Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ?
#1
நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ?

ஒர்; உண்மைச்சம்பவம். செவிகளில் நுழைந்தவுடன் சிந்திக்கதோன்றியது. நான் அறிந்த கேட்ட அந்த உண்மையான உதிரக்கசிவை உங்களிற்கும் தரத்தோன்றியது தருகின்றேன். நேரமின்மை. அதனால் முழமையாக எமுதி தரமுடியவில்லை. பாகம் பாகமாக தரமுயல்கின்றேன். கவிதையாகவும் கதைவடிவிலும் தரமுயல்கின்றேன்.

ஆணில் தவறா பெண்ணில் தவறா ? விடை அறியவில்லை. அவசரம் செய்தவள் அவளாயின் தவறெல்லாம் அவள் பக்கம் ஆசைப்பட்டது அவனாயின் முழுத்தவறும் அவன் பக்கம். முழமையாக வாசித்தபின் உங்கள் பக்க நியாயங்களை இங்கே பகிருங்கள்.

அந்திமாலை ஆர்ப்பரிக்கும் சாலை
பைய நடந்து பாதங்கள் நோவ
மெல்ல தரையமர்ந்தேன்
சாலையோரப்புூங்கா அது
புூவையர் தம் தாய்மைகாட்டிய செல்வங்களுடன்
கரம் கோர்த்த கணவருடனும்
வாழ்வை வசமாக்கி
வையகம் மறந்து களித்திருக்கின்றனர்

எங்கு நோக்கினும் இரட்டையராய்
எங்கும் பரந்த பசுமையினுள்
வானவில் கலவைகளாய்
வண்ணச் சிட்டுக்கள்

தனிமரமான எனக்கு
தோப்புகள் நிறைந்த புூவனம்
மேனியெங்கும் இதுவரை
பரவாத இன்பம் தந்தது
விழியால் மேய்ந்தபடி
என் வேதனைகள் களைந்தபடி
வீற்றிருந்த என் பார்வையினுள்
து}ரத்தே ஓர் உறவு
ஓற்றையாய் என்னைப்போல

பலமணிநேரமாய் எதிலுமே
பிரக்ஞையற்று பகலைத்தொலைத்த
இரவுபோல விழியெங்கும் ஏக்கத்துடன்

நீண்டநேர அவர் தனிமை
என்னை அவர்பால் ஈர்த்தது
அருகில் சென்றேன்
வதனம் கண்டேன்
தமிழ் வாசம் பெற்றேன்
வாடி நின்றாலும்
வாசமிழக்காதவன் தமிழன்
சோர்ந்து நின்றாலும்
சோடை போகாதவன் தமிழன்

வணக்கம் என்றேன்
வானம் தொலைத்த நிலவினை
மாய்ந்து மாய்ந்து தேடுவார்போல
என் முகத்தை ஏற இறங்க நோக்கி நின்றார்
ம் ம் என்றார்
அர்த்தம் பொதிந்த பதிலாய்

நேரம் கிடைக்கும்போது தொடர்கின்றேன்.
[b] ?
Reply
#2
உண்மைச்சம்பவம் என்றவுடனே.. வாசிக்கும் ஆர்வம் மேலும் தூண்டுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்....
Reply
#3
பரணி மிக்க அருமையாக நடை கொண்டு செல்கின்றீர்.....அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்.....
சிவா....
Reply
#4
நெஞ்சைத் தொட்டு நெருப்பாய் சுட்ட கவிதை....

வாசிக்க ஆவல்.
Reply
#5
மிக்க அருமை தோழர்...
Reply
#6
வணக்கம்
எழுதிமுடித்துவிட்டேன். உரைநடையில் அமைந்ததை கவிதையாக்கவேண்டும். கவி மனம் இல்லையா! அதனால் ஓன்றில் நிலையாக்க மறுக்கின்றது. விரைவில் நெஞ்சைத்தொட்ட நெருப்புடன்
[b] ?
Reply
#7
மழை (நிலா) வந்து நெருப்பை அணைக்க முதல் வருமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#8
மழை(நிலா) வந்து அணைக்கமுதல் நெருப்பே அணைந்துவிடுமே !
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->மழை (நிலா) வந்து நெருப்பை அணைக்க முதல் வருமா?  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#9
மன்னிக்கவும் நேரமின்மை காரணமாக எழுதமுடியவில்லை. இதுவரை கதைவடிவில் எழுதியதை அப்படியே தருகின்றேன்.

