Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு விபரீத ஜோடி!
#1
<b>[size=18]பொண்ணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணமாம்?!


கேர்ள் ஃப்ரண்ட் என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை கிளப்பியிருக்கிறது. லெஸ்பியன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது.

இரண்டு பெண்கள் படுநெருக்கமாக உறவாடுவதாக காட்டப்படுவது நம் கலாச்சாரத்தையே குழிதோண்டிப் புதைப்பதுபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை அனுமதிக்க மாட்டோம்.. என்று சொல்லி, மும்பையில் இந்தத் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் எதிரில் போராட்டம் நடத்துகிறது சிவசேனா கட்சி. ஒரு தியேட்டர் கொளுத்தப்பட்டு விட்டது.

வளர்ந்த நாடுகளே வெறுக்கும் முறையற்ற உறவை, ஆணும் பெண்ணுமான குடும்ப அமைப்பில் மாறா நம்பிக்கை கொண்ட இந்தியாவில் திணிப்பது எந்தவகையில் நியாயம்? என்று கொதிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஸன்.

இப்படி ஒரு திரைப்படத்துக்கே பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இரண்டு பெண்கள் கணவன் & மனைவியாகவே வாழ்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு சட்டபூர்வமான அனுமதியும் தந்திருக்கிறது! எங்கோ அமெரிக்காவில் அல்ல. சில நூறு கிலோ மீட்டருக்குள் இருக்கிற கேரளாவில்!

<img src='http://www.vikatan.com/aval/2004/jul/02072004/p9.jpg' border='0' alt='user posted image'>

திருவனந்தபுரம் அருகே வசிக்கும் நந்துவும் ஷீலாவும்தான் அந்த விபரீத ஜோடி!

காதலுக்கு கண்ணில்லைனுதான் கேட்டிருக்கேன். எம்பொண்ணுக்கு அறிவே இல்லாம போச்சு என்று நந்துவின் பெற்றோரும், எங்களைப் பார்த்து ஊரே சிரிக்கும்படி பண்ணிட்டா.. என்று ஷீலாவின் பெற்றோரும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்க..
அப்படி எதுவும் நாங்க தப்பா செஞ்சிடல.. என்று தீர்மானமான குரலில் சொல்கிறது இந்த ஜோடி.

கடந்த ஆண்டு இவர்களின் முறையற்ற காதல் வெளியே தெரிந்ததுமே சலசலப்பு எழுந்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் போராட, கடைசியில் நீதிமன்றமே இவர்கள் இணைந்துவாழ அனுமதி அளித்துவிட்டது!

கிரீம் கலர் டைட் பான்ட், செக் ஷர்ட், இடுப்பை இறுக்கி வைத்திருக்கும் பெல்ட்.. பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து ஸ்டைலாக முடிவாரி, மூக்குக் கண்ணாடி வழி பார்வையை கம்பீரமாக்கி, காலுக்கு மேலே கால் போட்டு நந்து நம்முன் பேச உட்கார்ந்ததைப் பார்த்து நாமே ஒரு நிமிடம் சந்தேகித்தோம். அச்சு அசல் டீனேஜ் பையன் மாதிரி இருந்தார்(ள்!).

நந்துவுக்கு நேர்மாறு ஷீலா! பெண்மைக்கே உரிய அடக்கம், மென்மை, பய உணர்வோடு பவ்யமாக நந்துவின் அருகே அமர்ந்தார்.

நந்து முழுக்க முழுக்க ஒரு ஆணைப்போல பாவனை செய்துகொண்டு ஆக்ஷன் கொடுக்க, பேச ஆரம்பித்ததும் பேச்சிலும் ஒரு வேகம், ஆதிக்கம் தெரிந்தது. எங்க வீட்ல ஆம்பள பொம்பள வித்தியாசமில்லாமத்தான் எங்களை வளத்தாங்க. நான் ஷீலாவ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் அப்பா கத்தினாங்க. பிடிக்கலை. வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். ஆனா, திடுதிப்புனு ஷீலாவ கூட்டிகிட்டுப் போவேனு யாரும் நினைச்சுப் பாக்கல. எங்களோட காதல்ல எந்த தப்பும் இல்லைனு நம்பறோம். அதை இந்த சமூகம் விமரிசனம் பண்ணினா அதைப் பத்தியும் நாங்க கவலைப்படறதா இல்லை.. என்று எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாகப் பேசியவர்,


சிவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உருவானவர்தானே ஐயப்பன்? அப்படி உருவான கடவுளை கும்பிடற இந்த சமூகம் எங்களை எந்த முகத்தோடு விமரிசனம் பண்ணுது? பகவான் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும்கூட அப்படி ஒரு ஆசை இருந்ததே?

நாங்க ரெண்டு பேருமே திருப்தியா இருக்கோம். ஸ்னேகபூர்வம்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். உள்ளம் ஒண்ணாவும் உருவம் வேறாவும் இருந்து எங்களை மாதிரி அவஸ்தைப்படறவங்களுக்கு உதவி செய்யத் தயாரா இருக்கோம்.. என்றார் படபடவென.

நந்து பேசுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஷீலா, வாய் திறந்தார்..

நான் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தப்ப, ஒரு கல்யாணத்திலதான் நந்துவை சந்திச்சேன். முதல்ல பாத்தப்ப பையன்னுதான் நெனச்சேன். அப்புறம்தான் பொண்ணுனு தெரிஞ்சது. பழகினோம். நல்ல தோழிகளானோம். அடிக்கடி சந்திச்சு பேசவும், நட்பு காதலா மாறிடுச்சு.. என்றவர் தொடர்ந்தார்..

நந்து என்னைக் காதலிக்கறதா சொன்னப்ப நிஜமாவே சந்தோஷப்பட்டேன். எனக்கு வரவேண்டிய புருஷன் எப்படி இருக்கணும்னு என் மனசுல நினைச்சேனோ அதே உருவம் நந்துவுக்கு. என் வீட்டுல விஷயம் தெரிஞ்சதும் அட்டகாசம் பண்ணினாங்க. வீட்டுல இருந்து துரத்திவிட்டாங்க. கவலையே படலை. எனக்கு தோள் கொடுக்க நந்து இருந்தா.. என்றவர், தாங்கள் சந்தித்த போராட்டங்களை அடுக்கினார்.

முதல்ல எங்க அப்பாதான் போலீஸ்ல புகார் கொடுத்தார். இயற்கைக்கு விரோதமான குற்றம் செஞ்சதா எங்க மேல போலீஸ் வழக்கு பதிவு செஞ்சது. ஆனா, வழக்கு பதிவு பண்ணதுல இருந்த தப்பை சுட்டிக்காட்டி நீதிபதி எங்களை விட்டுட்டாரு.

அதுக்கப்புறம் ஊர்க்காரங்களும், எங்க வீட்டுக்காரங்களும் சேர்ந்து நந்து போதை மருந்துக்கு அடிமைனு பொய்ச் செய்தியை பரப்பினாங்க. கள்ளக் கடத்தல்ல எங்களுக்கு பங்கு உண்டுனு குற்றம் சுமத்தி ஜெயில்ல வைக்கப் பாத்தாங்க. அப்பதான் சகயாத்திரிகானு ஒரு இயக்கம் இருக்கறது எங்களுக்கு தெரிஞ்சது. அதில் உறுப்பினரா இருக்கும் டாக்டர் ஜெயஸ்ரீயும், மைத்திரேயனும் எங்களுக்கு உதவினாங்க. அவங்க மட்டும் இல்லேன்னா நாங்க எப்பவோ தற்கொலை செஞ்சிருப்போம்..! என்று அவர் சொல்லிமுடித்தபோது, அங்கே வந்தார் டாக்டர் ஜெயஸ்ரீ (இவரது பாதுகாப்பில்தான் நந்துவும் ஷீலாவும் இருக்கிறார்கள்).

