12-07-2005, 06:55 PM
உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது.
அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம்
<span style='font-size:25pt;line-height:100%'>தெரியாத பாதை தெளிவானபோது</span>
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி
கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் நுளைந்தனர்.விடுதியின் பொறுப்பாளர் சாந்தி உங்கடை பேருக்கு ஒருகடிதம் வந்திருக்கு என்றவாறு ஒருகடிதத்தை கொடுத்தார். அவசரமாக அக்கடிதத்தை பிரித்த சாந்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை அம்மா பிரான்ஸ் எம்பசியிலை இருந்து ஸ்பொன்சர் கடிதம் வந்திருக்கு எம்பசிக்கு விசாவுக்கு வரசொல்லியிருக்கு
சந்தோசத்தால் துள்ளி குதித்தாள்.
அப்பனே பிள்ளையாரே அம்மாளாச்சி ஒருமாதிரி ஒருவருசமா காத்திருந்த பலன் கிடைச்சிட்டுது அவளின் தாயார் ஊர் தெய்வத்தையெல்லாம் அழைத்து நன்றி சொல்லிவிட்டு பிள்ளை அப்பாக்கு உடைனை ரெலிபோன் அடிச்சு தங்கச்சியையும் கூட்டிகொண்டு உடைனை வரச்சொல்லு பிள்ளை அவர்வந்தால்தான் உந்த பயண ஒழுங்குகள் செய்யலாம்.
உன்ரை பிரச்சனை முடிஞ்சுதெண்டால் அடுத்தவருசம் உன்ரை தங்கச்சியையும் படிப்பை நிப்பாட்டிபோட்டு எங்கையாவது உன்னை மாதிரி ஒரு வெளி நாட்டிலை கட்டி குடுத்திட்டனெண்டால் நிம்மதி.கடைசி காலத்திலை நானும் கொப்பரும் நிம்மதியா இருக்கலாம். என்று ஒரு சராசரி அம்மாவின் எதிர் பார்ப்புக்களே அவளின் தாயாருக்கும்.
சாந்தி தந்தைக்கு விபரங்களை தெலைபேசியில்சொல்லி விரைவில் வருமாறு சொல்லியிருந்தாள்.
கட்டுநாயக்கா விமான நிலையம்
சந்தோசமா துக்கமா எனசொல்லமுடியாத ஒருவித இரண்டும்கலந்த நிலையில் சாந்தியின் குடும்பம் விமானநிலையத்தில். பிள்ளை போய் சேந்ததும் உடைனை ரெலிபோன் எடு பிள்ளை நாங்களும் நிம்மதியா ஊருக்கு போய்சேந்தஉடைனை கன நேத்திகடன் இருக்கு அதைவிட கன கோயிலுக்கும் நீ சுகமா போய் சேந்ததும் பொங்கிறதெண்டு வோறை நேந்தனான்.
எல்லாம் செய்து முடிக்கவே ஒருமாதமாகும்.
என்று சாந்தியின் தலையை தடவியபடி தாயின் கரிசனை .
பிள்ளை மருமகனை சுகம் கேட்டதா சொல்லு பிள்ளை போற இடத்திலைதெரியாத ஊர் தெரியாத ஆக்கள் ஏதும் சின்ன சின்ன பிரச்சனையள் வரப்பாக்கும் நீதான் புத்திசாலித்தனமா சமாளிச்சு நடக்க வேணும். என்று தந்தையின் அறிவுரை. அக்கா அத்தானை கேட்டதா சொல்லு முடிஞ்சா என்னையும் கூப்பிட சொல்லு நான் அங்கை வந்து படிக்கபோறன் இஞ்சையிருந்தா அம்மா கலியாணம் கட்டி வைச்சிடுவா என்று தங்கையின் சிணுங்கல் இப்படியெல்லாம் முடிய சாந்தியை சுமந்தவாறு ஏயாலங்கா விமானம் வானில் கிளம்பியது
விமானத்திலிருந்தவாறு சாந்தி தனது கணவன் ரவியின் நினைவுகளை கொஞ்சம் மீட்க தொடங்கினாள்.
