Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யுத்தம் காரணமாக வடக்கு - கிழக்கில் 15 ஆயிரம் பேர் உடல் உள ரீதியாக பாதிப்பு
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டென்மார்க் அரசின் உதவியுடன் இயங்;கும் புனர்வாழ்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு தவிர்ந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில்; நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே இவர்களைத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக குடும்ப புனர்வாழ்வு நிலையத் திட்டம் என்ற பெயரிலான இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவும் வகையிலான தமது பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளில் யுத்;தம் காரணமாக உடல், உளரீதியாகப் பாதிக்கபட்டவர்களாக இனங்காணப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு உதவியளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தேசிய கலாசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலகு கடன் தவணை அடிப்படையிலான சுயதொழில் உபகரணங்கள்; பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு இவ்வமைப்பினால் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிங்கள தேசம் போரைத் திணித்தால் நாம் விடுதலையை வென்றெடுப்போம்: கரும்புலிகள் தின நிகழ்வில் சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ்
சிங்கள தேசம் யுத்தம் ஓய்ந்த காலத்திலேயே மீண்டும் யுத்தத்தை திணிப்பதற்கு முனைந்தால் தேசியத் தலைவனது செயற்பாடுகளுடாக நாங்கள் நிட்சயம் விடுதலையை வென்றெடுப்போம்.
என மட்டு.அம்பாறை சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கரும்புலிகள் தின பிரதான நிகழ்வு நேற்று பழுகாமம் பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறப்பு தளபதி கேணல் ரமேஷ் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழர் தாயகத்தை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது தேசியத் தலைவரின் நோக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை கட்டமைப்பை சிங்கள அரசு ஏமாற்றி காலத்தை கடத்தி வருகிறது. இது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
இவ்வாறு தொடர்ச்சியாக சிங்கள அரசு ஏமாற்ற நினைத்தால் சிங்கள அரசுகளின் தவறுகள் பிழைகளை சர்வதேச சமூகத்துக்கு தேசியத் தலைவரின் பின்னால் அணி திரண்டு உணர்த்துவோம்.
நாங்கள் மிகவும் பலமாக வலுவாக இருக்கிறோம். இதன் காரணமாகத்தான் எங்களது பலத்தை சிதைக்க பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் எனக் குறிப்பிட்ட சிறப்புத் தளபதி மேலும் கூறுகையில், எமது போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இற்றைவரை பல துரோக செயல்களும் துரோகிகளும் எமது போர் முனைகளில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அனைத்து தடைகளையும் எமது தேசியத் தலைவர் அவர்கள் உடைத்தெறிந்து இன்று தமிழீழத்தை நோக்கிய நகர்விலே நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
எங்களுடைய தேசியத் தலைவனது கால கட்டத்திலே நிட்சயம் நாம் விடுதலையைப் பெறுவோம். எமது தேசிய தலைவனை பொறுத்த மட்டில் இவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல ஏனெனில் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதில் எங்களுக்கொரு தலைமைத்துவத்தை எங்களுடைய இயக்கம் தந்துள்ளது. எங்களது தேசியத் தலைவன் அவர்களை ஒவ்வொரு கூட்டங்களில் சந்திக்கும் போது வித்தியாசமான புதுமைகளை அவரிடம் காண்போம். அந்த தலைவன் தான் இன்று எம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றான். நிட்சயமாக சிங்கள தேசம் இன்று அரசியல் hPதியாக யுத்தம் ஓய்ந்தகாலத்தில் யுத்தத்தை மீண்டும் திணிப்பதற்காக முனைந்தால் எங்களுடைய தேசியத் தலைவனது செயற்பாடு ஊடாக நிட்சயமாக நாங்கள் விடுதலையை வென்றெடுப்போம் என்றார்.
நேற்று பி.ப. 4.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஈகைச் சுடரினை கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளதிப சிறிராம் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் ஏற்றிவைத்தார்.
