடியும். முதலாவது, மனிதாபிமானக்காரணம், இரண்டாவது, பொருளாதாரக்காரணம்.

முதலாவதின்படி, வருகின்ற எல்லாத் துருப்புகளும் 'மனிதாபிமானம்" என்ற பதாதையின் கீழ் வருகின்றன. உலகில் தற்சமயம் அதிகம் மலினப்படுத்தப்பட்ட அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு சொல் எது என்றால் அது மனிதாபிமானம்தான். அதிலும் குறிப்பாக சுனாமி அரசியலின் மிகவும் அருவருப்பான ஓர் அம்சமே இந்தச் சூதான மனிதாபிமானம்தான்.

1987 இல் இந்தியா ஒப்பரேசன் பூமாலை என்றபெயரில் வடமராட்சியிலும் ஏனைய பகுதிகளிலும் உணவுப் பொதிகளை போட்டபோதும் அதை மனிதாபிமான உதவி என்று சொல்லித்தான் நியாயப்படுத்தியது. இப்பொழுதும் அப்படித்தான். இப்பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள பேரரசுகள் மனிதாபிமானம் என்ற பெயரில் இலங்கைத்தீவிலுள்ள தமது துருப்புக்களை இறக்கியிருக்கின்றனர்.

எனவே மனிதாபிமானம் என்ற போர்வைக்குள் நிகழும் துருப்புக்களை நகர்த்தும் அரசியலை வெளிப்படையாக எதிர்க்கமுடியாத ஒரு நிலையில் இந்தியா உள்ளது. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம் பொருளாதார ரீதியிலானது. பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியா உலகின் விரைந்துவரும் ஆறாவது பெரிய பொருளாதாரமாகக் காணப்படுகிறது. உலகின் கணனி மென்பொருள் துறையில் ஆதிக்கம் பெற்றிருப்பவர்களில் முப்பது விகித்தினர் இந்தியர்களே எனப்படுகிறது. இந்நிலையில் தனது பொருளாதாரத்தை சீனாவுக்கு நிகரானதாக பலப்படுத்தவிரும்பும் இந்தியா மேற்கை அதிகம் பகைக்கவிரும்பவில்லை என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே மேற்குடன் பொருளாதார ரீதியில் மிகவும் நெருங்கி ஒத்துழைது வரும் இந்தியா இலங்கைத்தீவில் மேற்கின் பிரசன்னம் தனது உறுத்தலான விதத்தில் அதிகரித்துவருவதை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும் என்று நம்புவதுதெரிகிறது.

தற்சமயம் இலங்கைத்தீவினுள் இறக்கப்பட்டுள்ள துருப்புக்கள் பிறகொரு நாள் திருப்பி எடுக்கப்படக்கூடும். ஆனால் அவை திருப்பி எடுக்கப்படுமோ இல்லையோ இலங்கைத்தீவினுள் இந்தியாவைத்தவிர வேறு நாடுகளும் துருப்புக்களை இறங்கமுடியும் என்பது இப்பிராந்தியத்தின் படைத்துறை அரங்கில் அண்மை தசாப்தங்களில் ஒரு புதிய தோற்றப்பாடே. இது இதன் பின்னரான சுனாமி அரசியல் நகர்வுகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே ஜ.நா.செயலர் கோபி அனானின் வன்னி விஜயம் தவிர்க்கப்பட்தையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

கொபி அனான் வன்னிக்கு வராததிற்கு வெளிப்பiடாயக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இதுவிசயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதும் வெளிச்சக்திகள் செல்வாக்கை பிரயோகித்திருக்கமுடியுமோ என்பது பற்றியும் சிந்திக்கப்படவேண்டும்.

ஏனெனில் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளின் படை பிரசன்னம் என்பது இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒன்று என்பது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் தெரியும். இது விசயத்தில் எரிச்சலடைந்திருக்கும் இந்தியாவை மேலும் எரிசலுட்டக்கூடாது என்று அவை விரும்பியிருந்தாலும் கொபி அனான் வன்னிக்கு வருவதை ஊக்குவிக்காமல் விட்டிருக்கலாம்.

அதாவது கொபி அனான் வன்னிக்கு வந்திருந்தால் அது புலிகளையும் புலிகளின் காட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் ஜ.நா. அங்கீகரித்துவிட்டதாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கும். இப்படி புலிகளை அங்கீகரிக்கும் விதத்தில் ஜ.நா. நடந்துகொண்டால் அதனால் இந்தியா மேலும் சீண்டப்படலாம் என்று ஜ.நாவை பின்னாலிருந்து இயங்கும் நாடுகள் சிந்தித்திருக்கக்கூடும். எனவே அடுத்தடுத்து இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க அவர்கள் விரும்பியிருக்கக்கூடும்.

