Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்
#1
அக்டோபர் 26, 2004

<b>தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்

மதுரை:</b>

தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் நிறுவியுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரையில் இரண்டு நாள் தமிழ் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்துள்ளது. தமிழைக் காக்க தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழும், அதன் பண்பாடும் சிதிலமடைய தமிழ் சினிமாக்களே முக்கிய காரணம்.

அதேபோல தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழிகளுக்கு அளிக்கப்பட்ட ஆதரவும் தமிழ் பாதிக்கப்பட இன்னொரு முக்கிய காரணம். இந்த மொழிகளை கற்றுத் தருவதை தமிழக பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழைத் தவிர வேறு மொழி இருக்கக் கூடாது என்று பாரதியாரே அன்று போராடியுள்ளார். அதற்காக இயக்கம் நடத்தியுள்ளார். எனவே எங்களது இயக்கத்தில் எந்தத் தவறும் இல்லை என்றார் ராமதாஸ்.

பி.டி.ஆர். பேச்சு:

முன்னாள் சபாநாயகரும், திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசுகையில்,

தமிழுக்காக மிகப் பெரிய வேலையில் ராமதாஸ் இறங்கியுள்ளார். சுத்தமான பச்சைத் தமிழர்கள் இந்த பணியை வரவேற்பார்கள். தமிழைப பாதுகாக்க ராமதாஸ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே, பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழைக் காக்க களம் கண்டுள்ளார். தமிழுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி வருவதில் தவறே இல்லை.

மாநிலம் முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

thatstamil.com
Reply
#2
தமிழ் சினிமா மீது உ.பி. ஆளுநர் கடும் தாக்கு !

மதுரை:

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் தமிழ் சினிமா மிகப் பெரிய அளவில் சீரழித்து வருவதாக உத்தரபிரதேச மாநில ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர் கூறியுள்ளார்.

சேலத்தைத் சேர்ந்த தமிழரான ராஜேஷ்வர், மத்திய உளவுத்துறையின் இயக்குனராக பணியாற்றியவர். இப்போது உ.பி. ஆளுநராக உள்ள அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், தமிழ் சினிமாவை மிகக் கடுமையாக சாடினார். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் வன்முறை மற்றும் ஆபாச களஞ்சியமாக திகழ்வதாக குற்றம் சாட்டினார்.

டி.வி.ராஜேஷ்வரின் பேச்சு:

தமிழகத்தை போல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வேறு எங்கும் கிடையாது. இந்த மன்றங்கள் அரசியல் இயக்கங்களாக மாறி சமூகத்தை சீரழிக்கின்றன. இந்த சினிமா கலாசாரம் தான் தமிழக இளைஞர்களை முடக்கி வைத்து வருகிறது.

முன்னணி தமிழ் வார இதழ்கள் கூட நடிகர்கள், நடிகைகள் படங்களை அட்டையில் வெளியிடுகின்றன. தமிழக மக்கள் மீது சினிமா ஆதிக்கம் செலுத்துகிறது.

சர்வதேச சினிமா விழாவுக்காக இந்திய சினிமாக்களை தேர்வு செய்த பெண் நடுவர் ஒருவர் தமிழர்களை பற்றி கூறும்போது, "கொடூரம், செக்ஸ் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு ஒலிம்பிக் போட்டி வைத்தால் தமிழர்கள் வெற்றி பெற்று விடுவர்' என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் சீரழித்து வருவது தமிழ் சினிமாதான். தமிழ் சினிமாவின் பிடியில் சிக்கி தமிழர்கள் அழிந்து வருகிறார்கள். இந்த மாநிலத்தில் சினிமாவிலிருந்து தான் நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் உருவாகிறார்கள்.

சினிமாதான் சமுதாயம் என்ற மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும். அப்போதுதான் உருப்பட முடியும். சினிமாவால் சிதைந்து போய்விட்டது தமிழ் மக்களின் கலாச்சாரம்.

அதேபோல மூடத்தனங்களுக்கும் தமிழர்கள் மத்தியில் பஞ்சத்தனம் இல்லாமல் போய் விட்டது.

சாமியார்களும், குருக்களும், அவதாரங்களும் தமிழகத்தில் பெருகி விட்டனர். ஒவ்வொரு நாளும் புதிய பூசாரியோ சாமியாரோ தோன்றி கொண்டே இருக்கிறார்.

சில பூசாரிகள் ஆட்டின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடிக்கின்றனர். சிலர் சாராயம் குடித்து விட்டு பக்தர்கள் மீது துப்புகின்றனர். குணப்படுத்துவதாக கூறி நோயாளிகளை அடிக்கின்றனர். ஒருவர் 10 வயதில் தன்னை குட்டிச் சாமியார் என்று கூறிக் கொள்கிறார்.

பெரியார் கூறிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பாடாக தமிழர்கள் நடந்து கொள்கிறார்கள். சுய மரியாதை இயக்கங்கள் தான் பிற்காலத்தில் அரசியல் இயக்கங்களாக மாறின. ஆனால், பெரியாரின் கொள்கைகள் மக்களால் மறக்கப்பட்டது வேதனை தருகிறது. மூடத்தனங்களை ஆதரித்தும், சுய மரியாதையை இழந்தும் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் சினிமா தியேட்டர்களை விட்டும் மூடத்தனங்களை விட்டும் வெளியே வாருங்கள். இந்த சமூகத்தையும் நல் வழி நடத்துங்கள்.

இவ்வாறு ராஜேஸ்வர் பேசினார்.

ராஜேஸ்வரின் பேச்சு அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பேசிய தமிழக ஆளுநர் ராம் மோகன்ராவ், உ.பி. ஆளுநர் சொன்னதைப் போல வாழ பட்டதாரிகள் முயல வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
Reply
#3
ஏற்கனவே வைரமுத்து சமூகத்தை சீரழிக்கும் சினிமாவை தீக்குச்சிக்கு இரையாகக் கொடுப்போம் என்று வீரம்பேசி விட்டு இன்று அதற்குள் விழுந்த கிடக்கின்றார். கேட்டால் வயித்துப்பாட்டுக்கு என்கிறார். உவர்களை நம்பேலாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[i][b]
!
Reply
#4
வைரமுத்து பணத்திற்காக எதையும் செய்பவா். அவரது ஆவேசப்பேச்சுக்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)