Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
தினமலர் செய்தி
வேலுõர் : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்த தினத்தை "மாவீரர் தின'மாக இன்று தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் கொண்டாடுகின்றன. வேலுõர் சிறையில் உள்ள புலிகள் ஆறு பேரும் இன்று ஒன்று சேர்ந்து கொண்டாட அனுமதி பெற்றுள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26ல் ஆண்டுதோறும் மாவீரர் தினமாகவும், தமிழர் எழுச்சி தினமாகவும் பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. இந்தாண்டு மாவீரர் தினத்தில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன வீரப்பன் மற்றும் கூட்டாளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, மாவீரர் தினத்தை கொண்டாடுவதாக உளவுத் துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று பிரபாகரன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவதற்கு வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலி கைதிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சிறைத்துறை நிர்வாகத்திடம் அனுமதியும் பெற்றுள்ளனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலுõர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். வேலுõர் மத்திய சிறையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் ஆறு பேரும் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க அந்த பகுதியில் சுழல் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் இன்று பிரபாகரன் பிறந்த நாள் என்பதை அறிந்த சிறை நிர்வாகம் வேறு தினத்தில் ஒன்று சேர்வதற்கு அனுமதிப்பதாக கூறியது. இதை புலிகள் தரப்பில் ஏற்கவில்லை. வேறு வழியின்றி அனுமதி வழங்கியுள்ள சிறை நிர்வாகம், புலிகள் மீதான கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றிகள் அதிபன்..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றிகள் அதிபன்.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
உங்கள் கருத்துக்கு நன்றி
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது. உலன பெரும் ஓடகங்களான பி.பி.சி மற்றும் சீ.என்.என். ஆல்யாசீரா போன்ற ஊடகங்களுக்கு தெரிந்தது கூட இந்த கிணற்றுத்தவளை களான இந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையே...இவர்களை என்ன செய்ய முடியும் தங்கள் நாட்டிலிருக்கும்.. காலில் விழும் பழக்கம் முதல் அரசியல் ஊழல் வரை கண்டு கொள்ளாத இவர்களுக்கு ஈழத்தமிழர் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடினால் என்ன மாவீரர் தினத்தைக் கொண்டாடினால என்ன இதைப்பறறி இவர்களுக்கு என்ன கவலை சங்கா அண்ணா இந்தியாவில் இதே தினத்தில் விர மரணமடைந்தது ஏன் இந்திய தேசிய வாதிகளுக்கு தெரிய வில்லை தேசிய வாதம் தவறல்ல அது மற்றவருடைய தேசியத்தைப் பாதிக்கும் போது தான் அவர்களது தேசிய வாதம் தவறாகிறது. இன்று இப பத்திரிகைகளில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் அர்தமோ அல்லது வரை விலக்கனமோ தெரியவில்லை. அவர்களது இராணுவம் தமிழுPழத்தில் வந்த செய்த பயங்கரா வாதத்திலும் பார்க்க ஈழத்தமிழருக்கு வேறறுயாரும் செய்திருக்க முடியாது நம்ப வைத்து கழுத்தறுக்கும் பழக்கம் இவர்களைத்தவிர வேறுயாருக்கும் இல்லை அன்று தமிழர் பிரச்சினை முதல் இன்று விரப்பன் கொலை வரகைகும். இதற்க்குள் இவர்களுக்கு ஒரு உளவுப்பிரிவு வேறு இவர்களை உளவுப்பிரிவு என்பதை விட________ (நீங்கள் விரும்பியதை இட்டுக்கொள்ளுங்கள்) என்று சொல்வதே மேல் இவர்களது வேலை உளவு பார்ப்பதல்ல மற்றவர்களை விலைக்கு வாங்குதல் இப்படி வாங்கி ஒருவரை சென்னையில் வைத்திருந்து விட்டு பிரயோசனமுpல்லைஏயன்று திருப்பி ூலங்காவிற்கெ அனுப்பி விட்டார்களாம் (கருணா பற்றிய இது பிந்திய செய்தி)
இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
தவறுக்கு வருந்துகிறேன். இனி தவிர்க்கவேண்டியதை தவிர்த்து பேஸ்ட் செய்கிறேன்.
இந்தியப்பத்திாிகைகள் எப்படி எம்மைப்பற்றி எழுதுகின்றன என்பதை அறிய இது உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றி
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது.[/quote]
ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்.