அருகில் அமரவா ?
பதில் வரமுன்னே
அமர்ந்து கொண்டேன்
சில நொடிகள் மௌனம்
மௌனம் கலைக்க
நான் வார்த்தை தொடுத்தேன்

தமிழர் நீங்கள்
தயக்கமின்றி அறிந்துகொண்டேன்
சோகப்புயல் ஓன்று
உங்களை சூழ்ந்து நிற்கின்றதே
மனதை ஆற்றிக்கொள்ள
நெருடும் சோகத்தை
நெஞ்சை அழுத்தும் வலியை
என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்

முடியும் என்றால் நான்
முழுதாய் உதவுகின்றேன்
நான் சொல்லி வாயடைக்கமுன்னே
பொழியத்தயாராகவிருந்த கார்மேகம்போல
சாரலென பொழிந்து தள்ளினார்

தம்பி நான் யாழ்ப்பானத்தில் காரைநகரைச்சேர்ந்தவன். ட்டிடவேலை சம்பந்தமாக இங்கு வந்தேன். வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. நான் வந்த புதிதில் கம்பனியின் குடியிருப்புக் கட்டடத்தில்தான் வசித்தேன். அங்கு எனக்கு சரிவரவில்லை. தெனால் தனியாக வேறு இடம்தேடி இங்கு வந்தேன். வந்து ஒரு டீடனப இல் குடயவ எடுத்தேன். அதில் 4 அறைகள் இருந்தன. ஒரு அறையை நான் வைத்துக்கொண்டு மற்றவற்றை வாடகைக்கு விட்டேன். அதில் ஒரு அறையில் இந்தியர்களும் மற்றையதில் இலங்கையர்களும் (முஸ்லிம்கள் தமிழர்கள் என பலர்) இருக்கின்றார்கள். மற்றைய அறையில் ஒரு நேபாள நாட்டைச்சேர்ந்தவர் எடுத்து இருந்தார். அவர் ர்ழவநட இல் வேலை செய்பவர். அதனால் இரவுதான் வேலை. ஒரு 6 மாதம் இருந்தவர்.

திடீரென ஒரு நாள் சொன்னார். எனது மனைவியார் வருகின்றார் அவரை இங்கு கொண்டு வருவதில் பிரச்சினை இல்லையா என நானும் வரட்டும் இங்கு பிரச்சினை இல்லை என சொன்னேன். மனைவியாரும் வந்தார். 1அவர் வந்தபின்தான் தெரிந்தது அவர் மனைவி இல்லை என. . இவருடைய புசைட குசநைனெ. முன்பு அதே ர்ழவநட இல் வேலை செய்தவராம். இந்தோனேசியன் நாட்டைச்சேர்ந்த பெண். விசாப்பிரச்சினை காரணமாக அவர் தாய்நாடு சென்றுவிட்டார். பின்பு இவர் வேறு ஓருவர் மூலம் விசா அனுப்பி எடுத்ததாக சொன்னார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாகவும் சொன்னார். நான் அதை நம்பிக்கொண்டேன். நமக்கேன் மற்றவர்களின் பிரச்சினை என ஓதுங்கியிருந்தேன். நான் உண்டு எனது வேலை உண்டு என வாழ்ந்தேன்.

