Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

வவுனியா ஓமந்தைப்பகுதியின் வாக்களிப்பு நிலவரம். 02.04.04

http://www.worldtamilradio.info/election2.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் பகுதிகளில் வாக்களிப்பு நிலவரம். 02.04.04

http://www.worldtamilradio.info/election1.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

<span style='color:#ff007f'>குப்பிளான் வாக்குச்சாவடியிலிருந்து புவிராஜ். 02.04.04

http://www.worldtamilradio.info/kuppilan.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இன்றும் நாளையும் கொழும்பு சூரியன் FM ரேடியோவை நேரடி ஒலிபரப்பாக இந்த முகவரியில் கேட்க்கலாம்.

http://swaasam.com:8000/listen.pls

அல்லது

http://www.sooriyan.sunmix.com/Main/home.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.

http://www.tamilwebradio.com/13election.htm Arrow Arrow
Reply
வழமையை விட மிக அதிகமான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:29 ஈழம் ஸ

இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டபின்னர், தேர்தல் ஆணையாளர் தெரிவித்த கருத்தில், வழமையை விட இம்முறை மிக அதிக அளவில் மக்கள் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளதாகவும், மொத்தமுள்ள பதிவுசெய்யப்பட்ட 12 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில், 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்ததால், சிறிய அசம்பாவிதங்கள், விபத்துக்கள் தவிர, பாரிய ஒழுங்கீனங்கள், தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் நடைபெறவில்லை என்பது திருப்தியளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் எதையும் இப்போது தீர்மானிக்க முடியாதிருந்தாலும், இரு பிரதான கட்சிகளில் எதுவும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறப்போவதில்லை என்றும், சிறு கட்சிகளின் தயவிலேயே ஆட்சியமைக்கும் நிலை, இரு கட்சிகளுக்கும் உருவாகும் என்றும் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
யாழ். பகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளார்கள்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:41 ஈழம் ஸ

யாழ். தேர்தல் தொகுதியில் தொடர்ச்சியான கடும் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களும், ஏனைய அனைத்து சிங்கள கண்காணிப்பாளர்களும், யாழ். வாக்களிப்பு நிலையங்களில் எதுவித வன்முறைகளோ ஒழுங்கீனங்களோ முறைகேடுகளோ நிகழவில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்கள்.

ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.உறுப்பினர்கள், யாழ். தேர்தல் தொகுதியில் கடும் ஒழுங்கீனங்கள் காணப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளரிடம் முன்வைத்திருந்தனர். அதைவிட, தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தலொன்றை அறிவிக்கும் படியும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், அங்கு கடமையிலிருந்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்த கருத்தில், யாழ். தேர்தல் தொகுதியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததாகவும், அங்கு அனைத்துக் கட்சியின் அங்கத்தவர்களும் தங்களது துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியதைத் தாம் அவதானிக்க முடிந்ததாகவும் கருத்துக் கூறியுள்ளனர்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தலுக்கு முன்னதாகவே பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்த மட்டு.-அம்பாறை மாவட்டங்களில் தேர்தல் சுமூகமாக இடம்பெற்றுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:53 ஈழம் ஸ

ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஒவ்வொரு 100 யார் இடைவெளியிலும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டதுடன், அடிதடி மற்றும் கலவரம் அடக்கும் பொலிசாரும் அங்கே பெருமளவில் கடமையிலிருந்ததாகத் தெரியவருகிறது.

மட்டு.-அம்பாறை தொகுதியில் அமைந்திருந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது அதை அண்டிய பகுதிகளிலோ எந்தவொரு சிறிய அசம்பாவிதத்திலும் ஈடுபடும் எவரையும் நோக்கி உடனடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் கடுமையான உத்தரவை ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் வழங்கியிருந்ததால், அங்கு ஒழுங்கீனங்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருணா குழுவினர் தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் குழப்பங்களை உருவாக்கியதால், முஸ்லிம் மக்களே பெருமளவில் வாக்களித்ததாகவும், தமிழ் வாக்காளர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் எதுவித அசம்பாவிதங்களுமின்றி தேர்தல் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