நாற்பத்தேழு வயதாகும் டாக்டர் ஜெயஸ்ரீயை புரட்சிப் பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள் கேரளாவில். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண் களுக்காகவே ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அவர்களுடைய பிரச்னைகளை சமுதாயத்தின் முன் புட்டுப்புட்டு வைத்தவர். இப்போது லெஸ்பியன் ஜோடிக்கு அடைக்கலம் தந்திருப்பதால் மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார்.


ஜெயஸ்ரீயிடம் பேசியபோது, என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன பண்ணுவேனோ அதைத்தான் நந்து&ஷீலா விஷயத்திலயும் செஞ்சேன்.. என்றவர், ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் புதுசா முளைச்ச விஷயமல்ல. எல்லா காலத்திலயும் இருந்துட்டுத்தான் இருக்கு.

சும்மா கொழுப்பெடுத்துப் போய் இப்படி பண்ணுதுங்கனு எல்லோரும் விமரிசனம் பண்றாங்க. அவங்களோட மனசை யாரும் பார்க்கறதில்லை. மரபுக் கோளாறுகளால் வர்ற குழப்பம் இது. குழந்தை பிறக்கும் முன்னே நிர்ணயிக்கப்பட்ட விஷயம். இதில் அவங்க தப்பு எதுவுமே இல்லே. உடல் உறுப்புக்கள் பெண்போல இருந்தாலும் மனசெல்லாம் ஆண் போலத்தான் இருக்கும். காதல் கனவுலகூட பெண்கள்தான் வருவாங்க. சொல்லப்போனா, இது அந்த பொண்ணுங்களோட விருப்பமே இல்லாம அவங்கமேல விதி திணிச்ச விஷயம். இதைப் புரிஞ்சுக்காம சமுதாயம், சட்டம், குடும்பம்னு எல்லாம் ஒண்ணுசேர்ந்து அவங்களை எதிர்த்தா என்ன பண்ணுவாங்க? செத்துடுவாங்க. அநியாயமா அதுக்கு அனுமதிக்கலாமா? என்று விரிவாகவே பேசினார் ஜெயஸ்ரீ.

சகயாத்திரிகா என்ற அமைப்பு பற்றி விவரித்த ஜெயஸ்ரீ, தேவிகாமேனன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்தறாங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் உணர்வுகளை வெளியே சொல்ல முடியாம, தற்கொலை பண்ணிக்க நினைக்கிறாங்க பலபேர். அவங்களுக்கு முறையான தெளிவை தர்றதுதான் இந்த அமைப்போட நோக்கம். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், பேராசிரியர்கள் இப்படி பல பெரிய மனிதர்கள் இங்கே வர்றாங்க. அவங்களுக்கு செமினார் வகுப்பு நடத்தறோம்.. என்றார்.

நந்து & ஷீலா தம்பதி பக்கம் திரும்பினோம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒண்ணு சேந்துட்டீங்க. உங்களோட வருங்காலம் எப்படி இருக்கணும்னு ஆசைப்படறீங்க? என்று கேட்டோம்.

இப்ப சமூகசேவை மையத்தில வேலை செய்யறோம். சம்பளம் வருது. இன்னும் நல்ல வேலையா பார்க்கணும். அமெரிக்காவிலிருந்து சிலர் எங்களைப் பத்தித் தெரிஞ்சு கிட்டு வேலை தர்றதா சொல்லியிருக்காங்க. எங்கே போனாலும், பிரிஞ்சுடாம நாங்க ஒற்றுமையா வாழணும்.. அதான் ஆசை! என்று நந்து நிறுத்த,


ஒரு வீடு கட்டணும். ஒரு குழந்தையை தத்து எடுக்கணும். குடும்பமா வாழணும்.. என்று சொன்ன ஷீலா குடும்பம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்தவராக சிறிது தடுமாறினார்!
===================

[b]மரபுக் கோளாறு மட்டுமல்ல..!
</b>
<i>டாக்டர் ஜெயஸ்ரீயை போலவே, ஹோமோ செக்ஸில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இயங்குகிறார் திருவனந்தபுரம் எஸ்.யூ.டி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல நிபுணர் பி.பி.எஸ்.சந்த். அவரைச் சந்தித்தபோது,

என்னோட ஆராய்ச்சியின்படி நாற்பது சதவீதம் பேர் இப்படி ஒரே பாலின விருப்பத்தோடு இருக்காங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் மனநோயாக இருக்கும்னு எண்ணி அதை ஒரு நோயாகத்தான் நினைக்கிறாங்க பலர்.