திடீரென ஒரு நாள் அவர்களுடைய அறையில் பயங்கர சண்டை. என்னவென்று புரிய முடியவில்லை. கணவன் மனைவிதானே. சண்டை பிடிக்கின்றார்கள் என இருந்துவிட்டேன். அது காலப்போக்கில் தொடர்ந்தது. இரண்டு தினங்களிற்கு முன்பு அந்த பெண் திடீரென இரவு 11.000 மணியளவில் அறையை விட்டு வெளியேறிவிட்டார். எங்கு போகின்றார் என்று சொல்லாமல் அவருடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார். தம்பி உனக்கே தெரியும்தானே இங்கு இரவு பெண்கள் அதுவும் வேற்றுநாட்டுப்பெண்கள் தனியே திரிவது ஆபத்தானது. சவுூதியை சேர்ந்த அரபிகள் மோசமானவர்கள். தனியே போகும் ஆண்களையே விடமாட்டார்கள். அந்த பெண் போய்விட்டாள். எனக்கும் மனம் பொறுக்கவில்லை. அந்த நேபாளியிடம் கேட்டேன் என்ன நடந்தது என

அவன் சாதாரணமாக சொல்கின்றான்.
அவளை தான் 500டீனு. (இலங்கை மதிப்பில் 1இ25இ000) கொடுத்து வாங்கியிருந்தேன். தற்போது அவளிற்கு என்னிடம் விருப்பம் இல்லை. அதனால் போகப்போகின்றாளாம். மேலும் அவளிற்கு தினம் தினம் உடுப்புகள் உணவுகள் எல்லாம் நான் ஆசைக்கேற்ற முறையில் வேண்டிக்கொடுத்தேன். என்னைவிட வேறு ஒருவன் நிறைய தருவதாக சொல்லியுள்ளானாம். அதனால் என்னுடன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று சொல்லிவிட்டு அவனும் அறையை காலிசெய்வதாக கூறி போய்விட்டான்.

தம்பி நீ நம்பமாட்டாய். நூன் அந்த பெண்ணை இரண்டு தடவைகள்தான் பார்த்திருப்பேன்; அந்த நேபாளி சொன்னதையும் அந்த பெண்ணின் முகத்தையும் ஓப்பிட்டுப்பார்த்தால் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். குழந்தை முகம் சின்ன பெண்ணாகத்தான் தோன்றுகின்றது.
இப்ப பிரச்சினை என்னவென்றால் அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி போகும்போது சவுூதிப்பையன்கள் வீதியில் மறித்து கலாட்டா செய்துள்ளார்கள். அந்த நேரம் பொலிஸ் வந்திருக்கின்றது. அவளை காப்பாற்றி கூட்டிக்கொண்டு போயுள்ளார்கள். இப்ப அவள் அவர்களின் கட்;டுப்பாட்டில் என்னேரமும் திருப்பி அனுப்ப வைத்திருக்கின்றார்கள். அந்த நேபாளி எங்கு என்று தெரியாது. அவன் வேலையையும் விட்டுவிட்டு போய்விட்டானாம். அவள் கொடுத்த முகவரியின் படி முகமேயறியாத எனது பெயர்தான் பொலிஸில் பதிவாகியிருக்கின்றுது. எனது அறையில்தான் தான் இருந்ததாகவும் சொல்லியுள்ளாள். எனக்கு அந்த நேபாளியை நன்கு தெரியும் என்றும் சொல்லியுள்ளாள். அந்த நேபாளியைப்பற்றி தகவல் அளிக்காவிட்டால் என்னேரமும் என்னை ஊரிற்கு அனுப்ப பொலிஸ் நடவடிக்கை எடுக்கின்றது. தம்பி எனக்கு ஆங்கிலப்புலமை அவ்வளவாக இல்லை. அரேபிய மொழியும் பெரிதாக தெரியாது. இப்ப என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குடயவ என்னுடைய பெயரில்தான் பதிந்துள்ளேன். அதுதான் பிரச்சினை. கம்பனியும் எனக்கு எச்சரிக்கை தந்துள்ளது. தங்களால் உதவமுடியாது என்றுவிட்டது என்றார்.

காசிற்கு ஆசைப்பட்டு கண்டவனுடன்
ஓடிவந்த பெண்ணில் தவறா ?
காமத்தீயால் தானும் கசங்கி
தன்னை சார்ந்தவரையும் கசக்கிய
ஆணில் தவறா ?
குடியிருக்க இடமளித்ததால்
குற்றவாளியாகிய இவரில் தவறா ?