மக்கள் இம்முறை மிகவும் ஆர்வத்தோடு வாக்களித்ததாகவும், கொழும்பில் அமைந்திருந்த ஒரு வாக்களிப்பு நிலையத்தில், நிலையத்தைத் திறந்தவுடன், முதல் அரைமணி நேரத்திற்குள் 182 வாக்காளர்கள் முண்டியடித்துக்கொண்டு வாக்களித்ததை அவதானித்ததாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், பேராசிரியர் ஐP.எல்.பீரிஸ் தெரிவித்துள்ள கருத்தில், ஐ.தே.முன்னணி மீண்டும் பலமான ஒரு அரசை அமைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை என்றும், மக்கள் தங்களது பலமான ஆதரவை மீண்டும் தமது கட்சிக்கு வழங்கியுள்ளார்கள் என்று தான் முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
உடனுக்குடன் இலங்கைத் தேர்தல் முடிவுகளை கனடியத் தமிழ் வானொலி (CTR) ஊடாக கேட்கலாம்

http://www.ctr24.com/
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
உடனுக்குடன் இலங்கைத் தேர்தல் முடிவுகளை ஐ.பி.சி தமிழ் (IBC) ஊடாக கேட்கலாம்

http://www.ibctamilradio.com/
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.thinakural.com/2004/April/02/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கிழக்கு நிலைமை குறித்து விளக்கமளிப்பதற்காக கரிகாலன், கௌசல்யன் ஐரோப்பா பயணம்

கிழக்கு நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக விடுதலைப் புலிகளின் மூýத்த உறுப்பினர் கரிகாலன் மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஐரோப்பியப் பயணத்திற்காக வன்னியிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்வதாக கருணா அறிவித்ததையடுத்து, அவர் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது முதல் இதுவரை காலமும் கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும், அந்த நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காகவே இவ்விருவரும் ஐரோப்பா செல்வதாக கூýறப்படுகிறது.

நோர்வே அனுசரணையாளர் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இலங்கை அரசின் சமாதானச் செயலகத்திற்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வட பகுதி மக்களை உடனடிýயாக வெளியேறுமாறு கருணா குழுவினர் விடுத்துள்ள மிரட்டல்களும், அதனால் அங்கிருந்து வட பகுதி மக்களில் குறிப்பிட்ட அளவினர் வெளியேறியுள்ள நிலையிலும், ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனம் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், ஐரோப்பாவிலிருந்து மட்டு. - அம்பாறை மாவட்டங்களுக்கு முன்னர் 3 கோடிý ரூýபாவிற்கும் மேற்பட்ட நிதியுதவியை தமிழ் மக்கள் வழங்கி வந்ததாகவும், தற்போதைய நிலையில் அதை அவர்கள் இடை நிறுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், கரிகாலன் மற்றும் கௌசல்யன் ஆகியோர் ஐரோப்பிய பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வெளியேற மறுக்கும் வட பகுதியினருக்கு தொடர்ந்து தொலைபேசி மூýலம் மிரட்டல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வட பகுதியைச்சேர்ந்தவர்கள் உடனடிýயாக வெளியேற வேண்டும் என்ற கருணா குழுவினரின் மிரட்டலையடுத்து வட பகுதி மக்கள் வெளியேறி வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகர் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

மட்டக்களப்பிலிருந்து உடனடிýயாக வட பகுதி மக்கள் வெளியேற வேண்டுமென கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் கருணா குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

வர்த்தகர்கள், பொது மக்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் என பெருமளவு வட பகுதி மக்களை வெளியேற்றியுள்ள கருணா குழுவினர், வெளியேற மறுக்கும் மக்களை தொலைபேசி மூýலமும், நேரிலும் சென்று மிரட்டிý வருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட பகுதி மக்களின் இந்தப் பலவந்த வெளியேற்றத்தால் மட்டக்களப்பு நகர் நேற்று இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் நிலவி வருகின்றது.

நேற்று மட்டக்களப்பிற்குள்ளே உள்@ýர் பஸ்சேவைகளோ அல்லது மட்டக்களப்பிலிருந்து வெளிய10ர்களுக்கான பஸ் சேவைகளோ எதுவும் நடைபெறவில்லை. கடைகள், வர்த்தக நிலையங்கள் மூýடப்பட்டிýருந்ததுடன், அரச, தனியார் அலுவலகங்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, வட பகுதி மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு சந்தைப் பகுதியிலுள்ள வீடுகளுக்கு நேரில் சென்ற கருணா குழுவினர் அவர்களைக் கடுமையாக மிரட்டிýயதுடன், உடனடிýயாக வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்திருந்தனர்.