என்கிட்ட வர்ற நோயாளிகளில் பலர் சொல்லும் காரணங்கள் நாம் சமுதாயத்தில் ஆராய்ந்து மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியவை. கல்யாணம் ஆனவர்கள் தான் ரொம்பவும் பாதிக்கப்படுறாங்க. கணவருக்கு மனைவி மீதோ, மனைவிக்கு கணவன் மீதோ ஈர்ப்பில்லாம சண்டை சச்சரவும் வந்து, விவாகரத்துல போய்க்கூட முடிஞ்சிருக்கு. ஆனால், வெளிப்படையாக நான் ஒரு ஹோமோசெக்ஸ் பிரியன்னு சொல்லிக்க பயப்படறாங்க. காரணம் சமூகம் வீசும் அவச்சொற்கள்..!

லெஸ்பியன் உணர்வு வர மரபுக் கோளாறு மட்டும்தான் காரணம்னு சொல்லிட முடியாது. அப்பா அம்மாவை படுத்தும் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆண் ஆதிக்கம், சுதந்திரம் பறிபோகுமோ என்கிற அச்சம்.. இதெல்லாம்கூட உள்ளுக்குள் ஊறி பெண்துணையே பாதுகாப்புங்கிற எண்ணத்தை உருவாக்குதுனு நம்பறேன்..</i>

avalvikatan,com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#2
நான் சில காலங்களுக்கு முன் நிர்வாகப்பகுதியில் எழுதியதை மீண்டும். எல்லோரும் பார்க்கும் வண்ணம் போடுகிறேன். ஏனெனில் முன்பும் அப்படி ஒரு விடயமாக எழுதியபோது தான் அதை எழுதினேன்.

Ilango Wrote:இதைப்பற்றி பெரிதாக நான் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை.

ஓரினச்செயற்கை பற்றிய அறிவு தமிழருக்குள் குறைவு.

ஓரினச்செயற்கையையும் சிறுவருடனான பாலியலையும் கூட ஒன்று என்று நினைப்பவர்களே இவர்கள்.

<b>ஓரினச்செயற்கை</b>

இது ஒரு இயற்கையின் தவறு. பிறக்கும் போதோ சிலர் குருடாக பிறக்கின்றனர், சிலர் செவிடாக சிலர் முடமாக பிறக்கின்றனர். அதாவது மனிதனுக்கான பூரண அங்கங்களற்ற நிலையில் பிறக்கின்றனர்.

அதே பொல்த்தான் ஓரினச்செயற்கையும். ஒரு பெண் அங்கங்களால் 100 வீதம் பெண்ணாக இருக்கிறாள் ஆனால் மரபணு ஆண்களுக்குரியதாக இருக்கிறது. உணர்வுகளை கொடுப்பது மரபணுவும் ஹோர்மோனும் என்பதால் அவள் தன்னை ஒரு ஆணாக உணர்கிறாள் (...........) இதனால் அவளால் ஒரு ஆணின் மீது காதல் கொள்ளமுடியாது.

இதேபோல்தான் ஒரு ஆணால் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளமுடியாது. இவர்கள் தங்களைப்போல் உணர்வுள்ள இன்னொரு ஓரின செயற்கையாளரை நாடுகின்றனர்.

இவர்கள் நடத்தை கெட்டவர்கள் இல்லை
சாதரணமாக ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது போல் இவர்களுக்குள்ளும் ஒருவனுக்கு ஒருவன் , ஒருத்திக்கு ஒருத்தி என்று வாழ்வோருமுன்டு.

அதே போல் சாதரண ஒரின செயற்கையற்றவர்கள் இழிவு வாழ்கை வாழ்வதுபோலும் இவர்களுக்குள்ளுமுண்டு.