தவிர இது விசயத்தில் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தங்களை பிரயோகித்திருக்குமா இல்லையா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

எனவே கொபி அனான் வன்னிக்கு வரத்தவறியமை என்பது வெறுமனே கொழும்பு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. இதில் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்களை முற்றாக நிராகரிப்பதற்கில்லை.

எதுவோ, கொபி அனான் வன்னிக்கு வராமலே திரும்பிச்சென்றுவிட்டார். சுனாமி கொண்டு வந்த புதிய நிலைமைகளின் பிரகாரம் தமிழர்களை சமாதானத்தை நோக்கி ஊக்குவித்திருக்கக் கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்;டுவிட்டது என்பதே உண்மை.

கொபி அனான் விஜயம் இலங்கைத்தீவின் இனப்பிளவுகளை பிரதி பலிக்கும் ஒன்றாக முடிந்துவிட்டது.

மட்டுமல்ல அது சுனாமிக்குப் பிந்திய இலங்கைத்தீவின் அரசியலில் சமாதானத்தைக் குறித்து கற்பனை செய்து கொண்டிருப்பத்தில் அர்த்தமில்லை எனும் ஒரு விரத்தி நிலைக்கு தமிழர்களை இட்டுச்செல்லக்கூடியதாயும் இருக்கிறது.

மேற்கு நாடுகளுக்கும் புலிகளுக்குமிடையே ராஜீய நெருக்கம் எதுவும் புலிகைள வெளிப்படையாக அங்கீகரிப்பதில்தான் அதன் உச்சத்தை அடைய முடியும். ஆனால், இதுவிசயத்தில் ஜரோப்பிய நாடுகள் சற்று நெகிழ்வாகவும் அமெரிக்காபோன்ற நாடுகள் நெகிழ்ச்சிக்குறைவாகவும் நடந்துகொள்ளும் ஒருபோக்கே சுனாமிக்கு முன்பு காணப்பட்டது. சுனாமிக்குப்பின்பும் இந்தப் போக்கில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பதையே கொபி அனான் வன்னிக்கு வரத்தவறியதன்மூலம் உணர்த்தபட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

இங்கு ஒன்றைச்சுட்டிக்காட்ட வேண்டும். அமெரிக்கா வேறு ஜரோப்பா வேறு அல்ல. அமெரிக்காவுக்குப் பிடிக்காத ஒன்றை ஜரோப்பா தன்னிச்சையாக முடிவெடுத்துச்செய்கிறது என்பதும் அல்ல. இதில் அமெரிக்கா ஒரு கண்டிப்பான மூத்த அண்ணனைப்போலவும் ஜரோப்பா விட்டுக் கொடுக்கின்ற இளைய அண்ணைனைப்போலவும் நடந்துகொள்கின்றன. என்பதே இங்குள்ள மெய்நிலை.

மூத்த அண்ணன்தான் இறுக்கமாகவும் கண்டிப்பாகவும் இருப்பதுபோல காட்டிக்கொண்டு இளைய அண்ணனுக்கூடாக விவகாரங்களைக் கையாளும் ஒரு அரசியல் இது.

ஆனால், இந்த அரசியலால் சுனாமிக்கு முன்பு காணப்பட்டதைவிடவும் இப்பொழுது சுனாமிக்குப் பின்பு சந்திரிகா அதிகம் பலமடைந்துவருவதாகவே தோன்றுகின்றது.

முன்பு ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைக்காட்டி, பயமுறுத்தி வந்தார். சந்திரிகாவிடம் அப்படியொரு பலமான வலைப்பின்னல் இருக்கவில்லை. ஆட்சிக்குவரும் பொருட்டு அவர் கூட்டுச் சேர்ந்த சக்திகளாலும் பிராந்திய மட்டத்தில் அவர் அதிகம் இந்தியச் சாய்வாகக் காணப்பட்டதாலும் மேலும் அவரிடம் மிலிந்தமொறகொட போன்ற முழுக்கமுழுக்க அமெரிக்க மயப்பட்ட இடைத் தூதர்கள் இல்லாதபடியாலும் அவரால் ரணில் அளவுக்கு மேற்குடன் நெருங்கிவர முடிந்திருக்கவில்லை.

