Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சரி இங்கே கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களைத் தொகுத்தால் நாங்கள் பின்வரும் ஒத்த கருத்துக்களைக் கூறலாம?
1)பிராமணியம் தமிழருக்கு எதிராக வேலை செய்கிறது.
2)இதனை முன் நின்று நடத்துபவர்கள் இந்திய பிராமணீய சக்திகள்.இவர்களை நாங்கள் புலத்திலும்,இணயத்திலும் அடயாளம் காட்ட வேண்டும்,புறக்கணிக்க வேண்டும்.
3)ஈழத்துப் பிராமணர் அவ்வாறான நிலைப் பாட்டை எடுக்கவில்லை,அரசியற் சக்தியாக இல்லாத அவர்கள் ,ஈழ விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
4)ஆகவே எமது பிராமணிய எதிர்ப்பு என்பது தனி நபர்களை அல்லாமல்,இந்திய பிராமணியத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.
5)பிரீத்தி சொல்வதை போல் ஈழத்துப் பிராமணர் யாராவது இருந்தால் அவர்கள் அடயாளம் காட்டப் பட்டு தனிமைப் படுத்தப் படலாம்.
6)தமிழ் தேசியத்திற்கு சமய அடயாளம் கிடயாது.அது தமிழரை முன் நோக்கியே அழைத்துச் செல்வது.தமிழர் என்கின்ற அடயாளத்திற்கு சமய அடயாளம் கிடயாது.இசுலாமியரும்,கிரித்துவரும்,இந்துவோ ,சைவரோ தமிழரே.
7)சாதிய ஒடுக்குமுறைகளோ,பெண்ணிய அடக்குமுறைகளோ தமிழ் தேசியத்திற்கு கிடயாது.அவ்வறு கூறும் கருத்தியல்கள் அவை சமய சார்பானவயாக இருந்தாலும் அவை அகற்றப் பட வேண்டியவை.
8)எமது வரலாற்றை நாம் அறிவது நலம், ஆனால் எமது தமிழ் தேசியம் நோக்கிய பார்வை முன் நோக்கியதாக 22 ஆம் நூற்றாண்டை நோக்கியதாக இருக்க வேண்டும்.
9)சேர ,சோழ அரசுகளை மீண்டும் நிறுவுவது அல்ல எமது தேசியம்,அது 22 ஆம் நூற்றாண்டிற்கான தமிழர் தேசத்தை நிறுவுவதயே இலக்காகக் கொண்டது.
10)இந்தக் கனவை நனவாக்க வேற்றுமைகளைக் களைந்து ஒன்று பட்டு போராடுவோம்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
sinnakuddy Wrote:வால்மிகி ராமாயாணத்தில் சொல்லப்பட்டிருக்கு விந்தியமலைக்கு தெற்க்கு பக்கத்திலுள்ளவர்கள் கட்டையான கறுப்பான குரங்கு கூட்டவத்தவர் வாழ்கிறார்களென்று...இன்றும் வெள்ளைநிற அல்ல பழு்ப்பிற பிராமணிய நினைப்புள்ள கூட்டத்துக்கெல்லாம் இருக்கிறது கிட்லர் சொன்ன நீலகண் ஆரியமனப்பான்மை... இந்து சமுத்திரத்துக்குள்ளை தமிழ் தேசிய வாதத்துக்கு முதல் எதிரி இந்திய ஆரிய பார்ப்பனியம் தான்.. சிங்கள பேரினவாதமல்ல...
சின்னக்குட்டி வான்மீகியோ ராமாயணம் என்பது ஒரு சுவையாகக் கூறப்பட்ட கட்டுக்கதை...... ஆரியனின் படை எடுப்பு எப்பபோதோ எற்படுட்டது போன்றமாயை எற்புடுத்ததான் ... இது இயற்றப்பட்டது.. திராவிடனைக் குறுகச்செய்வதற்காக.. அதன் பாத்திரப் படைப்புகள் அப்பிடி அமைத்தான் வான்மீகி...... ஒரு திருடன் வான்மீகி எழுதிய கதை அப்படித்தானே இருக்கும்.....
இதில தென்னகத்தவன் <b>குரங்கு மட்டும் அல்ல</b>... அதையும் தாண்டி <b>இலங்கையில் இருப்பவன்... அரக்கனாம் </b>(இராவணன்) எமது சக்திவளிபாடு குறை சொல்வதாய் சொல்லப் பட்டது <b>இராவணன் சிவ பக்தன்... </b>
இந்த கதையை உதாரணத்துக்கு எடுக்காதேங்கோ..
அதை விட ஆரியப் படை எடுப்பு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான்... பௌத்தமும் வந்தது... (ஆரிய மன்னன் பிந்துசாரன் காலத்தில்) ஆரியம், பௌத்தம் இரண்டையும் பிரித்துப் பார்ப்பது நேர விரயம்..