உலகத்திலேயே முதல் முதல் ஓரினசெயற்கை திருமணத்திற்கு ஆங்கீகாரமளித்த நாடு ஒல்லாந்து.
உலகத்தின் முதன் முதல் ஹோமோ திருமணச்சோடிகளும் இந்த நாட்டை சேர்ந்தவர்களே. அண்மையில் அவர்களை ரீவி பார்த்தேன். இன்றும் சந்தோசமாக ஒன்றாகத்தான் உள்ளனர். நல்ல மனிநேயசிந்தனை உள்ளவர்கள்.
இதே போல் பெரிய பெரிய பதவிகளில் இவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஹோமோ என்று சொல்ல வெட்கப்படுவதில்லை.

<b>குழந்தைகளுடன் பாலுறவு</b>
இப்படியானவர்கள் பெண்களுடன் தம்பத்தியம் கொள்ளக்கூடியவர்கள். ஆனால் ஒருவித மனநோய் பிடித்தவர்கள். ஒரு பெண்ணுடன் இணைவதில் திருப்தியடையாதவர்கள். அவர்கள் சிறுவயதில் பாலியலுக்குள் உள்ளாக்கட்டிருக்கலாம் அல்லது வேறுவிதத்தில் உடலுறவு கொள்ளவதில் திருப்தியடைபவர்களாக உள்ளனர். அவர்களுக்குள் மனிதநேயம் காணமுடியாது கொலைகூட செய்யக்கூடியவர்கள்.


பரணி நீங்கள் நினைப்பது போல் ஓரினச்செயற்கை இன்று தொடங்கியது அல்ல அது பைபிள் காலத்திலிருந்து இருக்கிறது. பைபிளில் பல சந்தர்ப்பங்கள் அது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பைபிள் கதைகள் எந்த தேசத்துக்குரியவை என்பது பற்றி உங்களுக்குத்தெரியும்.
எனவே இது மெலத்தேயருக்கானதுமல்ல , கலியுக விநோதமுமல்ல

ஓரினசெயற்கை பற்றிய புத்தகம் குறும்படங்கள் பல பார்த்துள்ளேன். அவர்களை நினைத்து அனுதாபப்படுவேன். ஆனால் அவர்கள் தாங்கள் அனுதாப்துக்குரியவர்களாக நினைப்பதில்லை. அவர்களை அவர்கள் பாட்டுக்கு விட்டாலே அவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.

நான் அங்கவீனர்களுக்கு பக்கத்திலிருந்து வாழ்ந்ததில்லை. எனக்கு தெரிந்தவரை பெரிதாக எனது ஊரில் அங்கவீனர்கள் இல்லை. எனக்கு அடுத்த வகுப்பில் மட்டும் ஒருவன் இருந்தான்.
ஒரு கால் அவனுக்கு ஏலாது. தனக்கு ஒரு கால் ஏலாது என்று அவன்கவலைப்பட்டதை நான் அறியவில்லை. ஆனால் எல்லோரும் அவனை நொண்டி என்று சொல்வதை நினைத்து அவன் அழுததை பல தடவை பார்த்துள்ளேன்.


இறைவன்(இயற்கை) எம்மை எதுவித குறையுமில்லாமல் படைத்துள்ளான் அதற்கு அவனக்கு நன்றி சொல்லுவோம்.



இதை லெஸ்பியன் தலைப்புக்குத்தான் எழுதினேன்.
ஆனாலும் அதற்குள் போட்டு அந்த லூசுகளுடன் என்னால் மல்லுக்கட்ட முடியாது என்பதால். பரணியும் அங்கு கருத்து எழுதியிருப்பதால் இங்கு போடுகிறேன்.
பரணிக்கு எதிர்க்கருத்து இருந்தால் அதற்கும் பதிலளிக்க நான் தயார்
#3
எல்லாம்சரி.. இங்கு இதை கொண்டுவந்து போட்ட வசிசுதா ஆணா..? அல்லது பெண்ணா..?
சிலர் ஆண் என்கிறார்கள்.. சிலர் பெண் என்கிறார்கள்..
ஆணாயிருந்தாலென்ன பெண்ணாயிருந்தாலென்ன ஏதொ இருந்திட்டுப்பொகட்டும் என்று விட்டுவிட்டு இருந்தேன்..
இப்பொழுது அறிந்து வைக்கவேண்டிய தேவை வந்துவிட்டது..
ஆணாயிருந்து பெண்ணா..?
இல்லை பெண்ணாயிருந்து ஆணா..?

