Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
Renegade group says main Tamil Tiger outfit may be preparing for war; peace monitors halt patrols in east

Associated Press, Wed March 10, 2004 02:36 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A rebel leader who split with the Tamil Tiger guerrillas pulled his forces out because he believes the movement may be preparing to go back to war, the renegade leader's spokesman said Wednesday. Nevertheless, European cease-fire monitors said Wednesday they had temporarily halted their patrols in parts of eastern Sri Lanka - until Muralitharan clarifies his stand on the truce. ``We are no more patrolling areas in the east,'' said Agnes Bragadottir, the spokeswoman for the Norwegian-led Sri Lanka - Monitoring Mission. The SLMM will continue to patrol in the north, she said.
Muralitharan, also known as Karuna, said last week that because the cease-fire had been agreed between the Sri Lankan government and the main branch of the Liberation Tigers of Tamileelam, his breakaway rebel group was not bound by it. However, he vowed to honor the truce until a new one is agreed between his faction and the government.

``We have asked for clarification from Karuna'' on the status of the cease-fire in the east, Bragadottir said. The SLMM comprises about 55 monitors from Norway, Sweden, Denmark, Finland and Iceland. They are posted in both government-held and rebel-held territories. They are unarmed and have no peacekeeping force to back them. Muralitharan announced last week he was splitting his 6,000 fighters from the main rebel army in a dispute over troop deployment, raising the prospect of a Tamil-versus-Tamil conflict and imperiling the country's peace efforts ahead of April 2 parliamentary elections.

The rebels have 15,000 fighters nationwide.The main rebel group, led by Vellupillai Prabhakaran, announced over the weekend that it had expelled Muralitharan. But the renegade commander said he would not step down despite a promise by top rebel leaders that he could leave the guerrilla army without repercussions.About 65,000 people have been killed in the conflict between the Tamil rebels and the government.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka 's ethnic cauldron takes dangerous turn: Tamil vs Tamil

Associated Press, Tue March 9, 2004 23:14 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) More than two decades of civil war in Sri Lanka - between minority Tamils and successive Sinhalese-led governments has taken a potentially explosive ethnic twist: Tamils turning against Tamils. Most of Sri Lanka - 's 3.2 million Tamils live in the northern and eastern parts of this island, off the southern tip of India. Traditionally, northern Tamils, with Jaffna as their main city, have better education, more access to jobs and a higher standard of living. Eastern Tamils, with Batticaloa as their main city, are mostly farmers with poorer education and fewer jobs.
Still, the eastern Tamils have long provided the northern leadership with cadres ready to die in the battlefield.

Muralitharan's explosive declaration that he would stop sending fighters to the north gave vent to the anger of eastern Tamils. For the first time, Tamils there burned an effigy of Prabhakaran.

``People in Batticaloa are talking, as they haven't talked in many, many years,'' a new group, The North and East Underground, said in an e-mail to journalists. ``Over these last few years, the LTT has taxed the eastern people more than anywhere else, they have killed more people here than anywhere else, and they have taken their children more than anywhere else.''

The Tamil Tigers for years have taken children from their families, against their will, to train and use them for combat.

``The landscape in the east speaks eloquently of poverty and destruction,'' said the group of the lack of infrastructure in the east. ``They have squeezed us of everything, even our tears.''

Peace talks were launched after the Norwegian-brokered cease-fire. The talks have stalled, but the peace process has exposed Prabhakaran's outfit to foreign leaders and diplomats. Perera believes the rebels will try to safeguard their image as a group fighting for Tamil rights and not one that sponsors terrorism, and that this could soften the mainstream rebel response.

Some 900,000 Tamil expatriates living in a dozen countries will be a crucial factor. Much of the LTT's money comes from their donations, Perera said. This group can pressure Prabhakaran and Muralitharan to settle their dispute by holding back their money.

``The chance is always there, the two factions going to war,'' said Paikisothy Saravanamuttu, another prominent political analyst, who is a Tamil. ``It will be very difficult for the LTT to allow Muralitharan to carry on as a separate group. Open defiance is not tolerated in the LTT.''

The Tamil ethnic group began migrating from southern India about 1,000 years ago, and comprise 18 percent of Sri Lanka - 's 19 million people. More Tamils came in the 1700s as laborers for British planters.

The Sinhalese say they are a race unique to this island and trace their origin back 2,600 years.

Tamil discontent over discrimination embedded in Sri Lankan law erupted in war in 1983. About 65,000 people were killed in fighting and terrorist attacks in the 19 years leading up to the 2002 cease-fire.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka: Can peace be restored?

A breakaway Tamil Tiger commander in Sri Lanka, Colonel Karuna, has accused the rebel leadership of preparing for a resummption of hostilities following the country's April elections.
Colonel Karuna told the BBC that he believed this was the reason why he was asked to send 1,000 troops from the east to the north of Sri Lanka.

Sri Lanaka's fragile peace process is already in trouble because of a rift between the president and prime minister over how to negotiate with the Tamil Tigers.