மட்டு. அம்பாறை மகளிர் அரசியல் பொறுப்பாளர் குவேனி தலைமையுரையினையும், கள ஆசிரியர் காண்டீபன் நினைவுரையினையும் நிகழ்த்தினர்.
மட்டு. அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன், மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதி ரமணன் மற்றும் தளபதிகளும் கலந்து கொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கனகசபை, பா.அரியநேத்திரன், தங்கேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கலை நிகழ்வு, தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேவேளை மட்டக்களப்பு நகர் உட்பட பல இடங்களிலும் கரும்புலிகள் தின நினைவாக அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[url=http://www.eelampage.com/index.shtml?id=200406061615055585&in=]மேலும் படங்களுக்கு இங்கு அழுத்தவும்
-------------------------
எம்மீது யுத்தம் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராகவிருக்கின்றோம்: அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
'எமது மக்கள் மீது, எமது போராளிகள் மீது, இந்த தமிழர் படை மீதும் யுத்தம் திணிக்கப்படுமாகாவிருந்தால் அதை எதிர்கொள்வதற்கு நமது தேசியத் தலைவனின் கட்டளை எதிர்பார்த்து இன்றும் தயாராகவுள்ளோம்."
இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் த.குயிலின்பன் சூளுரைத்தார்.
அம்பாறை மாவட்ட கரும்புலிகள் தின பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி பிரதான நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கரும்புலி ஒருவரின் தாயாரான சா.வள்ளியம்மை பொதுச் சுடரை ஏற்ற, விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் முரளி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அத்துடன் கரும்புலிகளின் புகைப்பட காட்சியகத்தை திகாமடுல்ல மாவட்ட தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் திறந்து வைத்தார்.
விடுதலைப்புலிகளின் மாவட்ட மகளிர் அமைப்பைச் சேர்ந்த இசைப்பாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழர் மேம்பாட்டு அவைத் தலைவர் கே.நடராஜா தர்மலிங்கம், உட்பட பல முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டதுடன், கரும்புலிகளின் படங்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தினர்.
மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
'இன்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நாம் பாரிய படைக்கட்டுமானத்தை வைத்திருக்கின்றோம் ஆனால் எமது எதிரிகள் எமது படைகளை சிதைக்க முற்பட்டும், எம்மைத் தாக்கவும் முனைந்துள்ளான்.
எம்மை எதிரி பலமாக இல்லையென நினைத்து இத்தாக்குதல்களை மேற்கொள்கின்ற போதிலும், முடிந்தால் எம்மோடு யுத்தம் செய்ய முன்வரட்டுமெனக் கூறுகின்றோம்.
அப்பொழுது எமது பலம் எத்தகையது என்பதை எதிரிக்கு உணர்த்துவோம்.
இன்று யுத்தமா, சமாதானமா என்ற சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இன்றும் கூட எமது போராளிகள் தாக்கப்பட்டுள்ளனர். எமது போராளிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் எமது தேசியத் தலைவர் இன்னும் எல்லை கடந்த பொறுமையுடனிருப்பது சமாதானத்தின் பால் அவர் காட்டும் பெரும் அக்கறைக்கு எடுத்துக் காட்டாகும்.
நாம் யுத்தத்தை விரும்புபவர்களல்ல, நாம் யுத்தத்தில் நின்றவர்கள், யுத்த மையப் பகுதியில் நின்றதன் காரணமாக கைகளைக், கால்களை இழந்ததோடு, அதற்கும் மேலாக தாயக விடுதலைப்போரில் 17, 648 மாவீரர்களைக் கூட விலை கொடுத்து நிற்கின்றோம்.
கரும்புலிகளின் சாதனை விடுதலைப் போராட்டத்தில் புதிய பரிமாணத்தைத் தந்தது.
பொருத்தமான, இறுக்கமான காலகட்டத்தில் கரும்புலிகளே தடைகளை உடைத்து விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர். இதுவே கரும்புலிகளின் உன்னதமான சாதனையாகும்.
உலக விடுதலைப் போராட்டங்களை நாம் நோக்கினால், துரோகச் செயல்களும் இருந்தே வந்துள்ளது.
