Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:BBC Wrote:வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய
வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:
ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.
இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.
ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.
ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
இவர்களால் தர்மராஜ்யத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி
இவ்வளவு நாளும் அரசியலில் தலையிட்டு வந்தார்கள் இன்று அவர்களே வந்துவிட்டார்கள் தர்மராஜ்ஜிய ஸ்தாபிப்பு என்ற பெயரில் இரத்தக்களரி காணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது
அசோகச்சக்கரவர்த்தியே கலிங்கப் போரில் வெறுப்புற்று அன்பு அகிம்சை சகிப்புத்தன்மை போதித்த பௌத்த மதத்தை தழுவினார் என வரலாறு கூறுகின்றது
அவரால் ஸ்தாபிக்க முடிந்ததுதான் தர்மராஜ்ஜியம் இன்று இவர்கள் வேண்டி நிற்பது ?
புத்தரின் பெயரால் (in the name of budhdha)என்ற திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது \
-------------------------------------------------
தர்மமா??? அது என்கிருக்கிறது இலங்கையில்.. அவர்களின் பாசையில் தர்மமெண்டா விகாரைக்குள்ள பெண்களை வைத்து கேளிக்கையில் ஈடுபடுவது, பல்கலைக்க்ழகம் சென்று ஓசியில் காவி உடுத்தி படித்துவிட்டு முடிந்தவுடன் எல்லாத்தையும் கழட்டி எறிந்துவிட்டு ஒடுவது, அரசியல்வாதிகளுக்கு எப்படி தமிழனுக்கு அடிக்க வெட்ட வேண்டும் என்று சொல்லுவது --- மொத்ததில் இரத்தக் கறை காண்பதே அவ்ர்களின் தர்மம்... இவர்களெல்லாம் தர்மவான்கள் என்டு ரோட்டுக்கு வந்திட்டார்கள், அவ்ர்களை தூக்கிவைத்தாட ஒரு பொரிய கூட்டமே அங்க இங்க என்டு அலையுது...அட போங்கப்பா இவங்களும் இவங்கட ஆட்டமும் இனி எங்க போய் முடியப்பொகுதோ தெரியாது... :twisted:
புத்தர் இப்ப இருந்தா தன்ன தானே வெட்டிச் செத்திருப்பார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
...... 8)
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
Mattakalapu MP Refuses to Meet Karuna - Monday, April 05, 2004 at 12:41
Mr. Jeyananthamoorthy who was elected in Mattakalapu by the recent polls did not participate in the meeting with Karuna group today. Karuna's group had a meeting with the elected members of Parliament today in their hideout in Tharavai, Mattakalapu.
The elected members of Mattakalapu and Amparai were called to attend the meeting. But Mr. Senathirajah Jeyananthamoorthy did not attend the meeting today and he is believed to be left Mattakalapu today.
Some close associates of the member told that Mr. Jayananthamoorthy would have joined with the leadership of the LTTE.
source: http://english.eelamnation.com/news_item.a....asp?NewsID=674
...... 8)
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
அட என்னப்ப எல்லாரும் நல்லாக் குழப்புறயள்.
கிங்ஷ்லி என்பது father இல்ல. வெரோருவர்..கீழுள்ளதை வாசிக்கவும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++
இது இவ்விதம் இருக்க, கருணா கும்பலின் பிடியில் இருந்து, மற்றுமொரு முக்கிய உறுப்பினர், தப்பி, வன்னி சென்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பாவாவே, இன்னும் சில போராளிகளுடன் தப்பிச் சென்றிருப்பதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட கருணா கும்பல், பாவாவின் சகோதரரும், கலைபண்பாட்டுக்கழக முன்னாள் உறுப்பினருமான கிங்ஸ்லி என்பவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை தலைமைப் பீடம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
source: http://www.tamildailynews.com/
...... 8)
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
vasisutha Wrote:http://www.tamilwebradio.com ல் போட்டிருக்கு. ஆனால் முழுமையான செய்தி கிடைக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர் ஒருவரும் சொன்னார்.
கருணாகுழுவினரால் கிங்ஸ்லி சுட்டுக்கொலை.