நீங்கள் என்னை கேட்கப்போகும் கேள்விக்கு விடை.. நான் ஆணாயிருந்து ஆண்.. இயற்கையோடு ஒன்றியவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#4
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...
கட்டுரையை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்க தாத்ஸ்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#5
சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. வேறு என்ன சொல்லமுடியும்..

டாக்குத்தர் ஜெயஸ்ரீக்கம் நல்லா வாச்சுப்போச்சு..

அம்பிளிபயர் கோண் கட்டி.. ஏதொ நடக்கட்டும்.. ம்.. ம்..
:!: Idea Arrow
Truth 'll prevail
#6
கடவுள் எங்கையோ புரோக்கிராம் பண்ணேக்க பிழைவிட்டிட்டார்...புறூவ் றீடிங் செய்யல்லப் போல....எண்டு கதைவிடுறாங்கள் போலத்தான் கிடக்கு.....உருவம் பெண்ணாம்...ஆனா மனசு ஆணாம்....உருவம் பெண்ணாகவே மரபணு ரீதியா எக்ஸ் எக்ஸ் மரபணுச் சோடிகள் தேவை அப்படி XX சோடி வந்திட்டா மிச்ச ஒமோன்களின் சுரப்பும் ஒழுங்கா இருந்தாத்தான் பொண்ணு பொண்ணாக முடியும்.. படத்தைப் பார்க்க ஒண்டு புரியுது இரண்டும் பொண்ணு...ஒண்டு செயற்கையா ஆணு மாதிரி அலங்கரிச்சிருக்குது எண்டது...ஆனா மனசு எண்டது மூளை சம்பந்தப்பட்டது...எனவே உதுகளுக்கு கோளாறு மூளையில தான்...இரண்டு உதை கொடுக்கத் திருந்துங்கள்....அப்படி எண்டு சிலர் எண்ணலாம்...அது உண்மையாகக் கூட இருக்கலாம்....என்றாலும் இவர்களின் மனக் கோளாறுக்கு மருந்து இதுதானோ..... இல்ல அவனவன் தன்ர தன்ர மனத்தைப் பற்றியே சரியாப் படிக்க முடியாம இருக்கிறான்...அவ ஒருத்தி இவையின்ர மனதைப் படிச்சு பரிகாரம் தேடிக் கொடுத்தாவாம்.....செருப்பால அடிக்க....! அதுக்க விஞ்ஞான விளக்கம் வேற....!

உதுகளுக்கு பாலியல் ரீதியான மனக் கோளாறு....உதுகள ஆசுபத்திரிக்கு அனுப்பி..அவர்களுக்குப் பிடித்தமான சூழலில் வாழவிடுறதுதான் நல்லம்...இல்லையெண்டா நாலு நல்லதுக்கும் உதுகளப் பாத்தோடன அந்தக் கோளாறு வந்திட்டுது எண்டா......??????! சமூகம் என்னாகிறது...ஏணென்டாப் பாருங்கோ....உந்த ஒரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்ட ரீதியாக்கினவுடனவே நல்லா இருந்த சிலபேருக்கும் உந்த மனக்கோளாறு திடீர் திடீர் எண்டு முளைச்சிருக்கிறதுதான்...எங்கையே உதைக்கப் பண்ணுது.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மனக்கோளாறுகளுக்கு பலவித வைத்தியம் இருக்கு அதுகளைச் செய்து பாத்து அதன் பயனா ஒரு வேளை உந்தக் 'கலியாண' அநாகரிகத்துக்கு ஒரு முடிவு கட்டினா...அதால நாலு நல்லதுக்கும் உந்த திடீர் தொத்துவியாதி பரவாம இருக்க வசதியா இருக்கும்...எண்டு நினைக்கிறதிலையும் தப்பில்ல....!

