08-30-2005, 03:31 AM
<b>உறவுகளை முறிக்கிறதா இன்டர்நெட்? இல்லவே இல்லை </b>
என்கிறது கலி·போர்னியா பல்கலைக்கழக ஆய்வு
இன்டர்நெட்டில் உலவுபவர்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று. அவர்கள் தனிமையில் வாடுபவர்கள். நெட்டில் துணை தேடுகிறார்கள் என்பது. இன்னொன்று. இன்டர்நெட்டுக்கு அடிமையாகி அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கை நண்பர்களையும் உறவினர்களையும் உதறுகிறார்கள் என்பது. அரசியல் காரணங்களுக்காக இன்டர்நெட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தக் கருத்துகள் வசதியாகிப் போனது. லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் கலி·போர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) தொடர்புக் கொள்கை மையம் சமீபத்தில் வெளியிட்ட இன்டர்நெட் ஆய்வு அறிக்கை நேரெதிராக ஒரு கதை சொல்கிறது. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களோடும் சகஜமாகப் பழகுகிறார்கல் என்றும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை!
இணையத்தில் நேரத்தை செலவிடுவதால் மனித உறவு ஒன்றும் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்லும் முதன்முதல் ஆய்வு இதுதான். இந்த வருடம் பிப்ரவரியில் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை. இன்டர்நெட் பரவலான அளவில் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையில் பிளவை உருவாக்குகிறது என்று ஒரே போடாகப் போட்டது.
அதே போல 1998ல் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் தான் நடத்திய ஹோம்நெட் என்ற ஆய்வின் முடிவை வெளியிட்டது. வாரம் சில மணி நேரங்களே இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் மனச் சோர்வும் தனிமையுணர்வும் மிக அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு அறிவித்தது.
இந்த மாதிரி சிந்தனையில் கோளாறு இருக்கிறது என்கிறார் யூ.சி.எல்.ஏ. ஆய்வின் இயக்குனர் ஜெ·ப்ரே கோல். "இன்டர்நெட் பயன்பாடு மக்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறைக்கிறது என்பதும் தவறுஇ இவர்கள் தனிமையில் தவிப்பவர்கள். சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்கள் என்பதும் தவறு" என்கிறார் கோல்.
இந்த இரண்டு ஆய்வுகள் ஒன்றுக்கொன்று பெரிதாக முரண்படவில்லை
என்கிறார் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய ராபர்ட் க்ரவுட். இன்டர்நெட்டின் பரிணாம வளர்ச்சி அவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதைத்தான் அது பிரதிபலிக்கிறது என்கிறார் அவர். க்ரவுட் வலைவாசிகளிடம் 1995ல் தனது ஆய்வைத் தொடங்கினார். அந்த சமயத்தில் இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதில் ஒரு சிறிய சதவீதம்தான் இருந்தது. அதற்குப் பிறகு இணையம் அரட்டைஇ ஷாப்பிங். காதல். விளையாட்டு ஆகியவற்றுக்கு ஒரு உலகம் தழுவிய மீடியமாக வளர்ந்துவிட்டது. "இன்டர்நெட் முன்பு இருந்தது போல் இல்லை. இன்டர்நெட் மாறிவிட்டது. அதோடு சேர்ந்து சமூகச் சூழலும் மாறியிருக்கிறது" என்றார் க்ரவுட்.
அமெரிக்கக் குடும்பங்கள் மீது இன்டர்நெட்டின் தாக்கத்தை அடுத்த பத்தாண்டுகள் வரை ஒவ்வொரு வருடத்திற்கும் கவனிப்பதுதான் யூ.சி.எல்.ஏ.வின் மெகா ஆய்வு. இந்த 50 பக்க அறிக்கைஇ இந்த ஆய்வின் முதல் தவணை. 1940கள்இ 50களில் தொலைக்காட்சி பரவியபோது அந்த ஊடகத்தைப் பற்றி போதுமான அளவு ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று சமூக அறிவியலாளர்கள் ரொம்ப காலமாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள் மின்சக்தி. தொலைபேசி அல்லது தொலைக்காட்சி ஆகியவற்றை விட அதிவேகமாகப் பரவி வரும் இன்டர்நெட் ஊடகத்திற்கும் அப்படி ஒரு குறை வந்துவிடக் கூடாது என்பதுதான் யூ.சி.எல்.ஏ. இன்டர்நெட் ஆய்வைத் தொடங்கியதன் நோக்கம் என்றார் ஜெ·ப்ரே கோல்.