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அவர்களும் மற்றுமொரு போராளியும் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றிய பாவா அவர்களின் வெளியேற்றமானது கருணா தரப்பை மிகவும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பாவா அவர்களின் சகோதரரை திருக்கோவில் பகுதியில் வைத்து கருணா குழு சுட்டுக்கொன்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கிங்ஸ்லி அவர்கள் பின்னர் அமைப்பைவிட்டு விலகி குடும்பவாழ்வில் ஈடுபட்டுவந்தார். இவரை விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் கருணா குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அறியப்படுகிறது.
இவை தொடர்பான தகவல்கள் விரைவில் தரப்படும்.
(இச்செய்தியானது பதியப்பட்ட நேரம் ஐரோப்பிய நேரம் 17.47)
- தமிழ்வெப்றேடியோவுக்காக புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மட்டக்களப்பு கூட்டமைப்பு எம்.பிக்களும் தமிழ்த்தேசியத்துக்கே பாடுபடுவார்கள்
கருணாவின் துரோகத்துக்குத் துணைபோகமாட்டார்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களி;லிருந்து தெரிவான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் கருணாவின் பிரதேசவாதத்துக்கு எடுபடமாட்டார்கள். அவரின் துரோகத் துக்குத் துணைபோகமாட்டார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப் பட்ட அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார்கள். தமிழ்த் தேசி யத்துக்காகப் பாடுபடுவார்கள் என் றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன். பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கிளிநொச் சியில் தமிழ்ச்செல்வனைச்சந்தித்துப் பேசினார் உதயன் செய்தியாளர். அப்போதே தமிழ்ச்செல்வன் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவுவீர்களா? என்று கேட்டபோது ஷஷஆட்சி அமைக்க இரண்டு பிரதான கட்சிகளுக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடையாது. நிலை மையை அவதானித்து வருகிறோம்|| என்றார் தமிழ்ச்செல்வன்.
சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்க ளிலிருந்து தெரிவான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவதற்குக் கருணாமூலம் முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இது பற்றித் தமிழ்ச் செல்வனி டம் கேட்டபோது அவர் அந்த எம்.பிக்கள் கருணா வின் பிரதேச வாதத்துக்கு எடுபடமாட் டார்கள். அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கருணாவின் துரோகத் துக்கு துணைபோகவும் மாட்டார்கள். தமிழ்த் தேசியத்துக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என்றார்.
புதிய அரசு சமாதானப் பேச்சுக்களுக்கு அழைத்தால் போவீர்களா? என்று கேட்டபோது, அந்த அழைப்பு அனுசரணையாளர்கள் மூலம் வர வேண்டும். வந்தால் பார்க்கலாம் என்ற தோரணையில் பதில் அளித் தார் தமிழ்ச் செல்வன்.
அவரிடம் கேட்கப்பட்ட மற்றும் கேள்விகளும் அவர் அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:- ஐ.தே.க. அரசுடன் பேச்சு நடத்தியது போன்று புதிய அரசுடன் பேச்சுக்களைத் தொடாவீர்களா?
பதில்:- எம்மைப் பொறுத்தமட்டில் நிதானமாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். தெற்கில் யாரும் ஆட்சி அமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இருதரப்பினரும் சிறு பான்மைக் கட்சிகளோடு தொடர்பு களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின் றன. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் நாங்கள் தற்சமயம் எந் தத் தீர்க்கமான முடிவையும் எடுக்க வில்லை. நிச்சயமாக தமிழ்மக்களின் நலன்கள், எதிர்காலம் ஆகியன தொடர் பாகத் தீர்க்கமான முடிவை எமது தலைமை எடுக்கும். தற்போது சூழ நிலையை அவதானித்துக் கொண்டி ருக்கின்றோம்.
கே:- ஆட்சி மாற்றம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு என்ன?
ப:- தெற்கில் யார் பலமான ஆட் சியை அமைக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் எமது முடிவை எடுப்போம். எப்படியான ஆட்சி அமை யும் என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
கே:- பேச்சுக்களை மீள ஆரம்பிப் பது தொடர்பாக ஜனாதிபதி சந்தி ரிகா தரப்புத் தொடர்பு கொண்டுள் ளதா?
