Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
தற்போதைய அரசினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது: மகேஸ்வரன் எம்.பி.

தற்போதைய அரசாங்கத்தினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகஸே;வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசு மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தமிழர்க்கெதிரான கட்சி. இவர்களால் சமாதான முயற்சிகளை சரியான வழியில் முன்னெடுக்க முடியாது.

தற்போதைய அரசு ஆகக் கூடியது இன்னும் சில மாதங்களே நீடிக்குமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தியாராசா மகேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.

கந்தப்பொல விவகாரத்தை கண்டிக்கும் வகையிலான சுலோகத்தை ஏந்தியவாறு தியாகராசா மகேஸ்வரன் சபை அமர்வுகளில் கலந்து கொண்டார்.

ம.ம.மு. பாராளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரன்

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திரசேகரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அதன் போது குறுக்கிட்ட ஆளும் கட்சியினர் ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றை கிளப்பினர்.

கந்தப்பொல சம்பவம் தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கூட தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை. தமிழர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றதென்றும் சந்திரசேகரன் தனதுரையில் தெரிவித்தார்.

இ.த.க. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழர்களைக் கொலை செய்து நட்ட ஈடு வழங்குவதனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர், இத்தகைய கொலைச் சம்பவங்கள் தொடர் கதைகளாகவே உள்ளன என்றும் தெரிவித்தார்.

இத்தகைய வன்முறைகள் சமாதான நடவடிக்கைகளை பாதிக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், கந்தப்பொல விவகாரம் ஒரு இனப்பிரச்சனையல்ல. இதனை பெரிதுபடுத்தி சிலர் அரசியல் லாபம் ஈட்ட முயல்வதாக கூறினார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தல்கால வாக்குறுதிகளும் முஸ்லிம் காங்கிரஸின் நெருக்கடியும்

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் தகுதியற்றவர் என்ற எதிர்பிரசாரத்திற்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை தீர்மானிக்கும் சக்தியாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டம் எவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு இதயமாக விளங்குகின்றதோ அதேபோன்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் மரத்திற்கு ஆணிவேராக அம்பாறை திகழ்கின்றது. இம் மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தேர்தலில் நின்று வெற்றிபெற்றிருப்பதுடன் மு.கா. இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இங்கு ரவூப் ஹக்கீம் அடைந்த வெற்றி முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமை தாங்குவதற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

தலைமைத்துவ போட்டி, தலைமைத்துவத்திற்கு எதிரான பிரசாரங்கள், கருத்துக்கள், கட்சிக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கிடையே இருக்கும் செல்வாக்கு என்பவற்றில் வெற்றியடைந்து நிம்மதிப் பெருமூச்சினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. விட்டபோதிலும் தலையிடி தீர்ந்தபாடில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் அனைவரையும் ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டிய தேவையும் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றன. தற்போது ஆளும் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலேயேயுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களை பட்டம், பதவிகளையும், கோடிகளையும் காட்டி தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளை முகவர்களின் உதவியுடன் செய்துகொண்டு வருகின்றது. இந்த வலையில் தமது கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் மு.கா.வின் தலைமைக்கு நிறையவே உண்டு.

அண்மையில் மு.கா.வின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்நான்கு பேரும் கூட்டாக மு.கா.விற்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமாக அறிக்கைவிட்டனர். இவ்வறிக்கை வந்திட்டபோதிலும் தலைவர் ரவூப்ஹக்கீம் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கழுகுப் பார்வையை தொடர்ந்தும் வைத்துள்ளார். இதனிடையே ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதிலும் நெருப்பில்லாமல் புகைவருமா? என்று அரசியல் அவதானிகள் கேட்கின்றார்கள்.

""முஸ்லிம் மக்களின் விடுதலைக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இந்த இலட்சியத்தினை அடைந்துகொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேர்தலில் நிற்கின்றோம்'' என்று தேர்தல் காலங்களில் கூறியவர்கள் உண்மையாகவே முஸ்லிம் சமூகத்தை விசுவாசிப்பவர்களாக இருந்தால் பட்டம், பதவிகளுக்காக ஆளும்தரப்பிற்கு மாறக்கூடாதென்று மு.கா.வின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள். அதுமட்டுமன்றி தேர்தல் காலங்களில் இவர்களின் தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியின் பக்கம் முஸ்லிம் ம்க்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க துடித்துக்கொண்டிருப்பவர்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு விரோதமான சக்தியுமாகிய ஜே.வி.பி. யும் காணப்படுவதோடு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதிய ஐம்பது பக்கங்களைக்கொண்ட கடிதத்தினை மறைத்தவரும் அவரின் படுகொலைக்கு காரணமானவர்களும் காணப்படுகின்றார்கள். இவர்களோடு ஒருபோதும் இணைந்துகொள்ளமாட்டோம்'' என்று மேடைக்கு மேடை கூறிவந்தார்கள் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள். இவ்வாறு முழங்கிவிட்டு ஆளும் தரப்பிற்கு ஒரு சில எம்.பி.க்கள் மாறுவார்களாயின் அது அவர்களின் கபடத்தனத்தைக் காட்டுவதாக இருக்கும்.

அது மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸை எம்.பி.பதவிக்கு மாத்திரம் பாவித்துவிட்டு தூக்கிவீசுவதனைப் போன்றாகிவிடும். அதேநேரம் தேர்தல் காலத்தில் கூறியவார்த்தைகள் எதுவும் பெறுமதியற்றதாகவே இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பிற்கு ஏதோ ஒரு அடிப்படையில் ஆதரவினை வழங்குவதற்குரிய பேரம்பேசும் சக்தியை இல்லாமல் செய்துவருவதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மீதும் அதனூடாக தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கையானது இல்லாமல் போய்விடும். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் மேலும் சின்னாபின்னமாகி அழிந்துவிடும். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வாக்காளர் தொகையினை இன்னும் கூட்டிக்கொள்ளவும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டம் பதவிகளுக்காக சோரம் போகக்கூடியவர்களல்லர் என்ற நல்லபெயரை எடுக்கவும் வேண்டிய அவசியமும் தேவையும் உள்ளன. இவைகளை அடைந்துகொள்ளவேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரிபிழைகளை தங்களுக்குள் விவாதித்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதனையே ரவூப்ஹக்கீம் விரும்புகின்றார். இதனிடையே கட்சியின் எம்.பி.மார் எந்த இடத்தில் காலைவாரிவிடுவார்களோ என்ற உள்ளச்சமும் அவரிடம் காணப்படுகின்றது. இந்த அச்சத்தை இல்லாமல் செய்ய வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. அதேவேளை தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவேண்டிய அணுகுமுறைகளை கையாளுவதற்கு ரவூப்ஹக்கீம் முன்வரவேண்டும். கடந்தகால அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயற்படவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கின்றது.

மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மற்றுமொரு தலையிடிதான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்ற விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரையும், ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினூடாக நான்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற தனித்துப்போட்டியிட்டதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கட்சியின் மூத்த உறுப்பினரும் செயலாளருமான எம்.ரீ.ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியாகவுள்ள நான்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தற்காலிகமாக நான்குபேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தலைமைத்துவம் ஆணையிடும்போது இராஜினாமாச் செய்வதற்குள்ளார்கள்.