விடை தெரியவில்லை. ? ? ? ?

அவரிற்கு தெம்பான பதில் தர முடியாத நிலையிலும் என்னால் முடிந்த உதவிகளை எனது அலுவலத்தை சார்ந்தோர் மூலம் செய்துகொடுத்தேன். தற்சமயம் அவரை இங்கு வேலைசெய்ய அனுமதி அளித்துள்ளார்கள். குடியிருக்க இடம்கொடுத்த ஓரேயொரு குற்றம்தான் இவருடையது. இவரால் அதை இலகுவாக தீர்த்திருக்கமுடியும். மொழிப்பிரச்சினை. அதனால் முழுவாழ்வையும் இழக்கமுயன்றார். தற்சமயம் சந்தோசமாக இருக்கின்றார். அதே கம்பனி இருப்பிடம் கம்பனியின் குடியிருப்பு பகுதி. அவர் தன்னைக்காப்பாற்ற செலவழித்த தொகை ஏராளம். (இங்கும் லஞ்சம்தான்)

நன்றி
[b] ?
Reply
#10
இதென்ன கேள்வி பரணி...மொத்தத்தில் காசே தான் பிரச்சனை....அவளுக்கு காசு மேல ஆசை.... அவனுக்கு காசிருக்க காமத்தில ஆசை.... நம்மாளுக்கு இன்னும் காசு சேர்க்கும் ஆசை....காசு கண்ணை மறைத்து புத்து பேதலிக்கச் செய்ய மனிதன் மிருகத்திலும் கீழாகிறான்....காசுதான் உலகின் பல குற்றங்களின் சூத்திரதாரி....பேசாமல் பண்டமாற்று முறைக்கே போகலாமோ.....?!

உலகத்தில் இந்தக் காசுப்பிரச்சனையைத் தீர்க்க சராசரியாக ஒரு மனிதனின் அன்றாட நல்வாழ்வுக்குத் தேவையான பணத்தைத் தவிர அவனிடம் பணம் இருப்பத்தை அனுமதிக்கக் கூடாது என்பதுடன் பணம் சரிவரப் எல்லோரிடத்தும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்...அத்துடன் பொதுவான சட்டத்தால் ஆளப்படும் அரச நிறுவனத்தில் மேலதிக பணம் கட்டாயம் வைப்புச் செய்யப்பட உத்திரவிட வேண்டும் அப்படி செய்யத் தவறுவோர் மீது அதி உச்ச தணட்னை வழங்க வேண்டும்...விசேட தேவைகளுக்கு சட்டப் பரிசீலினையின் கீழ் சேமிப்புப் பணம் வழங்கப்படுவதுடன் அதுசரியான முறையில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பதும் கவனிக்கப்பட்டால்...பணம் தொடர்பில் எழும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டலாம்......!

இவற்றை இன்னும் செம்மையாக்கி உலகெங்கும் சரிவர அனைத்து அரசுகளும் நடைமுறைப்படுத்தினால் பணத்தால் எழும் மனித அவலங்களையும் குற்றங்களையும் கூடிய அளவு தடுக்கலாம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதென்ன கேள்வி பரணி...மொத்தத்தில் காசே தான் பிரச்சனை....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அது சரி.. உழைச்சு முன்னுக்கு வாற சுதந்திர தனிமனிதத்தை சுரண்டித்தின்ன ஆசைப்படுற சோம்பேறிகளின்ரை (இல்லாத) காசே தான் பிரச்சனை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
ஆஹா இங்கேயும் மனப்பிராந்தா ?