எமது விடுதலைப் பேராட்டத்தில் இவ்வாறு எதிர்நோக்கிய பல துரோகச் செயல்களை மிகத்துல்லியமாகவும், மிக நேர்த்தியாகவும் முறியடித்து வெற்றி கண்டுள்ளார் நம் தலைவர்.
அண்மையில் நமது மாவட்டங்களில் இத்தகையதொரு சூழ்நிலை ஏற்பட்ட போதும், அதனை முறியடித்து தமிழனின் பலத்தை, தமிழ்த் தேசியப்படையின் பலத்தை மீண்டுமொருமுறை உலகிற்கும்,சிங்களத் தேசத்திற்கும், எம்மை எள்ளி ஏளனமாக நினைக்கும் எதிரிக்கும் நிரூபித்துள்ளார்.
எனவே எமது படையைச் சிதைக்க நினைக்கும், சிதைக்க முற்படும் எதிரி நாங்கள் இன்று ஓர் படைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
இதேவேளை மாவீரர்களின் தியாகத்தை மதிக்கின்றவர்களாக, தேச விடுதலையை நேசிக்கின்றவர்களாக, மாவீரர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கின்றவர்களாக, தேசவிடுதலைக்கு ஒன்றிணைந்து தோள் கொடுப்பவர்களாக மக்கள் மாற வேண்டும்.
தேச விடுதலையோடு நாம் ஒன்றித்து நிற்போமானால் எந்தப் படைவந்தாலும் எமது காலடியில் அது து}சாகமாறும்.
தமிழர்களெல்லாம் போராளிகளாகவும் போராளிகளெல்லாம் கரும்புலிகளாகவும் மாறும் காலம் வெகுது}ரத்தில் இல்லை.
கரும்புலிகளின் தியாகத்தை எம்மனங்களில் ஏந்தி, கரும்புலிகள் விட்டுச் சென்ற பாதையூடாக எமது தேச விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஓரணிதிரள வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்கா பொலிசார் கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை: பொதுமக்கள் விசனம்
மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் விடுதலைப்புலிகள் மீது நேற்றுக்காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது சில நூறு யார் தூரத்தில் சிறிலங்கா பொலிசார் நின்றிருந்ததாகவும் அவர்கள் எதுவித நடவடிக்கையுமெடுக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா படைத் தரப்பினரின் ஒத்துழைப்பின்றி இவ்வாறான தாக்குதல்களை தேசவிரோதிகள் செய்ய முடியாது எனவும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிசார் எதுவும் செய்யாது நின்றது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
----------------------------
இராணுவத்தின் பாதுகாப்பிலிருக்கும் தேசவிரோதிகளே தாக்குதல் நடத்தினர்
மட்டக்களப்பு அரசடியிலும் வந்தாறுமூலையிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் ஒரே ஆயுததாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இரு கொலைச் சம்பவங்களையும் மேற்கொண்ட நபர்கள் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமணிந்து அலுவலக உத்தியோகத்தர்கள் போன்று வந்தே துப்பாக்கிப் பிரயோகம்; செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் இராணுவத்தினரின் பாதுகாப்பிலிருக்கும் தேச விரோதிகளே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]<span style='color:red'>கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பொலிசார் சோதனை இட்டுக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் அமைச்சுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்று பகல் நடமாடிய பெண் ஒருவரை பொலிசார் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அவரை சோதனை இட்டுக் கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
இந்தப் பெண் தற்கொலைப் பேராளியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊர்ஜிதமற்ற பிந்திய செய்திகளின்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட ஐவர் இறந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
[size=9]puthinam.com</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<span style='color:red'>Five Dead in Sri Lanka Suicide Bomb Blast-Police
[size=9]COLOMBO (Reuters)</span>
At least five people were killed and 11 wounded when a woman blew herself up in a police station in the Sri Lankan capital on Wednesday in the first such attack since a truce signed two years ago with Tamil Tiger rebels.
Police said the woman detonated an explosive device while she was being frisked on her way into the station, which lies on Colombo's main thoroughfare, near the prime minister's official residence and across the road from the U.S. and British embassies.