இந்நான்கு எம்.பி.பதவிகளையும் யார் யாருக்கு வழங்குவது, எவ்வாறு வழங்குவது என்ற குழப்பத்தில் தலையை பிய்த்துக்கொண்டிருக்கின்றார் மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம். தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவர்கள் தங்களின் ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்தி தாங்கள் பின்னுக்கு நின்று கொண்டு எம்.பி.பதவியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

வட கிழக்கிற்கு வெளியே உள்ள கட்சி ஆதரவாளர்களும் கூட தங்களின் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி.பதவி வழங்கவேண்டுமென்று கட்சி தலைமைத்துவத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறத்தில் அம்பாறை மாவட்டத்தில் ரவூப்ஹக்கீம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதன் கட்டாயத்தில் காணப்படுகின்றார். அதாவது, இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெறுமாயின் விருப்புவாக்கின் அடிப்படையில் நான்காவது இடத்தினை பெறுபவருக்கு தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவி வழங்கப்படும். சிலவேளை கட்சி இரண்டு ஆசனங்களைப்பெறும் பட்சத்தில் பட்டியலில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளவர் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவியை பெற்றுக்கொள்வார் என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். இதன்படி மூன்றாவது இடத்திலுள்ள நௌஸாட் என்பவருக்கு தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டியுள்ளது.

இதேவேளை, கல்முனைத் தொகுதி மு.கா. ஆதரவாளர்கள் தங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துநிற்கின்றது. ஆதலால் நான்காவது இடத்தில் பட்டியலிலுள்ள நிஜாமுத்தீனுக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கவேண்டுமென்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள்.

மேற்படி வேண்டுகோள்களும், கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற அதேவேளை முஸ்லிம்காங்கிரஸின் ஆணிவேராக திகழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் கட்சிக்கான செல்வாக்கை இன்னும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. இதற்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியினை பயன்படுத்தியõக வேண்டிய அவசியமும் தலைமைத்துவத்திற்கு உள்ளதென்று கட்சியின் வட்டாரங்கள் அபிப்பிராயப்படுவதில் நியாயம் இல்லாமலில்லை. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு பெரும் சவாலாக விளங்கிவரும் அதாவுல்லா,பேரியல் அஷ்ரப், சேகு இஸ்ஸத்தீன் ஆகியோர் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதோடு, அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரஸினதும் ரவூப் ஹக்கீமினதும் செல்வாக்கு மேலோங்குவதனை ஜீரணிக்கமாட்டார்கள். மு.கா.வுக்கும் தலைமைக்கும் எதிராகவே செயற்படுவார்கள். மட்டுமன்றி தமது அமைச்சுப் பதவிகள் மூலம் மக்களை கவரும் வேலைகளில் ஈடுபடவும் செய்வார்கள். இவைகளிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை பாதுகாக்க ரவூப் ஹக்கீம் முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளன.

அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஒழிக்கவேண்டுமென்பதற் காக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தேர்தல் காலத்தில் விலகிய அன்வர் இஸ்மாயிலுக்கு ஜனாதிபதி தேசியப்பட்டியலில் எம்.பி. பதவியை கொடுத்திருப்பதுடன் பிரதி அமைச்சர் பதவியையும் வழங்கியுள்ளார். ஆக அம்பாறையில் மு.கா. வுக்கு எதிராக மூன்று அமைச்சர்களும் ஒரு பிரதி அமைச் சரும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் நிலையில் மு.கா.வின் தலைமை எந்தவிதமான யுக்தியை கையாளப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாக அரசியல் அவதானிகளிடையே காணப்படுகின்றது.

மு.கா.வின் தலைமைத்துவத்தின் தேர்தல்களமாகவும் மு.கா.வின் ஆணி வேராகவும் அம்பாறை மாவட்டம் உள்ளதால் இம்மாவட்டத்தினை தட்டிக்கழித்துவிடமுடியாது. முன்யோசனை அற்ற எந்தவொரு நடவடிக்கையும் மு.கா.வினைப் பாதிக்கும் என்பதனை எவரும் மறுத்துரைக்கமுடியாது.

தலைமைத்துவம் இவ்வாறு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் தலைமைத்துவத்தினை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளில் மு.கா.வின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களும் (எம்.பி.மார்களும்) ஈடுபடக்கூடாது. தோற்றவர்கள் தங்களின் ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தலைமைத்துவத்தை நோக்கி எம்.பி. பதவியினை கேட்டுப் படை எடுப்பதானது தலைமைத்துவம் சரியான முடிவினை எடுப்பதற்கு தடையாக அமைந்துவிடும். ஆகவே, தோற்றவர்கள் கட்சிக்கு நேசக்கரத்தினை தொடர்ந்து நீட்டவேண்டும். இதனை விடுத்து எம்.பி.பதவியை எவ்வாறு அடைந்துகொள்ளலாம் என்பதில் கண்வைத்தவர்களாகவே மு.கா.வின் வேட்பாளர்கள் காணப்படுகின்றார்கள். கட்சியினதும், சமூகத்தினதும் நலன்பற்றி போதிய அக்கறையற்றவர்களாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிபெற்றவர்கள் மீனுக்கு வாலையும் , பாம்புக்கு தலையையும் காட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால்தான் ஏனையகட்சி எம்.பி.மார்களைவிடவும் மு.கா.வின் எம்.பி. மார் சிலர் ஆளும்தரப்பிற்கு மாறிவிடுகின்றார்கள் என்ற செய்திகள் பரவத்தொடங்கவும் செய்கின்றது. பேச்சு ஒன்றாக இருக்க (இதt ச்ணஞீ கீடிஞ்டt) வேண்டும். அவ்வாறு இருக்கும் போது எதிர் அணியினர் பேசுவதற்கும் வேறு கதைகள் வெளிவருவதற்கும் எம்.பி.மார் மீது தலைமைத்துவத்திற்கு சந்தேகம் வருவதற்கும் இடமிருக்காது.

இவை இவ்விதம் இருக்க ரவூப் ஹக்கீம் மேடைகளில் கண்டபடி வாக்குறுதிகளை அளிப்பதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதி ஒன்று தேர்தல் முடிந்த பின்னர் நிறைவேற்ற முடியாததோடு சூழ்நிலையினை ஏற்படுத்தவும் செய்யும். மறைந்த தலைவர் அஷ்ரப் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்குவதனை மிகக்கூடுதலாக தவிர்த்துக்கொண்டே வந்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் விடுதலை, மு.கா.வின் தேவை என்பவற்றை எடுத்துக்கூறியே வாக்குகளை கட்சிக்கு சேர்த்துள்ளார். ஆனால், ரவூப் ஹக்கீம் வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக அம்பாறையில் மூன்றாவது/ நான்காவது இடத்தில் நிற்பவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பதானது இன்றைய சூழ்நிலையில் சிக்கல்களையே ஏற்படுத்தியுள்ளன.