What is your reaction to the split within the Tamil Tiger rebel movement? Tell us what you think.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட அண்மைய பிரைச்சனைகளை நீங்கள் அறிவீர்கள்/ இந்த கருணா விடயம் சம்மந்தமான உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக BBC செய்தி நிறுவனம் கருத்துகளம் (Talking Point) ஒன்றை ஆரம்பித்துள்ளது. அங்கே சென்று நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம். இந்த கருத்துக்கள் உலகின் பல இனமக்களால் பார்வையிடப்படும்.

உங்கள் கருத்தை எழுத இந்த முகவரிக்கு செல்லுங்கள்</span>

http://news.bbc.co.uk/2/hi/talking_point/3497548.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.thinakural.com/2004/March/10/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சங்கரியின் சுயேச்சைக்குழுவின் வேட்பாளர் ஒருவர் போட்டிýயிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில், வீ.ஆனந்தசங்கரி தலைமையில் போட்டிýயிடும் சுயேச்சைக் குழு வேட்பாளரொருவர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ப10ட்டு சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டிýயிடும் இளையதம்பி சாந்தசொரூýபன் (கரவெட்டிý) என்பவரே இவ்வாறு தேர்தலிலிருந்தும் தேர்தல் நடவடிýக்கைகளிலிருந்தும் விலகியுள்ளார்.

சுகயீனம் காரணமாகவே இவர் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக இவரது குடும்பத்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

வட பகுதியில், தேர்தலிலிருந்து விலகும் முதல் வேட்பாளர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
'பிரதேசவாதம் - தமிழ் இனத்தை குறுகத்தறிக்கும் நச்சுக்கோடரி கீழினும் கீழான தூண்டுதலை புறக்கணித்துச் செயற்படுங்கள்"

'பிரதேச வாதம் தமிழ் இனத்தைக் குறுகத் தறிக்கும் ஒரு நச்சுக் கோடரி" என்ற தலைப்பில் அறிக்கையான்றை விடுத்திருக்கும் திருகோணமலை வாழ் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சகல தரப்பு உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூýகத்தினர் மற்றும் பொது மக்கள், 'கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களே கீழினும் கீழான தூண்டுதலைப் புறக்கணித்து தொழிற்படுங்கள்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் இனங்களின் தாயகம், தாயகத்தை பிரதேசத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, குறுகத்தறிக்க முனைகின்றமை ஒரு பச்சைத் துரோகம் ஆகும். இந்தப் பச்சைத் துரோகத்தைப் புரியும் ஒருவராக விடுதலைக்காகச் சிந்தப்பட்ட விடுதலைப் போராளிகளின் குருதியின் பேரால் விலை கூýவி விற்கும் ஒருவராக மாறியுள்ளார். அந்நிய விடுதலை விரோத சக்திகளுக்கு விலைபோன ஒருவர். யார் இவர் என்று பேர் சொல்லி அறிய வேண்டிýய தேவையில்லை. விடுதலைக்காக ஏந்தப்பட்ட கருவிகளை சொந்த தமிழ் மக்களுக்கு எதிராக இவர் திருப்பியுள்ளார். உண்மையில் மறுவளமாகச் சொல்வதானால் தனக்கு எதிராகத் திரும்பியுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலிருந்து திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிக்கை வேறு அவர் பேரால் விடப்பட்டுள்ளது. தொலைபேசிய10டாக அநாமதேயத் தொலைபேசி மிரட்டல்கள் வேறு விடப்பட்டுள்ளன. மிகமோசமான உட்பகையைத் தூண்டிý தமிழ் பிரதேசங்களுக்கு இடையே பகைமையை மூýட்டிý அந்தத் தீயிலே தனது சுயலாபம் ஈட்டிýக் குளிர்காய முனைகின்றதான ஒரு செயலுக்கு தமிழ் பேசும் மக்களே! யாரும் மனசாலும் துணைபோகாமல் இருங்கள்.

நாள்தோறும் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக வெளிவரும் செய்திகள் மட்டக்களப்பில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் கல்வியாளர்களை, தொழில் புரிவோர்களை, மாணவர்களை, உத்தியோகத்தர்களை வெளியேறிவிடுமாறு வலியுறுத்துவதாக கூýறுகின்றன. உண்மையில் இது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கல்விசார் பின்னடைவுகளையும் எமது விடுதலைப் பாதையில் பாரதூரமான பின்னடைவுகளையும் ஏற்படுத்தும்.

தமிழ் தேசியப் போராட்டத்தில் இதுவரையும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள், போராளிகள், செய்த மகத்தான தியாகங்கள், பங்களிப்புகள், என்கின்ற பவித்திரமான முகத்திலே பச்சைக்கறையைப்ப10சும் செயலாகவே அமைகின்றது.

எமது விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த இரண்டரை வருடகாலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமாதான முயற்சிகளை தமிழ் மக்களைக் கொண்டே சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி முயற்சியின் ஓர் அங்கமாகவும் நாம் இதனை கருத வேண்டும்.

கடந்த காலங்களில் சமாதான முயற்சிகளிற்கு ஏற்பட்ட சீர்குலைவுகளிற்கு விடுதலைப்புலிகளே அதாவது தமிழ்த்தரப்பினரே காரணம் என்கின்ற பொய்யான குற்றச் சாட்டுகளை நிரூýபித்து நிற்கும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்து விடும்.

