Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல் வெளியீட்டு விழா!
#1
<b>மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல் வெளியீட்டு விழா!

ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குப் போவதென்றால் என் மனம் திக்குத் திக்கு என்று அடிக்கும்..........இப்படித் தொடர்கிறார் நூல் வெளியீட்டு விழா பற்றி [b]நக்கீரன்</b> அவர்கள்

சென்ற சனிக்கிழமை ஸ்காபரோவில் நடைபெற்ற 'மகப்பேறும் மகளிர் மருத்துவமும்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் <b>நக்கீரன்</b> அவர்கள் கூறியவற்றில் சில..............

தமிழர்களுடைய வீடுகளில் கண்டிப்பாக சாமி அறை இருக்கும். சாமி அறை இல்லாத வீட்டையே பார்க்க முடியாது! ஆனால் யார் வீட்டிலும் புத்தக அறை இருக்காது! புத்தகம் வாங்கினால் அல்லவா புத்தக அறை வேண்டும்?

ஆங்கிலேயர்கள் அப்படி இல்லை. நிறைய வாசிக்கிறார்கள். நிறைய நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள். உணவுக்கு உடைக்குச் செலவழிப்பதுபோல உழைப்பில் ஒரு பகுதியை புத்தகம் வாங்குவதில் செலவிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு நல்ல நூல் எழுதினால் போதும். அடுத்த நாளே அதை எழுதிய நூலாசிரியர் கோடீசுவராக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

<b>முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளின்டனின் மனைவி கிலாறி கிளின்டன் 'வாழும் வரலாறு" ("Living History") என்ற பெயரில் 562 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.</b>

நூலுக்கு பிள்ளையார் சுழி போடுமுன்னரே முற்பணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் வாங்கி விட்டார். நூல் வெளிவந்தபின் 3 மில்லியன். ஆக மொத்தம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்து விட்டார்.

இவரை தூக்கி அப்படியே சாப்பிட்டு விட்டார் <b>இன்னொரு பெண் எழுத்தாளர். பெயர் Ms. J.K. Rowling. இவர் Harry Potter என்ற தலைப்பில் புத்தகங்களை எழுதி வருகிறார். </b>இது சிறுவர்களுக்கான மாயாஜால மந்திர தந்திரப் புத்தகம். முதல் நான்கு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்தப் புத்தகங்கள் நான்கும் 200 நாடுகளில் 200 மில்லியன் படிகள் (20 கோடி) விற்பனை ஆகின. அதன் பதிப்பாளர் Bloomsburyக்கு கிடைத்த இலாபம் 15 மில்லியன் ஸ்டேலிங் பவுண்கள்.

<b>ஐந்தாவது "Harry Potter and the Order of the Phoenix'' என்ற புத்தகம். சரியாக சனிக்கிழமை இரவு 12.01 மணிக்கு உலகம் பூராவும் உள்ள புத்தகக் கடைகள் கதவுகளைத் திறந்து விற்பனைக்கு விட்டன. </b>எக்கச்சக்கமான விளம்பரம்.

முதல் நாள் அமெரிக்க அமேசன் வலையத்தில் மட்டும் 760,000 படிகள் விற்பனையாகின. விலை 29.99 அ.டொலர்கள். மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் மூலம் 10 இலட்சம் படிகள் விற்பனையாகின.

இன்று இந்த நூலாசிரியர் உலகத்தில் உள்ள முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். அவரது சொத்தின் பெறுமதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தைவிட அதிகமாம்!

தமிழில் ஒரு புத்தகம் வெளியிட்டால் ஆயிரம் படிகள் விற்பனையாவது அதிகம். இதற்கு இந்திய சனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ''அக்னிச் சிறகுகள்"" (தன்வரலாறு) விதிவிலக்கு. ஒரு இலட்சம் படிகள் விற்பனையாகி தமிழ்ப் புத்தக வெளியீட்டில் 'சாதனை" படைத்துள்ளது. கலைஞர் மு.கருணாநிதி எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா" 10,000 படிகள் விற்பனையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இருவரும் 'பிரபலங்கள்" என்பதுதான். ஒருவர் இன்னாள் சனாதிபதி. மற்றவர் முன்னாள் முதல்வர்.

<b>திரு.சு. இராசரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். </b>தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவருவது மிக அருமை. வெளிநாட்டில் 31 ஆண்டுகள் செலவழித்த ஒருவர் மருத்துவ சம்பந்தமான நூலை தமிழில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது போற்றத்தக்கது என்றார்.

<b>வரவேற்புரையை அடுத்து வைத்திய கலாநிதி இராஜேஸ்வரி நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்</b>. இவர் மகப்பேற்றியல் மகளிர் மருத்துவ சிறப்பு சிகிச்சை மருத்துவர்.

<b>நூலாசிரியர் வைத்திய கலாநிதி செ.ஆனைமுகன் எழுதியுள்ள ''மகப்பேறும் மகளிர் மருத்துவம்"" என்ற நூல் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு மகப்பேறு தொடர்பான பல அரிய தகவல்களை தருகிறது. அதனைப் படித்து தாய்மார்கள் பயன் அடையலாம் என்றார்.</b> பேச்சை எழுதி வாசித்தாலும் அதனை தங்குதடையின்றி செய்து குறித்த நேரத்துக்குள் முடித்துக் கொண்டார்.