கட்சியில் புதிதாக சேர்த்து கொள்பவர்களாக இருந்தாலும் பழையவர்களாக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுடன் பற்றுள்ளவர்களையே தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தவேண்டும். அதைவிடுத்து எம்.பி.பதவியை நோக்காகக் கொண்டு அதனை அடைந்துக்கொள்வதற்கு மு.கா.வை. பயன்படுத்த நினைப்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக்கூடாது. மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர் என்பதற்காக கட்சியில் சேர்க்கும்போது கொள்கைப்பிடிப்பில்லாத அவர் கட்சியை விட்டு என்றோ ஒருநாள் பிரிந்துசெல்வார். அவ்வாறு செல்லும்போது அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு பிரிந்துசெல்வார்கள். ஏனெனில், அந்நபரின் ஆதரவாளர்களும் கொள்கையைவிட தமது ஆஸ்த்தானவரையே முதன்மைப்படுத்தி நிற்பர்.

எனவே, கொள்கைப் பிடிப்புள்ளவர்களை உள்வாங்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் தலைமைத்துவம் முன்வரவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மு.கா.வின். எம்.பி.மார் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் கொள்கை பிடிப்புள்ளவர்களாகவும் திகழவேண்டும். தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் தலைமைத்துவத்தினை நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது. தலைமைத்துவம் எடுத்ததற்கெல்லாம் வாக்குறுதியளிக்கும் கடந்தகால போக்கிலிருந்து தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர்பீட உறுப்பினர்களும் தலைமைத்துவம் எதிர் கொண்டுவரும் தலையிடியிலிருந்து விடுபட ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் வழங் கவேண்டும். தலைமைத்துவம் நல்ல ஆலோசனைகளை ஏற்று நடப்பதற்கும் முன்வரவேண்டும்.

எம்.சஹாப்தீன் / வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Change in India's Lanka policy unlikely: Japan

Colombo, May 19 (UNI) The Indian policy on Sri Lanka would not change despite a change in guard at New Delhi, the Japanese special peace envoy said today.

Yasushi Akashi, the Japanese special envoy in Sri Lanka's peace process with the LTTE said ''foreign policies of a country unlike economic policies tend to remain more consistent''.

He said he held talks with the Indian envoy Nirupam Sen during his five-day visit which conluded today.

Without a direct response to the question if the new Indian government would seek extradition of the LTTE leader Velupillai Parabakaran, Mr Akashi said India was very much interested in peace in Sri Lanka.

''India seems to be prepared to accelarate economic assistance programmes and willing to co-ordinate activities of international donors,'' Mr Akashi said.

He said he was satisfied with what India has been doing but ''one should not expect too much before the new goverment defines the precise outlines of its policies towards Sri Lanka. There may be elements of continuity and there may be changes of emphasis.'' ''All of us try hard to work with India which has enormous interests in Sri Lanka so that India feels comfortable and parties in Sri Lanka feel reassured about not working at loggerheads with each other,'' Mr Akashi stressed.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடையாது என்று யப்பானிய விசேட தூதர் தெரிவித்துள்ளார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பேச்சுவார்த்தையில் அரசும், புலிகளும் அக்கறை தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச வேண்டும்
இந்தியா வெளியுவுக் கொள்கையினை மாற்றாது என்கிறார் அகாசி


அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை கடைப்பிடிப்பதிலும், சமாதானப் பேச்சுவார்த்தையிலும் விடுதலைப் புலிகள் ஈடுபாடு காட்டிவருகின்றனர். இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான புலிகளது திட்டம் தயாராகவுள்ளமையினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தினமானது நாளையோ அல்லது நாளை மறுதினமோ அடுத்த வாரமோ தீர்மானிக்கப்படும் என்று நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே பேச்சுகள் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்தியாவில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ள போதிலும் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வருமென நான் கருதவில்லை என்றும் யசூசி அகாஷி சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை வந்த யசூசி அகாஷி நேற்று புதன் கிழமை நாடுதிரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றை தெரிவித்தார்.

ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களுக்கு அமையவே இலங்கைக்கான நிதி உதவிகள் வழங்கப்படும். வடகிழக்குக்கான இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முக்கியமான விடயமாகும்


. இது தொடர்பான விடுதலைப்புலிகளின் திட்டமும் தயாராகவுள்ளது. எனவே பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இது குறித்தே இணக்கம் காண்பது பொருத்தமானதாகும் என்றும் செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது யசூசி அகாஷி தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறியதாவது:

எனது விஜயத்தின் போது ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் சமாதான செயலகத்தை அமைத்து அதற்கு பணிப்பாளரையும் நியமித்துள்ளார். சமாதான முயற்சிக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கின்றது.

தமிழ்ச்செல்வனையும் சந்தித்து நான் பேச்சுக்களை நடத்தினேன். விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைக் கடைப்பிடிப்பதிலும், சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டி வருகின்றனர்.

டோக்கியோவில் இணைத்தலைமை வகித்த உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடனும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஜுன் மாதம் 1ஆம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ளது. உதவி வழங்கும் நாடுகள் தற்போதைய நிலையினை அவதானித்து வருகின்றன.

இவ்விடயம் குறித்து ஆராய்வதும் எனது விஜயத்தின் நோக்கமாகும்.

டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் தான் இலங்கைக்கான நிதி உதவிகளை உதவி வழங்கும் நாடுகள் வழங்கும். இந்தியத் தூதுவருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

காங்கிரஸ் கட்சியின் புதிய அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையினை மாற்ற மாட்டாது என்றே நம்புகின்றேன். இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா அக்கறை காட்டி வருகின்றது. இலங்கைக்கு இந்தியா உதவிகளையும் வழங்கியுள்ளது. எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு நன்றாகவுள்ளது. இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையினை இந்தியா மாற்றுமென நான் நினைக்கவில்லை.

பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டுமென டோக்கியோ பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து திகதியை கூறமுடியாதுள்ளது. நான் நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிராஸ்கரையும் சந்தித்து பேசினேன்.

பேச்சுவர்த்தைக்கான திகதி இடம் குறித்து நாளையோ அல்லது இந்த வாரமோ தீர்மானிக்க முடியும் என நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே சமாதானப் பேச்சினை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அமைச்சுப்பதவியும் பெருந்தொகைப்பணமும்
தருவதாக ஆசைவார்த்தை கூறினார்கள்
துரோகமிழைக்க விரும்பவில்லை என புஷ்பகுமார சபையில் தெரிவிப்பு


பிரதி அமைச்சர் பதவியும் தேவையான பெருந்தொகைப்பணமும் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் என்னை வற்புறுத்தினர். ஆனாலும் நான் அசைந்து கொடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் புஷ்பகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகரின் அனுமதியுடன் நேற்று சபையில் விசேட உரையாற்றிய புஷ்பகுமார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். ஆனால் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் எதனையும் அவர் சபையில் கூறவில்லை.

புஷ்மகுமார தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: பௌத்த சிங்களவனாக இருந்தும் என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்காக நான் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பொருத்தமானது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்காக மிகவும் உறுதியாக செயற்படுகின்றார். அவரது தலைமைத்துவத்தை மாசுபடுத்த சிலர் முற்படுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.