இந்த ஆய்வு 2.096 அமெரிக்கக் குடும்பங்களில் நடத்தப்பட்டது. எத்தனை வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதுஇ ஆன்லைன் அந்தரங்கம் (pசiஎயஉல) பற்றி மக்கள் கருத்து என்னஇ ஆன்லைன் பங்கு வியாபாரத்தில் மக்கள் ஈடுபடும் விதம் - இதையெல்லாம் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன.
பதில் சொன்னவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்டர்நெட்டில் உலவும் வசதி இருந்தது தெரிந்தது. அவர்களில் 47 சதவீதத்தினருக்கு வீட்டில் இணைப்பு இருந்தது. இன்டர்நெட் பயனாளிகள் வாரம் சராசரியாக 9.42 மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள்.
அதே சமயம் நெட் பயன்பாட்டின் வளர்ச்சி (அமெரிக்காவில்) குறைந்து வருவதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. இணையத்தைப் பயன்படுத்தாதவர்களில் 59 சதவீதத்தினர் தங்களுக்கு அடுத்த வருடம் கூட இன்டர்நெட் இணைப்பு வாங்க வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த 59 சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்கினர். தங்களுக்கு இணையத்தில் சுத்தமாக ஆர்வம் இல்லை என்றிருக்கிறார்கள்.
இன்டர்நெட் மற்ற ஊடகங்களை அமுக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இணையப் பயனாளிகள். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவு புத்தகங்கள். செய்தித் தாள்களைப் படிக்கிறார்கள்; ரேடியோ கேட்கிறார்கள்; ·போனில் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு.
இன்டர்நெட்டின் வளர்ச்சியால் அடி வாங்குகிற ஊடகம் ஒன்று இருக்கிறதென்றால் அது தொலைக்காட்சிதான் போலிருக்கிறது. வலைவாசிகளும் சாதாவாசிகளும் புத்தகம். பேப்பர் படிப்பதில் கிட்டத்தட்ட ஒரே அளவு நேரம்தான் செலவிடுகிறார்கள். ஆனால் வலைவாசிகள் மற்றவர்களை விட ஏறக்குறைய 4.6 மணி நேரம் குறைவாகவே டி.வி. பார்க்கிறார்கள்.
எல்லாம் சரிதான். இன்டர்நெட் பயன்பாட்டால் நிஜ உலக உறவுகள் பாதிக்கப்படவில்லை என்று கோல் சொல்வதைத்தான் பலர் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இணையத்துக்காக நிஜ உலக உறவுகள் முறிவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
"இன்டர்நெட்டால் மக்கள் தனிமையின் பிடியில் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் முகமில்லாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பெரும்பங்கு வகித்த அரசியல் அறிவியலாளர் நார்மன் நை. "நெட்டில் உட்கார்ந்திருக்கும்போது மனிதக் குரலே காதில் விழுவதில்லை. நம்மை யாரும் அன்பாகத் தழுவுவதில்லை" என்று வருத்தப்பட்டார் நை.
இன்டர்நெட் தொழில்நுட்பம் மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துகிறது என்று நீண்ட காலமாக சொல்லி வந்த இணையப் பிரியர்கள் மத்தியில் நை நடத்திய ஆய்வு பற்றிக் கடுமையான விமர்சனம் எழுந்தது. யூ.சி.எல்.ஏ. ஆய்வை நை இன்னும் படிக்கவில்லை என்று தெரிகிறது. இன்டர்நெட்டில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் இன்டர்நெட் ஒரு பெரிய சமூக மையமாகியிருக்கிறது என்கிறார் க்ரவுட். 1998ல் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய சமூக உளவியலாளர் இவர்.அவரது ஆய்வு 1995 முதல் 1997 வரை நடத்தப்பட்ட சர்வேக்களின் அடிப்படையிலானது.