ப:- இதுவரை எந்தத் தொடர்பை யும் ஏற்படுத்தவில்லை. பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான தொடர்புகளை யும் எவரும் எம்முடன் ஏற்படுத்த வில்லை.
கே:- தேர்தலுக்கு முன் சந்தி ரிகா தரப்பு விடுதலைப்புலிகளுடன் ஏதாவது தொடர்புகளை வைத்ததா?
ப:- தேர்தலுக்கு முன் அவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள முயன்றி ருக்கின்றார்கள் பல பக்கங்களால் முயற்சிகள் எடுத்தார்கள். பேச்சுக்களாக இருந்தால் என்ன சமாதான முன்னெடுப்பாக இருந்தால் என்ன அனுசரணையாளர் ஊடாகவே அது இடம்பெறும். இதில் நாம் மிக வும் உறுதியாக இருக்கின்றோம்.
கே:- தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எப்படிச் செயற்ப டும்?
ப:- கூட்டமைப்பினர் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ள னர். தமது நிலைப்பாட்டைத் தெளி வாக வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டு விடுத லைப் புலிகளுடன் பேசி தமிழ மக் களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காணவேண்டும். என்றும் இடைக்கால நிர்வாக சபை - குறித்து முடிவு செய்யவேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்பினர் தேர்தல் பிரகடனத் தில் கேட்டிருந்தனர். அதற்கு மக் கள் ஏகோபித்த அளவுக்கு என்று மில்லாதவாறு ஆணையை வழங்கி யிருக்கிறார்கள். இதை சகல தரப்பி னரும் புரிந்துகொள்வர் என நினைக் கிறேன்.
கே:- விடுதலைப் புலிகள் முன் வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை ஏற்கக் கூடாது என்று ஹெல உறுமய நிபந்தனை விதித்து அரசுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இத்தகைய நிபந் தனையுடன் அரசுக்கு ஹெல உறுமய ஆதரவு வழங்குவதால் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் பேச்சு இடம் பெறும் என நம்புகிறீர்களா?
ப:- இது பற்றி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எம்மைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் தெளி வான ஆணையை வழங்கியிருக்கிறார் கள். தெளிவாக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே எமது மக்களின் எதிர்காலம், நலன்கள், என்ற அடிப்படையில் எமது தலைமை முடிவை எடுக்கும். அந்த அடிப்படை யில் தமிழ்க் கூட்;டமைப்பும் ஆதரவை யும் ஒத்துழைப்பையும் வழங்குமென நம்புகிறோம்.
கே:- போர்நிறுத்த உடன்பாட் டின் நிலை?
ப:- சர்வதேச அனுசரணையாளரின் பங்கோடு போர்நிறுத்த உடன்பாடு உருவாக்கப்பட்டது. அதனால்தான் யுத்தநிறுத்தம் செம்மையாக நடை முறைப்படுத்தப்படுகின்றது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் செம்மையா கவும், சீராகவும் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் எவர் ஆட்சிப் பீடம் ஏறினாலும் அதை முழு அளவில் ஏற்கொள்ள வேண்டும்.
கே:- போர் நிறுத்த உடன்பாட் டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஜே.வி.பி. கூறுகின்றது. அப்ப டியானால் உடன்பாட்டில் மாற்றம் செய்ய நீங்கள் தயாரா ?
ப:- கடந்த இரண்டரை வருடங் களாக இலங்கைத் தீவில் மக்கள் அமைதியை அனுபவிக்கிறார்கள். அபிவிருத்தியையும் முன்னேற்றத் தையும் அனுபவிக்காவிட்டாலும் அமை தியை அனுபவிக்கிறார்கள். இதற்கு அடிப்படை இந்த யுத்தநிறுத்தம் தான். இந்த யுத்தநிறுத்தத்தில் கைவைத்து அதில் குழப்பங்கள் ஏற் படுத்த மீண்டும் இந்த அமைதியைக் குலைக்க முனைவதை எந்த மக்களும் விரும்ப மாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
கே:- யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பீர்களா?