எங்களுக்கு ஆசைவார்த்தை காட்டினார்கள். பிரதி அமைச்சர் பதவியும், பிரதேச அமைப்பாளர் பதவியும், பணமும் தருவதாக கூறி வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதேவேளை புஷ்பகுமார உரையாற்றிய போது அரசதரப்பு உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.virakesari.lk/VIRAKESARI/daily/20040520/images/TI.jpg' border='0' alt='user posted image'>

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அப்படியே அண்ணன் கதிர்காமருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று யாராவது கேட்டுச் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்
\" \"
Reply
<b>அரசியலமைபில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது புலிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: பேராரிசியர் நிஹால் ஜெயவிக்கிரம </b>

[ கொழும்பிலிருந்து சண்முகப்பிரியா ] [ வியாழக்கிழமை, 20 மே 2004, 7:51 ஈழம் ]

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது விடுதலைப் புலிகளையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டுமென பேராசிரியர் நிஹால் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ~மக்களும் அரசியலமைப்பும்| என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகளானது, அரசியலில் மாற்றம் கொண்டு வர சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இடம்பெற்ற பொதுத் தேர்தல் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. சகல இன மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படும் அரசியலமைப்பே சிறந்தது. பெரும்பான்மையினரது நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அவை இயக்கப்படக் கூடாதென்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்ட மூலம் ஏற்கும் பொறுப்பு சுதந்திரமான ஒரு ஆiணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்காத அரசியல் கட்சிகளுக்கும் அதே போன்று இந்த விடயம் தொடர்பாக ங்களுக்கு கரிசனை காண்பிக்கும் குழுக்களுக்கும் ஆலோசனைகள் முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ஜெயவிக்கிரம மேலும் தெரிவித்தார்.

நன்றி புதினம்
Reply
இடிபாடுகளுக்குள்ளிருந்தும் எழத்தெரிந்தவர்கள்

.
" .. உலகெங்கும் சிதறிய நம் துளிகளும், சிந்தையால் ஈழவர் என்ற இனம் அன்றோ! கூடு திரும்பும் 5 லட்சம் உறவுகளோடு எல்லோரும் சேர்ந்தால் எழாதோ இங்கோர் புது யுகம்! .. "

நினைவுகளைப்போலவே நீண்டு செல்லும் நெடுஞ்சாலைகள் போக இரண்டு, வர இரண்டு என இடப்பட்ட வரிசைக்குள் விரையும் வாகனங்கள், பாதையின் இருமங்கிலும் பசுமைமிகுந்து கிடக்கும் வயல்கள், தோட்டங்கள், இடையிடையே கனரவாகங்கள் நெஞ்சாலையிலிருந்து வெளியேறித் தம் பாதை தேடி அடையும் கைத்தொழில்பேட்டைகள், ஊர்மனைகளிலிருந்து தொழிலாளர்களை தம் மடியில் அள்ளிக் கொண்டு வந்து சேர்க்கும் நீளம் குறைந்த தொடருந்துகள்.

அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தும், அநாவசியங்களைத் தவிர்த்தும், ஊருக்கொரு நூலகம், விளையாட்டு திடல், பாடசாலை, வைத்தியசாலை, மற்றும் பொதுமக்கள் கூடிமகிழ்த்த குதூகலித்திருக்க ஓர் மண்டபம் இப்படியாக இருக்கும் பல ஊர்மக்களுக்குப் பொதுவாய், மாவட்டத்திற்கு ஒன்றென நவீன உலகின் அற்புதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நகரங்கள் விண்ணை முட்டும் கட்டடங்கள், வீதிகளின் இருபக்கங்களும் வகைக்கொன்றாய் வசதியாய் அழகான கடைகள், கண்ணும் கருத்துமாய் காவலில் ஈடுபட்டிருக்கும் காவற்துறையினர், வீதிகளின் நடுவே விதம் விதமான வண்ணமலர்ச் செடிகள், கல்வி கற்கும் ஒரு வகையினர். வெவ்வேறு கடமைகளில் ஈடுபட்டுள்ள இன்னுமொரு வகையினரை இவற்றிற்கடுத்த மூன்றாவதாய், ஓங்கி வளர்த்திருக்கும் இத்தேசத்தினை கட்டியெழுப்பிய தலைமுறையினர், இளைய தலைமுறையிடம் தம் பணியை ஒப்படைத்துவிட்டு ஓய் வாய்ச் சேர்ந்து நாட்டு நடப்புகள் பேசுவதிலும் நற்பணிகள் ஆற்றுவதிலுமாய்! இழிந்தோர் மற்றும் ஏற்போரென்று எவருமே இல்லாத நன்னெறிச் சமத்துவ தேசம் ஒன்றாக நம்முடைய தேசம் ஆகினால்... ஆக்கப்பட்டால்!....

நிச்சயமற்ற ஒரு சமாதான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மீண்டும் ஒரு போர் ஆரம்பிப்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக, தென்னிலங்கையின் இனவாதமே அமையும். இந்த வகையில் தொடர்ச்சியான அழிவுகளும், இழப்புக்களும் மக்கள் மனங்களில் இனி நாம் உய்யும் வழியில்லை', என்ற ஒரு விரக்தி நிலைக்கு இட்டுசெல்லலாம். ஆனால் இடிபாடுகளும், இல்லாமைகளும் நிறைந்திருந்த இப்பூமியின் ஒரு பகுதியிலிருந்து எவ்வாறு இப்படி வியக்கத்தகு 'சொர்க்காபுரி' உருவானது என்று அறிந்து கொள்வதன் மூலம் அழிவு என்பது முடிவல்ல ஒரு புதிய தொடக்கத்திற்கான அடிக்கல் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இன்று நம்முடைய மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கு ஜரோப்பிய தேசங்கள், முழுமையான போர்க்கோலம் பூண்டிருந்த 2ம் உலகயுத்தகாலகட்டம் அது. முதலாம் உலகயுத்தத்திலிருந்து மீண்ட தேசங்கள், இரண்டு தசாப்பதங்களில் தான் கண்டுவிட்ட வளர்ச்சிகளையெல்லாம் போர்த்தளபாடங்களாகப் பரீட்சித்துக்கொண்டிருந்தவேளை அது. ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இத்தாலி மற்றும் துருக்கி சேர்ந்த பலமான கூட்டோடு, பிரான்சு, பிரித்தானியா, ஜக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் கூட்டு மோதியது. இந்த நாடுகளின் காலனித்துவ மேலாண்மை காரணமாகவும், ஜேர்மனியோடு கூட்டுச் சேர்ந்த ஜப்பானின் போரீடுபாட்டாலும் உலகம் முழுவதிலும் வியாபித்த 2ம் உலகயுத்தத்தில் 61 நாடுகளைச் சேர்ந்த 110 மில்லியன் (11கோடி) போர்வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. உலகத்தின் ஒவ்வொரு மூன்றாவது மனிதனும் அன்றைய கட்டத்தில் ஒரு போர்வீரனாக இருந்தான் எனவும் அறியப்படும் இந்தப் போரில் படைவீரர்கள் இழப்பு 25 மில்லியன் (2.5கோடி) உயிர்கள் அதில் 10 மில்லியன் ரஷ்யப்
படை வீரர்கள். இங்கு குறிப்பிடத்தக்கவை போர்வீரர்களின் இழப்புக்கள் மட்டுமே என்பது நோக்கத்தக்கது. உலகம் முழுவதிலும் பொதுமக்களின் இழப்பு உட்பட 60 மில்லியனுக்கும் (6 கோடி) அதிகமானது.

