Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
#41
இங்கு சிலர் பலரை தாங்கு தாங்கு என்று தாங்குவதை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது....

கும்பலோடு கோவிந்தா போடும் பழக்கம் எனக்கில்லை.... அதை சொன்னவர் தன் தகுதி என்ன என்று முதலில் சிந்திக்கட்டும்...
,
......
Reply
#42
நீர் மட்டும் என்னவாம்? யாழ்களத்தில் வந்த அன்றே வாழ்த்து எல்லாம் அறிந்தவர் போல வாழ்த்துச் சொன்னவர் தானே. :wink:
[size=14] ' '
Reply
#43
திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: வைகோ
ஜனவரி 25, 2006

மதுரை:

<b>திமுக கூட்டணியில் தான் இந்த நிமிடம் வரை நீடிக்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.



திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பாமக மற்றும் மதிமுகவினால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதிமுகவுக்கு 50 இடங்களுக்குக் குறையாமல் ஒதுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு அணிக்கு மாறத் தயங்க மாட்டோம் என்று அந்தக் கட்சியின் ¬முக்கியப் பிரமுகர்கள் பகிரங்கமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மதிமுக அணி மாறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், வைகோ கூட்டணியை விட்டுப் போக மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது வரை திமு¬க கூட்டணியில் தான் மதிமுக நீடிக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் தான் மதிமுக இந்த நிமிடம் வரை நீடிக்கிறது.

அணியிலிருந்து விலக மாட்டோம். கூட்டணி நீடிக்கும். திருமங்கலம் எனக்கு மறக்க ¬முடியாத ஊர். பொடா சட்டத்தில் களம் காண காரணமாக அமைந்த பொதுக்கூட்ட மேடை இந்த ஊரில் தான் போடப்பட்டது. அதனால் திருமங்கலத்தை நான் மறக்க மாட்டேன்.

இந்த நிகழ்ச்சியில் பொடா சட்டத்தில் களம் கண்டவர்கள், வென்றவர்கள் வந்துள்ளனர், சந்தோஷமாக இருக்கிறது. இலங்கையில், தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடி வருகிறது சிங்கள ராணுவம்.

அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு ¬முயல வேண்டும் என்றார் வைகோ.

இன்று மாலை சென்னையில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோவின் பேச்சு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அவர் விலாவாரியாக பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில், திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று வைகோ கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது</b>

நன்றி:தட்ஸ்தமிழ்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#44
<img src='http://www.yarl.com/forum/files/ykj.gif' border='0' alt='user posted image'>

<b>மகனை முதல்வராக்க மீண்டும் வைகோவை பலிகடாவாக்குகிறார் கருணாநிதி!</b>

தமிழக அரசியல் மாற்றங்கள் தொடர்பாக யாழ். இணையதளம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

வைகோவின் அணி மாற்றம் குறித்த செய்தியும் அதனது எதிர்வினைகளும் அறிந்தோம்.

உண்மையில் தமிழக அரசியலில் நடப்பது என்ன? கருணாநிதியிடமிருந்து வைகோ விலகுகிறாரா? வைகோவை கருணாநிதி விலக்குகிறாரா?

எனில்

வைகோவை கருணாநிதி அரவணைத்து அழிக்கிறார் என்பதுதான் உண்மை. இது யூகம் அல்ல. வைகோ கட்சி தொடங்கிய 12 ஆண்டுகாலத்தில் அவர் சந்தித்த தேர்தல்களின் வரலாறு.

சரி கடந்த காலங்களை விடுவோம்.

இப்போது..

முன் எப்போதையும் விட தி.மு.க. அணியில் பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. இந்த முறை குறைந்தது 130 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். 130 தொகுதிகளில் போட்டியிட்டு அந்தக் கட்சி வென்றால் முழுப் பெரும்பான்மை உள்ள கட்சியாக ஆட்சி அமைக்க முடியாது.

மாறாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் நிற்க வேண்டும்.