"1995ல் உங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட்டில் பேசவேண்டும் என்றால் அவர்கள் அனேகமாக நெட்டில் இருக்க மாட்டார்கள்" என்றார் க்ரவுட். இன்று ஐ.சி.க்யூ. யாஹ¥ மெசஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகள். நெட்வழி விளையாட்டுகள்இ ஒயர்லஸ் ஈ-மெயில் ஆகியவை இணையத்தில் சமூக உறவாடலைத் தவிர்க்க முடியாதபடி ஒரு சூழலை உருவாக்கியிருக்கின்றன என்கிறார் இவர். க்ரவுட் தன் ஆய்வைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். 1998 முதல் 1999 வரை அவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்
தான் நடத்திய முதல் ஆய்வை விட தனது லேட்டஸ்ட் ஆய்வில் இன்டர்நெட் மக்களிடம் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார் க்ரவுட். இருந்தாலும் நெட்டில் அதிக நேரம் செலவிட்டால் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையத்தான் செய்யும் என்றார் அவர்.
"மக்கள் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களது தனிமையுணர்வு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு சுகமான உணர்ச்சிகள்தான் ஏற்படுகிறது. முன்பு அப்படி இல்லை" என்றார் க்ரவுட்.
இணையப் பயனாளிகள். இணையம் தங்கள் நிஜ உலக உறவுகளை பாதிக்கவில்லை; தங்கள் கணவன்ஃமனைவி கவனத்தை தங்களிடமிருந்து திசை திருப்பவில்லை; தங்கள் குழந்தை குட்டிகள் நண்பர்களுடன் விளையாடப் போகும் நேரத்தில் கைவைக்கவில்லை என்று உறுதியாக நம்புவதைக் காட்டுகிறது யூ.சி.எல்.ஏ. ஆய்வு. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வளவு மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று கணக்குப் போட்டபோது. 27 மணி நேரம் என்று தெரிந்தது. இன்டர்நெட் பக்கம் போகாதவர்கள் 30.0 மணி நேரம் செலவிடுகிறார்கள்.
இது அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் கோல். ஆய்வில் கிடைத்த மற்ற ஆதாரங்கள். வலைவாசிகள் சமூக நடவடிக்கைகளை ஒதுக்குவதாகக் காட்டவில்லை என்கிறார் அவர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிட்டால் வலைவாசிகள் நண்பர்களுடன் கிட்டத்தட்ட அதே நேரம் செலவிடுகிறார்கள் என்றும் கிளப்கள் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகளில் மற்றவர்களை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் யூ.சி.எல்.ஏ. ஆய்வு சொல்கிறது.
இன்டர்நெட் பயனாளிகளில் 92 சதவீதத்தினர் தாங்கள் இணையத்தில் இறங்கியதற்கு முன்பு இருந்ததை விட அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இன்டர்நெட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ நடவடிக்கைகள். நிகழ்ச்சிகள் இன்டர்நெட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. எனவே "இப்போதெல்லாம் நீங்கள் இன்டர்நெட்டில் இல்லையென்றால் சமூகரீதியாக தனிமைப்பட்டுப் போவது போல் உணர்வீர்கள்" என்கிறார் யூ.சி.எல்.ஏ.வின் 'அறிவியல். தொழில்நுட்பம். சமூகத் திட்ட'த்தின் இயக்குனர் கிரெகரி ஸ்டாக்.