இப்பமாதிரியிருக்கு ஒருவருசமாச்சு திருமணம் நடந்து. ஊரில் சாந்தியின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் தந்தை ஒரு யாழ் நவாலியிலை தமிழ் வாத்தியார் தமிழ் வாத்தி தம்பையா எண்டால் ஊரிலை எல்லாருக்கும் தெரியும் அவர் காசு பணத்தை விட ஊரில் நல்ல பெயரையே அதிகம் சம்பாதித்து வைத்திருந்தார்.
சாந்தி படித்து விட்டு மேலதிக படிப்பிறகாய்: பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்த போதே உறவினர் ஒருவரால் சாந்திக்கு ரவியை திருமணம் செய்ய ஒழுங்குகள் செய்ய பட்டது.வழைமையான் குறிப்பு சாதகம் எண்டு எல்லாம் பாத்து நல்ல பொருத்தம் என்றதன்பின்னரே சாந்திக்கு விடயம் தெரியும் சாந்திக்கு மேலே படிக்கதான் ஆசை ஆனால் கலியாணம் பேசி வந்த உறவினரோ வெளி நாட்டு சம்பந்தம் பெடியன் நல்ல பெடியன் வீட்டு காரர் சீதனம் கூட பெரிசா எதிர் பாக்கேல்லை சந்தர்ப்பத்தை தவற விட்டிடாதேங்கோ எண்டு வற்புறுத்த சாந்தியின் குடும்பமும் சாந்தியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டனர்.
சாந்திக்கு ரவியின் படமும் காட்டப் பட்டது பாக்க வடிவாதான் இருந்தான்.குறுகிய காலத்திலேயே திருமண நாளும் குறித்து ரவிக்கும் சாந்திக்கும் இந்தியாவில் திருமணம் நடந்தது.இரண்டு வாரத்தில் ரவி பிரான்ஸ் திரும்பிவிட சாந்தி கொழும்பு திரும்பி பரான்ஸ் விசாவுக்காக ஒரு வருடங்கள் காத்திருந்து இன்று இதோ விமானத்தில்.
விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது
அடுத்த பாகத்தில் புதிய திருப்பங்களுடன் தொடரும்
அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம்
<span style='font-size:25pt;line-height:100%'>தெரியாத பாதை தெளிவானபோது</span>
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி
கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் நுளைந்தனர்.விடுதியின் பொறுப்பாளர் சாந்தி உங்கடை பேருக்கு ஒருகடிதம் வந்திருக்கு என்றவாறு ஒருகடிதத்தை கொடுத்தார். அவசரமாக அக்கடிதத்தை பிரித்த சாந்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை அம்மா பிரான்ஸ் எம்பசியிலை இருந்து ஸ்பொன்சர் கடிதம் வந்திருக்கு எம்பசிக்கு விசாவுக்கு வரசொல்லியிருக்கு
சந்தோசத்தால் துள்ளி குதித்தாள்.
அப்பனே பிள்ளையாரே அம்மாளாச்சி ஒருமாதிரி ஒருவருசமா காத்திருந்த பலன் கிடைச்சிட்டுது அவளின் தாயார் ஊர் தெய்வத்தையெல்லாம் அழைத்து நன்றி சொல்லிவிட்டு பிள்ளை அப்பாக்கு உடைனை ரெலிபோன் அடிச்சு தங்கச்சியையும் கூட்டிகொண்டு உடைனை வரச்சொல்லு பிள்ளை அவர்வந்தால்தான் உந்த பயண ஒழுங்குகள் செய்யலாம்.
உன்ரை பிரச்சனை முடிஞ்சுதெண்டால் அடுத்தவருசம் உன்ரை தங்கச்சியையும் படிப்பை நிப்பாட்டிபோட்டு எங்கையாவது உன்னை மாதிரி ஒரு வெளி நாட்டிலை கட்டி குடுத்திட்டனெண்டால் நிம்மதி.கடைசி காலத்திலை நானும் கொப்பரும் நிம்மதியா இருக்கலாம். என்று ஒரு சராசரி அம்மாவின் எதிர் பார்ப்புக்களே அவளின் தாயாருக்கும்.