"About five people have died inside the police station," said one police officer. A total of 11 were wounded, police said.
Peace talks to end Sri Lanka's decades-long civil war have been on hold for more than a year but both sides have been observing the Norwegian-brokered truce signed in February 2002 that put an end to fighting that had killed 64,000.
Broken glass and blood covered the floor of the police station, which was under heavy guard, witnesses said.
"I saw many people being pulled out with injuries, including one with no arm," said one witness.
The director of Colombo's National Hospital said 13 people had been brought in for treatment, of whom four had died.
"We have not been informed of any more people coming. These people here are not critical," Hector Weerasinghe told Reuters of the nine wounded being treated in his hospital. Six were police officers, he said.
Local radio said four of the five dead were police officers.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) terrorized the capital with numerous suicide bomb attacks during the war and on Monday they marked their "Black Tiger Day," which commemorates their suicide bombers.
The rebels had no immediate comment on the blast.
Television said the target of the attack was Douglas Devananda, a cabinet minister who belongs to a rival Tamil party and whose office was next door to the police station.
The woman was brought from Devananda's office into the police station, it said.
(Additional reporting by Chamintha Thilakarathna)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
<b>Iraq brings in tough security law</b>
The Iraqi public is keen for tough action on security
Interim Iraqi Prime Minister Iyad Allawi has signed a law allowing him to impose emergency security measures.
The signing came as several mortar shells hit central Baghdad, injuring at least six people near Mr Allawi's offices, according to police.
<b>The new law gives the government the power to impose curfews, set up checkpoints and detain suspects. </b>
<b>But the measures can only be applied temporarily and in specific parts of the country. </b>
"Whenever and wherever it's going to be necessary, we will apply this law," Mr Allawi said in an interview for the New York Times.
An interior ministry official told the BBC there had been extensive discussions during the drafting to avoid what he called "undue infringement of human rights".
Legal shield
But the BBC's Caroline Hawley in Baghdad says there is a public mood for tough action, even if it infringes civil rights.
Interim President Sheikh Ghazi al-Yawar and other officials have signed the law.
The measures will also require endorsement by the cabinet and the president as they are applied.
The government will provide more details of the measures later in the day.
Correspondents say that while the US-led coalition is already able to impose tough security measures, the law will give the new authorities a legal shield as it fights insurgents.
Hours before the announcement, police said mortar shells hit a medical centre near the offices of Mr Allawi's National Accord Party.
Others landed near offices of the US-led coalition and Iraqi government in the so-called Green Zone.
Another round reportedly landed in the southern Dora district.
Later, Reuters news agency quoted the US military as saying troops were engaging insurgents in the city centre.
BBC Middle East
ஞாபகம் வருகிறதா? எங்கையோ அனுபவப்பட்ட(படுகிற) மாதிரி....இதெல்லாம் அமெரிக்கனின் ஐடியாவா? இல்லாட்டி அண்மையில் இலங்கை இராணுவத்திடமிருந்து அமெரிக்கா கற்ற பாடமா? :? :roll: :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/07/sm_2_27152_435.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>Woman suicide bomber kills 4 policemen
[size=9][TamilNet, July 07, 2004 09:13 GMT] </span>
A woman suicide bomber who was alleged to be on a mission to assassinate Minister Mr. Douglas Devananda exploded herself killing four policemen when she was to be subjected to a body check in the Kollupitya Police station Wednesday morning around 11 a.m., police said.
The Kollupitya Police Station is located in the heart of the Colombo city next to the Prime Minister's residence " Temple Trees", sources said.
Bomb blast had caused severe damage to the Kollupitya Police Station, police said
Police said the alleged woman suicide bomber was taken into to custody in front of the office of Minister Mr. Douglas Devananda Wednesday morning on suspicion. She was immediately taken to Kollupitya Police Station for investigation. When she was about to be examined she exploded herself killing four policemen and injuring 12 others in the Kollupitya Police Station. Among the injured were two civilians and the rest policemen, police said.