யூ.சி.எல்.ஏ. ஆய்வு அமெரிக்க வலைவாசிகளைப் பற்றியதுதான். இது சொல்லும் தகவல்கள் எல்லாமே நம் எல்லாருக்கும் பொருந்திவிடாது. ஆனால் மனித உறவுகள் நம் எல்லாருக்கும் பொதுவான சமாச்சாரம். இந்த விஷயத்தில் இந்த ஆய்வு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது
என்கிறது கலி·போர்னியா பல்கலைக்கழக ஆய்வு
இன்டர்நெட்டில் உலவுபவர்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று. அவர்கள் தனிமையில் வாடுபவர்கள். நெட்டில் துணை தேடுகிறார்கள் என்பது. இன்னொன்று. இன்டர்நெட்டுக்கு அடிமையாகி அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கை நண்பர்களையும் உறவினர்களையும் உதறுகிறார்கள் என்பது. அரசியல் காரணங்களுக்காக இன்டர்நெட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தக் கருத்துகள் வசதியாகிப் போனது. லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் கலி·போர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) தொடர்புக் கொள்கை மையம் சமீபத்தில் வெளியிட்ட இன்டர்நெட் ஆய்வு அறிக்கை நேரெதிராக ஒரு கதை சொல்கிறது. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களோடும் சகஜமாகப் பழகுகிறார்கல் என்றும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை!
இணையத்தில் நேரத்தை செலவிடுவதால் மனித உறவு ஒன்றும் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்லும் முதன்முதல் ஆய்வு இதுதான். இந்த வருடம் பிப்ரவரியில் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை. இன்டர்நெட் பரவலான அளவில் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையில் பிளவை உருவாக்குகிறது என்று ஒரே போடாகப் போட்டது.
அதே போல 1998ல் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் தான் நடத்திய ஹோம்நெட் என்ற ஆய்வின் முடிவை வெளியிட்டது. வாரம் சில மணி நேரங்களே இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் மனச் சோர்வும் தனிமையுணர்வும் மிக அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு அறிவித்தது.
இந்த மாதிரி சிந்தனையில் கோளாறு இருக்கிறது என்கிறார் யூ.சி.எல்.ஏ. ஆய்வின் இயக்குனர் ஜெ·ப்ரே கோல். "இன்டர்நெட் பயன்பாடு மக்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறைக்கிறது என்பதும் தவறுஇ இவர்கள் தனிமையில் தவிப்பவர்கள். சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்கள் என்பதும் தவறு" என்கிறார் கோல்.
இந்த இரண்டு ஆய்வுகள் ஒன்றுக்கொன்று பெரிதாக முரண்படவில்லை
என்கிறார் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய ராபர்ட் க்ரவுட். இன்டர்நெட்டின் பரிணாம வளர்ச்சி அவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதைத்தான் அது பிரதிபலிக்கிறது என்கிறார் அவர். க்ரவுட் வலைவாசிகளிடம் 1995ல் தனது ஆய்வைத் தொடங்கினார். அந்த சமயத்தில் இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதில் ஒரு சிறிய சதவீதம்தான் இருந்தது. அதற்குப் பிறகு இணையம் அரட்டைஇ ஷாப்பிங். காதல். விளையாட்டு ஆகியவற்றுக்கு ஒரு உலகம் தழுவிய மீடியமாக வளர்ந்துவிட்டது. "இன்டர்நெட் முன்பு இருந்தது போல் இல்லை. இன்டர்நெட் மாறிவிட்டது. அதோடு சேர்ந்து சமூகச் சூழலும் மாறியிருக்கிறது" என்றார் க்ரவுட்.
அமெரிக்கக் குடும்பங்கள் மீது இன்டர்நெட்டின் தாக்கத்தை அடுத்த பத்தாண்டுகள் வரை ஒவ்வொரு வருடத்திற்கும் கவனிப்பதுதான் யூ.சி.எல்.ஏ.வின் மெகா ஆய்வு. இந்த 50 பக்க அறிக்கைஇ இந்த ஆய்வின் முதல் தவணை. 1940கள்இ 50களில் தொலைக்காட்சி பரவியபோது அந்த ஊடகத்தைப் பற்றி போதுமான அளவு ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று சமூக அறிவியலாளர்கள் ரொம்ப காலமாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள் மின்சக்தி. தொலைபேசி அல்லது தொலைக்காட்சி ஆகியவற்றை விட அதிவேகமாகப் பரவி வரும் இன்டர்நெட் ஊடகத்திற்கும் அப்படி ஒரு குறை வந்துவிடக் கூடாது என்பதுதான் யூ.சி.எல்.ஏ. இன்டர்நெட் ஆய்வைத் தொடங்கியதன் நோக்கம் என்றார் ஜெ·ப்ரே கோல்.