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஒட்டு மொத்தமான குரலை பிளந்தெறியவும், எமது ஆதரவின்றி அரசமைக்க முடிýயாத சூýழ்நிலையை தடுப்பதற்கு துணைபுரியும் துரோகச் செயலாகவும் இது அமைகின்றது.

பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் ஏக பிரநிதிகள் புலிகளே என்கின்ற கொள்கையை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டிýயிடும் தமிழ் கூýட்டமைப்பிலும் வடக்கு கிழக்கு என்ற பிரிவினை வாதத்தை முன்வைத்து அதன் வலுவையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் சதி முயற்சியாகவும் இது அமைகின்றது.

எனவே வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை வாழ் தமிழ் பேசும் இனங்களே! சமாதான விரும்பிகளே?.

வடக்கு கிழக்கை துண்டாட விரும்பும் ஒரு தீயசக்தியாக இதனை மட்டும் இனங்கான வேண்டாம்! விடுதலைப் பாதையில் இருந்தும் விலகிய ஒரு தனிமனித சக்தியாக மட்டும் இனங்காண வேண்டாம்!.

சமாதானத்திற்கும், சமூýகங்களிற்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் எதிரான, உள்ளக வெளியக சக்திகளின் கூýட்டுச் சதிகளிற்கு உடந்தையாக தொழிற்படும் ஒரு ஊடுருவல் சக்தியின் கருவியாக இனங்காண வேண்டும். வடக்கு, கிழக்கு சமூýகங்களையும் ஒட்டு மொத்த சமாதானத்தையும் கூýறுபோட முனையும் ஒரு நச்சுக் கோடரியாக இனம் கண்டு அதன் தீய நோக்கங்களிற்கு இரையாகாது இருக்கும்மாறு எமது உறவுகளை வேண்டிý நிற்கிறோம்.

எங்கள் மனங்களில் பிரதேசவாதம் எனும் நச்சு விதை இன்னமும் ஒட்டிýயிருந்தால், அதனைக் கல்லி எறிவோமாக, எந்த சுயநலமான நோக்கங்களிற்காகவும் சிறிதளவேனும் பிரதேசவாதத்தை பயன்படுத்தும் கேவலமான செயல்களை கைவிடுவோமாக, பிரதேச வாதம் என்கின்ற கோடரிக் காம்புகள் ஏந்தி நிற்கின்ற கொடிýய கருவியாக இப்போக்கை இனங்கண்டு அதனை வீசி எறிவோமாக.

பல்கலைக்கழக சமூýகத்தினர்களே! கல்வியாளர்களே! புத்திஜீவிகளே! எமக்கு முன்னால் ஒரு மாபெரும் கடமை உள்ளது. தேசிய விடுதலையை ஊறுபடுத்தும் பிரதேசவாதம் போன்ற குறுகிய வாதங்களில் இருந்து எமது இளைய பரம்பரையினர்களை மீட்டெடுக்கவும் நல்நெறிப்படுத்தவும் முனைந்துஃமுயலுதல் வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமல்லாது சமாதான சூýழலை விரும்பும் சகல நேச சக்திகளும் சமாதானத்திற்கு எதிரான சக்திகளின் சதி முயற்சிகளை கண்டிýத்து குரலெழுப்புவோமாக.

ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கிற்குள் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டு நமது தேசியத்தை ஒரு கொடிýயின் கீழ் வென்றெடுப்போமாக.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணாவுடன் தொடர்பு வைக்காதீர்! அரசுக்கு அறிவிக்க புலிகள் முடிவு!!
நேர்வே மூலம் உத்தியோக பூர்வமாக இன்று அல்லது நாளை தெரிவிக்கப்படும்

தமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணாவுடன் பேச்சுக் களோ, தொடர்புகளோ வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படி இலங்கை அரசைக் கோருவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று உதயனுக்கு இத்தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது என்று இராணுவத் தள பதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல கூறியிருக்கின்றார். கிழக்கில் தற்சமயம் ஏற்பட்டுள்ள நிலையில் கரு ணாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாக இந்த முடிவு இருக்குமா? என்று கேட்கப்பட்டபோதே தமிழ்ச் செல்வன் மேற்கண்ட தகவலை வெளி யிட்டார். இக்கேள்விக்கு அவர் கூறிய பதில் வருமாறு:-
எங்களுக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதிகாரபூர்வமாக அரசோ, அங்குள்ள இராணுவத் தள பதிகளோ கருணாவுடன் எந்தவித இணக்கப்பாட்டுக்கும் வந்ததாகத் தெரியவில்லை. இதை நோர்வே அனு
சரணையாளர்களும், சர்வதேசத் தரப் பும், அரசும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால், இராணுவத்தின் சில சக்திகளினதும் சில பகுதியினரதும் ஆதரவைக் கருணா பெறுகிறார் எனத் தற்சமயம் எமக்குத் தகவல் கிடைத் துள்ளது.
இது சம்பந்தமாகப் படைத் தரப் புக்கும் அரசுக்கும் அறிவிக்கவிருக் கிறோம். கருணாவுடன் பேச்சுக்களோ, தொடர்புகளோ வைப்பதைத் தவிர்த் துக்கொள்ளும்படி நாளை (இன்று புதன் கிழமை) அல்லது நாளைமறுதினம் (நாளை வியாழன்) அரசையும், படைத் தரப்பையும் உத்தியோகபூர்வமாகக் கோரவிருக்கின்றோம்|| - என்றார் தமிழ்ச்செல்வன்.
நாளை தங்களைக் கிளிநொச்சி யில் சந்திக்கும் நோர்வேயின் விசேட அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் மூலம் இத்தகவலை புலிகள், அரசுக் குத் தெரிவிக்கக்கூடும் எனக் கருதப் படுகின்றது.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் உதயனுக்கு அளித்த செவ்வி யின் விவரம் வருமாறு:-
கேள்வி: கருணாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப் போகிறீர்கள் என்று வெளிவந்த செய்திகள் குறித்து....?
பதில்: கருணா பல தவறுகளைச் செய்துள்ளார். தலைமைப்பீடம் அவற்றை இன்று உறுதிசெய்துள்ளது. கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன் னர் அவர் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க அவரை வன்னிக்கு அழைக்கத் தலை மைப்பீடம் முயற்சி எடுத்தது. அவரை வன்னிக்கு வரும்படி தேசியத் தலை வர் அழைத்திருந்தார். தனது குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால்தான் அப்போது கருணா வராமல் இருந்தார்.
இந்தப் பயப்பீதி காரணமாகப் பிரிந்து சென்று தலைமைப்பீடத்துக் குச் சவால்விட முயற்சித்தார். அத்து டன், அங்கிருந்த எமது தளபதிகளும், பொறுப்பாளர்களும் வன்னி வந்து தலைவரைச் சந்திப்பதையும் அவர் தடுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் பிரிந்துபோகி றார் என்ற செய்தியுடன் தளபதிகளும் பொறுப்பாளர்களும் அவரை உதறித் தள்ளிவிட்டு போராளிகளிடம் வாக்கு றுதிகொடுத்துவிட்டு இங்கு வந்து விட்டார்கள். அவருக்கு அடுத்த நிலை யில் இருந்த சகல தளபதிகளும் இங்கு வந்துவிட்டார்கள்.
கருணாவின் குற்றச்செயல்கள், செயற்பாடுகள் ஆகியவை தொடர்பான விவரங்களைத் தலைமைப்பீடத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கரு ணாவின் தவறுகள் உறுதிசெய்யப் பட்ட நிலையில் எமது தலைமைப் பீடம் அவரை புலிகள் அமைப்பிலி ருந்து நீக்கியுள்ளது.
இந்நிலையில்தான், மனிதாபிமான நோக்கோடு நல்லெண்ண நடவடிக்கை யாக கருணாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவர் விலகிச்செல்வதற் கும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற் கும் உத்தரவாதம் தருவதாகக் கூறி யுள்ளோம். எமது தலைவரின் மனி தாபிமான நல்லெண்ண நடவடிக் கையே இதுவாகும்.
கேள்வி: கருணாவுக்குப் பொது மன்னிப்பு சர்வதேச உத்தரவாதத்து டன் வழங்குவதாகக் கூறிள்ளீர்கள். அதுகுறித்து...?
பதில்: பொதுமன்னிப்புக் குறித்து அவருக்குச் சந்தேகம் இருந்தால் சர்வ தேச உத்தரவாதம் கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். சர்வதேச உத்தரவாதம் தேவை எனக் கோரினால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
கேள்வி: கிழக்கில் ஹர்த்தால், ஊர்வலங்கள் என்று கருணாவுக்கு ஆதரவாக நடக்கின்றன என்று கூறப் படுகிறது. எனவே அதுபற்றி...?
பதில்: கருணாவின் சில அடியாள் கள் மற்றும் அவரது கிராமத்தில் உள்ள உறவினர்கள் போன்றோரை வாகனங்களில் ஏற்றிவந்து அச்சுறுத் தல் விடுத்துக் ஹர்த்தால், ஊர்வலம் என்று நடத்துகிறார். பெரிய அளவில் லட்சக் கணக்கான மக்கள் கூடி ஹர்த் தாலையோ ஊர்வலத்தையோ நடத்த வில்லை. குறிப்பிட்ட சிலர்தான் இதில் பங்கேற்கின்றனர்.
மட்டக்களப்பில் இருந்து வன் னிக்கு வந்து எம்மைச் சந்தித்த பேரா யர் மற்றும் புத்திஜீவிகள் கருணா வின் செயற்பாடுகளை வெறுத்துத்தான் இருக்கிறார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களுக்குத் தவறான செய்திகளை, தகவல்களை ஊட்டி, பிரதேசவாத உணர்வுகளைத் திணித்து, உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தி சுயலாபம் பெறக் கருணா முனைந்திருக்கிறார். உண்மைநிலையை அங்கு விளக்கி வருகின்றோம். பிரதேச வாதத்தாலோ, வேறு எதனாலோ கருணா பழிவாங்கப் படவில்லை என்பதை அங்குள்ள மக் கள் உணரத் தொடங்கிவிட்டனர். அவ ரது அநியாயங்கள், அத்துமீறல்கள், தேசியத் தலைமைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் செய்த துரோகங் கள் ஆகியவற்றை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
தமிழ்த் தேசியம் ஒன்றுபட்டு பல மடைந்த நிலையில், தமது பலத்தை வெளிக்காட்டிநிற்கும் நிலையில் அவர் வெளிக்காட்டியுள்ள மிகமோச மான செயலை மக்கள் புரிந்துகொண்டு மாறிவருகிறார்கள். இப்போது நிலைமை சீராகிவருகின்றது.
கேள்வி: கருணா தொடர்பாக எழுந் துள்ள நெருக்கடி குறித்து சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: சர்வதேச சமூகத்துக்கு விவரமாகத் தெளிவாக விளக்கியுள் ளோம். ஷஷஇது ஒரு தனிமனிதனுடன் தொடர்புபட்ட பிரச்சினை. எமது விடு தலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதன் விடும் தவறுகள் மற்றும் குற் றச்சாட்டுகளுக்கு ஏற்ப ஒழுங்கு நட வடிக்கை எடுப்பது வழமையான நடை முறையாகும். ஆனால், சமாதானச் சூழ லில் நிலவுவதால் ஒருவர்மீது மேற் கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை பெரிய செய்தியாகத் தோற்றமளிக் கிறது. அவ்வளவுதான். இது பாரிய பிரச்சினை இல்லை. எமது தலைவர் நிலைமையைச் சுமுகமாகக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வருவார்|| என்று சர்வதேச சமூகத்துக்குத் தெளிவா கக் கூறியுள்ளோம். ஆகவே, சர்வதேச சமூகம் எம்மீது நம்பிக்கையுடன் இருக் கிறது.
கேள்வி: புரிந்துணர்வு உடன்படிக் கையைத் தம்முடனும் செய்து கொள் ளும்படி கருணா கூறுகிறார். அது பற்றி...?
பதில்: ஒரு தனிமனிதனுடன் எப் படிப் புரிந்துணர்வு உடன்படிக்கை யைச் செய்துகொள்வது? உலகில் இப்படியான நடைமுறை இருந்ததாக நாம் கேள்விப்படவில்லை. தன்னை அறியாமல் சில செய்திகளை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் நகைப்புக்கிடமான விடயம் இது.
கேள்வி: பிரிட்டி~; து}தருடன் கிழக்குநிலை பற்றிப் பேசுவீர்களா?
பதில்: கிழக்குப் பிரச்சினை தொடர் பாக அவருக்கும் கரிசனை இருந் தது. அவருக்கு உண்மை நிலைப்பாட் டைக் கூறித் தெளிவாக்கியுள்ளோம்.
கேள்வி: மட்டக்களப்புக்கு 500 பேர் கொண்ட படையணியை அனுப்பி யுள்ளீர்கள் என்று வெளிவரும் செய்தி களில் உண்மையுண்டா?
பதில்: இல்லை. தேசியத் தலைவர்மீது விசுவாசம் கொண்ட ஆயிரக் கணக்கான போராளிகளின் அணிகள் அங்கேயே இருக்கின்றன. அதனால் இங்கிருந்து அனுப்பவேண்டிய அவசியம் இல்லை.
- இவ்வாறு தமிழ்ச்செல்வன் பதிலளித்தார்.


நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
போருக்குத் தயாராகிறார் பிரபாகரன்: புலிகள் அமைப்பை கைவிட்ட கருணா புகார்

கொழும்பு, மார்ச் 10: சண்டை மேற்கொள்வது இல்லை என்று இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளபோதிலும் மறுபுறம் சண்டையை மேற்கொள்ள தயாராகி வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்று அதிலிருந்து விலகிய கமாண்டர் கருணா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்குப்பகுதி புலிகள் கமாண்டராக இருந்தவர் கருணா என்கிற வி. முரளீதரன்.

செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

போருக்குத் தயாராகி வருகிறார் பிரபாகரன். அதற்காகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து (எல்டிடிஈ) பிரிந்து வந்துவிட்டேன்.

இலங்கையின் வடக்குப்பகுதியான வன்னி பகுதியில் புலிகள் நிர்வாகம் 1000 துருப்புகளை அனுப்பிவைக்கும்படி எமக்கு அழைப்பு விடுத்தது. அமைதி நிலவும்போது இந்த அழைப்பு வந்துள்ளது. அப்படியெனில் போருக்குத்தான் என நான் முடிவு செய்துள்ளேன். ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்தலில் முடிவு எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து போரை மீண்டும் தொடங்குவது பற்றி பிரபாகரன் பரிசீலிக்கக்கூடும்.

நன்றி - தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சந்திரிக்கா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்களின் நோக்கம்...அலசுகிறது...ஈழநாதம்...!

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்டத்தளபதி பதுமன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; பதுமன் சுட்டுக்கொல்லப்பட்டார்; கருணாவைப் படுகொலை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் திருமலைக்கு விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்பன போன்ற தகவல்களே கடந்த சில தினங்களாக சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிலங்கா ஊடகத்துறையின் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்துள்ளன.

இத்தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, வேண்டுமென்றே கூறப்படுபவை என்பனவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் இப்பத்தி எழுதப்படவில்லை. சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டினுள் லக்ஸ்மன் கதிர்காமர் அமைச்சராக இருக்கும் ஊடகத்துறை எத்தகைய பொய்களையும் கூறத் தயங்க மாட்டாது என்பது எமக்கு அனுபவம் தந்த பாடம்.