சாந்தி தந்தைக்கு விபரங்களை தெலைபேசியில்சொல்லி விரைவில் வருமாறு சொல்லியிருந்தாள்.
கட்டுநாயக்கா விமான நிலையம்
சந்தோசமா துக்கமா எனசொல்லமுடியாத ஒருவித இரண்டும்கலந்த நிலையில் சாந்தியின் குடும்பம் விமானநிலையத்தில். பிள்ளை போய் சேந்ததும் உடைனை ரெலிபோன் எடு பிள்ளை நாங்களும் நிம்மதியா ஊருக்கு போய்சேந்தஉடைனை கன நேத்திகடன் இருக்கு அதைவிட கன கோயிலுக்கும் நீ சுகமா போய் சேந்ததும் பொங்கிறதெண்டு வோறை நேந்தனான்.
எல்லாம் செய்து முடிக்கவே ஒருமாதமாகும்.
என்று சாந்தியின் தலையை தடவியபடி தாயின் கரிசனை .
பிள்ளை மருமகனை சுகம் கேட்டதா சொல்லு பிள்ளை போற இடத்திலைதெரியாத ஊர் தெரியாத ஆக்கள் ஏதும் சின்ன சின்ன பிரச்சனையள் வரப்பாக்கும் நீதான் புத்திசாலித்தனமா சமாளிச்சு நடக்க வேணும். என்று தந்தையின் அறிவுரை. அக்கா அத்தானை கேட்டதா சொல்லு முடிஞ்சா என்னையும் கூப்பிட சொல்லு நான் அங்கை வந்து படிக்கபோறன் இஞ்சையிருந்தா அம்மா கலியாணம் கட்டி வைச்சிடுவா என்று தங்கையின் சிணுங்கல் இப்படியெல்லாம் முடிய சாந்தியை சுமந்தவாறு ஏயாலங்கா விமானம் வானில் கிளம்பியது
விமானத்திலிருந்தவாறு சாந்தி தனது கணவன் ரவியின் நினைவுகளை கொஞ்சம் மீட்க தொடங்கினாள்.
இப்பமாதிரியிருக்கு ஒருவருசமாச்சு திருமணம் நடந்து. ஊரில் சாந்தியின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் தந்தை ஒரு யாழ் நவாலியிலை தமிழ் வாத்தியார் தமிழ் வாத்தி தம்பையா எண்டால் ஊரிலை எல்லாருக்கும் தெரியும் அவர் காசு பணத்தை விட ஊரில் நல்ல பெயரையே அதிகம் சம்பாதித்து வைத்திருந்தார்.
சாந்தி படித்து விட்டு மேலதிக படிப்பிறகாய்: பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்த போதே உறவினர் ஒருவரால் சாந்திக்கு ரவியை திருமணம் செய்ய ஒழுங்குகள் செய்ய பட்டது.வழைமையான் குறிப்பு சாதகம் எண்டு எல்லாம் பாத்து நல்ல பொருத்தம் என்றதன்பின்னரே சாந்திக்கு விடயம் தெரியும் சாந்திக்கு மேலே படிக்கதான் ஆசை ஆனால் கலியாணம் பேசி வந்த உறவினரோ வெளி நாட்டு சம்பந்தம் பெடியன் நல்ல பெடியன் வீட்டு காரர் சீதனம் கூட பெரிசா எதிர் பாக்கேல்லை சந்தர்ப்பத்தை தவற விட்டிடாதேங்கோ எண்டு வற்புறுத்த சாந்தியின் குடும்பமும் சாந்தியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டனர்.
சாந்திக்கு ரவியின் படமும் காட்டப் பட்டது பாக்க வடிவாதான் இருந்தான்.குறுகிய காலத்திலேயே திருமண நாளும் குறித்து ரவிக்கும் சாந்திக்கும் இந்தியாவில் திருமணம் நடந்தது.இரண்டு வாரத்தில் ரவி பிரான்ஸ் திரும்பிவிட சாந்தி கொழும்பு திரும்பி பரான்ஸ் விசாவுக்காக ஒரு வருடங்கள் காத்திருந்து இன்று இதோ விமானத்தில்.
விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது
அடுத்த பாகத்தில் புதிய திருப்பங்களுடன் தொடரும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->