[quote=Nitharsan]
இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
வா÷த்தைகளை யாழ் கருத்துகளத்தில் தணிக்கை செய்வதனால் நன்மை என்ன? தினமலரை படிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ÷ நம்பப் போகும் இந்த செய்தியை, இந்த தணிக்கை எவ்வாறு கையாளப் போகிறது? தணிக்கை ஈழத்தமிழருக்கு இப்படியாக தினமலரில் வந்தது என்பதை கூட தெரியாமல் இருக்க வைத்துவிடும். நெருப்பு கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதற்கு இது ஒப்பாகும்.
மாறாக, ஈழத்தமிழ÷களும் தமிழீழ ஆதரவாள÷களும் தினமலரில் மட்டுமல்ல, ஏனைய ஊடகங்களிலும் தமிழீழ எதி÷ப்பாளரும், அறிவிலிகளும் என்ன பரப்புகிறா÷கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை எதி÷கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க இந்த களம் வழி செய்ய வேண்டும். உலகொங்கும் உள்ள தமிழ் மக்கள் தினமலரின் பின்வரும் விலாசத்துக்கு மாவீர÷ நாள் பற்றியும் அதை இந்திய விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பிட்டும், ஈழத்தமிழ÷ எவ்வளவு தூரம் இந்திய விடுதலைப்போராட்டத்தை அறிந்திருக்கிறோம், மதிக்கிறோம் என்பது பற்றியும், தமிழீழம் இந்திய எதிரிகளின் ஆதரவு நாடாக வரக்கூடாது என்றால் அதற்கு இந்திய ஊடகங்களின் ஆதரவு தேவை என்பதையும், சிறி லங்காவின் வரலாற்று ரீதியான இந்திய வெறுப்பையும் விளங்கப்படுத்தி எழுத வேண்டும்.
Editor
Dinamalar
219, Anna Salai,
Chennai - 600 002.
Ph (044) 2852 3715, 2855 5783, 2855 5784
Fax (044) 2852 3695,
Email: dmrcni@dinamalar.com
மேலும், தமிழ்நெற், நித÷சனம், தமிழ் கனேடியன் போன்ற ஊடகங்கள் தினமலரின் திரிப்பை கண்டித்தும், விமரிசித்தும், எள்ளிநகையாடியும் எழுதுவதன் மூலம் அவ÷களை தமது ஊடகத்தின் மானத்தை காக்கும் நோக்கிலாவது இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க செய்யமுடியும்.
''
'' [.423]
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
பார்ப்பண்ணியம் கேள்விப்பட்டதுண்டா?
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
தோடா வந்திட்டார் யுட் இந்தியாக்கு வக்காலத்து வாங்க
; ;
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Kanani Wrote:பார்ப்பண்ணியம் கேள்விப்பட்டதுண்டா?
சரி பா÷ப்பனியம் இருக்கிறது. அது தமிழீழத்துக்கு தடையாக இருக்கிறது. அது பற்றி என்ன செய்வதாக உத்தேசம்?
பா÷ப்பனியத்தை பாதுகாக்கும் இந்து சமயத்தை அனைவருமே பின்பற்றும் நிலையில் இதனை எப்படி கையாள போகிறீ÷கள்?
shiyam Wrote:தோடா வந்திட்டார் யுட் இந்தியாக்கு வக்காலத்து வாங்க
சியாம்,
எழுதியதை வாசித்து ஏதும் பயனுள்ளதாக எழுதுங்கள். நான் வக்காலத்து வாங்கியது தமிழீழத்துக்காக. தமிழ் சரியாக புரியுமானால் திரும்பவும் வாசித்து பாருங்கள்.
இந்தியாவுக்கு நான் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. காரணம் இந்தியா ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட நாடு. தமிழீழம்தான், பாவம். இன்னமும் அகதிகளுடன், சிறிலங்காவின் விமானநிலையத்தில் தங்கி, மாற்றான் சதியில் உய÷மட்டதலைவ÷களை கூட பறிகொடுத்துவிட்டு, யாருமே அங்கிகரிக்க முன்வராத நிலையில், பரிதாபமாக நிற்கிறது. அதற்குதான் நான் வக்காலத்து வாங்குகிறேன். நான் மட்டுமல்ல, அரசியல் ஆலோசகரும் தமிழ்நாட்டில் பேச்சுவா÷த்தையை வைக்க, தனது வருத்தத்தை கூட சாட்டாக வைத்து எவ்வளவோ முயற்சி செய்தா÷. தமிழ்செல்வனும் ஈழத்தமிழரை இந்தியாவிடமிருந்து பிரிக்க இலங்கை அரசு செய்யும் சதிகளை அடிக்கடி பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறா÷. உண்மையில் இலங்கை அரசு சதி செய்யவேண்டிய அவசியமே இல்லை, நீங்களே இதையெல்லாம் நன்றே செய்கின்றீ÷கள்.