Police said its initial investigation revealed that the woman had gone to ministry office to see Minister Mr. Douglas Devananda. She was not allowed to meet the Minister when she refused to be examined by the security personnel. Thereafter she left the ministry. Police personnel who followed her took her into custody and brought her to the Kollupitya Police Station, police sources said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குண்டுவெடிப்பு சம்பவ இடத்திற்கு அரசாங்க இரசாயன பரிசோதர்கள் அவசரமாக அழைப்பு
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அரசாங்க இரசாயன பரிசோதகர்கள் அவசரமாக அழைக்கப்பட்டு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று நண்பகல் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்க வைத்ததில் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட நான்கு பொலிசார் உயிரிழந்துள்ளனர்.
குண்டை வெடிக்க வைத்த பெண் தற்கொலைதாரியும் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள். இரண்டு பேர் சிவிலியன்கள்.
இன்று முற்பகல் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இந்து கலாசார அமைச்சுக்கு இளம்பெண் ஒருவர் அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனக் கூறி உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
அவரைப் பரிசோதிக்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் முயன்றுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சந்தேகம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இரண்டு பெண் பொலிசாரிடம் சம்பந்தப்பட்ட யுவதியை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கமைய அந்த யுவதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அங்கு கடமையிலிருந்த பொலிசார் இவரை சோதனையிட முயன்ற வேளையிலேயே குண்டை வெடிக்க செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து கொழும்பு நகரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார்.
குண்டுதாரி தங்கியிருந்த இடத்தை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசே ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை குறிவைத்தே இந்த குண்டுதாரி அனுப்பப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா தெரிவிக்கின்றார்.
-------------------
தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் கைது!
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பெண்ணுடன் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணை விசேட அதிரடிப்படை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண்ணை விசாரணை செய்யும் பொருட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப்படை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் இருந்ததற்கான தகவல் கிடைத்துள்ளது என்று உயரதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
"Kollupitya bomb blast won't affect peace process"- SLFP
[TamilNet, July 07, 2004 17:38 GMT]
The Sri Lanka Freedom Party (SLFP), a major constituent in the ruling United Peoples Freedom Alliance government said in a statement issued Wednesday evening that the suicide bomb blast in the Kollupitya police station will not cause any adverse impact on the peace process and the implementation of the ceasefire agreement, political sources said.
The General Secretary of the SLFP Mr.Maithiripala Sirisena said in the statement that the suicide bomber had targeted Minister Douglas Devananda. The peace process and the ceasefire implementation would go on as usual.
The UPFA government has committed itself to take forward the peace process, the statement further said.
Four police officers including the Chief Inspector of Kollupitya Police were killed when a woman suicide bomber blewup herself Wednesday morning.
Meanwhile, the Criminal Investigation Department (CID) has been entrusted with the investigation the the suicide bomb attack, police said.
The Sri Lanka Monitoring Mission (SLMM) also commenced its inquiry into the suicide bomb attack in the heart of Colombo, sources said.
----------------------
யுத்தம் என்று ஏற்பட்டால் தமது படையினரே ஈடுபடுத்தப்படுவார்கள்: இராணுவத் தளபதி சாந்த கொட்டேகொட
யுத்தம் ஒன்று ஏற்பட்டால் தமது படையினரே ஈடுபடுத்தப்படுவார்களே தவிர வேறு எவரையும் ஈடுபடுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் நீக்கப்பட்ட கருணாவுடன் இணைந்து செயலாற்றுவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறியிருக்கின்றார்.
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சமாதான செயற் திட்டத்திற்கு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]<span style='color:red'>Tigers deny involvement in suicide attack
[size=9][TamilNet, July 08, 2004 05:29 GMT] </span>
The Liberation Tigers Thursday denied any involvement in the suicide attack in Colombo on Wednesday in which four Sri Lankan Police were killed. Mr. S. P Thamichelvan, head of the LTTE's political division told TamilNet Thursday that the Tigers had "absolutely no connection in the suicide bombing in Colombo".