::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>"<<<எதை எங்க ஆரம்பித்து தேடுவது... எப்படி நாம் தொலைத்ததை மீட்பது.. பார்பணனத் திட்டுவதால் எல்லாம் கிட்டுமா????>>>"</b>
<b>பார்ப்பனத்திலுள்ள அளவு கடந்த பற்றினால் வரலாற்றையே மாற்றி எழுத முயற்சிக்கும் மாவீரர்கள் இங்கு பலர், ஒரு சில பார்ப்பான்களுடன் இவர்கள் கொண்ட நட்புக்காக பார்ப்பான்களின் அழுக்கை மறைக்கத் துடிக்கும் இவர்கள் தமிழீழத்தின் அடுத்த கதிர்காமர்கள்.</b>
ஆரியன்கள் தமிழர்களைப் பிரித்ததையும், தமிழர்களைத் தாழ்ந்தவ்ர்களாக்கியதையும், பிராமண சாணக்கியத்தையும், அவ்ர்கள் தமிழர்களின் சமயத்தை திரித்து, வேதங்களைத் தொடர்பு படுத்தியதையும், தமிழனின் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் திரிந்து, அவற்றைச் சமஸ்கிருதமயாக்கி, அவைக்கொரு கட்டுக் கதைகளையும் இயற்றி, பல வடமொழி முனிவர்களின் பெயர்களைத் தொடர்பு படுத்தி, உதாரணமாக தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி, ஒரு பரதமுனிவரைத் தொடர்பு படுத்தியது, இவை போன்ற ஆரியர், தமிழருக்குச் செய்த துரோகங்களை ஒப்புக் கொண்டு விட்டு,<b> "எந்தப் படை எடுப்பும் மாற்றாததை திராவிடனில் இருந்து மாற்றியது இந்த ஆரியப் படை எடுப்பு" </b>என்பதையும் தன் வாயால் சொல்லிவிட்டு,
<b>"இப்ப பிராமணனைத் திட்டுவதால் எதுவும் திரும்பிவரப்போவதில்லை....."</b> என்ற அருள்வாக்கையும் உதிர்க்கிறவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
ஈழத்து அண்ணைமார்களே! பிராமணர்கள் தான் இன்றும் வாய்க்கு வாய் தாங்கள் <b>ஆரியர்</b> என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். <b>எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அவர்கள் இன்றும் ஆரியர் தான்,</b> அவர்கள் என்ன தான் கறுப்பாக இருந்தாலும், தமிழர் அல்லது திராவிடரில்லை என்பதில் அவர்களுக்குப் பெருமை. அதனால் பார்ப்பான்களைத் திட்டுவதில் என்ன பிழை?
நான் இன்றும் பார்ப்பான்கள் எந்த நாட்டிலிருந்தாலும், தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற துரோகங்களை எடுத்துரைக்க, அதைப்பற்றி விவாதிக்க இந்த விடயத் தலைப்பைத் தொடங்க, இங்கு ஒரு சிலர் ஒரு முந்திரிக்கொட்டை மாதிரி, அவர்களின் நண்பர்களுக்காக இந்த விடயத்தைத் திசை திருப்புகிறார்கள். உண்மையிலேயே ஈழத்திலுள்ள ஓரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பான்களைப் பற்றி மட்டும் கதைக்க விரும்பினால் இந்த விடயத்தின் தலைப்பை "பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா என்றில்லாமல்
'ஈழத்துப்பிராமணர்' என்றுபோட்டிருப்பேன்.
நான் இதையும் எங்கோ படித்த ஞாபகம். "சோழர்கள் எல்லோரும் வேளாளர்கள், அவர்கள் தான் பார்ப்பான்களைப் பெருமளவில் தமிழ் மண்ணில் குடியேற ஊக்குவித்தவர்கள். நாயன்மார் காலத்தில் வேளாளரும், பிராமணரும் இணைந்து பெளத்தத்தையும், சமணத்தையும் எதிர்த்தார்கள். அதனால் தான் 63 நாயன்மார்களில் பெரும்பாலானோர், வேளாளரும், பிராமணருமாகும். ஆனால் சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பரதேசிப் பார்ப்பான்கள், சில சலுகைக்களுக்காக படையெடுத்து வந்த துருக்கர்களுடனும், தெலுங்கர்களுடனும் பந்தம் பிடித்துக் கொண்டு, இவ்வளவு காலமும் அவர்களைப் பராமரித்த சோழ வேளாள சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அதனால் அன்னியர்களின் துன்பத்திலிருந்து தப்ப பல வேளாளர்கள் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஓடினார்கள். அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் சைவத் தமிழர்கள் இருந்தமையும், அவ்ர்களின் ஆதரவும் பெருமளவு குடியேற்றத்துக்கு இலகுவாக இருந்தது. அதனால் தான் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் இன்றும் அதிகம். பார்ப்பான்களின் துரோகத்தையறிந்த யாழ்ப்பாண வேளாளர் ( அல்லது வெள்ளாளர்), எந்தக் கோயிலையோ, அதிகாரத்தையோ பார்ப்பான்களுக்குக் கொடுக்கவில்லை. அவர்கள் பார்ப்பான்களை வெறும் கோயில் வேலைக்காரர்களாக, மூலத்தானத்துக்கும், மடப்பள்ளிக்குமிடையில் மட்டும் நடக்க விட்டு விட்டுக் கோயில் திறப்புக் கோர்வையைத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அத்ற்கு எதிர் மாறாக, கோயிலைக் கட்டிய தமிழர்கள் வெளியே நின்று கொண்டு, திறப்பைப் பார்ப்பான்களிடம் கொடுத்து விட, அவர்கள் கோயில் சொத்துக்களை அப்படியே "ஸ்வாஹா" பண்ணி விட்டார்கள். அதை விட 1000 வருடங்களுக்கு மேல் அன்னியராட்சி தமிழ் நாட்டுத் தமிழர்களை ஒன்றுமில்லாதவராக்கி , பார்ப்பான்களும்,. தெலுங்கர்களையும் தமிழ் நாட்டில் நிலச்சசுவாந்தாரர்களாக்கி விட்டது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் பிராமணர் போன்று நடந்து கொண்டமை வேறு விடயம், இங்கு அதைப்பற்றி விவாதிப்பதல்ல என்னுடைய நோக்கம்.
<b>'தலா' சொல்லுவது போல் பார்ப்பான்கள் தமிழிலும், தமிழரின் முதுகில் குத்துவதையும் இன்னும் நிறுத்தி விடவில்லை. இன்றும் தொடர்கின்றார்கள்.