ப:- நிச்சயமாக தொடர்ந்து யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்போம். அதில் எந்த வித மாற்றமும் இருக் காது.
கே:- கருணாவின் நிலைப்பாடு குறித்துத் தாங்கள் எந்த நடவடிக்கை எடுக்கிறீர்கள்?
ப:- கருணா மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார். எமது இயக் கத்தின் ஒழுங்கு முறைப்படி இன் றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிதானமாகச் சில நடவடிக் கைகளை எடுத்துக்கொண்டு வரு கிறோம். மிகவிரைவில் அதற்கான தீர்க் கமான முடிவுகளை எட்டி விடுவோம் எனக்கருதுகின்றேன்.
கே:- மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பாகத் தெரிவான எம்.பிக்களை சந்திரிகாவுக்கு ஆதரவாகச் செயற்படுமாறு கருணா வற்புறுத்து வதாகச் செய்திகள் வருகின்றன. அது குறித்து.....?
ப:- இது அவ்வளவு சாத்தியமான தாக இருக்குமென நாம் நம்பவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதனைப் பிரகடனம் செய்து வாக்குறுதியைக் கொடுத்து மக்களிடம் வாக்குக் கேட் டார்களோ அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அந்த மக்கள் தமிழத்தேசியத்தின் தலை மையில் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, தமிழ்மக்களின் எதிர்காலத் துக்காக முன்னெடுக்கப்படும் அனைத் துப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகத்தான் வாக்களித்துள் ளனர். அந்த அடிப் படையில்தான் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்துள் ளனர். கருணாவின் பிரதேச வாதத் துக்கும் அவரது மோசடிகளுக்கும் துணை போவதற்கு இவர்களை மக் கள் தெரிவுசெய்யவில்லை. அந்த அடிப்படையில் அவர்கள் தமிழ் தேசி யத்துக்கு அர்ப்பணிப்புடன் உழைப் பார்கள் என்றே கருதுகிறேன்.
கே:- மட்டு - அம்பாறையிலிருந்து போராளிகள் வன்னிக்கு வருகிறார் களா?
ப:- நிறையப் போராளிகள், பொறுப் பாளர்கள் எனப் பெரும் அளவில் வந்துகொண்டிருக்கிறார்கள். யார் யார் வருகிறார்கள் என்ற தகவலை விரைவில் வெளியிடுவோம். சில நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பெயர் விவரங்களை வெளியிட விரும்ப வில்லை.
கே:- மட்டக்களப்பிலிருந்து யாழ்ப் பாணத்தவர்கள் வெளியேற்றப்பட்டு இக்கட்டான சூழ்நிலை அங்கு நிலவு கிறது. அதுபற்றி...?
ப:- இது கருணாவின் காடைத்த னம். அவரின் வெறித்த னமும், பிர தேசவாத துவேசமும் தான் இதற் குக் காரணம் அவரின் காடையர்களால் இது நடத்தப்படுகிறது. இதை மட்டக் களப்பு மக்க ளோ வேறு எவருமோ விரும்பவில்லை. யாழ்ப்பாணத்த வரை வெளியேற்றியது மட்டுமல்லாமல், அங்குள்ள தேசியப்பற்றுள்ள, தேசப ;பற்றுள்ள உணர்வுள்ள எல்லோரை யும் அச்சுறுத்தித் தாக்கியும் வருகி றார். பல்வேறுபட்ட நிகழ்வுகள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றுக் கெல்லாம் கருணாதான் காரணம். மிகவிரைவில் நிச்சயமாக அவரை எமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தவுடன் மக்கள் மீள நிம்மதிய டைவர்.
