shanthy Wrote:[quote=AJeevan]quote="AJeevan"]<span style='font-size:23pt;line-height:100%'>அம்மா, குழந்தைக்கு பக்கத்தில் இருந்தால் முடிந்ததை உதவலாம்.
ஆனால், பக்கத்திலயே இல்லாத அம்மாவானால், அவருக்கு நடப்பதை, எந்தக் குழந்தையால் தடுக்க முடியும்?</span>
செவிடன் காதுகளில் சங்கு..........சங்கு................?????
பக்கத்திலிருக்கும் அம்மாவைத்தானே சாகடிக்க நிற்கிறது கருத்து. பிள்ளைக்குத் தன்னை அம்மா அடித்த கோபத்தை மனதில் வைத்துத்தான் இப்படிக் குதறியெறிய நினைக்கிறது.
செவிடன் காதில் சங்கூதுவதாக நினைத்து ஒழுங்கான காதுகளையல்லவா செவிடாக்க முனைகிறது நிலமை.
புலம் பெயர் கலைஞர்கள் பங்கு கொண்ட சில குறும்படங்கள் (குழந்தைகள்) இணையத்தில் வந்த போது ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள்,
இப்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வேற்று தயாரிப்புகளோடு வாழும் தொலைக்காட்சிகளுக்காக பேச வந்தது வியப்பாக இருக்கிறது?
ஐரோப்பாவில் முதல் தமிழ் தொலைக் காட்சியாக TRT தமிழ் ஒலி-ஒளி ஆரம்பமான போது
ஒரு சதமும் வாங்காமல் எனது சொந்த பணத்திலும், உழைப்பிலும்
(என்னோடு பணியாற்றியவர்கள் உழைப்பும் இங்கு உண்டு.இவர்களது சேவையும் இலவசம்.)
வாரா வாரம் சுவிஸ் நேரம் என்ற நிகழ்ச்சியை சுவிஸ் கலையகம் (இது எனது கலையகம்) என்ற பெயரில் தயாரித்து வழங்கி வந்தேன்.
தவிர சிறிது காலம் சுவிஸ் செய்திகளை TRT தமிழ் ஒலிக்காக இரவுகளில் வழங்கினேன்.
சுவிஸ் நேரம் வழி புலத்தில் உள்ள கலைஞர்கள் மக்கள் மற்றும் கலை-இயல்-இசை- இயக்க நிகழ்வுகளைக் கூட எதுவித பக்க சார்புமற்று செய்து வந்தேன்.
இது சுவிஸில் மட்டுமல்ல ஐரோப்பாவில் பெரும் பாலானவர்களுக்கு தெரியும்.இப்படியே தொடர முடியாத நிலை, சொல்லி விட்டு நின்று விட்டேன்.
சிறிது காலத்துக்கு பின்னர் TRT சில பிரச்சனைகளால் கை மாறியது. (இது எனக்கு தேவையில்லாத விடயம்.)
நான் ஒரு சாராருக்காக வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு கலைஞன். கலைஞன் அனைவருக்கும் பொதுவானவன்.
நான் அரசியல்வாதியல்ல.என் நண்பர்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.நான் அனைத்து ஊடகங்களுக்கும் செல்வதுண்டு.அவர்களுக்கு என்னைத் தெரியும்.அதனால் பலருக்கு நான் பிடிவாதக் காரணாகத் தெரிவதுண்டு.அது பிடிவாதமல்ல, எனது கொள்கை.
நான் ஒன்றை மட்டுமே சொல்வேன். புலத்தில் இருக்கும் எந்த ஊடகத்துக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. இவற்றின் மேல் பழி போடுவதல்ல எனது நோக்கம். புலத்தில் எத்தனை ஊடகம் வந்தாலும் அது நல்லது. உலக வளர்ச்சியை எமது தன்னலத்துக்காக சேறு பூசுவது ஒரு போதும் நியாயமாகாது.
எந்த ஊடகம் நல்ல படைப்புகளை செய்கிறதோ அது நிலைக்கும். அது யாராக இருந்தாலும்.
தொலைக் காட்சி வந்த போது சினிமா அழியும் என்றார்கள் அது அழியவில்லை.அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒருபடிதான்.
வருந்தும் இதயங்களே,
புலத்திலுள்ள கலைஞர்களுக்கு,
இவர்களில் எவராவது பணம் கொடுத்து எதையாவது (படைப்புகளை) வாங்குவதுண்டா என்று கேளுங்கள்?
இல்லை கொஞ்சமாவது கொடுக்க நினைத்துதாவது உண்டா என்று கேளுங்கள்?
எமது கலைஞர்களுக்கு கொடுக்க இல்லாதது , ஏனையவர்களுக்கு கொடுக்க மட்டும் எங்கிருந்து வருகிறது?
எமது கலைஞர்கள் வாழ்வதற்கும் பொருளாதாரம் வேண்டும்.
செடிக்கு பசளையும், தண்ணீரும் தேவை. அது இல்லாது செடி தொடர்ந்து அழகாக காட்சி தராது.
வாடிப் போன செடிகள் புலத்தில் அதிகம்.
<span style='font-size:25pt;line-height:100%'>யோசிப்பார்களா? </span>
சாப்பிட்டது எப்படியாவது வெளியாக வேண்டும்.அது இப்போது வாந்தியாக வரத் தொடங்கியிருக்கிறது.
__________________________________அஜீவன்
(மு.கு:- நான் லண்டன் புறப்படுவதால், மீண்டும் வரும் வரை நான் யாழைப் பார்க்க முடியாது.நன்றி , வணக்கம்.)