03-19-2006, 12:09 PM
<b>பாரிஸில் புஷ்பராஜாவின் இறுதிக் கிரியை புலம்பெயர்ந்த தமிழர்கள் அஞ்சலி!</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/19/pus.jpg' border='0' alt='user posted image'>
பாரிஸிலிருந்து ஜி.நல்லரெத்தினம்
பிரான்ஸில் கடந்த 10.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று புற்றுநோய் காரணமாக மரணமான சி.புஸ்பராஜாவினுடைய இறுதிக் கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸின் புறநகர்ப் பகுதியான வில்தனஸ் மயானத்தில் நடைபெற்றது. <b>இவ்விறுதி வழியனுப்பும் நிகழ்வில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருந்திரளான அரசியல், கலை, இலக்கியம், சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.</b>
இறுதி அஞ்சலி நிகழ்வு கோவை நந்தன் தலைமை தாங்கி நடத்தினார். அவரது உரையில், எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்துள்ள சி.புஸ்பராஜாவை ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றும் தனது நெருங்கிய நண்பனாகவும் இருந்தார் என்றும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் சிறை, சித்திரவதை எனப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவன் சி.புஸ்பராஜா என அவரது உரை அமைந்திருந்தது.
அடுத்து இடது சாரி சிந்தனையாளரான தேவதாஸ் தனதுரையில் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின்பாலும் பின்னர் தேசிய மாணவர் பேரவையின் பாலும் இருந்த புஷ்பராஜா பிற்பட்ட இறுதிக்காலங்களில் இடது சாரிக் கொள்கையுள்ள ஒரு சிந்தனையாளராகவே தன்னைப் பல இடங்களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.
அதன் பின்னர் அரியநாயகம் மாஸ்ரர் தனதும் புஸ்பராஜாவினுடைய அரசியல் பின்னணி அவர்களுடைய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் பட்ட வேதனைகளை விபரமாக எடுத்துரைத்தார். பின்னர் ஜேர்மனியிலே இருந்து வந்த இலக்கிய விமர்சகர் யசீந்திரன் நீண்ட நேரம் உரையாற்றினார். சிங்கள தேசத்திலிருந்து விடுபடுவதற்காக அகிம்சைப் போராட்டம் பயனளிக்காது. இனி ஆயுதம் ஏந்தியே போராட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் புஸ்பராஜா சிவகுமாரன், சத்தியசீலன் போன்றவர்களாலேயே ஆயுதப் போராட்டம் பரிநாம வளர்ச்சி பெற்றதாகக் கூறியதோடு அவரது ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற சர்ச்சைக்குரிய நூல் சம்பந்தமாகவும் இலக்கிய சந்திப்புகளில் சி.புஸ்பராஜாவின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது பறறியும் எடுத்து கூறினார்.
போராட்டத்தில் புஸ்பராஜாவின் குடும்பமே பெண்களையும் போராட்டத்தின் பால் முதல் முதல் ஈடுபடுத்தியது என்ற வகையில் பெண்கள் அமைப்பு சார்பாக ஜெயா பத்தநாதன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.
உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மி அவர்களும் இலக்கிய நண்பராக அறிமுகமாகிய புஸ்பராஜா பற்றிப் பேசினார். பின்னர், அவர் வகித்த அமைப்பின் சார்பில் (EPRLF)இன் இருவர் தமது கருத்துகளை முன்வைத்தார்கள். பின்னர், சுவிற்சர்லாந்திலிருந்து கலந்து கொண்ட மூர்த்தி மாஸ்டர் தமதுரையில் ஆளுமை மிக்க துணிச்சலான நண்பனை இழந்திருப்பதாக கூறினார். இறுதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி கண்ணீர் மல்கியபடி தனது பேச்சை தொடர்ந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.புஸ்பராஜா மரணம் தமக்கு நெருங்கி விட்டது என்பதை அறிந்து தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாகி ஈழம் என்ற கனவை நனவாக்குங்கள் என இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் எழுதிய வாசகம் அவர் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ப எப்படி பற்றுறுதி கொண்டுள்ளார் என்பதை எடுத்துகாட்டியது. அத்துடன், நின்றுவிடாது தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழீழத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளிடமே உள்ளது என்றும் என்றோ ஓர் நாள் தமிழ் ஈழம் மலரும் என்றும் நான் விடைபெறுகின்றேன் என கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இந்திய சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-11.htm
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/19/pus.jpg' border='0' alt='user posted image'>
பாரிஸிலிருந்து ஜி.நல்லரெத்தினம்
பிரான்ஸில் கடந்த 10.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று புற்றுநோய் காரணமாக மரணமான சி.புஸ்பராஜாவினுடைய இறுதிக் கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸின் புறநகர்ப் பகுதியான வில்தனஸ் மயானத்தில் நடைபெற்றது. <b>இவ்விறுதி வழியனுப்பும் நிகழ்வில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருந்திரளான அரசியல், கலை, இலக்கியம், சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.</b>
இறுதி அஞ்சலி நிகழ்வு கோவை நந்தன் தலைமை தாங்கி நடத்தினார். அவரது உரையில், எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்துள்ள சி.புஸ்பராஜாவை ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றும் தனது நெருங்கிய நண்பனாகவும் இருந்தார் என்றும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் சிறை, சித்திரவதை எனப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவன் சி.புஸ்பராஜா என அவரது உரை அமைந்திருந்தது.