அதுசரி லெக்ஸ்பியன் கே(gay) பத்தி தனிய எல்லாம் பேசுறாங்க....பப்பிளிக்கில உள்ளவங்கள் லூசாம்....எண்டும் சொல்லுறாங்கள்...அது பத்தி என்ன நினைக்கிறிங்க.....<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#7
எல்லாம் அவனவனிற்குத்தான் தெரியும்

இருக்குமென்பார் இல்லாதவர்
இல்லையென்பார் இருக்கின்றவர்

எல்லாம் அவன் அவன் செயல்
[b] ?
#8
எல்லாம் அவன் அவன் செயல்
#9
ஜயோ உலகத்தில என்ன நடக்குது!.
யாம் அறியோம் பரா பரனே.

:roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#10
ஒண்டும் அவனவன் செயலில்ல...எல்லாம் உங்கட செயலுகள் தான்....அவனைக் கண்டியளோ கண்ணால....சும்மா அவனை ஏன் இழுக்கிறியள்....உங்கட கூத்தாட்டம் பிசகிப் போச்சென்டோடன.....! அவன் ஒழுங்காத்தான் இருக்கிறான்.... இருப்பான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#11
Paranee Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>இருக்குமென்பார் இல்லாதவர்
இல்லையென்பார் இருக்கின்றவர்</span>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#12
என்னத்தைப்பற்றியப்பா கதைக்கிறியள்.. எழுதுறியள்..?
கொஞசக்காலத்துக்கு முதல் கம்பிக் கலியானம் பற்றி விவாதிச்சியள்..
இப்ப சாப்பைக் கலியாணம் பற்றி விவாதிக்கிறியள்..
அந்தக்காலம் தொடக்கம் உது இருக்கு..
அதுக்கு இப்ப அங்கீகாரம் குடுத்திருக்கு.. உதைப்போய் தண்டோரா போட்டு பெரிசுபடுத்துறியள்..
மில்லியனிலை ஒண்டு..
இருந்தால் இருந்திட்டுப்போகட்டுமே..
Idea Idea Idea
Truth 'll prevail
#13
ஏன் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுகின்றீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
#14
அப்படியோ ஆளவந்தான் அண்ணச் சொல்லவாறியள்...அப்ப உங்களுக்கு எனி உடம்புக்கு முடியல்லை எண்டா வைத்தியரட்டப் போகக் கூடாது...அதெப்படி உங்கட வாழ்ககையில அவர் தலைப்போடலாம்.....என்ன அது நியாயம் எண்டா இதுவும் நியாயம் தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#15
Quote:ஏன் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுகின்றீர்கள்
Quote:அப்படியோ ஆளவந்தான் அண்ணச் சொல்லவாறியள்...அப்ப உங்களுக்கு எனி உடம்புக்கு முடியல்லை எண்டா வைத்தியரட்டப் போகக் கூடாது...அதெப்படி உங்கட வாழ்ககையில அவர் தலைப்போடலாம்.....என்ன அது நியாயம் எண்டா இதுவும் நியாயம் தானே....!


அப்ப வீட்டில் ஏதாவது குடும்பச் சண்டை என்றால்..ரோட்டில் போறவை எல்லாம் வந்து பங்கு கொள்ளலாம். :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#16
:roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#17
தோழியர் வலைப்பதிவில் வாசித்த ஒரு நேர்காணலிருந்து, இந்தத் தலைப்புக்குப் பொருந்திய ஒரு கேள்வியும் பதிலையும் இங்கிடுகிறேன்:


உரையாடல் - சிவகாமி & றஞ்சி(சுவிஸ்)
இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்ட தலித் பெண்ணியவாதியான சிவகாமி அவர்கள் யூலை 2000 ஆண்டு பெண்கள் சந்திப்புக்காக பிரான்ஸ் வந்திருந்தார். அவருடனான உரையாடல் இங்கு சக்தி சஞ்சிகைக்காக தொகுக்கப்பட்டது.