எனினும், நேற்று முன்தினம் வெளியேறியது போன்று நேற்று வட பகுதி மக்கள் பெருமளவில் வெளியேறாவிடிýனும், அவ்வாறு வெளியேறிச் சென்றவர்களை மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஆங்காங்கே வழிமறித்த கருணா குழுவினர், அவர்களை தீவிர சோதனைக்குட்படுத்தியுமுள்ளனர்.

வட பகுதி மக்கள் வெளியேறிய வீடுகள் பல புதன்கிழமை இரவு கருணா குழுவினரால் கொள்ளையடிýக்கப்பட்டதாகவும், வாகனங்கள் மூýலம் பெறுமதி மிக்க பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் மட்டக்களப்பு மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு மட்டு நகரில், யாழ்ப்பாணத்து வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்றை கருணா குழுவினர் தீயிட்டுக் கொளுத்த முற்பட்டதாகவும், ஆனாலும், பேக்கரிக்குப் பெரும் சேதம் ஏற்படவில்லையெனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

செங்கலடிýப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ப10ட்டப்பட்டிýருந்த கடை ஒன்றை கருணா குழுவினர் தீயிட்டுக் கொளுத்திய போது, அப்பகுதி மக்கள் உடனடிýயாக விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று நடைபெறும் தேர்தலையொட்டிý மட்டக்களப்பில் என்றுமில்லாத அளவிற்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிýருந்தாலும், கருணா குழுவினர் வட பகுதிமக்களை மிரட்டுவதும், அவர்களை வீடு வாசல்களை விட்டு வெளியேற்றி வருவதும் தொடர்வதாக மட்டக்களப்பு மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

நகரின் மூýலை முடுக்குகளிலும், முக்கிய பகுதிகளிலும், பிரதான வீதிகளிலும் பொலிஸாரும், படையினரும் பெருமளவில் நிறுத்தப்பட்டு சோதனை நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், வட பகுதியைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் மிரட்டல்கள் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வருவதாகவும் இவை குறித்து படையினரோ, பொலிஸாரோ இதுவரை எதுவிதநடவடிýக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், பெருமளவு வட பகுதி வாக்காளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்கள் சிலர் விசனம் தெரிவித்த போதிலும், தங்களால் இதனை வெளிப்படையாக எதிர்க்க முடிýயாதிருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டு நகரில் கடந்த இரு நாட்களாக கறுப்பு உடை அணிந்த ஆயுத பாணிகள் பலர் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வலம் வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றும் 18 மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றம்


மிரட்டலை ஆட்சேபித்து மக்களும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வட பகுதியைச் சேர்ந்த ஏழு வைத்திய நிபுணர்கள் உட்பட 18 மருத்துவ அதிகாரிகள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மட்டக்களப்பை விட்டு வட பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டுமென கருணா குழுவினர் விடுத்த எச்சரிக்கையை அடுத்தே டாக்டர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

தொலைபேசி மூலம் இவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களையடுத்தே இவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாக வைத்தியசாலையின் ஏனைய டாக்டர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் ருத்ரா, சத்திர சிகிச்சை நிபுணர் ஜீபரா, காது, மூக்கு, தொண்டை நிபுணர் சீவரெத்தினம், மனநல மருத்துவ நிபுணர் கணேசன், குழந்தை நல நிபுணர் திருமதி கணேசன் ஆகியோரும் வெளியேறியோரில் அடங்குவர்.

ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் உபவேந்தர் உட்பட யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே மருத்துவர்களும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, ஆஸ்பத்திரியிலிருந்து வடபகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களும், வைத்தியர்களும் வெளியேறக் காரணமான மிரட்டலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் டாக்டர்கள் மீண்டும் திரும்பி வந்து ஆஸ்பத்திரியில் கடமையாற்ற வேண்டுமெனக் கோரியும் நேற்று நண்பகல் 11.30 மணிமுதல் 12.30 மணிவரை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களது இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது.