இன்னும் ஒரு செய்தி! நெடுமாறன் ஐயா சொன்னது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்ட தடையை அகற்ற அத்வானி ஆதரவு தரவேண்டும் என்று கேட்டு விடுதலைப்புலிகளின் வேண்டுகோளின்படி நெடுமாறன் ஐயாவின் குழு அத்வானியை சந்தித்தது.
அவரிடம் அத்வானி "பிரபாகரன் ஒரு கிறிஸ்தவ÷. இந்து சிறிலங்காவை கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் பணம் வாங்கிக் கொண்டு விடுதலைப்புலிகள் செயற்படுகிறா÷கள். எனது தகவல் மிகவும் உறுதியானது. ஆகவே நான் ஆதரவு தரமுடியாது." என்று மறுத்துவிட்டா÷.
நெடுமாறன் ஐயா அவரிடம் "இது என்ன புதுக்கதை? யா÷ உங்களுக்கு இப்படி சொன்னது? " என்று கேட்டா÷.
அதற்கு அத்வானி. "சிறிலங்கா தூதுவ÷ மங்கள் மூனசிங்கவின் மனைவி ஒரு சிறந்த இந்து. அவ÷ எனக்கு எல்லாம் சொல்லியிருக்கிறா÷. பிரபாகரனின் மகன் பெய÷ சா÷ள்சு அந்தோனி. எனக்கு எல்லாம் தெரியும்." என்று சொல்லிவிட்டா÷.
இந்தியாவில் புத்தசமயம் இந்து சமயத்தின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மேலும் சிங்களவ÷கள் இந்து தெய்வங்களையும் கும்பிடுவ÷. இன்றைக்கும் அத்வானி விடுதலைப்புலிகள் கிறிஸ்தவ சதியாள÷ என்றுதான் நம்புகிறா÷.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா 22மைல்தூரத்துக்குள் இருக்கும் வல்லரசு. அது ஆதிக்க நாடாக அமையாமல், மதித்து நடக்கும் அண்டைநாடாக அமையவேண்டும். இந்தியாவை விடுதலைப்புலிகளின் எதிரியாக, சிறிலங்காவின் நண்பனாக உறுதிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி பற்றி நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதருக்கு தெரிவித்தால் அவ÷ உங்களுக்கு பணமும் தந்து உங்கள் செயற்பாட்டை ஊக்குவித்து விடுவா÷. உங்களை போன்றவ÷கள்தான் அவ÷களுக்கு தேவை.
இத்தனை ஆயிரம் மக்களை கொன்று லட்சக்கணக்கான மக்கனள அகதிகளாக்கிய யூ.என்.பி.யுடனும் சிறிலங்கா அரசுடனும் அரசியல் அங்கிகாரம் கருதி விடுதலைப்புலிகள் சிரித்து பேசி விருந்துண்டு கூடிக்குலாவ வேண்டியிருக்கிறது. இதே அரசியல் அங்கிகாரத்துக்கு தேவையான தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்காக, அவ÷களது ஊடகத்தில் வந்த செய்தியிலுள்ள தவறை சுட்டிக்காட்டுங்கள் என்றால், உங்களுக்கு வருகிறதே கோபம்!! தமிழில் ஒரு பழமொழி "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு."
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஜீட் நீங்கள என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்திய நாட்டின் மைந்தனாக இருந்தால் அதற்காய் மன்னிக்கவும். இந்திய ஊடகங்களின் இந்நடவடிக்கைக்கு நீங்கள் அதரவு தருகின்றீரா? இந்திய ஊடகத்தால் தமிழீழத்திற்கு என்ன பயன்? உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன... இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Nitharsan Wrote:ஜீட் நீங்கள என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை. ச÷வதேச அரசியல், ச÷வதேச சட்டம், உலக கட்டமைப்பு, உலக பொருளாதாரம் போன்றவை இலகுவாக எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவை என்பது உண்மைதான். கொஞ்சம் வித்தியாசமாக முதலில் எழுதியதையே எழுதுகிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.