ஆரியபபடையெடுப்புக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும், தமிழ் பேசும் பார்ப்பான்கள் இன்றும் தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் செய்தால் எங்களுக்கென்று யாராவது சொன்னால் அவர்கள் தான், மிகப் பெரிய தமிழ்த்துரோகிகள். தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் தான். தமிழ்நாட்டுத் தமிழரின் அவமானம், தமிழ்நாட்டில் தமிழுக்குப் பார்ப்பன்கள் செய்யும் துரோகம், எங்களின் மனதை நோகச் செய்யாது விட்டால் நாங்கள் தமிழரல்ல. எங்களின் ஒரு சிலரின் தனிப்பட்ட நட்புக்காக, அல்லது ஒரு சில பார்ப்பான்களின் தமிழுணர்வுக்காக, எல்லா "ANTI TAMIL" பார்ப்பான்களையும் நாம் மன்னித்தோமென்றால் நாம் தமிழரல்ல. என்னைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிராமணர், இந்தியப் பிராமண்ர் என்று வேறுபாடு கிடையாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். </b>
இன்று தங்களையும் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் யாழ்ப்பாண வெள்ளாளக் குருக்களைத் தவிர, எல்லா ஈழத்துப் பிராமண்ர்களும் தமிழ்நாட்டுப் பிராமணருடன் இன்றும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு, அதிகாரம் இல்லையென்பதால் தமிழீழத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கனடாவில் நாங்கள் இவர்கலைச் சொந்தமாகக் கோயில் வைத்திருக்க விட்டு விட்டு, 'ஞே' என்று எருமைகள் மாதிரி சும்மா, ஆதரவு கொடுப்பதால் தான், , தங்களின் கோயில்களில் இவர்கள் தங்களின் ஆரிய, anti tamil, அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு தான், கனடா, மொண்றியால் கோயிலில் கும்பாபிஸேகம் என்பதைத் தமிழில் குடமுழுக்கு என்று போட்டதால அந்தக் கோயில் பார்ப்பான் குடமுழுக்குச் செய்ய மறுத்தமை. இவர்களின் குணம் அறிந்து தான் எங்களின் ஈழத்தமிழ் முன்னோர், எங்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் போல் இருந்து விடாமல், பார்ப்பான்களுக்கு ஈழத்தில் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. எந்தக் கோயிலையும் அவர்களுக்குச் சொந்தமாக விடவில்லை.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை. ஈழத்தில் இருக்கும் பிராமணர்கள் நம்முடன் இணைந்து வாழ்பவர்கள். இந்த பிராமண அல்லது பார்பனிய வாதம் ஈழத்திற்கு பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படியோ இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் நமது ஈழத்து பிராணமண சகோதரர்களின் மனதை புண்படுத்தாமல் பார்த்துகொள்ள வேண்டும். தலைப்பை முழுவதுமாக படித்துவிட்டு மிகுதி கருத்தை எழுதுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
சோழர்காலத்தில் வடக்கத்திய பிராமணர்களுக்கு நில பட்டுவடா செய்தார்களும் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பட்டபகுதியில் நிலத்தைப்பெற்றுக்கொள்ள ஆகக்குறைந்தளவு பிராமணக்குழு வை காட்டவோண்டும். அப்படியில்லாத பட்சத்தில் வெள்ளாளர்களை தங்களிலொரு பிரமாணனாக போலியாக குடமுழுக்கு செய்து நிலத்தை பெற்றுக்கொண்டார்களாம் அது தான் தமிழ் நாட்டில் பிற்க்கால அக்கிரக்கார பகுதிகளாக மாறின
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
piriithi Wrote:நான் இன்றும் பார்ப்பான்கள் எந்த நாட்டிலிருந்தாலும், தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற துரோகங்களை எடுத்துரைக்க, அதைப்பற்றி விவாதிக்க இந்த விடயத் தலைப்பைத் தொடங்க, இங்கு ஒரு சிலர் ஒரு முந்திரிக்கொட்டை மாதிரி, அவர்களின் நண்பர்களுக்காக இந்த விடயத்தைத் திசை திருப்புகிறார்கள். உண்மையிலேயே ஈழத்திலுள்ள ஓரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பான்களைப் பற்றி மட்டும் கதைக்க விரும்பினால் இந்த விடயத்தின் தலைப்பை "பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா என்றில்லாமல்
'ஈழத்துப்பிராமணர்' என்றுபோட்டிருப்பேன்.
பீரீதி இதுக்கு காகவென்றால் யாழ்கலத்தை விட்டு நீர் ஒரு தனியான தளத்த ஆரம்பித்து அழும்... உகந்தவர் பால் கொண்டு வந்து தருவினம்... அதுக்கு முதல்ல நீர் கோயிலுக்கு போவத நிறுத்தும் (கிழவி கதை சொன்னீர் அந்தக் கோயில்)
உமது மனநோய்க்கு யாழ்களமா மருந்து ஆகாது.... பந்திபந்தியாய் எழுதினாலும் நீர் சொல்வது <b>இன வெறி </b>... சிங்களவன் உமக்குச் செய்வதை நீர் பார்பணனுக்கு செய்வன் எண்டால் உமக்கும் சிங்களவணுக்கும் என்ன வித்தியாசம்... உம் வாதம் சரியானால்... சிங்களவன் செய்வதும் சரிதான்...