இப்படிப்பாரிய அழிவுகளைச் சந்தித்த 2ம் உலகயுத்தம் 1945இல் முடிவுக்குவந்தது. ஜேர்மனியக் கூட்டுப்படை ரஷ்யாவின் அர்ப்பணிப்பு மிக்க தாக்குதலில் படுதோல்வியைச் சந்தித்தது. ஜேர்மனியை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்த அமெரிக்கக்கூட்டு மற்றும் ரஷ்யப் படைகள் தாம் ஆக்கிரமித்த பகுதிகளை முறையே சொந்தம் கொண்டாடின. இதன் காரணமாகவே சோசலிஷ ஆட்சிக்குட்பட்ட பகுதி கிழக்கு ஜேர்மனியாகவும், முதலாளித்துவ ஆட்சிக்குட்பட்ட பகுதி மேற்கு ஜேர்மனி எனவும் பிரிந்துபோனது. தோற்ற பகுதியினர் மட்டுமன்றி வென்ற பகுதியினரும் பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தனர். தமது முழு உற்பத்தித்திறனையும் போரியல் தளபாடங்களுக்கான செலவிட்டமையே இதற்கான காரணமாகும். இந்தவேளையிலே பிரிட்டன் இலங்கையிடம் கடன்பட்டிருந்ததும், தமது உணவுத்தேவைகளுக்காக இந்தியாவையே நம்பியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

கிழக்கு ஜேர்மனி 03 ஒக்ரோபர் 1989 இல் மேற்குடன் இணைந்தது.

முதலாம் உலகயுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனியை வென்றவர்களின் முழுப்போர்ச்செலவையும் கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தடை முறையைப்பின்பற்றி தாம் பிடித்து வைத்திருக்கும் மேற்கு ஜேர்மனியிடம் முடியும்வரை கறந்துவிட வேண்டுமென்ற போக்கையே அமெரிக்க நேசப்படைகள் ஆரம்பத்தில் கொண்டிருந்தன. இருந்தும் இவ்வாறான ஒரு ஆக்கிரமிப்புப் போக்கை தாம்கடைப்பிடிக்கும் பட்சத்தில், கருத்தியல் ரீதியாகப் பலம் பெற்றுவரும் சோசலிஷக்கிழக்கு ஜேர்மனி, எங்கே ஒரு முன்னுதாரண தேசமாகப்போய்விடுமோ என்று அமெரிக்கா அஞ்சியது. ஜேர்மனியை விட சோசலிஷத்தையே தமது முதலாவது எதிரியாகக்கொண்டது.

இதன் காரணமாக சோசலிஷம் நிரூபிக்கப்பட்டுக்காட்டப்படும் கிழக்கு ஜேர்மனிக்கு எதிராக, தம்முடைய முதலாளித்துவ திறந்த பொருளாதாரத்தின் மகிமைகளை மேற்கு-ஜேர்மனியில் நிகழ்த்திக் காட்டவென உத்தேசித்து மேற்கு - ஜேர்மனி சோசலிஷக் கருத்துப்பரப்புகைக்குள் ஆட்பட்டும் பட்சத்தில், தன்னுடைய ஏனைய ஜரோப்பியக் கூட்டாளிகளையும் இழக்க வேண்டிவருமென அச்சம் கொண்டு, 1947 யூன்மாதம் ஜேர்மனி உட்பட போரால் நலிவுற்ற ஜரோப்பிய நாடுகளுக்கான தனது உதவித்திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா.

அவ்வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் கற்லெற் மார்சலின் மீளமைப்புத்திட்டம் (European Recovery Program ERP) 'மார்ஷ் திட்டம்' எனவே அழைக்கப்பட்டது. இதன் நோக்கங்களாக பின்வரும் 4 விடயங்கள் அமைந்திருந்தன.

01. அமெரிக்க உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புக்களை ஜரோப்பாவில் ஏற்படுத்துதல். இதன் மூலம் அமெரிக்கா பொருளாதார வளர்ச்சிக்கு தளம் அமைத்தல்.

02. அமெரிக்காவின் உதவி கிடைக்காமல் போகும் பட்சத்தில், சோவியத்தின் சோசலிஷ ஆளுகை மேற்கு ஜரோப்பாவின் செல்வாக்குப் பெறும் ஆபத்தைத் தடுத்தல்.

03. சோசலிஷ கருத்தியலுக்கு எதிராக, போட்டியாக ஒரு முதலாளித்துவவெற்றி முன்வைக்கப்படவேண்டும்.

04. முதல் மூன்று விடயங்களையும் சாதித்துக் கொள்வதற்காக மக்களின் அன்றாட தேவைகளானவற்றை பூர்த்திசெய்தல்.

இவ்வாறான இந்த நான்கு நோக்கங்ளையும் கருத்தில் கொண்டு 1948ம் ஆண்டிலிருந்து 1952 வரையிலான காலப்பகுதியில்,இந்த மேற்கு ஜரோப்பிய நாடுகள் கடனடிப்படையில் 13 பில்லியன் அமெரிக்க டொடர்களைப்பெற்றன. இந்தப்பணத்தின் பெரும்பகுதி இந்த நாடுகள் அமெரிக்காவிலிருந்த இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்டது. கடன் வழங்கிய 'காரணத்துக்காக உதவும்' அதேநேரம், தனது உற்பத்திகளைவிற்கும் ஒரு தந்திரமாகவும் அமெரிக்கா இதைக் கையாண்டது.

மேற்கு ஜேர்மனியைப் பொறுத்தவரையில் போருக்குப்பின் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக, அப்போதிருந்த றைஸ் மார்க் (RM) தனது பெறுமதியை முற்றிலிலும் இழந்திருந்தது. குளிருக்கு எரிப்பதற்காய் பணத்தாள்களைக் கட்டுக்கட்டாய் எரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்திருந்தவேளையில் தான், 'ஜரோப்பிய மீளமைப்புத் திட்டம்' நடைமுறைக்கு வந்தது. 1948யூன் மாதம் 21இல் புதிய நாணயமாக 'டொச் மார்க்' (RM) அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஜேர்மனியருக்கும் (மேற்கு ஜேர்மனி) 40 டொச்மார்க் கடனாகப் பெற்ற பணத்திலிருந்து வழங்கப்பட்டது. கடைகளில் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் குவிந்து கிடந்தன. மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த மேற்கு, ஜேர்மனியார்கள்; அதுவரை ஒருவகைக் கிழங்குக்கஞ்சியையும், பாணையுமே உண்டுவந்தவர்கள், ஒரு நாள் இரவோடு எல்லாம் மாறியதைக்காண்கின்றார்கள். அதிகமானவர்கள் தங்கள் 40 டொச்மார்க்கிற்கு வயிறார உண்டார்கள். வேறு சிலர் நல்ல உடைகளை வாங்கினார்கள். கூடவே அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன் உள்ளுர் உற்பத்தி முடுக்கிவிடப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களாலன உச்ச உற்பத்தியில் ஈடுபட்டனர்.