"This is an act to destabilize the peace process. We suspect this has been carried out by elements that want to disrupt the peace process", Mr. Thamilchelvan said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<span style='color:red'><b>கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு </b>
நேற்றைய தினம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மனித குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரர் அறிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள சமாதான சூழ்நிலையில் இப்படிப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் இது சமாதான விரோதிகளின் செயற்பாடாக இருக்கலாமெனவும் என தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். </span>
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நேற்று ஓடி ஒளிச்சாங்கள்.. இண்டைக்கு விடிய தங்களுக்கும் உதுக்கும் (குண்டுவெடிப்பு)சம்பந்தமில்லை எண்டு சொன்னாங்கள்.. பின்னேரம் சடையிறாங்கள்.. ஏதோ பாரிய உயிரிழப்பை தவிர்த்ததாம்.. இது எப்பிடியிருக்கு..?
Truth 'll prevail
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b>லண்டனில் நேற்று அதிகாலை ஸ்கொட்லான்ட் யாட் பொலிஸாரின் சுற்றிவளைப்பு தேடுதலில் 13 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது</b>
பெருந்தொகைப் பணம், கடன் அட்டைகள், ஆயுதங்கள் மீட்பு
லண்டனில் இலங்கைத் தமிழ் சமூகத்தினர் வாழ்கின்ற பகுதிகளை நேற்று வியாழக்கிழமை திடீரென சுற்றிவளைத்த ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 13 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கத்திகள், வாள்கள், கோடரிகள், துப்பாக்கிகளுடன் பெருந்தொகைப் பணம், ஏராளமான கடன் அட்டைகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
லண்டன் மாநகரத்தின் பிரென்ட், ஹரோ, றெட்பிரிஜ், குறொய்டொன் மற்றும் நியூஹாம் ஆகிய இடங்களை சுமார் 250 இற்கும் அதிகமான பொலிஸார் அதிகாலைப் பொழுதில் திடீரென சுற்றிவளைத்ததாகவும், குறிப்பாக 22 முகவரிகளில் தீவிர தேடுதல் நடத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 13 தமிழ் இளைஞர்களும், 18 முதல் 25 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்றும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற பல்வேறு இடங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நகர பொலிஸ் அதிகாரியான அல்பிரட் ஹிட்ச்ஹொக் கூறினார்.
லண்டனில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து வருவதாகவும், ஒரு சிறு குழுவினர் தான் சட்டத்திற்கு முரணாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குரியவர்கள் தங்கியிருந்த ஒரு முகவரியை சோதனையிட்ட போது, ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து 3 வாள்கள், 3 கோடரிகள், பேஸ்போல் மட்டைகள், ஹொக்கி தடிகள், கடன் அட்டைகள், கடன் அட்டை வாசிக்கும் கருவி என்பவற்றையும் கைப்பற்றினர்.
மற்றுமொரு முகவரியிலிருந்து ஐவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் பண மோசடியுடனும், மற்றையவர்கள் களவு மற்றும் மோசடிகளுடனும் தொடர்புபட்டவர்கள். அதிகாலை நடவடிக்கையில் மட்டும் எல்லாமாக 11 000 பௌன்ஸ் பணம், 4 500 வெற்றுக் காசோலைகள், 69 கடன் அட்டைகள், 2 கணினிகள், 15 வீடியோ றெக்கோடர்கள், 30 000 பௌன்ஸ் பெறுமதியான மேர்சிடஸ் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பொலிஸாருக்கு தெரிவிப்பதற்காக அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கென விசேட தொலைபேசி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பாகவும், மற்றொருவர் நீதிமன்ற பிடியாணைக்கமையவும் கைது செய்யப்பட்டனர். 10ற்கும் மேற்பட்ட கொலைகளுடன் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
தொடர்ந்து நேற்றைய தினம் பூராகவும் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இதற்காக, மேலும் 250 பொலிஸார் மாலையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நன்றி தினக்குரல்
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்பாடா இப்பவாவது விழிச்சுதே ஸ்கொட்லண்ட் ஜாட்...! தொடர்க...திருத்தி எடுக்க...அல்லது திருப்பி அனுப்புக... கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பர்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர் விழாவில் கலந்து கொள்ள கனடாவிலிருந்து சென்ற தமிழர்களை அமெரிக்கா அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்
அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற தமிழர் விழாவில் கலந்து கொள்வதற்காக கனடாவில் இருந்து சென்ற ஈழத்தமிழர்கள் அமெரிக்கா-கனேடிய எல்லையில் வைத்து அமெரிக்கா அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் போல்ரிமோர் மாநிலத்தில் இம்மாதம் 2ம் திகதி ஆரம்பமாகி 5ம் திகதிவரை 17வது தமிழர் விழாவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. வழமைபோல் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்ற கனடியத் தமிழர்கள் பலரே இவ்வாறு எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் இவ்வாறு மீள அனுப்பப்பட்டமைக்கு தகுந்த காரணங்கள் அமெரிக்கா அதிகாரிகளினால் வழங்கப்படாத நிலையில் கனடிய மற்றும் அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அண்மையில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கள் பொதுமக்களின் உரிமைகளை வலியுறுத்தியிருந்த போதிலும் அமெரிக்க அதிகாரிகளின் இந்நடவடிக்கை குறித்து கனடியத் தமிழர்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பலர் நீண்ட காலமாக கனடாவில் வாழும் தமிழர்கள் என்பதும் அவர்கள் கனடியக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மட்டு - கொழும்பு சம்பவங்கள் சமாதான பேச்சுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்: போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர்
மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றன சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடுமென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புரு ஹொவ்டே தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதங்களிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொள்ளுப்பிட்டி சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற சில மணிநேரத்தில் தாம் அக்கடிதங்களை எழுதியதாகத் தெரிவித்துள்ள ட்ரொன் புரு ஹொவ்டே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும், கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகவும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புரு ஹொவ்டே சிறிலங்கா அரச தரப்பினருக்கு எழுதிய கடிதம், இலங்கைக்கான நோர்வேத் து}துவர் ஹான்ஸ் பிரஸ்கரைச் சந்தித்த அரசாங்கத்தின் சமாதானச் செயலாளர் ஜயந்த தனபாலவிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றெனத் தெரிவித்துள்ள சமாதான செயலக வட்டாரங்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகவும், ஹான்ஸ் பிரஸ்கரைச் சந்தித்த அரசாங்கத்தின் சமாதானச் செயலாளர் ஜயந்த தனபால கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் குரல்தரவல்ல அதிகாரி திஸா பெனபொகா தெரிவித்துள்ளார்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எம்மை நசுக்கி அழிக்க முற்பட்ட எதிரியை துரத்தி அழிக்கும் நிலைக்கு இன்று நாம் வளர்ந்திருக்கிறோம்: கேணல் சூசை
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய வழிகாட்டலில் கரும்புலி மாவீரர்களின் தாக்குதல் திறனால் எம்மை நசுக்கி அழிக்க முற்பட்ட எதிரியை துரத்தி அழிக்கும் நிலைக்கு இன்று நாம் வளர்ந்திருக்கிறோம் என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நேற்று கிளிநொச்சி காந்தரூபன் அறிவுச்சோலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே கேணல் சூசை அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருகாலப் பகுதியில் சிங்கள இராணுவம் எம்மைத் துரத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது நாம் எம்மை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையினை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் இன்று எமது தேசியத் தலைவர் அவர்களுடைய வழிகாட்டலில் கரும்புலி மாவீரர்களின் வீரமிகு தாக்குதல் திறனால் எதிரியை துரத்தியழிக்கும் நிலைக்கு நாம் இன்று வளர்ந்திருக்கிறோம். அந்த வகையில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வழிகாட்டியாக அமைந்துள்ளார்கள் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் அவர்கள் கருத்துரைக்கையில், காந்தரூபன் அறிவுச்சோலைக்கு புலம்பெயர்ந்த நோர்வே மக்கள், அமைப்புக்கள் பல்வேறு உதவிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது.