ஆனால், தற்பொழுது இவர்களின் இப்பிரச்சாரம் குறித்து சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இவர்களின் பிரச்சாரம் எதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதற்காகவேயாகும். ஏனெனில் இப்பிரச்சாரத்தின் நோக்கமானது வடக்கு-கிழக்கில் பெரும் நெருக்கடிகளுக்கு வித்திடக் கூடியதாகும். அடிப்படையில் இப்பிரச்சாரங்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இடையில் ஓர் பதட்டமானதொரு நிலையைத் தோற்றுவிக்கத்தக்கவையாகும் அதாவது சகோதரர்களுக்குள் குழப்பத்தைத் தோற்றுவித்து அவர்கள் இருவரையும் பலவீனப்படுத்திவிடும் நோக்கம் கொண்டதாகும்.

அத்தோடு இன்று வடக்கு-கிழக்கில் நிலவும் சமாதான அமைதிச் சூழ்நிலையை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாகும். அதாவது வடக்கு-கிழக்கு மக்கள் மத்தியில் முரண்பாட்டையும் அதன் மூலம் பதட்டத்தையும் தோற்றுவித்து தமிழ் மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுக்கும் - கருணாவிற்கும் இடையில் இராணுவ ரீதியிலான மோதல்கள் இடம்பெற்றாலோ அன்றி இரு தரப்பினர் இடையிலான முரண்பாடு நீடித்தாலோகூட அது புலிகள் இயக்கத்தை - அதாவது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்பது அவர்களின் மதிப்பீடாகும். இதன் மூலம் வடக்கிற்கும்-கிழக்கிற்கும் இடையே தெளிவானதொரு முரண்பாட்டைத் தீவிரமாகவும் நிரந்தரமாகவும் ஆக்கிக் கொள்ளுதல் அவர்களின் குறிக்கோளாகும். அவ்வாறு ஆக்கிக் கொள்வதன் மூலம் தமிழரின் தேசியம், தன்னாட்சி உரிமை என்பனவற்றைக் கேள்விக்குள்ளாக் குவதே அவர்களின் நோக்கமாகும். அதாவது, வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

சனாதிபதி சந்திரிகா தலைமையிலான கூட்டணியின் நிலைப்பாடானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதற்கு விரோதமானது என்பது ஏற்கனவே உணரப்பட்டதொன்றுதான். ஆயினும், தேர்தல் காலமாகையினால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது பற்றி இக்குழுவும் ஆதரவு தெரிவிப்பவையாகவே உள்ளன. இந்நிலையில், சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணத் தயாராகவுள்ளனரா என்ற சந்தேகத்தையே தோற்றுவிப்பதாகவுள்ளது.

அதாவது, அரசின் கட்டுபாட்டிலுள்ள மக்கள் தொடர்பு சாதனங்கள், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஒருமைப்பாட்டைக் குலைக்க முற்படுவதோடு, மட்டு. அம்பாறை பகுதியில் காணப்படும் அசாதாரண நிலையை திருமலைக்கும் விஸ்தரிக்கும் நோக்குடன் செயற்படுவதாகவே தெரிகிறது. இதன் மூலம் வடக்கு-கிழக்கிலுள்ள ஸ்திர நிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி அமைதியையும் யுத்த நிறுத்தத்தையும் முடிவிற்கு உள்ளாக்குவதே சனாதிபதியின் நோக்கமாகும்.

அவ்வாறு இல்லாதுவிடில், தகவல்களை நடுநிலைமையுடன் வெளியிடுவதோடு, வடக்கு-கிழக்கோ அன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அமைதிக்குப் பங்கம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். ஆனால், அரசாங்க ஊடகங்களின் போக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையாகவும், அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவையாகவே உள்ளன. வேறுவிதமாகக் கூறின், தமிழ் மக்கள் இடையில் பிரிவினையை ஏற்படுத்துபவையாகவும், விடுதலைப் புலிகளை யுத்தத்திற்குள் இழுத்துவிடும் நோக்கம் கொண்டவையாகவே உள்ளன.

சனாதிபதி சந்திரிகா தரப்பின் இத்தகைய செயற்பாடானது அவரின் கூற்றுக்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டவர் இதனை விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும். ஏனெனில் இனியொரு யுத்தம் மூழுமாக இருந்தால் அதற்கு சனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடே காரணமாக இருக்க முடியும். இதனைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையும், அவசியம் இன்று எங்களுக்குண்டு.