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ஆரியர் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் சிலர் இங்கு மற்றயவரை தூற்றி தனது <b>இனவெறியை</b> யாழ்களத்தில தணிப்பது.. துன்பியலானது கேள்வி ஞானத்தில் ஆரியன் எல்லாம் பார்ப்பணன் எண்று சொல்லும் போது இங்கு அறிவுசார்வார் அதைத் திருத்தாமல் மௌனமாய் இருப்பது... வேதனையானது.... இங்கு தான் எழுதிய தலைப்பு தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பது வேடிக்கை ஆனதும் கூட ... இங்கு தலைப்பில் இனவெறியைக் கக்குபவர் தன்னை தமிழன் எண்று சொன்னாலும்... வடமொழிக்கலப்பற்ற தமிழ் அவருக்கு வராது... இப்ப அது அல்லப் பிரச்சினை... <b>ஆரியன் எல்லாம் பிராமணனா????</b>.. அறிவுசார் மக்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள்... அப்படியானால்... எனது மேலதிக கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்...
[b]ஆரிய வல்லரசை (சாம்ராட்ஜத்தை) உருவாக்கிய சந்திரகுப்த மௌரியன்... பிராமணனா???
அவனின்... தலை முறை சாதித்தது என்ன???....
மௌரிய வளி இளவரசன்(புத்தர்) சித்தார்த்தன் பிராமணனா????...
அப்போ வைசியர், (ஷுத்திரிரர்) சத்திரியர், அந்தணன் எல்லாம் ஆரிய மக்கள் இல்லையா????
ஆரியர் வல்லரசு (சாம்ராட்ஜம்) எப்படி அழிந்து போனது
இதற்கு விடை தேடுங்கள்... உங்களுக்கே பதில் புரிபடும்... இல்லாவிட்டால் நானே பதில் அளிக்கிறேன்..
சில ஞான சூனியங்களுக்கு தங்களை அறிஞர் என்பதற்கு முன் அது சம்பந்தமாய் அறிவை வளர்ப்பது நல்லது... கேவலப்படுவதையாவது தவிர்க்கலாம்..
தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...
::
Posts: 52
Threads: 6
Joined: Jul 2005
Reputation:
0
தலா... குருவி மற்றும் ...... ப்ருத்தியின் கருத்தை மேலோட்டமாக வசித்து விட்டு பு;ருத்தியின் கருத்தை திசைதிருப்ப எண்ணுவோரே!! தயவு செய்து மறுபடி ஒரு முறை அவரின் கருத்தை படியுங்கள். பின்பு ஒரு ஒறை மத hPதியாக சிந்தியுங்கள் ஓரு முறை அரசியல் hPதியாக சிந்தியுங்கள் ...ஓரு முறை சமுதாய முன்னேற்றமாக சிந்தியுங்கள். பின்பு உங்களுக்கு ஒரளவு ப்ருத்தியின் கருத்து புரியும்.... அதன் பிறகு உங்கள் கருத்தை எழுதுங்கள்!! நன்றி
I dont hate anyland.....But Ilove my motherland
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Maruthankerny Wrote:தலா... குருவி மற்றும் ...... ப்ருத்தியின் கருத்தை மேலோட்டமாக வசித்து விட்டு பு;ருத்தியின் கருத்தை திசைதிருப்ப எண்ணுவோரே!! தயவு செய்து மறுபடி ஒரு முறை அவரின் கருத்தை படியுங்கள். பின்பு ஒரு ஒறை மத hPதியாக சிந்தியுங்கள் ஓரு முறை அரசியல் hPதியாக சிந்தியுங்கள் ...ஓரு முறை சமுதாய முன்னேற்றமாக சிந்தியுங்கள். பின்பு உங்களுக்கு ஒரளவு ப்ருத்தியின் கருத்து புரியும்.... அதன் பிறகு உங்கள் கருத்தை எழுதுங்கள்!! நன்றி
தந்தை ஈ.வெ.ரா சொல்லாததை ப்ரீதி சொல்லி இருக்கிறார்.. அதுவும் இனவெறியோட சொல்லி இருக்கிறார்.. பிரீதி யைவிட அறிவாளிகள் ஈழத்தில் உள்ளனர்.. அவர்களுக்கு விளங்காததை பிரீதி சொன்னவராக்கும்.. ...
::
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
மருதங்கேணி இங்கே ஒருத்தரும் மேலோட்டமாக இதைப் பாக்காத படியாத்தான் விபரமாக் கேள்வி கேக்கிறம்,பதிலத் தான் காணேல்ல.
ஒரு பொதுக் கருத்தை உருவாக்க வேணும் என்று அவர் உண்மயிலேயே நினைத் தால் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
நாரதா எனது விளக்கத்துக்கு முன் ஈ.வெ.ரா.. எழுதி யிருந்த் <b>ஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை</b> தலப்பிலான கட்டுரை இணைக்கிறன்.. அதில் அவர் யாரைச் சாடுகிரார் வாசித்துப் பாருங்கள்..
<b>பெரியார் பேசுகின்றார்</b>
<b>ஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை</b>
சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ,ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.
அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.
அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.
ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதான÷காசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை டர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.
இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.
எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.
இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அகிலன் என்னத்தை விளக்கப் போறியள்.. ஒரு கொத்து மாவில எவ்வளவு மோதகம் அவிக்கலாம் எண்டா??... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
narathar Wrote:தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
நான் விளக்குவது.... அந்த தமிழ் அறிஞர் பதிலைப் பொறுத்தது....
::
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
ம்ம்...நாரதா அகிலன் போட்ட பொரியாரின் கட்டுரையின் முதல் இரு பத்தியையும் படியுங்கள்.. ஒரு தெளிவு இருக்கிறது...