பலரை இழந்து போயிருந்த தேசத்தில் பற்றாக்குறைகள் பல. குறிப்பாக ஆசிரியர்பற்றாக்குறை. திறமையுள்ளவர்கள் குறுகிய காலப்பயிற்சியுடன் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆக இந்த 40 டொச்மார்க்'கே நாணயப்பரிமாற்றத்திற்குட்பட்டு கொள்வனவு விற்பனை என்ற சுழற்சியில் புழக்கத்தில் இருந்தது. முக்கால்வாசிதொழிற்சாலைகள் அழிக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், மூன்றில் ஒருபங்கினர் வதிவிட வசதிகளற்று வாழ்ந்துவந்த சூழலில், தன்னம்பிக்கையை மட்டும் விடாது கடுமையாக உழைத்தார்கள். இவர்களின் கடுமையான உழைப்பைக் கண்ட அமெரிக்கா மேலதிகமாக ஆளுக்கு 20 மார்க் வீதம் கடன் வழங்கியது.

முடமாக்கப்பட்ட தமது தேசத்தினை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டுமென்ற பிரயத்தனத்துடன், கடுமையான குளிரிலும் உழைத்தார்கள் மேற்கு ஜேர்மனியர்கள். எட்டிய பயன்....1952ம் ஆண்டு பெற்றுக் கொண்ட கடன் மீளளிக்கப்பட்டது. போருக்கு முன்பு இருந்த தனிநபர் வருமாணத்தைவிட, 35 வீதத்தினால் இப்போது அதிகரித்திருந்தது. தனது சகல வடுக்களிலிருந்தும் சுயமாகவே மீண்டு, எழுந்து நின்ற ஒரு தேசமாக தன்னை வளர்த்துக்கொண்டது.

கடனாளியாக இருந்த நாடு 5 வருடங்களுக்குள் கடன்கொடுக்கும் நிலைக்கு தன் உழைப்பிலே உயர்ந்து கொண்டது. ஒட்டுமொத்த மேற்கு
ஜேர்மனியர்களின் இந்த வெற்றிக்கு முதுகெழுப்பாக இருந்து 'மார்ஷல் உதவித்திட்டத்தை' வழிநடத்திச் சென்றவரும், டொச் - மார்க்கின் தந்தை என சிறப்பிக்கப்படுபவருமான லுட்வின் எயர்ஹார்ட் இங்கே நினைவு கூறப்படவேண்டியவர். 1949 இலிருந்து 1963 வரை 14 ஆண்கள் நிதியமைச்சராக இருந்து நாட்டை, மக்களின் உழைப்பை பயன்காணச் செய்தார். இன்று 82மில்லியன் மக்களோடு ஜேர்மனி இருக்கும் இடத்தை உலக அரசியல் அது வகிக்கும் பாத்திரத்தை ஜந்து வருடங்கள் (1948 - 1952) அவர்களின் மூத்த சந்ததி சிந்திய வியர்வையினுடாகவே நாம் பார்க்க வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள் எங்கள் தேசம் வளர்ச்சி பெறுவது யார் கையில் தங்கியிருக்கின்றது? வெறுமனே விமானக்குண்டுவீச்சுக்களால் கட்டடங்களைச் சிதைத்து விடுவதால், எங்கள் கனவுகளைச் சிதைத்துவிடலாமோ? கல்லெறிந்து நம் இனமென்னும் கூடு சிதறடிக்கப்பட்டதாக எதிரி கனவு காணலாம்.

ஆனாலும், உலகெங்கும் சிதறிய நம் துளிகளும், சிந்தையால் ஈழவர் என்ற இனம் அன்றோ! கூடு திரும்பும் 5 லட்சம் உறவுகளோடு எல்லோரும் சேர்ந்தால் எழாதோ இங்கோர் புது யுகம்! கேட்டுக்கொள்ளுங்கள் அடிக்கடி உங்களை! ஓர் வலிமையான தேசத்தின் அடிக்கற்களையாய் ஆகிய உங்களின் வலிமையைப் பெருக்குங்கள் பயன்தரு நூல்களை வாசியுங்கள்! புலம்பெயர்ந்துள்ள உங்கள் உறவுகளோடு நாளைய தேசத்தின் நாட்டத்தைப்பற்றியும் கதையுங்கள்! எங்கள் சூரியச்சுடரின் சுகமான அரவணைப்புக்குள் தமிழீழம் தலை நிமிரட்டும்.

"கனவு மெய்ப்படவேண்டும்!
கைவசம் ஆவது
விரைவில் வேண்டும்!
தரணியிலே பெருமை வேண்டும்!
சு.ஞாலவன் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Tamil rebels say Sri Lankan peace talks will be delayed because of unresolved key differences

Associated Press, Thu May 20, 2004 03:52 EDT . KRISHAN FRANCIS - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Stalled peace talks between the Sri Lankan government and Tamil Tiger rebels will not resume soon because of unresolved key differences between the two sides, a senior guerrilla official said, reversing earlier optimism that talks were imminent. Pulithevan said Norwegian peace broker Eric Solheim is expected visit Sri Lanka - soon to try to settle the differences.
He said a rebel team will also visit Europe before the peace talks resume to meet constitutional experts and discuss a rebel blueprint for self-rule in the island's north and east.

The blueprint would give the rebels sweeping powers over law enforcement, tax collection, control over state land and other matters currently handled by the government. It also calls for the withdrawal of Sri Lanka - 's army from Tamil-owned lands and the right to receive foreign aid directly.

Kumaratunga previously rejected the blueprint.

The Liberation Tigers of Tamileelam rebels began fighting in 1983 to create a separate state for minority Tamils, accusing the majority Sinhalese of discrimination.

About 65,000 people were killed in the conflict until the Norway-brokered cease-fire halted the fighting. The truce has largely held despite the deadlock in peace talks.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Defence Authorities devising new plan to protect the lives of Army and Intelligence officers

Alladin Hussein in Colombo, May 20, 2004, 11.56 p.m.. Following the spate of killings of Army and intelligence officers allegedly by the LTTE, Defence Authorities have devised a special security programme to protect the lives of Army and Intelligence Officers. According to Army Spokesman Col. Sumedha Perera necessary instructions in this regard has already been issued to the respective departments.
This Special Security plan comes after a LTTE cadre allegedly shot dead another Army Intelligence Officer in Batticaloa yesterday. Police and Army are currently questioning several persons in connection to yesterdays killing. Meanwhile Police sources also said, that they have already begun special security operations in the Batticaloa area, as a precautionary measure against such incidents.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Reprieve for Tamil Tiger 'leader' facing deportation


Toronto: A man accused by Canadian intelligence services of being a Tamil Tiger leader won a stay of his deportation to Sri Lanka, after claiming he could face torture.