-இவ்வாறு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகள்
வடக்கு - கிழக்கில் ஒவ்வொருவருக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் எம்.பி.பதவிகள் வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொருவருக்கு வழங் கப்படவுள்ளன. இந்தப் பதவிகளை யார் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாகச் சில தினங்களில் முடிவு செய்யப்படும் என்று தமிழரசுக் கட்சிப் பொதுச்செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான மாவை.சேனாதிராசா தெரிவித் தார். கிழக்கில் அண்மைக்காலமாக இடம் பெற்ற சிக்கல்களின்போது தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தியவர்கள் யார் என்பதை இனம்கண்டு இந்தப் பதவியை அவருக்கு வழங்குவது குறித்து ஆராயப்படுவதாக அவர் மேலும் கூறினார். முஸ்லிம் ஒருவருக்கு உறுப்பினர் பதவியை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப் பட்டு வருகின்றது என்று அவர் சொன்னார். பெரும்பாலும் ஜோசப் பரராஜசிங் கத்துக்கு ஓர் இடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தவாரமளவில் இதுதொடர் பாக இறுதிமுடிவு எடுக்கப்படவிருக் கிறது.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.dailymirror.lk/2004/04/06/imgs/fronts.gif' border='0' alt='user posted image'>
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,
படம் - டெய்லிமிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/2004/April/06/moorthy.gif' border='0' alt='user posted image'>
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புதிய அரசாங்கத்திற்கு ம.ம.மு. ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை
மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதோடு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று மலையக தொழிலாளர் முன்னணி, ம.ம.மு. தலைவர் பெ.சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலையக தொழிலாளர் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் முன்னணியின் துணைத் தலைவர் ரி.அய்யாத்துரை, உபதலைவர் பி.எஸ்.கிருர்;ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பெருந்தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விபரம் வருமாறு:
இன்றைய நிலையில் மலையக தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் மதிப்பீடு செய்து பார்த்தால் மலையக தமிழர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூýடுதலான சேவையாற்றியிருப்பது }லங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியுமே என்பதை நாம் அறிவோம்.
பொ.ஐ.மு.அரசாங்கமே பெருந்தோட்டப் பாடசாலைகளை அரச பாடசாலைகளாக்க நடவடிýக்கை எடுத்தது, பெருந்தோட்டப் பகுதிக்கு மின்சாரம் வழங்க நடவடிýக்கை எடுத்தது, மலையகத்திற்கு தமிழ் கிராமசேவகர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களில் கிராம வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, தோட்டப்புறங்களில் முகவர் தபால் நிலையங்களை அறிமுகப்படுத்தியது.
மேலும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதன் மூýலம் மாடிý வீட்டுத் திட்டத்தை உடனடிýயாக இரத்துச் செய்ய நடவடிýக்கை எடுத்தல், தோட்டப்புறத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளோடு செய்துள்ள கூýட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்தல். பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான கடனை இரத்துச் செய்தல் ஆகிய நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளை, தேயிலை சம்பள நிர்ணய சபையை மீண்டும் உயிர்ப்பித்தல், வரவு செலவுத்திட்டத்தின் மூýலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குதல், பெருந்தோட்டப்புறங்களில் தொழில்பேட்டைகளை அமைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்த்து வைப்பது ஆகிய கோரிக்கைகளை புதிய அரசாங்கத்திடம் முன் வைத்து அவற்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினக்குரல்
சந்திரசேகரனின் கட்சி சந்திரிகாவுக்கு ஆதரவு? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலித்தேவன் தென்னாபிரிக்கா பயணம்
விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவருடன் பெண் போராளியொருவரும் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று அதிகாலை 3.24 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து டுபாயை நோக்கி புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ய10.கே. 347 இலக்க விமானத்திலேயே இவர்கள் சென்றுள்ளனர்.
டுபாயில் தரையிறங்கும் இந்த விமானத்திலிருந்து இவர்கள் இருவரும், தென்னாபிரிக்காவை நோக்கிச் செல்லும் விமானத்தின் மூலம் அந்த நாட்டுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் தெரிவித்தன.