நேர்காணல்: றஞ்சி(சுவிஸ்)

<i>குடும்ப அமைப்பு முறையினுள் பாலியல் உந்துதல்கள் மீது மிகக்கடுமையான ஒழுக்கவிதிகள் கடைப்பிடிக்கப்ட்டுவரும் வேளையில் ஆண்மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துகளுக்குச் சவாலாக ஓரிணப்புணர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுவது பற்றியும், பாலியல் ஒழுக்கவிதிகள் அப்படியே நிலவ லெஸ்பியன் உறவு ஆணாதிக்கத்தால் கேலிக்குரிய செயற்பாடாக உருவகிக்கப்படும் சாத்தியம் பற்றியும் என்ன கூறுகிறீர்கள்?? </i>

ஓரினப்புணர்ச்சியாளர்கள் ஆண் மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துக்களுக்குச் சவாலாக செயல்பட்டு வருகின்றனர் என்பதன் அடிப்படையில் பெண்ணியம் பற்றி பேசும் ஒவ்வொருவரும் இதன் மீது கருத்துத் தெரிவிக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சூழலையொட்டியும் இக்கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது.


ஓரினப்புணர்ச்சியிலும் ஒருவர் தன்னை ஆணாகவும் மற்றொருவர் தன்னைப் பெண்ணாகவும் வரித்துக் கொள்கிறார்கள் என்றும் ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்று பாலியல்விதி கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவம் கேள்விப்பட நேர்ந்தது. பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் ஒருதாரமணத்தை வன்முறையென வரையறுக்கும்போது ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்பதை ஆணாதிக்க கருத்துக்கு எதிரான செயல்பாடாக எப்படிக் கொள்வது? அவர்களும் தேவாலயங்களில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கென குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டு சொத்து சேர்த்துக்கொண்டு.... இதுசவாலா அல்லது அவர்கள் தங்களது தனிவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள சங்கடங்களா? ஓரினப்புணர்ச்சி இப்போதைய பாலியல் ஒழுக்கவிதிகளின் மீறல் என்றளவில்தான் புரிந்துகொள்ள முடிகிறது. ஓரினபுணர்ச்சியாளர்களின் நடவடிக்கையின் விபரங்கள் முழுவதுமாகத் தெரியாத நிலையில், அதை நீங்கள் வசிக்குமிடங்களில் உள்ளவர்கள் தொகுத்தால் நன்றாயிருக்கும்.

நன்றி: http://womankind.yarl.net/


#18
என்னவா வரிக்கிறியளோ..... இயற்கையை வாரிப்போடாதேங்கோ.....பிறகு அது உங்கள வார அதிக காலம் எடுக்காது....உது எங்க போய் முடியப் போகுதோ.....உதெல்லாம் சிலதுக்கு சிந்தனைகளை ஒரு கட்டுக்கோப்புக்க வைச்சிருக்க முடியாத பரிதாப நிலையின் வெளிப்பாடுகள்.....அப்படி எண்டுதான் தோணுது....அதுகளாப் பட்டுணரும் போது....அதுகள் எங்க இருக்குங்களோ....யார் அறிவார்....கைவிட வேண்டிய கேசுகள்....உதுகளப்பற்றி பேசுறதை விட.... இன்னும் பல ஆரோக்கியமான விசயங்களப் பேசலாமே.....?????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#19
விதவைகள் விபுதாரன்கள் என்று ஒதுக்கி சமுதாயத்தை ஒரு சாக்கடைக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் இன்றைய புத்திகெட்ட உலகில் இப்படியான ஓரின சோடி சோக்கை ஓரின திருமணம் என்பது சற்று வரவேற்பிற்கு உரியதுதான்
[b] ?
#20
ஓருவன் பத்து திருமணம் பதினைந்து திருமணம் என்று எண்ணிக்கையில் அடுக்கிக்கொண்டு போறதைவிட மனங்கள் ஓத்து சந்தோசமான வாழ்க்கை அவர்களால் வாழ முடியுமென்றால் அத்தகைய திருமணங்களை வரவேற்பதில் எத்தகைய தவறும் இல்லை.
[b] ?


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)