Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவிக்கரம் நீட்டுங்கள்
#1
உதவிக்கரம் நீட்டுங்கள்

அத்தியடி பருத்தித்துறையைச் சேர்ந்த சசிகலா தேவராசா என்ற ஒன்பது வயதுச் சிறுமி இருதயத்தில் துவாரம் காரணமாக உயிராபத்தை எதிர் கொண்டுள்ளார்.
கொழும்பு ஜயவர்த்தனபுர மருத்துவமனை யில் இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
சத்திர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் இருந்தபோதும் அதற்குப் பெருமளவு நிதி செல விட வேண்டி இருப்பதால் இச் சிறுமியின் பெற்றோர்கள் செய்வதறியாத நிலையில் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட இச்சிறுமியின் குடும்ப நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதி யைத் திரட்டி வழங்கும் நன் முயற்சியில் பரோபகார சிந்தனை கொண்ட சிலர் ஈடுபட்டிருக்கின்றனர்.
பருத்தித்துறை தம்பசிட்டி மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்காம் வகுப்பிலும் பருத்தித்துறை ஷசாயி மந்திர்| நிலையத்திலும் கல்வி கற்றுவரும் இந்தச் சிறுமியின் உயிர் காப்பு நிதியத்துக்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் 7215-ஊ என்ற நடைமுறைக் கணக்கு இலக்கத்துக்கு (இலங்கை வங்கி, பருத்தித்துறை) பணத்தைச் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
[b] ?
Reply
#2
இந்த பிள்ளையின் நிலமை என்ன இப்ப அறிய தரவும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)