கடந்த வாரம் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் கரிகாலன் உட்பட முக்கிய உறுப்பினர் சிலர் ஐரோப்பா சென்றதும் தெரிந்ததே.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வெள்ளை வான், ஆட்டோவில் துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளில் சென்றோர்மீது சூடு
இருவர் படுகாயம், ஒருவர் கடத்தப்பட்டார்
மட்டக்களப்பு மாமாங்கம் புன்னைச்சோலை வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த அதேநேரம், இவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது:
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் புன்னைச்சோலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை, வெள்ளை வான் மற்றும் ஆட்டோ ஒன்றில் பின் தொடர்ந்து சென்றவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால், மாமாங்கத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சிவகுமார் (30 வயது) என்பவர் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டில் படுகாயமடைந்த நிலையில், பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரா குபேந்திரா (32 வயது) என்பவர் துப்பாக்கி நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதில் குபேந்திரா என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே அதிலிருந்து விலகி புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டதுடன், 2001 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும், தற்போது இவர் எந்த அமைப்புடனும் தொடர்புகளின்றி வாழ்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் கருணா குழுவினரின் பிரதேசவாதத்தை இவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நடுநிலையும் பக்கச் சார்பும்
[size=14]பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிýருந்த ஐரோப்பிய ஒன்றிய அவதானிகள் குழுவின் தலைவரான ஜோன் குர்;னாகன் கடந்த ஞாயிறன்று கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டிýல், தங்களது கண்காணிப்பு பணிகள் தொடர்பிலான ப10ர்வாங்க அனுமானங்களை வெளியிடுகையில், இலங்கையின் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்க ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சார்பாகச் செயற்பட்டதாகவும் தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்ததாகவும் இது ஆரோக்கியமானதொரு நிலைமை அல்லவென்றும் குர்;னாகன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் செயற்பாடுகளின் ஏனைய அம்சங்கள் குறித்து பெருமளவுக்கு திருப்தி தெரிவித்திருந்த அவர். ஊடகங்களின் விடயத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதல்ல எனினும், சில பிரதிபலிப்புக்களை வெளியிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.
இந்தத் தேர்தல் பிரசாரங்களின்போது அரசாங்கக் கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க்கட்சிக்குரிய மனோபாவத்துடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்புக்குரிய மனோபாவத்துடனும் செயற்பட்டதைக் காணக்கூýடிýயதாக இருந்தது.
கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணி அராங்கத்திடம் இருந்து பாதுகாப்பு, உள்துறை அமைச்சுக்களுடன் சேர்த்து மக்கள் தொடர்பாடல் அமைச்சையும் தன்வசம் எடுத்துக் கொண்டதன் பின்னர், அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கக் கட்டுப்பாட்டிýல் உள்ள இரத்திரனியல் ஊடகங்களும் பத்திரிகைகளும் பிரசாரங்களை முடுக்கி விட்டன. அரசாங்கக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தும் பாத்தியதையே இழந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தனது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கான பிரசாரங்களுக்கு தனியார்துறை இலத்திரனியல் ஊடகங்களையும் பத்திரிகைகளையுமே நம்பியிருக்க வேண்டிýய நிலை ஏற்பட்டது.
அரசாங்க ஊடகங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 'இருட்டடிýப்புச்" செய்யப்பட்ட அதேவேளை, ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் புதிய நேச சக்தியாக ஜனதா விமுக்தி பெரமுனைக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை திருமதி குமாரதுங்க வெளியிட்ட தினம் மாலையில் அவரது ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான லடீ;மன் கதிர்காமர் தகவல் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவையில் பிரதான எதிர்க்கட்சியான }லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அங்கம் வகித்த 'விநோதத்தை" நாடு கண்டு கொண்டது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அரச கட்டுப்பாட்டு ஊடகங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் இல்லாத அரசாங்கமாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளங்கிய இன்னொரு 'விநோதத்தையும்" கண்டு கொண்டோம். இலங்கையின் அதிகார வர்க்கக் குடும்பங்களில் ஊடகத்துறையில் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் இத்தகையதொரு 'பரிதாப நிலைக்குத்" தள்ளப்பட்டமை இன்னொரு 'விநோதமான" ஒப்புவமையாகும்.