ஆனால், சுனாமி வந்து இந்தக் குறையை நிவர்த்திசெய்திருக்கின்றதோ என்று யோசிக்கத்தோன்றுகின்றது. வந்து குவியும் நிதி மற்றும் வந்துபோகும் ராசதந்திரிகள் போன்றோரின் தொகை மற்றும் பதவிநிலை போன்றவற்றுக்கூடாக கூறுமிடத்து சுனாமிக்கு முன்பு இருந்ததை விடவும் சுனாமிக்குப் பின்பு அரசாங்கத்தின் பேரம்பேசும் சக்தி ஒப்பீட்டளவில் அதிகரித்துவருவது தெரிகிறது.

டோக்கியோ நிதி உதவிகள் வரத் தவறிய ஒரு வெற்றிடத்தில் செய்வதறியாத தத்தளித்துக் கொண்டிருந்த அரசாங்கத்தை சுனாமி நிதி உதவிகள் வந்து காப்பாற்றத் தொடங்கிவிட்டன. டோக்கியோ நிதிக்கு கட்டுப்பாடுகள் உண்டு. சமாதானம் செய்யும் நாடுகளால் அது நிர்வகிக்கப்படும். ஆனால் சுனாமி நிதி அவ்வாறல்ல அது நிபந்தனைகள் அற்றது. அதை முகாமைத்துவம் செய்யப்போவது அரசாங்கமே. எனவே கைக்கெட்டாத டோக்கியோ நிதியைவிடவும் எதிர்பாராமல் வந்து குவியும் சுனாமி நிதி அதிகம் நெகிழ்சியானதும் அரசாங்கத்தால் விரும்பியபடி கையாளப்படக்கூடியதுமாகும். இது முதலாவது.

இரண்டாவது யுத்தம் ஒன்று வரலாம் என்ற பீதி பரவிக்கொண்டிருந்த ஒருவேளை சுனாமி வந்து எல்லாவற்றையும் திசைதிருப்பிவிட்டது. இதுவும் சந்திரிகாவுக்கு ஒரு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மூன்றாவதாக ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சிகள் எஸ்.பி.திஸநாயக்காவை மீட்பது என்றபெயரில் செய்யத்திட்டமிட்டிருந்த எதிர்ப்பு இயக்கத்தையும் சுனாமி பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது.

எனவே சுனாமிக்கு முன்பிருந்ததைவிடவும் அரசாங்கம் இப்பொழுது பலமாகிவருகிறது. இதன்படிகூறின் இலங்கைத்தீவின் வலுச்சமநிலை சுனாமிக்கு முன்பு இருந்ததைவிடவும் சுனாமிக்குப் பின்பு படிப்படியாக அரசாங்கத்திற்குச்சாதகமாக மாறக்கூடிய ஏதுநிலைகளே அதிகம் தெரிகின்றன.

இதுநல்லதுக்கல்ல, வலுச்சமநிலை தமக்குப் பாதமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தமிழர்கள் மத்தில் தோன்றும்போதெல்லாம் அவர்கள் சமாதானத்தில் நம்பிக்கையிழந்துபோவதே வழமை.

இப்பொழுது உருவாகிவரும் புதிய நிலைமைகளுக்கு மேற்கு நாடுகளே கூடுதல் பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் திட்டமிட்டோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வலுச்சமநிலையை மாற்றக் கூடியவிதமாக உதவிகளை வழங்கி வருவது அவர்கள்தான். சுனாமி தாக்கப் போவது தெரிந்தும் அசிரத்தையாக இருந்ததுபோல இந்தவிசயத்திலும் அவர்கள் அசிரத்தையாக இருப்பார்களா அல்லது முன்னெச்சரிக்கையோடு செயற்படுவார்களா?

ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
பேச்சை உடன் ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் அழுத்தம்

அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்துவரும் இந்நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க கோரி அமெரிக்காவும் அதன்நேச நாடுகளும் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்குலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக ஜே.வி.பி.யின் தலைமை பகிரங்க எச்சரிக்கை விடுத்திருப்பதையடுத்தே இந்த அரசியல் நெருக்கடிக்குள் ஜனாதிபதி சந்திரிகா சிக்கியுள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்காது விட்டால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிவடையச் செய்து மீண்டும் போர் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடுமென்றும் அவ்வாறு போர் மூண்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மூலமாகவே இந்த எச்சரிக்கையுடன் கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், நோர்வே, கனடா, இத்தாலி போன்ற நாடுகளே தற்போது இலங்கை விவகாரத்தில் கூடிய கவனமெடுத்து வருவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அரசாங்கத்திற்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தையும், தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்க முயற்சிக்கக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


--------------------------------------------------------------------------------
வீரகேசரி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)