நன்றி தமிழ்நாதம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தமிழ்நாதத்திலை உது வருமெண்டு எதிர்பார்த்ததுதான்.. பத்திரிகையாளரைகூப்பிட்டு பெரிய பத்திரிகையாளர் மகாநாடு கூட்டேக்கை உப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருக்கவேணும்.. மற்றவனும் தனதுபக்கக் கதையள் சொல்லுவானெண்டு கொஞ்சமாவது சிந்திச்சிருக்கவேணும்.. தனிமணிதன் எண்டு பத்திரிகைக்கு சொன்ன இயக்கம் ஒரு தனி மனிதனை எதிர்த்து இப்படியான அறிக்கை விடுமானால் அதன் அர்த்தம் என்ன.. அதைத்தான் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.. அன்னிய சக்தியென்ற சொல்லுக்கே அர்த்தமில்லாதவாறு அந்த ஊடகவியளாளர் மகாநாடு அமைந்துவிட்டது.. உள்வீட்டுப் பிரச்சனை என எல்லோரும் மௌனம் சாதித்தவிட்டனர்.. இந்தியாவை சீண்டி உதவிக்கு அழைத்தபோதும் அவர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.. தற்போது அழைப்புவிடுத்து கதைகூறிய ஊடகங்களை சாடி என்ன பலன்..
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
இப்ப உதுல உங்கட கதை கேக்கல்ல...அவங்கட செய்தியைப் போட்டுக்கிடக்கு...நாங்கள் ஒன்றும் பறையல்லயெல்லே...பிறகென்ன கம்மெண்டு இருக்க வேண்டியதுதானே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சரி உதை விடுவம் குருவிகாள்..
உந்த தமிழ்அலையைப்பற்றிய பிரச்சனைக்கு வருவம்.. உந்தத் தமிழ்அலை மீண்டும் கைமாறிவிட்டதா எனக்கு சந்தேகமாயிருக்கு.. மிண்டி விழுங்கிற அரைகுறை செய்தியளும்.. அங்காலையும்பாடி இங்காலையும்பாடி மழுப்பிற கதையையும் பார்க்க கை மாறினமாதிரித்தான் தெரியிது.. உங்கடை அபிப்பிராயம் என்ன..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
அவன் தம்பி தளபதியும் நேரத்துக் நேரம் சுருதி மாத்திறானே....முதல் சொன்னான் கிழக்கு புறக்கணிக்கப்பட்டதாலதான் வெளியேறுறன் எண்டு...இப்ப செய்தியாளரைக் கூட்டி வைச்சுச் சொல்லுறான் தலைவர் போருக்குப் போப்போறார் அதாலதான் பிரிஞ்சனான் எண்டு....இவனே சமாதான காலத்தில பல கொமோண்டோப் பிரிவுகளை உருவாக்கினவன்..இப்ப இப்படிச் சொல்லி இருக்கிறான்...ஏதோ மெல்லுறாங்கள் விழுங்கிறாங்கள் ஒன்றுமாப் புரியுதில்ல...!

அவையும் சொல்லியினம் அவன் தம்பி தளபதி நேற்று வரைக்கும் அச்சாப்பிள்ளைதான் இப்ப ஒரு மாசமாத்தான் கெட்டுப்போனான் என்று அதிலும் இப்ப ஒரு கிழமையாத்தான் படு குழப்படி என்று...!

பொறுத்திருந்து பாப்பம் என்ன நடக்குதெண்டு....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
\" \"
Reply
[quote=Eelavan]கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்

[size=24]கண்ணான சுதந்திரத்தை
விற்றுக்காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
எந்நாளும் நிலைக்காது.
Reply
எதுக்கும் சக்தி ரிவி நியூசையும் கேளுங்கோ.. பிபிஸி நியூசையும் கேளுங்கோ.. உந்த இணையத்தள செய்தியளையும் படியுங்கோ.. பிறகு கூட்டிக் கழிச்சு ஒரு முடிவுக்கு வாங்கோ..
லங்காருத்திலை 7 ஆம்திகதி நடந்த ஒரு உரையை மொழிபெயர்ப்புச்செய்து போட்டிருக்கிது.. 800-1000 பேருக்கு ஆற்றிய உரையெண்டு கிடக்குது.. வாசிச்சுப்பாருங்கோ..
மற்றது இண்டைக்கு வளமையை விட வித்தியாசமான றிப்போட் ஒண்டு வந்திருக்கிது.. அது எவ்வளவுதூரம் உண்மையெண்டது நாளைக்குத்தான் தெரியும்..
Idea :?: :!:
Truth 'll prevail
Reply
BBC Wrote:Sri Lanka: Can peace be restored?

A breakaway Tamil Tiger commander in Sri Lanka, Colonel Karuna, has accused the rebel leadership of preparing for a resummption of hostilities following the country's April elections.
Colonel Karuna told the BBC that he believed this was the reason why he was asked to send 1,000 troops from the east to the north of Sri Lanka.

Sri Lanaka's fragile peace process is already in trouble because of a rift between the president and prime minister over how to negotiate with the Tamil Tigers.


What is your reaction to the split within the Tamil Tiger rebel movement? Tell us what you think.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட அண்மைய பிரைச்சனைகளை நீங்கள் அறிவீர்கள்/ இந்த கருணா விடயம் சம்மந்தமான உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக BBC செய்தி நிறுவனம் கருத்துகளம் (Talking Point) ஒன்றை ஆரம்பித்துள்ளது. அங்கே சென்று நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம். இந்த கருத்துக்கள் உலகின் பல இனமக்களால் பார்வையிடப்படும்.

உங்கள் கருத்தை எழுத இந்த முகவரிக்கு செல்லுங்கள்</span>
http://news.bbc.co.uk/2/hi/talking_point/3497548.stm

யாராவது அங்கே கருத்துக்களை எழுதினீங்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote=shanthy][quote=Eelavan]கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்

[size=24]கண்ணான சுதந்திரத்தை
விற்றுக்காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
எந்நாளும் நிலைக்காது.