தேர்தல் பிரசார காலத்திலே அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வெகுவிமரிசையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சார்பாகச் செயற்பட்ட அதேவேளை, தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பான அணுகுமுறையையே கடைப்பிடிýத்தன. தேர்தல் முடிýவுகள் வெளியாகிக் கொண்டிýருந்த வேளையில் கூýட, சுதந்திர முன்னணி பிரமிக்கத்தக்க வெற்றியொன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாகவே அரச ஊடகங்கள் வர்ணனை செய்து கொண்டிýருந்தன.
இலங்கையைப் பொறுத்தவரை, தனியார் துறை ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகியமை மிகவும் அண்மைக்காலத் தோற்றப்பாடாகும். பெரு முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஆதிக்கத்திலான இந்த ஊடகங்கள் இயல்பாகவே தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றன.
தனியார் துறை ஊடகங்களைச் செயற்பட அனுமதித்து விட்டு, அவை பக்கச் சார்பாகச் செயற்படக் கூýடாது என்றோ செயற்பட முடிýயாது என்றோ கூýறுவதில் உள்ள பொருந்தாத் தன்மையை நாம் அவதானித்தாக வேண்டும்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தனி நபருக்கு எவ்வளவு தூரம் தவிர்க்க முடிýயாததாக அளிக்கப்பட வேண்டுமோ அதேயளவுக்கு தனிநிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தனியார்துறை ஊடகங்கள் அரசியல் விவகாரங்களில், தனி நபர்களைப் போலவே அவற்றுக்கெனத் தனியான அணுகுமுறைகளைக் கொண்டிýருக்கும் உரிமையுடையவை. இதை மறுதலிப்பதற்கு எந்தத் தர்க்கமுமேயில்லை.
தனிநபர் தனக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி, தன்னைச் சார்ந்த சமூýகத்துக்கு எவ்வாறு தீங்கிழைக்க முடிýயாதோ அதேபோன்றே ஒரு நிறுவனமும் அதற்கிருக்கும் உரிமையை சமூýகத்திற்கு விரோதமான காரியங்களில் பயன்படுத்த முடிýயாது. இது ஒரு நெறிமுறை சார்ந்த விவகாரம்.
ஆனால், பக்கச் சார்பான அரசியலை அடிýப்படையாகக் கொண்ட பாராளுமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் நடு நிலைமையாகச் செயற்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது இந்த சமுதாயத்தில் நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல.
<b>பக்கச் சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறிவீனம் அல்லது ஒரு கபடதாரியின் நயவஞ்சகத்தனம் என்ற ஒரு கூýற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
[b]நேர்மையாகச் செயற்படுமாறு கோருவதற்கும் பக்கச் சார்பின்றிச் செயற்படுமாறு கோருவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னையதற்கு முயற்சிக்க முடிýயும். பின்னையது அறவே சாத்தியமற்றது.</b>
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எழுதுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவுக்கு இராணுவத் தளபதி புகழாரம்
கருணாவின் மனப்பான்மையே வேறு. அவர் வரி அறவிடுவதில்லை. ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கொல்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே நிறுத்திவிட்டார் என்று இராணுவத் தளபதி லயனல் பலகல்ல புகழாரம் செய்திருக்கிறார்.
இந்திய செய்தியாளர் ராமானந்தா செஸ்தப்தாவுக்கு அளித்த பேட்டிýயில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் எவ்வாறெனினும் அவரின் எதிர்காலம் பற்றித் தன்னால் எதுவும் பேச முடிýயாது என்றும், ஆனாலும் ஓரளவிலான ஆதரவை அவர் பெற்றுக் கொள்வார் என்று தோன்றுவதாகவும் கூýறினார்.
கருணாவின் நெருக்கடிý விடுதலைப் புலிகளின் சண்டையிடும் ஆற்றலில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்று கேட்டதற்கு, புலிகளை இது பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கூýறினார்.
கருணா தொடர்ந்தும் பிரபாகரனை எதிர்த்து வந்தால் அது நிச்சயமாக அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் அவர்கள் ஒரு பலவீனமடையும் அணியாகவே இருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
லக்ஷ்மன் கதிர்காமர் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமனம்?
