12-27-2004, 04:44 AM
இயற்கைச் சீற்றத்தில் சிக்கிய இலங்கை....
இந்தோனேசிய தீவான சுமத்ரா தீவுகளின் கடற்பரப்புகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவின் எல்லைக்குள் வரும் நாடுகள் பல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவின் தென் மானிலங்கள் (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை, அந்தமான், நிக்கோபார், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் சீற்றத்தைக் காட்டியுள்ளன.
நிலநடுக்கத் தாக்கம் றிச்டர் அளவில் 8.9ஐ அடைந்துள்ளது. இது 5வது மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளைவுகள் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதை விட சுனாமி (Tsunami) எனப்படும் இராட்சத கடலைகள் மூலமே எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைப்பிரதேசங்களை நோக்கி கடல்நீரின் நகர்வு அதீத அசௌகரியத்தையும் பலத்த இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை கடலோரப் பிரதேசங்கள் அடங்கலும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீவின் கிழக்கு மாகாணங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிளந்தோரின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டிய வேளை பாதிக்கப்பட்டோர் அளவு ஒரு மில்லியனை எட்டியுள்ளது.
அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எந்த அளவுக்கு நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும் பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு பெரிதுமே காணப்படுகிறது. அமைப்புகள் பொதுமக்களிடம் நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதில் தீவிரமாக இயங்குகின்றன. ஏற்கனவே கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் அரசு சார்பான நிவாரண நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்முறை இந்தப் பிரதேசவாத அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. காலகட்டம் இப்படி இருக்க அண்டைய நாடான இந்தியப் பிரதமர் உதவிகளுக்கான உறுதியை அளித்துள்ளார்.
இலங்கை அரசு சம்பவத்தை ...is National Disaster....என அறிவித்துள்ள சந்தர்ப்பத்தில் சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படவே செய்கின்றன....... உயிரிழப்புகளால் ஏற்பட்ட ஓலங்கள் இன்னமும் ஓயவில்லை
நன்றி - விகடன்
இந்தோனேசிய தீவான சுமத்ரா தீவுகளின் கடற்பரப்புகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவின் எல்லைக்குள் வரும் நாடுகள் பல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவின் தென் மானிலங்கள் (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை, அந்தமான், நிக்கோபார், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் சீற்றத்தைக் காட்டியுள்ளன.
நிலநடுக்கத் தாக்கம் றிச்டர் அளவில் 8.9ஐ அடைந்துள்ளது. இது 5வது மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளைவுகள் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதை விட சுனாமி (Tsunami) எனப்படும் இராட்சத கடலைகள் மூலமே எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைப்பிரதேசங்களை நோக்கி கடல்நீரின் நகர்வு அதீத அசௌகரியத்தையும் பலத்த இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை கடலோரப் பிரதேசங்கள் அடங்கலும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீவின் கிழக்கு மாகாணங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிளந்தோரின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டிய வேளை பாதிக்கப்பட்டோர் அளவு ஒரு மில்லியனை எட்டியுள்ளது.
அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எந்த அளவுக்கு நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும் பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு பெரிதுமே காணப்படுகிறது. அமைப்புகள் பொதுமக்களிடம் நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதில் தீவிரமாக இயங்குகின்றன. ஏற்கனவே கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் அரசு சார்பான நிவாரண நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்முறை இந்தப் பிரதேசவாத அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. காலகட்டம் இப்படி இருக்க அண்டைய நாடான இந்தியப் பிரதமர் உதவிகளுக்கான உறுதியை அளித்துள்ளார்.
இலங்கை அரசு சம்பவத்தை ...is National Disaster....என அறிவித்துள்ள சந்தர்ப்பத்தில் சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படவே செய்கின்றன....... உயிரிழப்புகளால் ஏற்பட்ட ஓலங்கள் இன்னமும் ஓயவில்லை
நன்றி - விகடன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->