இந்த ஆய்வு 2.096 அமெரிக்கக் குடும்பங்களில் நடத்தப்பட்டது. எத்தனை வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதுஇ ஆன்லைன் அந்தரங்கம் (pசiஎயஉல) பற்றி மக்கள் கருத்து என்னஇ ஆன்லைன் பங்கு வியாபாரத்தில் மக்கள் ஈடுபடும் விதம் - இதையெல்லாம் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன.
பதில் சொன்னவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்டர்நெட்டில் உலவும் வசதி இருந்தது தெரிந்தது. அவர்களில் 47 சதவீதத்தினருக்கு வீட்டில் இணைப்பு இருந்தது. இன்டர்நெட் பயனாளிகள் வாரம் சராசரியாக 9.42 மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள்.
அதே சமயம் நெட் பயன்பாட்டின் வளர்ச்சி (அமெரிக்காவில்) குறைந்து வருவதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. இணையத்தைப் பயன்படுத்தாதவர்களில் 59 சதவீதத்தினர் தங்களுக்கு அடுத்த வருடம் கூட இன்டர்நெட் இணைப்பு வாங்க வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த 59 சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்கினர். தங்களுக்கு இணையத்தில் சுத்தமாக ஆர்வம் இல்லை என்றிருக்கிறார்கள்.
இன்டர்நெட் மற்ற ஊடகங்களை அமுக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இணையப் பயனாளிகள். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவு புத்தகங்கள். செய்தித் தாள்களைப் படிக்கிறார்கள்; ரேடியோ கேட்கிறார்கள்; ·போனில் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு.
இன்டர்நெட்டின் வளர்ச்சியால் அடி வாங்குகிற ஊடகம் ஒன்று இருக்கிறதென்றால் அது தொலைக்காட்சிதான் போலிருக்கிறது. வலைவாசிகளும் சாதாவாசிகளும் புத்தகம். பேப்பர் படிப்பதில் கிட்டத்தட்ட ஒரே அளவு நேரம்தான் செலவிடுகிறார்கள். ஆனால் வலைவாசிகள் மற்றவர்களை விட ஏறக்குறைய 4.6 மணி நேரம் குறைவாகவே டி.வி. பார்க்கிறார்கள்.
எல்லாம் சரிதான். இன்டர்நெட் பயன்பாட்டால் நிஜ உலக உறவுகள் பாதிக்கப்படவில்லை என்று கோல் சொல்வதைத்தான் பலர் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இணையத்துக்காக நிஜ உலக உறவுகள் முறிவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
"இன்டர்நெட்டால் மக்கள் தனிமையின் பிடியில் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் முகமில்லாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பெரும்பங்கு வகித்த அரசியல் அறிவியலாளர் நார்மன் நை. "நெட்டில் உட்கார்ந்திருக்கும்போது மனிதக் குரலே காதில் விழுவதில்லை. நம்மை யாரும் அன்பாகத் தழுவுவதில்லை" என்று வருத்தப்பட்டார் நை.
இன்டர்நெட் தொழில்நுட்பம் மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துகிறது என்று நீண்ட காலமாக சொல்லி வந்த இணையப் பிரியர்கள் மத்தியில் நை நடத்திய ஆய்வு பற்றிக் கடுமையான விமர்சனம் எழுந்தது. யூ.சி.எல்.ஏ. ஆய்வை நை இன்னும் படிக்கவில்லை என்று தெரிகிறது. இன்டர்நெட்டில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் இன்டர்நெட் ஒரு பெரிய சமூக மையமாகியிருக்கிறது என்கிறார் க்ரவுட். 1998ல் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய சமூக உளவியலாளர் இவர்.அவரது ஆய்வு 1995 முதல் 1997 வரை நடத்தப்பட்ட சர்வேக்களின் அடிப்படையிலானது.