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 3:36 ஈழம் ஸ
மஹிந்த ராஐபக்ஷவின் அமைச்சில் இடம்பெறவுள்ள 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பது தொடர்பாக, ஐனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில், முக்கிய அமைச்சின் பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது என்பது தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது.
லக்ஷ்மன் கதிர்காமரை மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும், கதிர்காமர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட, அநுரா பண்டாரநாயக்க நிதியமைச்சராகவும், சுசில் பிரேம் ஐயந்த் கல்வியமைச்சராகவும், மங்கள சமரவீர ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிப்பதற்கு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் ஐனாதிபதி செயலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அப்ப திருப்பியும் சுவிசுக்குப் போய் உந்தப் பொங்குதமிழ் எல்லாம் புலுடா நானே ஒரு தமிழன் எனக்குத் தான் சிறிலங்காவிலை பிரதமர் பதவி தரலாம் எண்டவை பெரியமனுசனாட்டம் நான் தான் வேண்டாம் எண்டிட்டன் அங்கை ரமிலருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை
நுளம்புத் தொல்லைதான் கஷ்டம் ஐ,நா. சபை நுளம்புக்கு மருந்தடிக்கிர வேலையை மட்டும் கவனிச்சா போதும் எண்டு சொல்லுவாரோ
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
பக்கச் சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறிவீனம் அல்லது ஒரு கபடதாரியின் நயவஞ்சகத்தனம் என்ற ஒரு கூýற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
நேர்மையாகச் செயற்படுமாறு கோருவதற்கும் பக்கச் சார்பின்றிச் செயற்படுமாறு கோருவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னையதற்கு முயற்சிக்க முடிýயும். பின்னையது அறவே சாத்தியமற்றது.
B.B.C
உதைத்தான் தம்பி நான் வந்ததிலிருந்து சொல்லுறன் நீங்கள் கூட சில நேரம் பக்கச்சார்பில்லாமல் ரண்டு பக்கத்து செய்தியும் போடுறன் எண்டு சொல்லுறனியள்
எங்கை மனசைத் தொட்டுச் சொல்லுங்கோ உண்மையிலையே பக்கச்சார்பில்லையோ எண்டு
இஞ்சை நிறையப் பேர் உது விளங்காமல் ஆர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பினமாம் நடுநிலையாம்
புலுடா விடினம்
எல்லாரும் வேலிக்குப் போட்ட கதியால் மாதிரி வேலி இழுக்கிற பக்கம் வளைஞ்சு குடுக்கிறவைதான்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/2004/April/07/moorthy.gif' border='0' alt='user posted image'>
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழ் கூýட்டமைப்பின் 20 எம்.பி.க்களும் ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பந்தனை தெரிவு
பிரதேசவாதங்களுக்கு இடமில்லையென ஒருமித்த கருத்து
தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூýடிý, பாராளுமன்றக் குழுவின் தலைவராக தமிழர் விடுதலைக் கூýட்டணியின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனையும், உபதலைவராக மாவை சேனாதிராஜாவையும் தெரிவு செய்துள்ளனர்.
வடக்கு, கிழக்கிலிருந்து இம்முறை தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் 20 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 20 பேரும் நேற்று இரவு 8 மணியளவில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் கூýடிý தங்களின் எதிர்கால நடவடிýக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராய்ந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியத்தின் அடிýப்படையிலும், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற ரீதியிலும் எதுவித பிரதேச வேறுபாடுமின்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் ஒருமித்துச் செயற்படுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பிரிவினைகளுக்கோ அல்லது பிரதேச வேறுபாடுகளுக்கோ தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பில் இடமில்லை என்பது இங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்ட அதேவேளை, இதுவரை காலமும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லப்பட்ட போராட்டத்தை மேலும் முனைப்புடன் கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மிகவும் அமைதியாகவும், சுமுகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் தேசியப் பட்டிýயல் உறுப்பினர்கள் இருவரையும் இன்று அல்லது நாளை தாங்கள் தெரிவு செய்து விடுவோம் என்பதையும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|