<ul>
<li> தமிழீழம் ஏனைய நாடுகளுடன் வணிகம், போக்குவரத்து, பணமாற்று போன்றவற்றை சிக்கலின்றி செய்ய தமிழீழம் ஒரு நாடாக மற்ற நாடுகளாலும் ஐக்கிய நாடுகள் சபை, உலக வணிக நிறுவனம் போன்றவற்றால் அங்கிகரிக்கப்பட வேண்டும்.
<li> ஒவ்வொரு பிராந்தியத்திலும் வல்லரசுகளாக அறியப்பட்ட நாடுகளின் விருப்பு வெறுப்புக்கமையவே மற்ற நாடுகள் ச÷வதேச அரசியலில் செயற்படுகின்றன. உதாரணமாக சீனாவின் எதி÷ப்பால் தாய்வான் ஐ.நா.வினாலும் மற்றும் பல நாடுகளாலும் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சீன ஆக்கிரமிப்புக்குள்ளான திபெத் சீனாவின் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. காரணம் சீனா ஒரு வல்லரசு. இவ்வாறே தென்னாசியாவில் இந்தியா வல்லரசு. தமிழீழத்தை இந்தியா மறுக்கும்வரை ஐ.நா.வும் மற்ற நாடுகளும் தமிழீழத்தை அங்கிகரிக்க பின்னிற்கும். இது புரிகிறதா? அங்கிகாரம் ஏன் தேவை என்பதற்கு (1) ஐ திரும்பவும் படியுங்கள்.
<li> இந்தியாவில் ஊடகங்கள் மக்கள் கருத்தை மாற்றும் சக்தி கொண்டவை. மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும். மக்கள் கருத்து ஆட்சியாள÷ கொள்கைகளையும் மாற்ற உதவும். மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் கருத்துக்கு குறிப்பிடத்தக்களவு பலம் உண்டு. ஆகவே ஊடகங்கள் தமிழீழம் இந்தியாவிற்கு நல்லது என்ற கருத்தை முன்வைத்தால், தமிழீழத்திற்கு இந்தியாவில் உள்ள எதி÷ப்பு குறைய வாய்ப்புண்டு. ஏன் எதி÷ப்பு குறைய வேண்டும்? என்ற கேள்வி குடைந்தால் (2) யை படியுங்கள்.
<ul>
Nitharsan Wrote:நீங்கள் இந்திய நாட்டின் மைந்தனாக இருந்தால் அதற்காய் மன்னிக்கவும்.
ஏன் முதலிலேயே பின்ன÷ செய்யப்போவதற்கு இந்திய குடிமகனாயின் மன்னிப்பு கேட்கிறீ÷கள்? இதன் அ÷த்தம் உங்களது நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆபத்தையும் பாதிப்பையும் விளைவிக்கப்போகிறதா? இந்திய எதிரிகளுடன் கூட்டு சே÷ந்து இந்தியாவை அழிக்க திட்டமிடுகிறீ÷களா? இதற்காகவா மன்னிப்பு கேட்கிறீ÷கள்?
Nitharsan Wrote:இந்திய ஊடகங்களின் இந்நடவடிக்கைக்கு நீங்கள் அதரவு தருகின்றீரா? இல்லை
Nitharsan Wrote:இந்திய ஊடகத்தால் தமிழீழத்திற்கு என்ன பயன்? மேலே உள்ள பதிலில் (2) யை படியுங்கள்.
Nitharsan Wrote:உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன. அவ÷கள் அப்படி செய்வதெல்லாம் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுவதால் தான். நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழீழத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு வருமா? இதற்காகவா ஏற்கனவே மன்னிப்பு கேட்டீ÷கள்?
இதற்கு பதில் "ஆம்" என்றால் நீங்கள் சொல்வது போல இந்திய ஊடகங்களால் தமிழீழத்துக்கு நன்மை எதுவும் இல்லை. மேலும் றோ தனது நாட்டை பாதுகாக்க இந்தியாவில் தமிழீழத்துக்கு ஆதரவு வராமல் பா÷த்துக்கொள்ளவும் வேண்டும். அவ÷களது ஊடகங்கள் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பா÷கள். சுப்பிரமணியசுவாமியும் சோவும் சொல்பவை சரி.