வைத்திய நிபுணர்களதும், டாக்டர்களதும் வெளியேற்றம் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளையும், நோயாளர்களையும் பெரிதும் பாதிக்குமெனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் 17 க்கும் மேற்பட்ட சிங்கள டாக்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கருணா குழுவின் மிரட்டல், மட்டக்களப்பு மக்களைப் பிரதேச ரீதியாக அந்நியப்படுத்தி எதிர்காலத்தில் அவர்களது சொந்தப் பகுதியிலேயே அவர்களது இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடுமெனக் கூறி நேற்று மாலை மட்டக்களப்பில் சில பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அபத்தங்களை நம்பினால் அட்டூýழியங்களே மிஞ்சும்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளினால், அந்த இயக்கத்திற்குள் உருவான தகராறையடுத்து கிழக்கில் தோன்றிய நிலைவரங்கள் இப்போது அவற்றின் 'அருவருக்கத்தக்க திருப்பத்தை" அடைந்திருக்கின்றன.

பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரும் கருணாவுக்கு நெருக்கமானவரெனக் கருதப்பட்டவருமான இராஜன் சத்தியமூýர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மட்டக்களப்பில் வாழும் வட மாகாணத்தவர்கள் சில கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு கொண்டிýருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் இருந்து வட மாகாணத்தவர்கள் வெளியேறுவதற்கான காலக் கெடுவையும், சொத்துகள், உடைமைகள் எதையும் எடுத்துச் செல்லக்கூýடாது என்ற எச்சரிக்கையையும் இந்தக் கும்பல்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூýலமாக பகிரங்கமாக அறிவிப்புச் செய்யக் கூýடிýய அளவுக்கு துணிச்சலுடன் செயற்படக் கூýடிýயதாக இருக்கிறது என்பது மிகவும் விசனம் தரும் விடயமாகும்.

கருணாவின் செயற்பாடுகளின் விளைவாக மட்டக்களப்பில் தோன்றிய நிலைவரங்களின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரதேசவாதம் கிளப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கருணாவின் வார்த்தைகளில் கூýறுவதானால் வன்னித் தலைமைத்துவம் கிழக்குப் போராளிகளைப் பாரபட்சமாக நடத்துவதாகவும் மேலாதிக்கம் செலுத்துவதாகவும் கருணா தரப்பினால் குற்றஞ் சாட்டப்பட்டது. இத்தரப்பினர் தங்களின் செயற்பாடுகளுக்கு கிழக்கு மக்கள் மத்தியில் 'நியாயம்" கற்பிப்பதற்காக பிரதேசவாதத்தைக் கிளப்ப ஆரம்பித்திருந்தார்கள் என்பதை ஆரம்பத்திலேயே வெகுவாக உணரக் கூýடிýயதாக இருந்தது.

பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் பேராசை கொண்ட சுயநலமிக்க அரசியல் வாதிகள் கிழக்கில் கடந்த காலத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பிய பல சந்தர்ப்பங்களைக் காணக்கூýடிýயதாக இருந்தது. ஆனால், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்த தமிழ்த் தாயகத்துக்காக உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளை வழிநடத்திய ஒருவரினால் இத்தகைய கீழ்த்தனமான பிரதேசவாதம் கிளப்பப்பட்டிýருப்பதை தமிழ் மக்களினால் ஜீரணிக்கவே முடிýயாமல் இருக்கின்றது என்பது கசப்பானதொரு உண்மையே.

கடந்த இரு நாட்களாக வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் மட்டக்களப்பில் இருந்து 'பிரதேசவாதப் போர்வைக்குள் தங்களது நயவஞ்சகத்தனங்களை" மறைப்பதற்கு பிரயத்தனம் செய்யும் இக் கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிýருக்கின்றார்கள். வாகனங்களில் வெளியேறிக் கொண்டிýருப்பவர்களின் வசமிருந்த சொற்ப உடமைகளும் வன்முறைக் கும்பல்களினால் இடைவழியில் மறிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அடாவடிýத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூýடிýய திராணியுடைய ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மூýத்த அரசியல்வாதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடிýயாமல் முடக்கப்பட்டிýருக்கிறார்கள்.

இவையனைத்தும் மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், சட்டம் ஒழுங்கைப் பேனும் தரப்பினரின் கண் முன்னால், நடைபெற்றுக் கொண்டிýருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிýயதாகும். இராஜன் சத்தியமூýர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் 'அதிர்ச்சியும் வேதனையும்" அடைந்து அறிக்கை விடுத்த நாட்டிýன் தலைவி மட்டக்களப்பில் இருந்து வட பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிýருக்கும் அடாவடிýத்தனம் குறித்து இன்னும் பகிரங்கமாக வாய் திறக்கவில்லை.