<b>அடுத்து வைத்திய கலாநிதி விக்டர் பிஃகுராடோ, குடும்ப வைத்தியர் ஆய்வுரை நிகழ்தினார். தமிழில் மிகச் சரளமாகப் பேசக் கூடிய வைத்திய கலாநிதிகளில் இவரும் ஒருவர்.</b> ஆய்வுரை என்றால் மேற்போக்காக நூலைப் படித்துவிட்டு ஒப்புக்குப் பேசிவிட்டு அமருபவர் அல்ல. மாறாக கொடுத்த பணியை பொறுப்புணர்வோடு செய்து முடிக்கக் கூடியவர்.


நூலின் அட்டைப் படத்தின் வடிவமைப்பை வைத்திய கலாநிதி பிஃகுராடோ மிகவும் சிலாகித்துப் பேசினார். உண்மையும் அதுதான். ஒரு பெண்ணின் எலும்புருவம் (skeletoh) கருப்பப்பை, கருப்பை வாய் பூரணமாக விரிவடைந்த நிலையில் குழந்தையின் தலையின் நிலைப் படம், பிறந்த குழந்தையை கையில் ஆசையோடு வைத்திருக்கும் ஒரு இளந்தாயின் படம். இவை அனைத்தும் நூல் ஒரு மகப்பேறு மருத்துவ நூல் என்பதை பளிச்சென எடுத்துக்காட்டுவதாக இருந்தன!

நூலின் தடித்த மட்டை அந்த நூல் பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் பல முட்டுக்கட்டுக்களை எதிர்நோக்குகிறார்கள். முதலாவது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு போதியளவு இல்லாதது மருத்துவர்களுக்கு தங்கள் வருத்தங்களைச் சொல்லி மருத்துவம் செய்யத் தடையாக இருக்கிறது. இரண்டாவது மருத்துவரிடம் போகும்போது தங்கள் கணவர்மாரோடு சேர்ந்து போவதில்லை. இதற்கு கணவர்மார்களுக்கு இருக்கும் வேலைப்பளு அதனால் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகும்.

'தமிழ்நாட்டில் வழங்கும் கலைச் சொற்கள் சிலவற்றுக்குப் பதில் இலங்கையில் வழங்கும் கலைச் சொற்களை நூலாசிரியர் பயன்படுத்தி இருந்திருக்கலாம்."

சொற்களினால் வரும் குழப்பத்துக்கு ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொன்னார்.

'தமிழில் சிறந்த காவியம் படைப்போன் தமிழ்மொழிக்கு உயிர் கொடுக்கிறான்" 'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"" என்ற பாரதியாரின் ஆசையை நூலாசிரியர் நிறைவேற்றி இருக்கிறார்" என கலாநிதி பிஃகுராடோ நூலாசிரியருக்குப் புகழாரம் சூட்டினார்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் ஒரு பேராசிரியர் மருத்துவ மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பாரோ அப்படி திரையில் கணனி மூலம் புத்தகத்தின் உள்ளடக்கத்தை விளக்கி நீண்ட நேரம் பேசினார்.

<b>முதல் பகுதி (28 அத்தியாயங்கள்) மகப்பேறு பற்றியது. இரண்டாவது பகுதி (32 அத்தியாயங்கள்) மகளிர் மருத்துவம் பற்றியது. இதைவிட 108 வரைபடங்கள் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது பக்கங்களின் எண்ணிக்கை 672.</b>

'இந்த நூலின் விற்பனையால் வரும் வருவாய் தமிழர் வாழ்க்கை, கலாசாரம், தமிழ்மொழி முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்" என நூலாசிரியர் பலத்த கை தட்டலுக்கு மத்தியில் அறிவித்தார்.

<b>புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இவ்வளவு பேர் திரளாக வந்திருப்பது தனக்கு வியப்பாக இருக்கிறதாக சொன்னார். தமிழ் நாட்டில் புத்தக வெளியீட்டுக்கு 50-60 பேர் இருக்கக்கூடிய மண்டபமே தெரிவு செய்யப்படுகிறது என்றார். விழாவில் பேசுகிறவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். </b>ஆனால் இங்கு உரையாற்றிய அத்தனை வைத்தியக் கலாநிதிகளும் அழகான தமிழில் பேசினார்கள். <b>'அறிவியல்பற்றிய நூல்களுக்கு தமிழில் பஞ்சம் இருக்கிறது. மருத்தவம்பற்றி தமிழில் எழுதப்பட்ட மூன்றாவது நூல் இது" என்றார்.</b>

நூல் ஆய்வுக்கு வைத்திய கலாநிதிகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் அந்தத் துறைக்கு வெளியேயுள்ள ஒருவரை வேறு கண்ணோட்டதில் ஆய்வு செய்ய விட்டிருக்கலாம்.

உரையாற்றிய வைத்திய கலாநிதிகள் புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுக்குத் தாங்களே வாசகர்கள் வைத்தியம் செய்ய எத்தனிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.

தன் பங்குக்கு நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் அறிவியல் தமிழுக்கு ஒரு கொடியேற்றம் செய்து வைத்திருக்கிறார்!

இந்நூலினை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்:
S.Ahnaimugan
P.O.Box 5291
Palmerston North
New Zealand
E-mail:ahnaimugan@inspire.net.nz

[b]- நக்கீரன் -
Nadpudan
Chandravathanaa
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)