Muralitharan Nadarajah was to be put on a flight from Toronto on Thursday night to Colombo, but a judge gave him a stay of deportation on Wednesday, after a last ditch appeal by his lawyer.

Judge Sandra Simpson ruled in Federal Court that Nadarajah had the right to challenge the Canadian government's claim that he was unlikely to be tortured if deported.

Since he is currently in a detention centre in Toronto, she also ruled that he was not a risk to the public.

A document released in 2000 by the Canadian Security Intelligence Service identified Nadarajah as a 'top international leader' of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Nadarajah's lawyer was not immediately available on Thursday, but in an interview from a Toronto detention centre, the accused Tamil 'leader' denied he had supported the armed struggle.

"I never, ever carried arms," Nadarajah told the National Post newspaper. "I never even touched a gun in my whole life," he said, arguing that he had not played a military role, despite supporting self-determination for Tamils.

Canada's Federal Court of Appeal is expected to rule on his case later this year.

Nadarajah entered Canada at a border crossing south of Montreal in 1998, and lived and worked freely in the country for around six years.

Sify News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>இயன் மார்ட்டினுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு </b>
[ வவுனியாவிலிருந்து மகாமுனி ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 13:04 ஈழம் ]

சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவருமான இயன் மார்ட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமாதான முன்னகர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாகவும் இனிவரும் காலத்தில் எவ்வாறு முன்னகர்த்த வேண்டுமென்பதும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அவர்களின் விடுதலை தொடர்பாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக சிவநாதன் கிஷார் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கனகரட்ணம், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவநாதன் கிஷோர், ஈழவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி புதினம்


<b>எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்க வாஜ்பாய் மறுப்பு </b>
[ காவலு}ர் கவிதன் ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 2:48 ஈழம் ]

சோனியா காந்திக்கெதிரான பிரச்சாரங்களால் கோபமடைந்த முன்னாள் பிரதமர் அடேல் வாஐ;பாய், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பா.ஐ.க. தலைவர்களான சுஸ்மா சுவராஐ_ம் உமா பாரதியும் நடத்திய போராட்டங்களே வாஐ;பாய்க்கு எரிச்சலை ஊட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துணைப் பிரதமராக இருந்த அத்வானியே ஏற்கட்டும் என்று வாஐ;பாய் கூறியுள்ளார். எனினும் தேசிய ஐனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவராகப் பதவியில் நீடிக்க வாஐ;பாய் இணங்கியுள்ளார்.

இதற்கிடையில், சோனியா காந்தி பிரதமராக வந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை விரைவாக விழுத்தியிருக்கலாம் என்று கருதும் சங் பரிவார் உட்பட பா.ஐ.க.வினர் பலர், அவர் பிரதமராக வருவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உமா பாரதியும் சுஷ்மா சுவராஐ_ம் காரியத்தைக் கெடுத்து விட்டதாகக் கருதுவதாக செய்திகள் கூறுகின்றன.

வாஐ;பாய் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்காவிடில், அத்வானியின் பொறுப்பில் பா.ஐ.க. விரைவில் பிளவுபட்டுவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

நன்றி புதினம்
Reply
One rebel killed in Sri Lanka's volatile east


COLOMBO, May 21 (Reuters) - At least one Tamil Tiger has been killed in Sri Lanka's volatile east, officials said on Friday, but residents in the region said an explosion heard from rebel-held areas could mean many more had died.

The violence is the latest in a spate of killings that have plaguing the eastern district of Batticaloa since the Tigers retook areas of the region that had been seized by a breakaway rebel commander who goes by the nom de guerre Karuna.

The ongoing violence overshadows peace efforts at a time when the island is expecting an imminent announcement from peace broker Norway of a date for fresh talks to end the war that killed 64,000 people.

Military spokesman Colonel Sumedha Perera said troops heard an explosion in the Batticaloa district late on Thursday and came to know of one death when the Liberation Tigers of Tamil Eelam (LTTE) requested permission to bring a body into government-held territory, apparently for a funeral.

The pro-rebel Tamilnet Web site said one guerrilla was killed in the explosion, but monitors overseeing a two-year truce between the Tigers and government said the rebel had died of a gunshot wound.

"Our monitors found one dead LTTE cadre. But it was most likely not from an explosion but from a gunshot," said Agnes Bragadottir, spokeswoman for the Sri Lanka Monitoring Mission.

Residents said there were reports of as many as seven dead. The military cannot investigate further since the incident took place in a rebel-controlled area.

The LTTE has implicated the army in the previous deaths -- a charge the military denies -- and called for an investigation, saying the ongoing killings threaten the island's peace bid to end 20 years of civil war.

At least one army intelligence soldier and one police officer attached to a counter-terrorism unit have been also killed in the past few weeks, in what could be tit-for-tat attacks.

Norwegian envoy Erik Solheim is due in Sri Lanka next week for talks with both sides that are expected to finalise a date to resume negotiations the Tigers suspended in April last year.

http://www.reuters.com/
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதியும்
புலித்தேவனும் நேற்று பேர்லின் பயணம்

அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ணவும், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் நேற்று ஜேர்மன் தலைநகரமான பேர்லினுக்கு சென்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ள இவர்கள் இருவரும் பேர்லின் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேர்லின் சென்றுள்ள இவர்கள் இருவரும் சமாதான முயற்சியினை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்

இவர்கள் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டு அமைப்பொன்றின் ஏற்பாட்டிலேயே இவர்கள் சில கருத்தரங்குகளிலும் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.

சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது எப்போது என்பதை தீர்மானிப்பதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். இவரின் விஜயத்தினையடுத்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் இணங்கியமைக்கு அமைய கூட்டறிக்கை ஒன்றினை நோர்வே அரசாங்கம் வெளியிடவுள்ளது.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுள்ள போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியதும் இரண்டு மூன்று பேச்சுக்களில் மட்டும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை குறித்து கலந்துரையாடுவது என்றும் அதன்பின்னர் இறுதி தீர்வு குறித்த பேச்சுக்கள் அதனடிப்படையில் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

இத்தகைய நிலைப்பாட்டிற்கு தீர்வைக்கண்டு பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பதற்காகவே எரிக்சொல்ஹெய்ம் இலங்கை வருகின்றார். இவரது வருகையையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் உள்ள தமது சட்ட நிபுணர்களை அழைத்து விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான பேச்சுக்களில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக புலிகள் சட்டநிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பேர்லின் சென்றுள்ள புலித்தேவன் அங்குள்ள சட்ட நிபுணர்கள், மற்றும் இராஜதந்திரிகளுடன் ஆராய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