இதனை எனக்குச் சொன்ன பதிலாக எடுப்பதா அல்லது உங்களினதும் ஒரு கவிதையாக எடுப்பதா?
\" \"
Reply
தமிழ் ஊடகங்களிற்கு கொழும்பில் வசிக்கும் ஒரு தமிழனின் தயவான வேண்டுகோள்.

புதன்கிழமை, 10 மார்ச் 2004, 21:10 ஈழம்
உங்கள் செய்தித் தளத்தைப் பார்வையிடும் வாசகர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் இக் கடிதத்தை உங்கள் இணையத்தில் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

கருணா எதற்காகத் தனது தலைமைப்பீடத்தை நாடவில்லை என்பதை அவர் இப்போது செய்து வரும் செயல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இப்போது விடுதலைப்புலிகள் போருக்கு ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தியை வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு அறிவித்துள்ளார். இது அவர் உண்மையிலேயே மட்டு-அம்பாறை மக்களை தனது தேவைகளிற்காகப் பயன்படுத்துகிறார் என்பதை இது காட்டுகிறது.

அத்தோடு தமிழன ஒற்றுமைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோடு, பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் மீது துவேசம் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிற மாவட்டத் தமிழர்கள் பற்றிய பல அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்தும் அங்கே பரப்பிவருகிறார்கள். இங்கிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையைத் தடுத்துள்ளார்கள். மட்டு-அம்பாறை மக்களை உணர்ச்சியேற்றிவிட்டு, அதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள் என்ற உண்மையை அந்த மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

இப்படியான நிலையில், ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து, செய்திகளை ஆராய்ந்து பிரசுரிக்க வேண்டும் என்பதே எனதும் எனது நண்பர்களினதும் தயவான வேண்டுகோள். ஏனெனில் உங்கிருந்து எங்களுடன் கதைக்கின்ற உறவுகள், இங்கே நடைபெறாத பல சம்பவங்களைக் கூட உங்குள்ள வானொலிகள், பத்திரிகைகள் மூலம் அறிந்து அவை உண்மைச் சம்பவங்கள் போல எம்மிடம் சொல்கிறார்கள். கேட்கிறார்கள்.

தமிழினத்தில் பிரிவு ஏற்பட்டால் ஈழத் தமிழர்களிற்கு மாத்திரமல்ல ஆபத்து என்பதை மேற்படி தமிழ்ச் செய்தி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்தி நிறுவனங்கள் சில இந்த உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்துடன் சேர்ந்து திரியும் குழுக்களோ அல்லது வேறு எவருமோ இப்போதைய பிரிவு பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம். ஏனென்றால் அவர்களின் வாழ்வும் விடுதலைப்புலிகளின் பலத்தில் தான் தங்கியிருக்கிறது. எனவே புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் தேவையையே இப்போது வலியுறுத்த வேண்டும்.

இங்கே கூட தமிழரை ஏளனப்பார்வை பார்க்கும் நிலை மீண்டும் தொடங்குகிறது. சிங்கள இனம் மட்டுமல்ல, இன்னொரு இனமும் சேர்ந்தே இப்படி எம்மை ஏளனமாகப் பார்க்கத் தொடங்குகிறது. எனவே தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதே இப்போது எமக்குத் தேவையானது என்பதை மனதில் வைத்து பத்திரிகா தர்மத்தை, நடுநிலைமையைக் காக்கவேண்டும் என்பதே எமது அவா.

இங்கேயுள்ள சிங்கள அல்லது ஆங்கில செய்திநிறுவனங்கள் தங்களிற்கு இடையேயான பேதங்களை எப்போதுமே தூக்கிப்பாhப்பதில்லை. சிங்களத் தேசியம் சார்ந்த கருத்துக்களையே அவர்கள் தமது வாசகர்களிடையே (எம் மீதும்) திணிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுவே அவர்களது நடுநிலையான செயற்பாடு. தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதையும், தமிழர்கள் மீது இனவாதம் ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இப்போதும் செய்கின்றன. சிங்களத் தேசியத்திற்காகச் செயற்படுவதை அவை நடுநிலையாகவும் நியாயப்படுத்துகின்றன.

எனவே நீங்களும் தேவையின் நிமித்தமாவது, தமிழ்த்தேசியம் சார்ந்த செய்திகளையே முன்னிலைப்படுத்துங்கள். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள், வானொலிகள் கடைப்பிடிக்கும் நிதானத்திற்கு மேலான நிதானத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழினம் முன்னேற்றமடையும்.

அன்புடன்,சோ.தயாபரன்



நன்றி - புதினம்

உங்கள் கருத்துக்கள் ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தங்களது அணி புலிகளுடன் ஒரு நட்புரீதியிலான கூட்டணியை வைக்க தயாராக இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். ஆனா தான் மீண்டும் பிரபாகரனின் தலைமையின் கீழ் செயல்பட போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

நன்றி - Channel News Asia

முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

http://www.channelnewsasia.com/stories/afp...w/74807/1/.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)