<b>தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்க்க விரும்புகிற கருணாநிதி, அந்த முதல்வர் நாற்காலி எந்தக் கூட்டணிக் கட்சியாலும் பிடுங்கிக் கொள்ளப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.</b>

அதனால் ஆகக் குறைந்தது 150-160 தொகுதிகளில் போட்டியிட்டு 130-140 தொகுதிகளில் வெல்வதன் மூலமே சாத்தியம் என்கிறது கருணாநிதியின் மூளை.

அப்படியால் இந்த 16 அல்லது 20 இடங்களை யாரை அகற்றி தாமே போட்டியிட முடியும்?

இந்திய அரசாங்கத்தில் உள்ளதால் காங்கிரசை அகற்றிவிட முடியாது.

வடமாவட்ட வாக்கு வங்கிக்காக பாட்டாளி மக்கள் கட்சியை காலி செய்து விட முடியாது.

ஆதலால்

ஆம்

நீங்கள் எண்ணுவது சரிதான்.

வழக்கம் போல் வைகோவை பலிகடாவாக்கிவிடலாம்.

வைகோ போனால் 10 தொகுதிகள்தானே நமக்கு தோல்வி கிடைக்கும். பிரச்சனை இல்லை என்பதாலேயே கடைசி நிமிடம் வரை அரவணைத்து காலி செய்துவிடுவது என்பதுதான் கருணாநிதியின் கணக்காக இருக்க முடியும். இருக்கிறது.

இதை உணர்ந்து கொண்டமையால்தான் என்னவோ இந்த முறை வைகோவின் கட்சியினரே "மீண்டும் பலிகடாவாகிவிடக் கூடாது" என்று தோள்தட்டி தொடைதட்டி கிளம்பிவிட்டனர்.

இன்று தமிழகத்தின் எதிர்கால அரசியல் பார்வை முழுவதும் வைகோ மீதுதான்.

வைகோ வாயைத் திறக்கப் போகிறார் என்றால் ஊடகத்தாரின் காதுகள் திறந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் கண்கள் கூர்மைப் பார்வை பார்க்கின்றன. அண்ணா தி.மு.க.வும் இதர கட்சிகளும் என்ன சொல்லப் போகிறார் வைகோ என்பதில் அவதானமாகப் பார்க்கின்றன.

தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்களின் படி

வைகோவை ஆதரிக்க ஜெயலலிதா தயாராகிவிட்டதாகவும் வைகோவுக்கு விடுத்த சமிக்ஞைகளில் ஒன்றாகவே மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

வைகோ வெறும் 16 தொகுதிக்குத்தான் இலாயக்கானவர் என்று கருணாநிதி முத்திரை குத்தி மூலையில் வைக்கும் அதே நேரத்தில் நான் 50 அல்லது 60 தொகுதிகள் தருகிறேன் என்று நேசக்கரம் நீட்ட ஜெயலலிதாவும் தயாராகிவிட்டார்.

ஜெயலலிதாவின் இந்த நேசக்கரத்தை வைகோவால் நம்ப முடியாமல் இருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் தங்களது தலைவரை சிறையிலடைத்தது ஜெயலலிதாவாகவே இருந்தாலும் கருணாநிதியிடம் சிக்கி கரைந்து கசங்கிப் போவதைக் காட்டிலும் நேர்மையான எதிரியாக இருந்த ஜெயலலிதாவோடு திறந்த மனதோடு கை குலுக்குவதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏதோ "விடுதலை" பெற்ற உணர்ச்சியாக உள்ளனர் என்பதே தமிழக நிதர்சனம் என்கிறது தகவல்கள்.

தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம்.

தி.மு.கவைப் போல் கட்சித் தலைவர் சொல்லுகிற கருத்தைக் கூட எப்போதாவதுதான் கட்சிப் பிரதிநிதிகள் சொல்லுவார்கள்.

ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.

நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.

தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.

<b>சங்கர்</b>
Reply
#45
நண்றிகள் மோகன் அண்ணா..!

வைகோ எங்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் மனிதர் ஈழத்தவருக்காக எண்று சொல்வதைவிட ஈழத்தவரை ஆதரித்ததால் தன் உயர்ச்சியை எதிர்காலத்தை இளந்த ஒரு தலைவர். படித்த ஒரு ஜதார்த்தவாதி...... ஈழத்தவர் கஸ்ரங்களை அமரர் MGR ருக்கு அடுத்ததாக புரிந்து வைத்திருக்கும் தலைவர்களில் ஒருவர்.... அவரை ஆதரிக்கவேண்டியது ஈழத்தவர் தார்மீகக்கடமை.

வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இண்றி செயல்வீரமும் கொண்டவர் என்பதை தனது நடைப்பயணதின் மூலம் உணர்த்தியவர். அவரின் வெற்றி அல்லது அவரின் கூட்டணியின் வெற்றியானது, இந்திய அரசியலால்... கொலைகாற இலங்கை அரசுக்கு இந்திய ஆதரவைத் தடுத்து நிறுத்தும் என்பது மட்டும் திண்ணம்...!
::
Reply
#46
வைக்கோ தன் கொள்கைக்காக தன் சுகங்களை உதறிய தலைவன். ஈழத்தமிழரின் போராட்டம் தெளிவான அறிவுள்ளவர். தான் வரிந்த கொள்கைக்காக அன்றும் இன்றும் போராடும் தலைவன். எந்த இடத்தில் கூட்டுச்சேர்ந்தாலும் தன் கொள்கையை கைவிடமாட்டார் என திடமாக நம்புகிறோம். அப்படி கைவிடக்கூடியவர் என்றால் பல சந்தர்ப்பங்கள் ஏற்கனவே வந்து போயுள்ளன. ஆதலால் அவ்வாறே தொடர்ந்தும் இருப்பார்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#47
[quote]<span style='font-size:25pt;line-height:100%'>தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம். </span>

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
enrum anpudan
Reply
#48
Quote: ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.

நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.

தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.

<b>சங்கர்</b>
நிச்சயமாக நண்பரே!
இங்கே அவரை அவமதிக்கும் கருத்துக்களை பிரயோகிப்பது என்பது அவரின் மனதை வைதைக்கும் கருத்துக்களாகவே கொள்ளப்பட வேண்டும்.
[size=14] ' '
Reply
#49
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசாங்கத்துக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:

தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.

நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்றார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிட முடியாது. சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்குமேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

<b>ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்காட்டி ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.</b>http://
www.eelampage.com/?cn=23895
Reply
#50
தூயவன் Wrote:நீர் மட்டும் என்னவாம்? யாழ்களத்தில் வந்த அன்றே வாழ்த்து எல்லாம் அறிந்தவர் போல வாழ்த்துச் சொன்னவர் தானே. :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#51
<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  
<b>ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னது??? "லுக்கு" பறுவத்திலயும் உப்பிடித்தான் கதைப்பாரோ.??? :wink:
:::::::::::::: :::::::::::::::
Reply
#52
<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  
<b>ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தப்பு சின்னப்பு!! பறுவம் மட்டுமல்ல எல்லா நாளிலும் அப்படித் தானே கதைக்கின்றவர்!! :wink:
[size=14] ' '
Reply
#53
இல்ல அவருக்கு ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சினை இருக்கு aaனால் வெயில் ஏறஏற பிரச்சினை கூடும் என்டவர், குளிர்காலத்தில் பிரச்சினை குறைவு என்டவர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#54
அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் காளிமுத்துவிற்கு அம்மா கொடுத்திருக்கும் முதல் அசைன்மெண்டே வைகோவை வளைத்துப் பிடிப்பதுதானாம். ஆம்; உளவுத்துறையின் உபயத்தால் தட்டித் தட்டி கனியாகியிருக்கும் ம.தி.மு.க.வை, அம்மாவின் மடியில் விழ வைப்பதே காளிமுத்துவின் உடனடி வேலை என்கிறார்கள் அ.தி.மு.க.விலுள்ள மேல் மட்டத் தலைவர்கள். அவர்கள் சிலர் சொன்ன தகவல்களைத் திரட்டித் தருகிறோம்.

ஏழு கட்சிக் கூட்டணிக்கு எதிராக தனது பாச்சா பலிக்காது என்பதாலேயே தி.மு.க. கூட்டணியை உடைக்க பெருமுயற்சி செய்து, அதில் ‘அம்மா’ வெற்றி பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தியே ம.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களை அ.தி.மு.க. பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது உளவுத்துறைதான். அதன் விளைவாகத்தான் கடந்த டிசம்பர் 3_ம் தேதி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒலித்த அ.தி.மு.க. ஆதரவு கோஷம்!