கருணா விவகாரத்தைத் தங்களின் கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான முனைப்பு தென்னிலங்கை அரசியல் முகாம்களிடையே தோன்றும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டேயிருந்தது. அந்த முனைப்புகளின் வெளிப்பாடுதான் மட்டக்களப்பு அசம்பாவிதங்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினரின் பராமுகமா என்ற கேள்வியில் நியாயமில்லை என்று கூýறக் கூýடிýய மனத் தைரியம் எவருக்காவது இருக்கிறதா? மட்டக்களப்பின் இன்றைய துரதிர்ர்;டவசமான நிகழ்வுகள் தேர்தல் செயற்பாடுகளில் ஏற்படுத்தக் கூýடிýய பாரதூரமான தாக்கங்கள் குறித்து தமிழ் மக்களின் நலன்களில் இதய சுத்தியான அக்கறையுடையவர்கள் சகலருகமே பெரும் வேதனையடைந்திருக்கிறார்கள்.

சமாதான முயற்சிகளைக் கையாள்வதில் தென்னிலங்கையின் இரு பிரதான அரசியல் முகாம்களிடையே மூýண்ட இழுபறி இழுத்து வந்த இத் தேர்தலில் தமிழ் மக்கள் எந்த விதமாக தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை வெளிக்காட்டப் போகின்றார்கள் என்று தென்னிலங்கையும், சர்வதேச சமூýகமும் அவதானித்த வண்ணமிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவுடன் தேர்தல் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அளிக்கப் போகும் ஆணை தென்னிலங்கை அரசியலிலும் செல்வாக்கைத் தவிர்க்க முடிýயாத வகையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தருணத்தில், தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பிற்கு அமோக வெற்றி வாய்ப்புக் கிடைக்காதிருப்பதை உறுதி செய்யக் கங்கணம் கட்டிý நிற்கும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளும் கிழக்கு நிகழ்வுகளின் பின்னணியில் தங்கள் கைவரிசையைக் காட்டிý நிற்கின்றன என்பதற்கு சான்று தேடிýக் கொண்டிýருப்பதைப் போன்ற முட்டாள் தனம் வேறு எதுவுமே இருக்க முடிýயாது.

தமிழ் மக்கள் உயிர்த் தியாகம் செய்து நடத்திய போராட்டத்தின் 'இடைக்கால அரசியல் பலாபலன்களை" அறுவடை செய்வதற்கான சூýழ்நிலையை உருவாக்குவதற்குச் சர்வதேச சமூýகத்தின் ' நியாயப10ர்வமான அங்கீகாரத்தை" பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதப்படும் இன்றைய தேர்தலின் 'வரலாற்றுத் தறுவாயை" தெளிவாகவே உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, கிழக்கு மக்கள் வீணான 'இடறல்களினால்" மனச் சஞ்சலமடையாமல் துணிச்சலுடன் தங்கள் அரசியல் உறுதிப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அணி திரண்டு ஜனநாயக ரீதியிலும் வெளிக்காட்டக் கூýடிýய ஒருமைப்பாட்டைக் குந்தகப்படுத்தும் நோக்கம் கொண்ட சக்திகளின் தூண்டுதலுடன் செயற்படும் பிரகிருதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

அபத்தங்களில் நாம் நம்பிக்கை வைத்தால், வேறு எதுவுமல்ல அட்டூýழியங்களே மிஞ்சும்.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE (P) Getting Ready to Capture Areas in the East- Karuna Faction

Bandula Jayasekara in Colombo, SLT 7.20 P.M Friday 2 April. Spokesman for LTTE's renegade eastern commander, Karuna Amman says that the Wanni administration is getting ready to capture some areas in the east, under their control. He said that they have received information that there would be infantry strikes today. The Spokesman, Varathan said that Karuna and his group were strong enough to defend themselves and they will only use defensive methods. He said, " We refuse to get provoked by their actions. We will avoid all internal killings. But, we are fully prepared to defend ourselves" However, military sources told The Academic that they have not received any information on any planned attacks by Prabhakarans LTTE. But, the official said that large-scale infiltrations have taken place and it would be difficult for Prabhakaran to carry out any infantry attacks on Karuna.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நாடுதளுவிய hPதியில் ஒவ்வொரு தொகுதிக்குமான ஆசனங்கள் விபரம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 19:29 ஈழம் ஸ

மொத்தமுள்ள 22 தேர்தல் தொகுதிகளிலும், 5,698 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 52 அரசியற் கட்சிகளும் 192 சுயேட்சைக் குழுக்களும் இந்த 5,698 வேட்பாளர்களை நியமித்துள்ளன.