ஏதோ
[b] ?
Reply
#13
என்ன தாத்தா உங்களுக்கு சுடுகுதோ...அப்ப இதுதான் சரியான திட்டம்....ரெஸ்ரிங் ஓவர்....அப்பிளிக்கேசன் எக்ஸ்பெக்ரட்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
ஓமோம் ஆரும் உழைக்க சுளையா தின்னுற புத்தி விட்டுப்போகாதே..
ரெஸ்ரிங்.. அப்பிளிக்கேசன் எண்டு சுத்திறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
எங்க உழைச்சியள் ஊர் உலகம் சுத்தி சுருட்டிப் போட்டு... பதுங்கி இருந்து கொண்டு வசனம் மட்டும் நல்லாப் பேசுங்கோ...வெள்ளை வேட்டிக் கள்ளர்....நேற்று வெளிச்சுத்தே வானம் ஆளவந்தான் போட்டு உடைச்சாரே எல்லாத்தையும்...இப்ப என்ன பாஞ்சு மாஞ்சு என்ன சமாளிப்புக்கேசனே செய்யுறியள்...!

அதுதான் உங்கள் போல ஆக்களுக்கு கைவந்த கலையாச்சே...ஏதோ செய்யுங்கோ எனியும் உங்களப் போல ஆக்களட்ட ஏமாற இங்க ஒருத்தரும் இல்லை.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
சுய உழைப்பில் தின்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் தாத்தா.
நீங்கள் சொல்லக்கூடாது.
கேட்டுப்பெற்றது வேறு சுரண்டிவாழ்வது வேறு .
நீங்கள் இரண்டாவது ரகம்
[b] ?
Reply
#17
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->எங்க உழைச்சியள் ஊர் உலகம் சுத்தி சுருட்டிப் போட்டு... பதுங்கி இருந்து கொண்டு வசனம் மட்டும் நல்லாப் பேசுங்கோ...வெள்ளை வேட்டிக் கள்ளர்....நேற்று வெளிச்சுத்தே வானம் ஆளவந்தான் போட்டு உடைச்சாரே எல்லாத்தையும்...இப்ப என்ன பாஞ்சு மாஞ்சு என்ன சமாளிப்புக்கேசனே செய்யுறியள்...!

அதுதான் உங்கள் போல ஆக்களுக்கு கைவந்த கலையாச்சே...ஏதோ செய்யுங்கோ எனியும் உங்களப் போல ஆக்களட்ட ஏமாற இங்க ஒருத்தரும் இல்லை.....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->குருவிகாள்.. ஒரு சின்ன சூட்கேஸ்.. அதோடைதான் வந்திறங்கினது.. உங்கடை வெள்ளைவேட்டியோடை கொள்ளையடிக்காத பணமெல்லாம் விட்டிட்டுத்தான் வந்தது.. இஞ்சை என்னிடம் இருக்கிறது முழுவதும் என்னுடைய உழைப்பிலை வாங்கினது.. உங்களைமாதிரி அகதியெண்டு சுரண்டி வாங்கேல்லை..

உங்களுக்கு சுளையா சுரண்டித்தான் பழக்கம்.. அது தெரியும்.. அதுக்காக இப்படியோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->சுய உழைப்பில் தின்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் தாத்தா.
நீங்கள் சொல்லக்கூடாது.
கேட்டுப்பெற்றது வேறு சுரண்டிவாழ்வது வேறு .
நீங்கள் இரண்டாவது ரகம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இவன்தான் எனக்கு மோட்கேஜ் பில்லுகள்.. கட்டிறமாதிரி இவனொருத்தன்..


அது சரி.. கேட்டு வாங்கிறது பாவப்பணமோ.. புண்ணியப்பணமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Karavai Paranee+--><div class='quotetop'>QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->சுய உழைப்பில் தின்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் தாத்தா.
நீங்கள் சொல்லக்கூடாது.
கேட்டுப்பெற்றது வேறு சுரண்டிவாழ்வது வேறு .
நீங்கள் இரண்டாவது ரகம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இவன்தான் எனக்கு மோட்கேஜ் பில்லுகள்.. கட்டிறமாதிரி இவனொருத்தன்..


அது சரி.. கேட்டு வாங்கிறது பாவப்பணமோ.. புண்ணியப்பணமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#20
எப்பிடி வந்த பணமோ.. என்ன திறமை இருந்தாலும்.. 'ஆமாம் சாமி' போடாமல் வந்திருக்காது.. மனதைத் தொட்டுப் பார்த்தால் புரியும்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)