தொடர்ந்து நாஞ்சில் சம்பத் போன்ற பேச்சாளர்கள் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் போய் தொண்டர்களை அ.தி.மு.க. கூட்டணிக்குத் தயார் செய்யும் வகையில் பரபரப்பாகப் பேசிய காட்சிகளும் அரங்கேறின. ம.தி.மு.க. மேடைகளில் கட்சியிலுள்ள பிறர், கலைஞர் அட்டாக்கைத் தொடங்கினாலும் வைகோ மட்டும் எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டாமல்தான் இருந்தார். ஏனென்றால் அவருக்குத் தனிப்பட்ட முறையில், எந்தவித உறுதியும் அ.தி.மு.க. தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. தவிர, அவரிடம் உரிமையோடு பேச்சு நடத்த அ.தி.மு.க.வில் சரியான தலைவர்கள் இல்லை.

இந்நிலையில்தான் காளிமுத்துவிற்கும் வைகோவிற்கும் இருக்கும் ஆத்மார்த்தமான நட்பு அம்மா கவனத்திற்கு வர, அவருக்கு அம்மா கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்தே, வைகோ மதுரை செல்லும் அதே விமானத்தில் வைகோவின் பக்கத்து இருக்கை காளிமுத்துவிற்கு புக் செய்யப்பட, இருவரின் சந்திப்பும் ஆகாயத்திலேயே நடந்திருக்கிறது. தனது பால்ய நண்பரான காளிமுத்துவிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் வைகோ. இதுதான் அ.தி.மு.க. _ ம.தி.மு.க. கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி என்கிறார்கள்.

தி.மு.க. தலைமை மீது வைகோ அதிருப்தியில் இருக்கிறார். வளைக்கிற வழியில் வளைத்தால் வந்துவிடுவார் என்று, காளிமுத்து கூறியதை முதலில் அம்மா நம்பவில்லையாம். அதன் பின்னர் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில், நெல்லையில் நடைபெற்ற தொண்டர்கள் பயிற்சிப் பாசறையில் வைகோ முதல் தடவையாக ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என்கிற கோஷத்தைக் கைவிட்டு விட்டு, ஜெயலலிதா அட்டாக் இல்லாமல் பேசியதை ‘ஜெயா’ டிவி நிருபர் எடுத்த கேசட்டைப் போட்டுப் பார்த்த பிறகுதான் வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வந்து விடுவார் என்கிற நம்பிக்கை ஜெ.வுக்குப் பிறந்ததாம்.

சரி... வைகோவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்வது? முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், இலங்கை அதிபர் ராஜபக்சே சென்னையில் முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்ததை சமயோசிதமாய்ப் பயன்படுத்தினார் முதல்வர். ராஜபக்சேயைப் பார்க்க முடியாது என்று கூறி வைகோவை பரவசப்படுத்தியிருக்கிறார். இதுதான் வைகோவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கிரீன் சிக்னல்!

இந்நிலையில் தி.மு.க. தரப்பில் வைகோவை சமரசப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே கலைஞர் _ வைகோ சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ‘எனது சேப்பாக்கத்தைக் கூட எடுத்துக்கய்யா’ என்று கலைஞர் உருக்கமாய்க் கூறினாலும் அதற்கு வைகோ மசியவில்லையாம். பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டாராம் வைகோ. தான் இன்னமும் அ.தி.மு.க. ஆதரவு நிலையிலேயே இருப்பதைத் தெளிவு படுத்துவதற்காகவே நாகர்கோவில் கல்லூரி விழாவில் பேசிய வைகோ, ‘ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்று பொடி வைத்துப் பேசியிருக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் வண்ணம்தான் பொதுக்குழுவில் அம்மாவும் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பதில் சொல்ல, பொதுக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய கட்சி நம்முடன் வர இருக்கிறது என்று அம்மா பொதுக்குழுவில் சொன்னது ம.தி.மு.க.வை மனதில் வைத்துத்தான் என்கிறார்கள் அ.தி.மு.க. கரைவேட்டிகள். ஆக, ‘அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. மதில் மேல் இருந்த பூனை, போயஸ் தோட்டத்தில்தான் குதிக்கப் போகிறது என்பதுதான் இன்றைய நிலை’ என்கிறார்கள்.