மொத்தம் 225 ஆசனங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகின்றன. இவற்றில், 29 தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லத் தகுதிபெறும் ஆசனங்கள். மீதி 196 ஆசனங்கள் பின்வருமாறு நாடுதளுவிய hPதியில், பாராளுமன்றத்தின் அமர்வுக்குத் தெரிவாகும்:

மட்டக்களப்பு - 05
திருகோணமலை - 04
வன்னி - 06
யாழ்ப்பாணம் - 09
திகமடுல - 07
கொழும்பு - 20
கம்பஹ - 17
களுத்துறை - 10
காலி - 10
மாத்தறை - 08
அம்பாந்தோட்டை - 07
பதுளை - 08
மொனறாகலை - 05
கண்டி - 12
மாத்தளை - 05
நுவரெலியா - 07
அநுராதபுரம் - 08
பொலனறுவை - 05
குருநாகலை - 16
புத்தளம் - 08
இரத்தினபுரி - 10
கேகாலை - 09

மொத்தம் - 196

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நன்றி BBC

தொடர்ந்தும் இன்றைய தேர்தல் செய்திகளை சுட்டுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.
Reply
High turnout marks Sri Lanka vote despite fears of instability

COLOMBO : Sri Lankans turned out in large numbers for parliamentary elections called to resolve a power struggle between the president and the prime minister that has cast a shadow over faltering attempts to end ethnic bloodshed.

The main contenders, President Chandrika Kumaratunga's Freedom Alliance and Prime Minister Ranil Wickremesinghe's United National Party, said they were generally satisfied with the vote, while police said it went off peacefully.

Election officials said the final turnout figures were yet to be worked out, but initial reports suggested about 75 percent of the electorate had cast ballots, maintaining the island's reputation for high voting.

The first results are expected at around midnight (1800 GMT), but the final party positions are not expected to be known before midday (0700 GMT) Saturday.

Wickremesinghe, who was one of the first to vote, expressed hopes of returning to power to pursue his internationally-backed negotiations with Tamil Tiger rebels.

"I am certain people will vote for peace," he said at a voting booth near his home. "I am confident of securing a majority of seats."

However, most opinion polls have pointed to a hung parliament with neither Wickremesinghe's UNP nor Kumaratunga's Alliance winning an outright majority.

Kumaratunga called the election after she clashed with Wickremesinghe, accusing him of conceding too much in talks with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrillas.

Police said there were no reports of major violence in the island.

"We have only a few minor incidents reported," said Jayantha Wickremaratne, deputy Inspector General of Police. "We have got the assistance of the army to help us with mobile patrols and in manning road blocks."

During campaigning for the 2001 parliamentary vote, at least 41 people were killed and 700 wounded. This time round only five election-related deaths were reported.

The island was tense in the election run-up, however, after V. Muralitharan, better known as Karuna, led a split in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who have been battling since 1972 for a separate Tamil homeland.

In the island's embattled north, a Tamil politician complained that supporters of Tamil Tiger rebels attempting to rig voting.

The Tigers are not contesting the election but have openly backed the Tamil National Alliance (TNA) which is expected to fare well and emerge as kingmaker following a close fight between the leftist Alliance and the rightwing UNP.

Kumaratunga, who voted at her home district of Gampaha, outside Colombo, said she had taken steps to ensure a fair election.

"Every one of you can go to the polls without fear and freely use your precious vote, she said in a message broadcast Friday.

Voting was not taking place in rebel-held northeast areas but authorities set up booths near the de facto front lines, officials said. The Tigers had arranged to bus in voters from their areas to vote.

- AFP
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Ilango Wrote:நன்றி BBC

தொடர்ந்தும் இன்றைய தேர்தல் செய்திகளை சுட்டுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முடிந்தவரை படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)