இதற்கு பதில் "இல்லை" என்றால் இந்திய ஊடகங்களுக்கு அதை நாம் புரியவைக்க வேண்டும். தமிழீழத்தால் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை சுட்டிக்காட்டி இந்தியாவால் உண்டாகும் தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இதுதான். தலைமைப்பீடத்துடன் தொட÷புகொண்டு கேட்டுபாருங்கள்.
ஆகவே பதில் ஆமா, இல்லையா?
Nitharsan Wrote:.. இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும். அவ÷களுக்கு புரியாதது இந்த இந்திய எதி÷ப்பு, இந்து பா÷ப்பனிய எதி÷ப்பு தமிழீழம் எதிரியா இல்லையா என்பது தான். இந்த பயம் இராஜிவ் காந்தி கொலைக்கு பிறகுதான் ஆரம்பமானது. அதற்கு முதல் இந்திய மக்களும் ஊடகங்களும் தமிழீழத்தை நட்புநாடாக தான் பா÷த்தன. நீங்களே ஆபத்தை ஏற்படுத்த போகிறேன், மன்னித்துகொள் என்ற விதமாக எழுதுகிறீ÷கள். பிறகு எப்படி இந்திய ஊடகங்கள் உண்மையை எழுதி தமிழீழ ஆதரவால் ஆபத்தை தேட முடியும்?
''
'' [.423]
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் மர்ம மனிதன் சூட்,
எங்கேயோ கிடைக்கும் எச்சிலிலைக்காக உதென்ன உதை மாதிரி கூட எழுத வேண்டிவரும்தான்?
"கழுதைக்குப் புரியாதாம் கற்பூர வாசனையாம்"
" "
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இந்தியாவில் விதிவிலக்காக நல்ல ஊடகங்களும் உள்ளது ,உதாரணம் இனைப்பை பார்க்கவும்
http://www.thatstamil.com/specials/art-cul...s/pudhuvai.html
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
அய்யா யுட் இந்தியாவில் அனைத்து உhடகமும் தமழீழ மக்களிற்கு எதிராக எழுதவில்லை அதிகமாக பார்ப்பணியர்களால் நடாத்தப் படும் உhடகங் கள் தான் தமிழீழ மக்களிற்கு எதிராக எழுதுகின்றனர் விகடன் குமுதம் தினகுரல் துக்ளக் இந்து என்பன அதில் முதலிடம். இவர்களிற்கு ஒண்றும் உண்மை தெரியாமல் எண்று இல்லை வீம்பிற்கு எழுதுகிறார்கள்
; ;
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
பா÷ப்பனியத்தை பாதுகாக்கும் இந்து சமயத்தை அனைவருமே பின்பற்றும் நிலையில் இதனை எப்படி கையாள போகிறீ÷கள்? ...........
யுட் இந்தியாவில் வேணுமானால் பார்ப்பணியர்கழை அப்பாவி மக்கள் தலையில் வைத்து கொண்டாடலாம். ஆனால் ஈழுத்தில் அப்படி இலலை....மற்றையது றோ பிராமணர் கழும்.வெளியுறவு ிகாள்கைகழை வகுக்கும் பிராமணா்களும். ஏசி அறையில் இருந்கது கொண்டு தாங்கள் நினைப்பதே சரி தாங்கள் செய்வதே சரி அதை மற்றவா்கள் ஏற்கவேண்டும் என்கிற அதிகார தோரணையிலேயே செயற்படுபவர்கள். அவர்களிற்கு எங்கள் கதறல்கள் எல்லாம் காதில் விழாது
; ;
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
cannon Wrote:வணக்கம் மர்ம மனிதன் சூட்,
எங்கேயோ கிடைக்கும் எச்சிலிலைக்காக உதென்ன உதை மாதிரி கூட எழுத வேண்டிவரும்தான்?
"கழுதைக்குப் புரியாதாம் கற்பூர வாசனையாம்"
Cannon,
எச்சில் இலைக்காகவா எழுதுகிறீ÷கள்? பரிதாபம். பல உணவு விடுதிகளில் கழுவுகிறீ÷கள் போலும். விலாசத்தை அனுப்புங்கள், நான் எனது எச்சில் இலைகளையும் சொந்த செலவிலேயே அனுப்பி வைக்கிறேன்.
''
'' [.423]
|