சரி... எல்லாம் ஓ.கே. வைகோவிடம் கூட்டணி பற்றிப் பேசத் தகுதியான தலைவர் யார்? என்று அம்மா தீர யோசித்த பிறகே, அப்பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறாராம்! வைகோவுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலுள்ள நட்பு பற்றி இப்படிச் சொன்னார் ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் ராமத்தேவன்பட்டிதான் காளிமுத்து பிறந்த ஊர். இருவரும் கல்லூரி கால நண்பர்கள். இருவரையும் இணைத்தது தமிழும், திராவிட உணர்வுகளும்தான். விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து, தி.மு.க. சார்பில் பெ.சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது வைகோ_காளிமுத்து ஆகிய இருவருமே தி.மு.க. மாணவர் அணியிலிருந்துகொண்டு தீவிர பிரசாரம் செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, காளிமுத்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரான பிறகும்கூட, வைகோவிடம் பாசம் கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது வழக்கம்.

1989_ம் ஆண்டு சிவகாசி எம்.பி. தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வைகோ, அ.தி.மு.க. வேட்பாளர் காளிமுத்து. இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்தாலும், நேருக்கு நேர் சந்திக்கும்போது, கட்சிப் பாகுபாட்டையெல்லாம் மறந்து சாதாரணமாகப் பேசிக் கொள்வதைத் தொண்டர்களே வியப்புடன் பார்த்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே வைகோவிடம் பேசும் பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் என்கிறார்கள். ஆக, மொத்தத்தில் கூட்டணி விஷயத்தில் ஒரு திடீர்த் திருப்பம் ஏற்படும் என்றே பலரும் சொல்கிறார்கள்!

http://www.kumudam.com/reporter/mainpage.php
"
"
Reply
#55
35 சீட்: அதிமுக, திமுகவுக்கு வைகோ நிபந்தனை

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதியன்று வெளியிடப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ ஜெயலலிதாதான் எதிலும் முன்னணியில் இருப்பார். தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது வரை அத்தனையிலும் ஜெயலலிதா படு வேகம் காட்டுவார்.

கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவே அனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரசாரத்தையும் எல்லோருக்கும் முன்பாக ஆரம்பித்தார்.

இந்த முறையும் அதுபோலவே நடைபெறும் எனத் தெரிகிறது. வருகிற 15ம் தேதி வரை போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது அதிமுக தலைமை. இது முடிந்ததும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா முடிவு செய்வார்.

இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து யார் தங்களது கூட்டணிக்கு வரப் போவது என்று சில நாட்கள் வெயிட் பண்ணி விட்டு வரும் 24ம் தேதி தனது பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலை அவர் அறிவிப்பார் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

24ம் தேதிக்குப் பதில் அமாவாசை தினமான 26ம் தேதி பட்டியலை வெளியாகலாம் என சில அதிமுகவினர் கூறுகின்றனர்.

எப்படியிருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறித்த பட்டியல் மார்ச் 2ம் தேதி திருச்சி திமுக மாநில மாநாட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வைகோவை எப்படியாவது, கூட்டணியில் தக்க வைக்க கருணாநிதி முயன்று வருகிறார்.

அதற்கு பாமகவும், காங்கிரஸும் சற்று இறங்கி வந்தால்தான் உண்டு. பாமக சீட்களை குறைத்துக் கொள்ள முரண்டு பிடித்தால், வைகோவை நிறுத்த கருணாநிதியால் முடியாது.

மதிமுகவில் உள்ள பெரும்பாலான தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வைகோவை அனத்தி வருகின்றனர்.