புலித்தேவன், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்து பலருடனும் கலந்துரையாடவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றிலேயே நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் அது குறித்து அரசாங்கத்தினதும் புலிகளதும் சமாதான செயலகப் பணிப்பாளர்கள் ஆராய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
யாழ்.அரியாலை பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கலாசாரச் சீரழிவு மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சங்கிலியன் படைகடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சங்கிலியன் படை எனும் பெயரில் அரியாலைப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன சங்கிலியன்படை எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் இச்சுவரொட்டிகள் அரியாலையிலுள்ள நாலாம் சந்தி நொத்தாரிஸ் வீதிச் சந்தி, கனகரத்தினம் மகாவித்தியாலய மதில்கள் மற்றும் கனகரத்தினம் மகா வித்தியாலயச் சந்தி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புதிய அரசு அமைந்ததும் அதனிடம் இலங்கை
தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்
பி.பி.சி.க்கு வைகோ தெரிவிப்பு


இந்தியாவில் புதிய அரசு அமைந்ததன் பின்னர் அந்த அரசிடம் இலங்கை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

கடந்த காலங்களில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிக்கு இந்திய அரசாங்கம் உதவுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்; இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடுதலைப் புலிகளின் கைகளில்தான் இருக்கின்றது. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் புலிகளை விலக்கிக் கொண்டு சமாதானப் பேச்சினை முன்னெடுக்க முடியாது என்பதுடன் இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர நேரடியாக பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
காங்கிரஸ் மேலிடம் வைகோவை கண்டு கொள்வதில்லை என்று தட்ஸ் தமிழ் இணையம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கலைஞர், வைகோ, நெடுமாறன்
தமிழகத்தில் சிவாஜிலிங்கம் சந்திப்பு

தமிழகத்திற்குச் சென்றிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான எம்.கே. சிவாஜிலிங்கம், அங்கு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக் கது. இந்தச் சந்திப்புகள் தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் உதயனுக்கு| தகவல் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
வைகோவுடன் சென்னையில் உள்ள மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தலை மைச்செயல கமான தாயகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வைகோவுடன் சந்திப்பு இடம் பெற்றது.
ஈழத்தமிழர்களுக்காக வைகோ சிறைசென்று வந்தமைக்காகவும்,உரிமைக்காகக் குரல் கொடுப்பதையும் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தேன். சந்திப்பின் போது மறுமலர்ச்சி தி.மு.கவின் சிவகாசித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிப்பிபாறை ரவிச்சந்திரனும் உடனிருந்தார்.
உயிர் மூச்சு உள்ளவரை ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், மக்களுக்கும் தனது அன்பைத் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு ஈழத்தமிழருக்கு எதிராகச் செயற்பட முடியாதவாறு தடுக் கும் வேலையைத் தாங்கள் செய்ய முடியும் எனவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட் டார்.
கலைஞருடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியை தி.மு.க தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தில்| சந்தித்து தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டேன். தலைவர் கருணாநிதியுடன் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப் பினர் மாறன் ஆகியோர் உடன் இருந்தனர். அந்தச் சந்திப்புக் கடந்த சனி இரவு இடம் பெற்றது.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர் வில் தி.மு.கவின் பங்கு என்றும் உண்டு எனவும் குறிப்பிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் கலைஞர்.

கடந்த திங்கள் மாலை 4 மணியளவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்துவரும் தியாகங்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தேன். பழநெடுமாறன் எனது சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயத்தை இந்தியாவில் மட்டுமல்ல உல கம் முழுவதும் எடுத்துக் கூறுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் அவர்.

அவருடன் சிறை மீண்ட இயக்கத் தோழர்களும் பேராசிரியர்களும் அச்சந்திப்பில் கலந்துகொண்டனர். வீரப்பனுடனும் தொடர்பு ஏற்படுத்தி கன்னடநடிகர் ராஜ்குமாரை விடுவிக்க உதவிய கொளத்து}ர் மணியும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவருக்கும் இயக்கத்துக்கும், ஈழத்தமிழருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி நெடுமாறன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அடிப்படை நான்கு விடயங்கள் தொடர்பாக
முதலில் அரசின் உறுதிமொழி எழுத்தில்,
பின்பே பேச்சுக்கான திகதி நிர்ணயம்!

பிரபாவின் விடாப்பிடி நிலைப்பாடு இது!

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை குறித்து மட்டுமே முதலில் பேசுவது என்பது உட்பட சமாதானப் பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள நான்கு விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் சார்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறுதிமொழியை எழுத்தில் பெற்றுக்கொண்ட பின்னரே நேரடிப் பேச்சுக்கான திகதி, இடம் ஆகியவை நிர்ணயம் செய்யப்படுவதும், அவற்றை அறிவிப்பதும் இடம்பெறமுடியும்.
- இவ்வாறு திட்டவட்டமான - விடாப்பிடியான - உறுதியான - நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இருக்கின்றார். புலிகளின் தலைமையோடு நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் இத்தகவலை உதயனுக்குத்| தெரிவித்தன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னைய அரசுடன் 1994 - 1995களில் பேசிய அனுபவம் புலிகளுக்கு நிறையவே உண்டு. அடிப்படை விடயங்களில் திட்டவட்டமான இணக்கம் கண்டு, அதை எழுத்தில் பெறாமல் சமாதானப் பேச்சில் இறங்கினால் பின்னர் வீண் ஏமாற்றங்களை வழமைபோல் எதிர்கொள்வதோடு, நெருக்கடிகளையும், அதனால் சர்வதேச அபகீர்த்தியையும் சம்பா திக்க வேண்டி நேரிடும் என்பதை பழைய பட்டறிவு தங்களுக்கு உணர்த்துவதாகத் தலைவர் பிரபாகரன் கருதுகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயங்கள் தொடர்பாக அனுசரணைப் பணியாற்றும் நோர்வேத்தரப்பு ஊடாக சில சமாதான சமிக்ஞைகளை ஜனாதிபதி காட்டியுள்ளார் என்பது வாஸ்தவம்தான். அவை ஆக்கப10ர்வ மானவையாகவும் உள்ளன என்பதும் உண்மைதான்.
ஆனால், வெறும் சமிக்ஞைகளையும் செய்திகளையும் நம்பி மோசம் போகத் தலைவர் பிரபாகரன் தயாரில்லை. திட்டவட்டமான - தெளிவான - உறுதிமொழிகளை ஜனாதிபதி எழுத்து மூலம்வழங்கினால் மட்டுமே மேற்கொண்டு சமாதான முயற்சி முன்நகரும் பேச்சுக்கான திகதி, இடம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்த நான்கு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அனுப்பும் தகவல்கள் ஒரு மாதிரியாக உள்ளன. வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக் கள் வேறுமாதிரியாக உள்ளன. அரசின் பங்காளிக் கட்சிகளிடம் இருந்து விடப்படும் அறிவிப்புகள் முற்றிலும் மாறாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் பேச்சுக்கான அடிப்படைகள் குறித்து அரசிடம் எழுத்தில் உறுதியுரை பெற்ற பின்னரே மேற்கொண்டு நகருவது என்பதில் தலைவர் பிரபாகரன் மிகவும் உறுதியாகவும் பிடி வாதமாகவும் இருக்கின்றார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கச் செய்யும் முயற்சியாக அடுத்தவாரம் கொழும்பு வரும் விசேட அனுசரணையாளர் எரிக்சொல்ஹெய்மிடமும் இதே நிலைப்பாட் டையே புலிகளின் தலைமை வெளிப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.

உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)