:::::::::::::: :::::::::::::::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>"<<பீரீதி இதுக்கு காகவென்றால் யாழ்கலத்தை விட்டு நீர் ஒரு தனியான தளத்த ஆரம்பித்து அழும்... உகந்தவர் பால் கொண்டு வந்து தருவினம்... அதுக்கு முதல்ல நீர் கோயிலுக்கு போவத நிறுத்தும் (கிழவி கதை சொன்னீர் அந்தக் கோயில்)>></b>
நீர் பார்ப்பான்களுக்காக இந்த தளத்தில் ஒப்பாரி வைக்கலாம். நான் ஒரு ஈழத்தமிழன் இந்தத் தளத்தில் அழக்கூடாது என்று சொல்லும் உம்மை நினைத்தால் சிரிப்புத் தான வருகிறது. அதே வேளையில் நீர் உண்மையிலேயே ஒரு கலப்பில்லாத தமிழனென்றால், உம்மைப் பார்ப்பான்கள் எந்தளவுக்கு மூளைச்சலவை செய்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது அழுகை வருகிறது. சிரித்துக் கொண்டே அழவா அல்லது அழுது கொண்டு சிரிக்கவா?
அந்தக் கோயிலுக்குப் போவதை நான் நிறுத்தி எவ்வளவோ நாட்களாகி விட்டன. ஆனால் உம்மைப் போன்ற "தமிழர்கள்" இருக்கும் வரை ANTI TAMIL பார்ப்பான்களுக்குக் கொண்டாட்டம் தான், உம்மைப் போன்றவர்களை ஆயுதமாகப் பாவித்து இந்தத் தமிழ்த் தளத்தில் பார்ப்பான்கள் புகுந்து விளையாடுவது போல், எங்குமே அவர்கள் தமிழரை ஏமாற்றுவார்கள். இதைத் தான் பாரதியார் சொன்னார்<b> "ஏமாத்துக்காரனடா பார்ப்பான் அவன் ஏதும் செய்து காசு பெறப்பார்ப்பான்.</b>என்று".
<b>"<<உமது மனநோய்க்கு யாழ்களமா மருந்து ஆகாது.... பந்திபந்தியாய் எழுதினாலும் நீர் சொல்வது இன வெறி ... சிங்களவன் உமக்குச் செய்வதை நீர் பார்பணனுக்கு செய்வன் எண்டால் உமக்கும் சிங்களவணுக்கும் என்ன வித்தியாசம்... உம் வாதம் சரியானால்... சிங்களவன் செய்வதும் சரிதான்...>>"</b>
எனக்கு மனநோய் என்றால் உமக்கு தாழ்வு மனப்பான்மை, வெள்ளைத் தோலாசை (white skin craze). பிராமணர் உம்மை விட உயர்ந்தவர்கள், அவர்களுக்குப் பந்தம் பிடிப்பதில் உமக்கு ஆனந்தம். நீர், அவர்களுக்காக இங்கு போடும் ஜால்ராவைப் பார்த்து அவர்கள் போடும் கைதட்டில் நீர் அப்படியே புல்லரித்துப் போய் விடுகிறீர். எங்களுடைய இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்காகக் கூட நீர் இந்தளவு கூச்சல் போட மாட்டீர்.
நீர் இனவெறி பிடித்தவனில்லையென்றால் எதற்காக சிங்களவர்களை எதிர்க்க வேண்டும். மனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் உம்முடைய மனிதத்தில் சிங்களவருக்கு மட்டும் இடமில்லையா. போய்யா! உம்மைப் போல் எத்தனையோ தாழ்வு மனப்பானமை கொண்ட தமிழ்ப் பந்தங்களை நான் பார்த்திருக்கிறேன்.
<b>என்னைப் பொறுத்தவரையில் சிங்களவர்களை விட, தமிழ்பேசித் தமிழருக்கிடையிலே வாழ்ந்து தமிழரின் முதுகில் குத்தும் பார்ப்பான்கள் ஆபத்தானவர்கள்.</b> என்னுடைய இந்தக் கருத்து ஈழத்துப் பார்ப்பான்களுக்குப் பொருந்தாமலிருக்கலாம், ஏனென்றால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவு, அதிகாரம் குறைவு, உண்மையான உருவத்தைக் காட்ட முடியாது, அடக்கி வாசிக்கத் தான் வேண்டும் இப்போதைக்கு.
<b>ஆனால் இந்தியத்த தமிழ்ப் பார்ப்பான்களால் தான் எங்களுடைய விடுத்லைப் போராட்டத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையென்பத எல்லோருக்கும் தெரியும். கார்கிலில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற முஸாரபை இந்தியா மன்னித்து கிரிக்கெட் விளையாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது, இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களை மன்னித்துப் பிரதமராக்கியும் அழகு பார்க்கிறது. பாக்கிஸ்தானின் பஞ்சாபிலுள்ள சீக்கிய தீவிரவாதிகளைக் கூட மன்னித்து, அவர்கள் பஞ்சாப் மொழியின் மாநாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது. தலிபான்களைக் கூட இந்தியா மன்னித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை அளிக்கிறது ஆனால் ஒரு இந்துத் தமிழன் பிரபாகரனின் தலையை மட்டும் இந்தியா இன்னும் கேட்பதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர் -பார்ப்பான்கள்-. ANTI TAMIL தமிழ்நாட்டுப் பார்ப்பான்களின் பார்ப்பன lobby தான் இதற்கெல்லாம் காரணம். இதனால் நான் ஒரு ஈழத்தமிழன் அவர்களில் வெறுப்பைக் காட்டுவதிலும், அவர்களின் சகோதரர்களான ஈழத்துப் பார்ப்பான்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதிலும் என்ன தவறு?</b>
அது இருக்கட்டும், பார்ப்பான்களுக்காக வாய்கிழியக் கத்தும் நீர் இன்னும், எந்தவொரு பார்ப்பானும்,இந்தியாவிலோ, ஈழத்திலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ கருதுவதில்லையென்பதற்குப் பதிலளிக்கவில்லை.