லேட்டஸ்ட் தகவலின்படி, யார் 35 சீட் தருகிறீர்களோ அவர்களுடன் தான் கூட்டணி என முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார் வைகோ என்கிறார்கள்.

thats tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#56
ஜெவுடன் கூட்டணி வேண்டாம்: வைகோவுக்கு புலிகள் அட்வைஸ்?

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா தமிழர் எதிர்ப்பாளரான மாஜி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இடையிலான நட்பை சுட்டிக் காட்டி, இந்தக் கூட்டணி வேண்டாம் என வைகோவுக்கு புலிகள் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக வைகோ அதிமுகவுடன் கூட்டணிக்குத் தயாராகிறார் என்ற தகவல்கள் உண்மை தான் என புலிகளுக்கு திமுக தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிமுக கூட்டணி குறித்த தனது முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் தனது கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிமுக வலையில் விழுந்துவிடுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவிடம் இருந்து கூடுதல் இடங்கள் கிடைக்கும் வரை ஜெயலலிதாவை விமர்சிப்பதை வைகோ நிறுத்தி வைத்திருப்பார் என்று மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தனது கட்சியின் முக்கியஸ்தர்களை பேச வைத்து திமுகவுக்கு நெருக்கடியைத் தொடரவும் வைகோ திட்டமிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் பேச்சு:

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் வைகோவின் மனசாட்சியுமான நாஞ்சில் சம்பத்,

தமிழக சட்டசபைத் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் எதிர் கட்சித் தலைவராக அமரப் போவது வைகோதான் என்றார். திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சம்பத்தை சில வாரங்களாக அடக்கி வைத்திருந்தார் வைகோ. அவர் பொதுக் கூட்டங்களில் பேசவே தடா போட்டிருந்தார்.

இந் நிலையில் சென்னையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் வழக்கம் போல் அனல் பறக்கப் பேசினார். சம்பத் பேசுகையில்,

கடந்த 12 வருடங்களாக மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வெற்றியே கிடைக்கவில்லை. மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட எங்களுக்கு தோல்விதான் கிடைத்தது.

சறுக்கல்கள் பல கண்டாலும் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. நபிகள் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்: யாருக்கு பதவி ஆசை இல்லையோ, அவர்கள்தான் பதவியில் அமர வேண்டும். அதுதான் எங்களது கொள்கையும்.

எங்களை எந்த டிவியிலும் இதற்கு முன்பு காட்டியதில்லை. ஆனால் இப்போதோ, பெயர் தெரியாத டிவியில் கூட எங்களை காட்டுகிறார்கள். பயம் வந்துருச்சு. (சன் டிவியில் இப்போதெல்லாம் வைகோ அதிகமாகவே தென்படுகிறார்)

முதல்வர் ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் அதிபர் ராஜபக்ஷே சென்னை வந்து அவரை சந்திக்க விரும்பியபோது, முடியாது என்று கூறி மறுத்து விட்டார் ஜெயலலிதா. இதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. (தேர்தல் நேரத்தில் தமிழர் எதிர்ப்பாளரான ராஜபக்ஷேவை சந்தித்தால், அது சரி வராது என்ற உளவுத்துறையின் அட்வைஸ் தான் அதற்குக் காரணம் என்பது வேறு கதை)

2 ¬முறை ஏமாந்து விட்டோம். இந்த முறை விட மாட்டோம். நாங்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்பதை மதிமுகதான் தீர்மானிக்கும்.

கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து.காம் இணையதளத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 70 சதவீதம் பேர் வைகோவைத் தேர்வு செய்துள்ளார்கள்.

ஸ்டாலினுக்கு 10 சதவீதம்பேர்தான் ஆதரவு. இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்கள் எங்களை அங்கீகரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நடிகர் (விஜயகாந்த்) கட்சி ஆரம்பித்துள்ளார். எதையாவது பேச வேண்டும் என்பதற்காக என்னென்னவோ பேசி வருகிறார். வீடு தேடி ரேசன் பொருட்கள் வருமாம். என்ன பேச்சு இது? சினிமாவில் வசனம் பேசுவது போல இஷ்டத்திற்குப் பேசுகிறார்.