"1995ல் உங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட்டில் பேசவேண்டும் என்றால் அவர்கள் அனேகமாக நெட்டில் இருக்க மாட்டார்கள்" என்றார் க்ரவுட். இன்று ஐ.சி.க்யூ. யாஹ¥ மெசஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகள். நெட்வழி விளையாட்டுகள்இ ஒயர்லஸ் ஈ-மெயில் ஆகியவை இணையத்தில் சமூக உறவாடலைத் தவிர்க்க முடியாதபடி ஒரு சூழலை உருவாக்கியிருக்கின்றன என்கிறார் இவர். க்ரவுட் தன் ஆய்வைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். 1998 முதல் 1999 வரை அவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்
தான் நடத்திய முதல் ஆய்வை விட தனது லேட்டஸ்ட் ஆய்வில் இன்டர்நெட் மக்களிடம் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார் க்ரவுட். இருந்தாலும் நெட்டில் அதிக நேரம் செலவிட்டால் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையத்தான் செய்யும் என்றார் அவர்.
"மக்கள் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களது தனிமையுணர்வு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு சுகமான உணர்ச்சிகள்தான் ஏற்படுகிறது. முன்பு அப்படி இல்லை" என்றார் க்ரவுட்.
இணையப் பயனாளிகள். இணையம் தங்கள் நிஜ உலக உறவுகளை பாதிக்கவில்லை; தங்கள் கணவன்ஃமனைவி கவனத்தை தங்களிடமிருந்து திசை திருப்பவில்லை; தங்கள் குழந்தை குட்டிகள் நண்பர்களுடன் விளையாடப் போகும் நேரத்தில் கைவைக்கவில்லை என்று உறுதியாக நம்புவதைக் காட்டுகிறது யூ.சி.எல்.ஏ. ஆய்வு. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வளவு மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று கணக்குப் போட்டபோது. 27 மணி நேரம் என்று தெரிந்தது. இன்டர்நெட் பக்கம் போகாதவர்கள் 30.0 மணி நேரம் செலவிடுகிறார்கள்.
இது அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் கோல். ஆய்வில் கிடைத்த மற்ற ஆதாரங்கள். வலைவாசிகள் சமூக நடவடிக்கைகளை ஒதுக்குவதாகக் காட்டவில்லை என்கிறார் அவர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிட்டால் வலைவாசிகள் நண்பர்களுடன் கிட்டத்தட்ட அதே நேரம் செலவிடுகிறார்கள் என்றும் கிளப்கள் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகளில் மற்றவர்களை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் யூ.சி.எல்.ஏ. ஆய்வு சொல்கிறது.
இன்டர்நெட் பயனாளிகளில் 92 சதவீதத்தினர் தாங்கள் இணையத்தில் இறங்கியதற்கு முன்பு இருந்ததை விட அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இன்டர்நெட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ நடவடிக்கைகள். நிகழ்ச்சிகள் இன்டர்நெட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. எனவே "இப்போதெல்லாம் நீங்கள் இன்டர்நெட்டில் இல்லையென்றால் சமூகரீதியாக தனிமைப்பட்டுப் போவது போல் உணர்வீர்கள்" என்கிறார் யூ.சி.எல்.ஏ.வின் 'அறிவியல். தொழில்நுட்பம். சமூகத் திட்ட'த்தின் இயக்குனர் கிரெகரி ஸ்டாக்.
யூ.சி.எல்.ஏ. ஆய்வு அமெரிக்க வலைவாசிகளைப் பற்றியதுதான். இது சொல்லும் தகவல்கள் எல்லாமே நம் எல்லாருக்கும் பொருந்திவிடாது. ஆனால் மனித உறவுகள் நம் எல்லாருக்கும் பொதுவான சமாச்சாரம். இந்த விஷயத்தில் இந்த ஆய்வு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->