11-22-2003, 11:25 PM
ஒரு அழகான பெண்ணை ஒரு சிங்கம் பார்த்தது. உடனே காதல் கொண்டுவிட்டது. அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சென்று, ''உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நான் காட்டு ராஜா. உங்கள் பெண்ணைக் கண்போல பாதுகாத்து, ராணி போல் வைத்துக் கொள்கிறேன்'' என்றது.
பெண்ணின் பெற்றோர் மறுநாள் காலைவரை டயம் கேட்டனர்; யோசித்தனர். 'இப்படி பைத்தியம் பிடித்தது போல கேட்கிறதே! முரட்டு மிருகத்துக்கு இளம்பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதா! எப்படி சமாளிப்பது? முரட்டு சிங்கத்திற்கு கோபம் வராமல் எப்பபடி நிராகரிப்பது?' என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
மறுதினம் சிங்கத்தை அழைத்து ''காட்டு ராஜா அவர்களே! நீங்கள் எங்கள் குமாரத்தியை மணம் செய்ய விரும்புவதில் எங்களுக்கு மிகுந்¢த பெருமை. எங்கள் மகளைப் பார்த்தீர்கள். அவளை உங்களோடு ஒப்பிட்டால் பலவீனமாவள். நீங்கள் உங்கள் காதலின் ஆசையின் ஆர்வத்தில் அவளை அதிகமாகக் காதலித்து விட்டால் அவள் செத்துப்போய் விடுவாள். அதனால் ஒன்று செய்யுங்கள். உங்கள் நகங்களை வெட்டிவிடுங்கள். பற்களைப் பிடுங்கிக் கொண்டுவிடுங்கள். பெண்ணைக் கல்யாணம் செய்து தருகிறோம்'' என்றனர்.
சிங்கம், காதலித்த பெண் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் நகங்களை வெட்டிக்கொண்டு, பல்லெல்லாம் பிடுங்கிக்கொண்டு பொக்கையாக வந்து நின்றது. பெற்றோர் அதைப்பார்த்து கைகொட்டிச் சிரித்து, ''போய்யா, பொக்கை வாயா! என்று எல்லோரும் சேர்ந்து துரத்தி விட்டார்கள்.
நீதி: - காதலுக்காக எல்லாவற்றையும் இழப்பது முட்டாள்தனம்.
நன்றி: அம்பலம்
பெண்ணின் பெற்றோர் மறுநாள் காலைவரை டயம் கேட்டனர்; யோசித்தனர். 'இப்படி பைத்தியம் பிடித்தது போல கேட்கிறதே! முரட்டு மிருகத்துக்கு இளம்பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதா! எப்படி சமாளிப்பது? முரட்டு சிங்கத்திற்கு கோபம் வராமல் எப்பபடி நிராகரிப்பது?' என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
மறுதினம் சிங்கத்தை அழைத்து ''காட்டு ராஜா அவர்களே! நீங்கள் எங்கள் குமாரத்தியை மணம் செய்ய விரும்புவதில் எங்களுக்கு மிகுந்¢த பெருமை. எங்கள் மகளைப் பார்த்தீர்கள். அவளை உங்களோடு ஒப்பிட்டால் பலவீனமாவள். நீங்கள் உங்கள் காதலின் ஆசையின் ஆர்வத்தில் அவளை அதிகமாகக் காதலித்து விட்டால் அவள் செத்துப்போய் விடுவாள். அதனால் ஒன்று செய்யுங்கள். உங்கள் நகங்களை வெட்டிவிடுங்கள். பற்களைப் பிடுங்கிக் கொண்டுவிடுங்கள். பெண்ணைக் கல்யாணம் செய்து தருகிறோம்'' என்றனர்.
சிங்கம், காதலித்த பெண் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் நகங்களை வெட்டிக்கொண்டு, பல்லெல்லாம் பிடுங்கிக்கொண்டு பொக்கையாக வந்து நின்றது. பெற்றோர் அதைப்பார்த்து கைகொட்டிச் சிரித்து, ''போய்யா, பொக்கை வாயா! என்று எல்லோரும் சேர்ந்து துரத்தி விட்டார்கள்.
நீதி: - காதலுக்காக எல்லாவற்றையும் இழப்பது முட்டாள்தனம்.
நன்றி: அம்பலம்
[i][b]
!
!