எதிர்காலத்தில் இவ்வாறான அறிவுச்சோலைகளின் ஊடாக நமது சிறார்களின் நலன்களைப் பேணுவது, வீரகாவியமான மாவீரர்களின் எண்ணங்களை நிறைவு செய்வதாகவே அமையும் எனவும் கா.வே. பாலகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மக்கள் ஆணையை மகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி, பிரதமர் தெரிவிப்பு
ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூலமாக கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆணையை மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறுகிய காலத்தில் இந்த வெற்றி கிடைத்திருப்பதாக மாகாண சபைத் தேர்தல் வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஏழு மாகாணங்களது ஆட்சிப் பொறுப்பு கூட்டணியிடம் சேர்ந்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறைமையின் மூலமாக பாராளுமன்ற அதிகாரம் என்ன வகையாக அமைகின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உரிய அதிகாரம் இருப்பது இம்முறை மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள ஆணை தொடர்பான யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் தாம் கோருவதாகவும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
எந்த வேலைத் திட்டங்களுக்கு அல்லது அரசாங்க கொள்கைகளுக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்பது இந்த தேர்தலில் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே சகலவிதமான வாதப் பிரதிவாதங்களையும் கைவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது இன்று அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ
ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆறு மாகாணங்களில் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலமாக இது உறுதிப்படுத்தப்பட்டதாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குரை புரண்டோடும் ஆற்று நீரை தடுத்து நிறுத்த முடியாது என்று முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தெரிவித்த கூற்று மாகாண சபைத் தேர்தலின் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கு வகுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு நாட்டு மக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் தோன்றியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பலம் மிக்க ஆணை ஒன்றை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு விடுத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்திருப்பதாக ஐ.தே.க. தெரிவிப்பு
பொதுத் தேர்தலிலும் பார்க்க தமக்கு பலம் மிக்க ஆணையை ஒன்றை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு விடுத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வெளியான முடிவுகள் இதனை உணர்த்துவதாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாண சபைத் தேர்தலின் மூலமாக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்வதற்கு ஏனைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்த போதிலும் கூட்டமைப்பு அரசு இதனை இரண்டாவது பொதுத் தேர்தலாக கருதி செயற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலில் மூலமாக தமக்கு கூடுதல் பலத்தை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு கோரியிருந்தது.
எனினும் பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் இம்முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலேயே மிகக் குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினதும் மக்கள் விடுதலை முன்னியினதும் வாக்குறுதி அரசியல் காரணமாக சர்வஜன வாக்களிப்பு நிலையிலிருந்து மக்கள் விலகிச் செல்லும் நிலை தோன்றியிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
டக்ளஸ் ஏற்பாட்டில் நேற்று பி.பி.ஸியில் கருணா பேட்டி!
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி பல்வேறு குழப்பங்களையும் சர்ச்சை களையும் உருவாக்கியுள்ள கருணாவின் பேட் டியை பி.பி.ஸி. தமிழோசை நேற்று ஒலிபரப் பியது. கருணாவின் குரல் அது என்பதை சம்பந் தப்பட்ட வட்டாரங்கள் உறுதிசெய்தன. இந்தப் பேட்டியை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஒழுங்கு செய்து தந்தார் என பி.பி.ஸி. தமிழோசை தெரிவித்தது.
டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கப்பட்ட தாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றின் ஊடாகவே தமிழோசை கருணாவுடன் தொடர்புகொண்டது எனத் தெரி கின்றது.
தாம் மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து பேட்டியளிக்கிறார் எனக் கருணா அதில் குறிப் பிட்டாலும் அவர் அங்குதான் உள்ளாரா என் பதை சுயாதீனமாக உறுதி செய்ய முடிய வில்லை என தமிழோசை குறிப்பிட்டது.
புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணியில் தாம் ஈடுபட்டிருக்கின்றார் என்று இந் தப் பேட்டியில் குறிப்பிட்ட கருணா, அடுத்த ஓரிரு மாதங்களில் அது அமைக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.
Uthayan & sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|