உம்மில் சரியான பார்ப்பன வாடையடிக்கிறது. என்னுடைய அனுபவத்தில் அவர்களும் அப்படித்தான், மற்றவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலளிக்க மாட்டார்கள். விவாதித்து மறுதலிக்க மாட்டார்கள், அதற்குப் பதிலாக மற்றவர்களை மனநோய், இனவாதம் என்று தாக்குவார்கள் அல்லது இணையத்தள நிர்வாகத்துக்கு அடுத்தடுத்து பல புனை பெயர்களில் அஞ்சல் அனுப்பி அந்த விடயத்தையே மூடச்செய்வார்கள்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>"<<<ஆரியர் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் சிலர் இங்கு மற்றயவரை தூற்றி தனது இனவெறியை யாழ்களத்தில தணிப்பது.. துன்பியலானது கேள்வி ஞானத்தில் ஆரியன் எல்லாம் பார்ப்பணன் எண்று சொல்லும் போது இங்கு அறிவுசார்வார் அதைத் திருத்தாமல் மௌனமாய் இருப்பது... வேதனையானது.... இங்கு தான் எழுதிய தலைப்பு தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பது வேடிக்கை ஆனதும் கூட ... இங்கு தலைப்பில் இனவெறியைக் கக்குபவர் தன்னை தமிழன் எண்று சொன்னாலும்... வடமொழிக்கலப்பற்ற தமிழ் அவருக்கு வராது... இப்ப அது அல்லப் பிரச்சினை... [ப்] ஆரியன் எல்லாம் பிராமணனா????.</b>. அறிவுசார் மக்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள்... அப்படியானால்... எனது மேலதிக கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்...>>>"
அறிவுச்சூரியன் தலா அவர்கள் பிராமணர்களிடம் அவர்கள் ஆரியரில்லை என்று சொன்னால் அவர்களிடம் செருப்படி வாங்குவார். ஆதிசங்கரர் தொடக்கம் இன்றைய சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, சோ ராமசாமி, மட்டுமல்ல எங்களுடைய வரைவர் கோயில் ஐயருக்கும் நினைப்பு, தான் தமிழனில்லை ஆரியன் என்பது. நான் முழு உளுந்துக்கு எண்ணை தடவின மாதிரி இருக்கும் பார்ப்பான்களைத் தமிழ்நாட்டில் சந்திதிருக்கிறேன், அவர்கள் கூடத் தாங்கள் ஆரியர் என்று தான் வாதாடினார்கள்.
<b> ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள்.</b> கீழே நான் தருவது "ஐயர் பிராமணர்களின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website), http://www.bharatavarsha.com/iyer.html அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
<span style='color:blue'>Welcome to the Iyer Heritage Site and the home of the Iyer Heritage Foundation. Here we propose to build an information resource about the history, socio-anthropology, genetics and traditions of the Iyer community of Southern India.
<b>The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture. They have retained this Indo-Aryan legacy for over 5000 years.</b> It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years! Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.
We hope that this site will answer some of the questions you may have about Iyers and their background.</span>
தலா, ஒரு மானமுள்ள தமிழனென்றால் அவர்களின் இணையத்தளத்துக்குத் தன்னுடைய, பிராமணரெல்லாம் ஆரியரில்லை என்ற ஆதாரங்களை முன் வைத்துக் கடிதம் எழுதி அந்தக் கடிதத்தையும் அவ்ர்களின் பதிலையும் இங்கு பதிக்க வேண்டும்.
<b>"<<<தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...>>"</b>
எல்லாப் பார்ப்பான்களும் தமிழரை அண்டிப் பிழைக்கவில்லை. இலங்கையில் இப்படி இருக்கலாம், இதை தலா ஏதாவது இந்திய இணையத் தளத்தில் சொன்னால், தலாவை இந்தியப் பார்ப்பான்கள் இணையத்திலேயே ஒட ஓட அடிப்பார்கள். தமிழன் அழிந்ததும், தமிழ் அழிந்ததும், தமிழ் இன்றும் கேவலப்படுத்தப் படுவதும் பார்ப்பான்களால் என்பதையும் என்னால் தெளிவாக விளக்க முடியும்.
ஐயா, அறிவுச்சூரியனே, உமக்கு ஈழத்தில் தெரிந்த பல்லுப் பிடுங்கிய பாம்புகளான ஈழத்துப் பிராமணரை விட்டு விட்டு, பெரிய ANTI TAMIlL நச்சுப் பாம்புகளான தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரலாற்றைப் படித்து விட்டு இப்படியான Blanket statement ஐ விடும்.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
preethi Wrote:ஆனால் இந்தியத்த தமிழ்ப் பார்ப்பான்களால் தான் எங்களுடைய விடுத்லைப் போராட்டத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையென்பத எல்லோருக்கும் தெரியும். கார்கிலில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற முஸாரபை இந்தியா மன்னித்து கிரிக்கெட் விளையாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது, இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களை மன்னித்துப் பிரதமராக்கியும் அழகு பார்க்கிறது. பாக்கிஸ்தானின் பஞ்சாபிலுள்ள சீக்கிய தீவிரவாதிகளைக் கூட மன்னித்து, அவர்கள் பஞ்சாப் மொழியின் மாநாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது. தலிபான்களைக் கூட இந்தியா மன்னித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை அளிக்கிறது ஆனால் ஒரு இந்துத் தமிழன் பிரபாகரனின் தலையை மட்டும் இந்தியா இன்னும் கேட்பதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர் ?
இந்தியா மன்னிப்பது ? யாரை? எதற்கு ? இதென்ன பிதற்றல்?