அடுத்து இடது சாரி சிந்தனையாளரான தேவதாஸ் தனதுரையில் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின்பாலும் பின்னர் தேசிய மாணவர் பேரவையின் பாலும் இருந்த புஷ்பராஜா பிற்பட்ட இறுதிக்காலங்களில் இடது சாரிக் கொள்கையுள்ள ஒரு சிந்தனையாளராகவே தன்னைப் பல இடங்களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.
அதன் பின்னர் அரியநாயகம் மாஸ்ரர் தனதும் புஸ்பராஜாவினுடைய அரசியல் பின்னணி அவர்களுடைய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் பட்ட வேதனைகளை விபரமாக எடுத்துரைத்தார். பின்னர் ஜேர்மனியிலே இருந்து வந்த இலக்கிய விமர்சகர் யசீந்திரன் நீண்ட நேரம் உரையாற்றினார். சிங்கள தேசத்திலிருந்து விடுபடுவதற்காக அகிம்சைப் போராட்டம் பயனளிக்காது. இனி ஆயுதம் ஏந்தியே போராட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் புஸ்பராஜா சிவகுமாரன், சத்தியசீலன் போன்றவர்களாலேயே ஆயுதப் போராட்டம் பரிநாம வளர்ச்சி பெற்றதாகக் கூறியதோடு அவரது ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற சர்ச்சைக்குரிய நூல் சம்பந்தமாகவும் இலக்கிய சந்திப்புகளில் சி.புஸ்பராஜாவின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது பறறியும் எடுத்து கூறினார்.
போராட்டத்தில் புஸ்பராஜாவின் குடும்பமே பெண்களையும் போராட்டத்தின் பால் முதல் முதல் ஈடுபடுத்தியது என்ற வகையில் பெண்கள் அமைப்பு சார்பாக ஜெயா பத்தநாதன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.
உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மி அவர்களும் இலக்கிய நண்பராக அறிமுகமாகிய புஸ்பராஜா பற்றிப் பேசினார். பின்னர், அவர் வகித்த அமைப்பின் சார்பில் (EPRLF)இன் இருவர் தமது கருத்துகளை முன்வைத்தார்கள். பின்னர், சுவிற்சர்லாந்திலிருந்து கலந்து கொண்ட மூர்த்தி மாஸ்டர் தமதுரையில் ஆளுமை மிக்க துணிச்சலான நண்பனை இழந்திருப்பதாக கூறினார். இறுதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி கண்ணீர் மல்கியபடி தனது பேச்சை தொடர்ந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.புஸ்பராஜா மரணம் தமக்கு நெருங்கி விட்டது என்பதை அறிந்து தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாகி ஈழம் என்ற கனவை நனவாக்குங்கள் என இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் எழுதிய வாசகம் அவர் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ப எப்படி பற்றுறுதி கொண்டுள்ளார் என்பதை எடுத்துகாட்டியது. அத்துடன், நின்றுவிடாது தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழீழத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளிடமே உள்ளது என்றும் என்றோ ஓர் நாள் தமிழ் ஈழம் மலரும் என்றும் நான் விடைபெறுகின்றேன் என கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இந்திய சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-11.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