ரயிலில் போக வேண்டும் என்று டிக்கெட் எடுத்தால், ரயில் நம் வீட்டுக்கு வந்தா கூட்டிக் கொண்டு செல்லும்? நாம்தானே ரயில் நிலையம் போக வேண்டும். இது கூடத் தெரியாமல் உளறி வருகிறார் அந்த நடிகர்.

தேர்தல் களம் நெருங்கி விட்டது. இன்னும் ஒருவாரம்தான். அதற்குள் வைகோ தீர்மானமான முடிவை எடுப்பார். எங்களுக்கு எங்கு மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். எங்களது உணர்வுகளை அவர் புறக்கணிக்க மாட்டார் என்றார் நாஞ்சில் சம்பத்.

உளவுத்துறைக்கு ஜெ. டோஸ்:

இப்போதைய நிலையில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் திமுகவை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வைகோ வந்திருப்பதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அதிமுக எதிர்ப்பு என்ற நிலையும் வேண்டாம், திமுக ஆதரவு என்ற நிலையும் வேண்டாம் என்ற முடிவில் உள்ள வைகோ இரு கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் விலகியிருந்து வருகிறார்.

இதனால் திமுகவுக்கு ஒரு பக்கம் டென்சன் என்றால், மறுபக்கம் வைகோவை இதுவரை அதிமுகவுக்கு இழுத்து வர முடியாமல் தவித்து வரும் உளவுத்துறையினரும், இந்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும், சில கட்சிப் பிரமுகர்களும் முதல்வர் ஜெயலலிதாவிடம் டோஸ் வாங்கி வருவது தனிக் கதை.

தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#57
24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு
ஓ குருப் ரத்தம்பற்றிய செய்தியொன்று வந்திருக்கின்றது.. வெட்டி ஒட்ட தெரிந்தவர்கள் வெட்டி ஒட்டுங்க..

http://thatstamil.oneindia.com/news/2006/0...2/17/vaiko.html
8
Reply
#58
Sukumaran Wrote:24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு
ஓ குருப் ரத்தம்பற்றிய செய்தியொன்று வந்திருக்கின்றது.. வெட்டி ஒட்ட தெரிந்தவர்கள் வெட்டி ஒட்டுங்க..http://thatstamil.oneindia.com/news/2006/02/17/vaiko.html

[size=14]சுகுமாரண்ணாவுக்கு இதை ஒழுங்கா வெட்டி ஒட்டக் கூடத் தெரியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://thatstamil.oneindia.com/news/2006/0...2/17/vaiko.html
Reply
#59
எல்லாமே ஊர்ஜிதப்படுத்தப்படாத வதந்தியா?
:?:

Aaruran Wrote:
Sukumaran Wrote:24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு
ஓ குருப் ரத்தம்பற்றிய செய்தியொன்று வந்திருக்கின்றது.. வெட்டி ஒட்ட தெரிந்தவர்கள் வெட்டி ஒட்டுங்க..http://thatstamil.oneindia.com/news/2006/02/17/vaiko.html

[size=14]சுகுமாரண்ணாவுக்கு இதை ஒழுங்கா வெட்டி ஒட்டக் கூடத் தெரியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://thatstamil.oneindia.com/news/2006...vaiko.html
8
Reply
#60
வைகோவின் எதிர்காலம்

தமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.
<img src='http://img361.imageshack.us/img361/2066/vaiko19zk.jpg' border='0' alt='user posted image'>

கொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.

அதிக இடங்களா ? காப்பாற்ற வேண்டிய இமேஜா ?

அதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.


இமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.

ஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன ?

அதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.

சிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் "குழப்ப நாடகம்" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு "எண்ணிக்கை" மட்டுமே. இமேஜ் அல்ல.

கடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.

ஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் ? வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

<img src='http://img361.imageshack.us/img361/928/vaiko22xm.jpg' border='0' alt='user posted image'>
வைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

திமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய "ஜெ எதிர்ப்பு அலையில்" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.

கடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.

இன்று தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.

இந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமுக அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.

இந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.
<img src='http://img361.imageshack.us/img361/3263/vaiko38sz.jpg' border='0' alt='user posted image'>


வைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.

நன்றி: சசி

http://thamizhsasi.blogspot.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)