நாம் தான் இந்திய இராணுவம் செய்த அக்கிரமத்தை மன்னிப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமேயன்றி இந்தியாவிடம் எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல.
மேலும் இந்தியா தமிழீழத்தை எதிர்ப்பது பிராமண ஆதிக்கத்தால் என்ற உமது பிதற்றல், எமது விடுதலைப்போராட்டத்தை உங்கள் பிராமண எதிர்ப்புக்கு பக்கவாத்தியமாக்க உம்மைப்போன்ற சுயநலவாதிகள் பயன்படுத்தும் விசமத்தனமான பிரச்சாரம்.
இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்த நாடு. அன்னை இந்திரா காந்தி இருந்தவரை தமிழீழத்துக்கு அவர் ஆதரவாக இருந்தார். தமிழீழமும் என்றும் இந்திய ஆதரவு நாடாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். பின்னர் உம்மைப்போன்ற இந்திய விரோதிகள், நீங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளாகளாக காட்டிக்கொண்டு, தமிழ்நாட்டை பிரிப்போம், பிராமணரை ஒழிப்போம், இந்தியாவை இல்லாமல் செய்வோம், என்று கோஷமிட, இந்தியா விடுதலைப்புலிகளை சந்தேகத்துடன் பார்க்கத்தொடங்கியது. இதனால்தான் அவர்கள் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள். உங்களால் தான் தமிழீழத்தை இந்தியா விரும்பவில்லை.
preethi Wrote:-பார்ப்பான்கள்-. ANTI TAMIL தமிழ்நாட்டுப் பார்ப்பான்களின் பார்ப்பன lobby தான் இதற்கெல்லாம் காரணம். இதனால் நான் ஒரு ஈழத்தமிழன் அவர்களில் வெறுப்பைக் காட்டுவதிலும், அவர்களின் சகோதரர்களான ஈழத்துப் பார்ப்பான்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதிலும் என்ன தவறு?
உங்களை விட்டு, உங்கள் பிராமணப்போர், இந்திய எதிர்ப்பு, தமிழ்நாடு பிரிவினை, எல்லாவற்றையும் விட்டு எவ்வளவு து}ரம் நாம் விலகி நிற்கிறோமோ, அவ்வளவுக்கு எங்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும், இந்திய அரசின் எதிர்ப்பும் குறையும். உங்கள் சகவாசமும் வேண்டாம், அதனால் எமது போராட்டத்துக்கு வந்த பாதிப்பும் போதும்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
b]Mr. Jude<b>
[B]இந்தியா மன்னிப்பது ? யாரை? எதற்கு ? இதென்ன பிதற்றல்?
நாம் தான் இந்திய இராணுவம் செய்த அக்கிரமத்தை மன்னிப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமேயன்றி இந்தியாவிடம் எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல.
JUDE போன்ற இந்தியர்கள் , ஈழத்தமிழர்களைப் பப்பாசி மரத்தில் ஏற்றி, நாங்களாக விழுந்து முறியச் செய்பவர்கள். நான் இந்தியாவிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று சொல்லவில்லை. இந்தியா மற்றவர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து, மற்றவர்களிடம் நட்பைப் புதுப்பித்துக் கொள்கிறது ஆனால் எந்த இந்திய அரசும் புலிகளுடனும் பழையதை மறந்து உறவைப் புதுப்பிக்க பார்ப்பான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய வாதம்.
பிரபாகரன் இந்தியா எங்களுடைய தந்தையர் நாடு, ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துரதிர்ஸ்ட வசமான சம்பவம் என்று சொன்னதே இந்தியாவுக்கும் போதும், ஆனால் இந்தியாவின் 3% பிராமணர் 50% பாராளுமன்ற அங்கத்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள், பிராமண ராஜதந்திரிகள் ( Diplamats) தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கிறார்களேயன்றி, இந்திய வெளியுறவு அமைச்சரல்ல.
[b]"எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல." </b>என்று நீங்கள் சொல்வது, ஈழத்தமிழரின் அளவு கடந்த தன்னம்பிக்கையை (over confidence) நக்கல் அடிப்பது போல் தான் தோன்றுகிறது. நாங்கள் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் இந்தியாவுடன், இப்படி நீங்கள் சொல்லுமளவுக்கு மோதுமளவிற்கு முட்டாள்களல்ல. நீங்கள் நிச்சயமாக நக்கலடிக்கிறீர்கள்.
<b>மேலும் இந்தியா தமிழீழத்தை எதிர்ப்பது பிராமண ஆதிக்கத்தால் என்ற உமது பிதற்றல், எமது விடுதலைப்போராட்டத்தை உங்கள் பிராமண எதிர்ப்புக்கு பக்கவாத்தியமாக்க உம்மைப்போன்ற சுயநலவாதிகள் பயன்படுத்தும் விசமத்தனமான பிரச்சாரம்.</b>
பிராமணர்கள் இந்திய அரசியலில் மிகவும் அதிக ஆளுமையும் சக்தியுள்ளவர்கள். இதில் தான் நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் பிராமணியத்தை எதிர்த்தில்லை. என்னுடைய பிராமண எதிர்ப்பு இடையில் வந்தது தான். இந்தியப் பிராமணர், தமிழீழ எதிர்ப்பைக் காட்டி, ஈழத்தமிழர்களை எதிர்க்கத் தொடங்கிய விளைவும், பிராமணரும் தமிழ் வெறுப்பும் தான் என்னுடைய பிராமண எதிர்ப்புக்குக் காரணம்.
என்னைப் போன்ற ஈழத்தமிழ்ர்கள் பிராமண எதிர்ப்புக்கு முன்பே எதற்காக இந்தியப் பிராமணர் தமிழீழத்தை வெறுத்தார்களென்றால், ஆரம்பத்தில் இயக்கங்கள் திராவிட இயக்கங்களுடன் வைத்திருந்த தொடர்புகளால் பிராமணர்கள் ஈழவிடுதலையைத் தங்களுக்கெதிரான திராவிட இயக்கங்களின் தொடர்ச்சி என்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
ஈழத்தமிழர்கள் எப்பொழுதுமே தமிழ்நாட்டைப் பிரிக்கவோ அல்லது இந்தியாவுடன் இனைவதையோ விரும்பியதில்லை. ஈழ்த்தமிழர்கள் ஈழத்தைப் பிரித்துத் தமிழ்நாட்டுடன் இணைத்து, நாங்கள் 3.5 மில்லியன் 65 மில்லியன் இந்தியத் தமிழ்ருடன் கலந்து, கரைந்து காணாமல் போவதற்கு நாங்கள் ஓரு அடி முட்டாள்களல்ல என்பதையும், ஒரு இந்து பெரும்பான்மை, தமிழ்க்கலாச்சார தமிழீழம் மிகநெருங்கிய நண்பனாக இருக்கும் என்பதைத் தான் பிராமண இணையத் தளங்களிலும், வட இந்திய இணையங்களிலும் மீண்டும், மீண்டும் சொல்லி வருகிறேன், இந்தியாவின் அனுமதி இல்லாமல் தமிழீழம் வெறும் கனவு தான் என்பது எனக்குத் தெரியும்.
"நான் ஒரு போதும் தமிழ்நாட்டை பிரிப்போம், இந்தியாவை இல்லாமல் செய்வோம்" என்று கோசம் போட்டதில்லை. ஏனென்றால் தமிழீழ விடுதலைக்கு இந்தியா முக்கியம் தேவை என்பது என் கருத்து. நான் எப்பொழுதும், எவ்வளவுக்கு ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு நண்பர்கள் என்று தெலுங்கு, மலையாள, இணையத் தளங்களில் கூடச் சென்று, இந்தியர்களுக்குள்ள, எங்களிலுள்ள சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறேண். நீங்கள் சொல்லியது போல் ""எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல." நான் ஒருநாளும் சொல்லியதல்ல.
உங்களைப் போன்றவர்களின் இப்படியான பேச்சுக்கள் தான் இந்தியாவுக்கு, தமிழீழத்தின் மீதும் சந்தேகத்தையுண்டாக்கி என்னைப் போன்றவர்கள் ஓரு வருடம் பேசி விளங்கப் படுத்தியதை, ஒரு நிமிடத்தில் போக்கி விடும்.
என்னுடைய பிராமண எதிர்ப்புக்குக் காரணம், எப்படித்தான் சொன்னாலும், தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள் எங்களுக்கு எதிர்ப்பு என்றதை நான் அறிந்து கொண்டதால் தான். வட இந்திய, பஞ்சாபி பிராமணர்கள் கூட என்னுடைய நண்பர்களாக உள்ளார்கள். கடந்த வருடம் அவர்களுடன் வட இந்தியாவுக்குப்( பஞ்சாப், அரியானா,ராஜஸ்தான், டெல்லி) போயிருந்தேன். அவர்கள் எல்லோரையும் விட தமிழ்ப் பிராமணர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு என்பதை என் அனுபவத்தில் அறிந்ததால் தான், எனக்கு இவ்வளவு தமிழ்ப் பிராமண எதிர்ப்பு.
தமிழ் நாட்டுப் பிராமணர்கள் எங்களைப் பெரியாரின் பக்தர்களாக, எங்களின் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுக்கெதிரான திராவிட இயக்கங்களின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார்கள். என்னால் இயன்ற வரை முயன்றும், அவர்கள் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும், பெண்விடுதலைப் போராளிகளையும் தொடர்ந்து அவமானப் படுதித்தியதாலும் தான் எனக்கு இந்தளவு பார்ப்பன வெறுப்பு வந்ததற்குக் காரணம்.
என்னுடைய அனுபவத்தில் பார்ப்பனர்களும், பார்ப்பனீயமும் தமிழர்களால் வெறுத்தொதுக்கப் பட வேண்டியவை. நீங்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதை விட நான் இந்தியாவுக்கெதிர்ப்பில்லை. சர்வதேசங்களை விட எங்களுக்கு இந்தியாவின் ஆதரவு தேவையென்று நான் நம்புகிறேன். அதற்கு மன்னிப்பு கேட்பது தான் ஒரு வழியென்றால் அதற்கும் தயங்கக் கூடாது.<b> "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பார்கள்.</b>
[b]இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்த நாடு. அன்னை இந்திரா காந்தி இருந்தவரை தமிழீழத்துக்கு அவர் ஆதரவாக இருந்தார். தமிழீழமும் என்றும் இந்திய ஆதரவு நாடாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்.
இதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, ஏனென்றால் இந்தியா இயக்கங்களை உருவாக்கியது சுயநலத்துக்காக, அரசியல் ராஜ தந்திரி இந்திரா தமிழர்களைப் பாவித்து இலங்கையில் வலிமையைக் குறைத்துத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தான் இயக்கங்களை உருவாக்கினார். எங்களுடைய உடன்பிறப்புக்கள் உயிரைப்பலி கொடுத்து, வெற்றியடைய, ஜே. ஆர், ஜெயவர்த்தனா இந்தியாவின் வேண்டுகோள்களுக்கெல்லாம் பணிந்து, திருகோணமலையத் தாரை வார்த்துக் கொடுத்ததும், இந்தியர்கள் தமீழத்தை மறந்து தமிழரின் முதுகில் குத்தி விட்டார்கள்.
|