Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கமலின் விருமாண்டி...
#1
<img src='http://thatstamil.com/images16/cinema/kamal-new34-300.jpg' border='0' alt='user posted image'>

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக வருகிறார்.

மதுரை மாவட்டத்தை பின்புலமாகக் கொண்டு அட்டகாசமான கிராமத்துக் கதையுடன் களம் இறங்கியுள்ளார் கமல்ஹாசன். விருமாண்டி என்ற கேரக்டரில் தூக்குத் தண்டனை கைதியாக நடித்துள்ளார் கமல்.

தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியற்றின் கொடுமைகளையும், அந்தத் தண்டனைகளால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தப் படத்தில் அப்பட்டமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் கமல்.

வெறும் கிராமத்துப் படம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதே சமயம் பயங்கர வியப்பையும் அளிக்கும் வகையில் செமையான மெசேஜையும் வைத்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்.

விருமாண்டியின் துணையாக வருவது அபிராமி. இவரது அப்பாவாக நடித்திருப்பது நெப்போலியன். இவர் நல்லம நாயக்கர் என்ற பெயரில் ஊர்த் தலைவராகவும் வருகிறார். தூக்குத் தண்டனைக் கைதிகளின்பால் அனுதாபம் காட்டும் நல்ல ஜெயில் அதிகாரியாக வருகிறார் நாசர். விருமாண்டியின் கூட்டாளியாக கொத்தாள தேவர் என்ற பெயரில் வருகிறார் பசுபதி.

ஏஞ்சலா என்ற கேரக்டரில் ரோகிணி நடித்துள்ளார். டாகுமென்டரி படம் எடுக்கும் பெண்மணியாக நடித்திருக்கும் அவர், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பேட்டி எடுத்து உலகுக்கு அவர்களின் அவல நிலையை வெளிப்படுத்துகிறார்.

விருமாண்டிக்குத் தெரிந்ததெல்லாம் அடி, உதை, வெட்டுக் குத்துதான். ஆனால் அந்த வன்முறைக்குப் பின்னால் என்ன உள்ளது, பின்னணி என்ன என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

கிட்டத்தட்ட தேவர் மகன் போலத் தெரிந்தாலும், அதையும் மீறி சமூக அக்கறை தொனிக்கும் கருத்தை கமல் கையில் எடுத்திருப்பதை உணர முடிகிறது.

இந்தப் படம் நிச்சயம் ஒரு சினிமாப் படமாக மட்டும் இல்லாமல், தூக்கு தண்டனைக்கு எதிராக சமூக அக்கறையுடன், சமூக பிரச்சினையை அலசும் படமாகவும் இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டுகிறது. அதேபோல, விரு விரு விருமாண்டி என்ற பாடலும், பெரிய கருப்பத் தேவர் பாடும் பாடலும் படு அட்டகாசமாக வந்துள்ளது. இனி தமிழக கிராமப்புறங்களில் இந்தப் பாட்டுக்களை நித்தம் நித்தம் ஒலிக்கலாம்.

That'stamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சண்டியர் என்பது சாதிப்பெயர் என தமிழகத்தில் கூப்பாடுபோட்டு பெயரை மாற்றப்பண்ணிவிட்டார்கள்.

சண்டியர் என்பது சாதிப்பெயரா? நல்ல தமிழ்ப்பெயர் படத்திற்கு வைக்கவிடமர்டார்கள்.ஐ லவ் யுh டா என்றால பேசாமல் இருப்பார்கள்.
Reply
#3
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#4
நான் கேள்விப்பட்டேன் யாழ் சண்டியர் என்பது நம்ம கணேஷ் அடிக்கடி சொல்வது போல.. வன்முறையை து}ண்டும் பெயராக இருக்கிறது என்று அதை மாற்றச் சொன்னார்களாம். :|
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
கமல் படங்கள் பற்றிய ஒரு தகவலை ஒரு பத்திரிகையில் படித்தேன். அவர் நடித்த படங்களும் அவர் எந்த படங்களில் சுட்டார் என்பதையும் வலு விலாவாரியாக பட்டியல் போட்டுள்ளனர். அதை விரைவில் தருகிறேன். சரி அது கிடக்கட்டும். இந்த விருமாண்டியை எங்கை சுட்டிருப்பார் எண்டது படம் வந்த பிறகு தான் தெரியும். சுட்டாலும் கமல் திறமா சுட்டு பார்க்க வைத்துவிடுவார்.
Reply
#6
சண்டியர் பாட்டுக்கள் எப்படி மொகமட்? எங்காவது mp3 கிடைக்குமா?
Reply
#7
இந்தாங்கோ லிங்....

<img src='http://www.tamilbeat.com/images/sand.jpg' border='0' alt='user posted image'>

http://www.tamilbeat.com/newsongs/sand.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
அதிமுக எம்.பியின் மனைவி, மகள்கள் அட்டகாசம்: துணை நடிகர் மீது தாக்குதல்!

சென்னை:

<img src='http://thatstamil.com/images16/cinema1-275.jpg' border='0' alt='user posted image'>
கலாட்டா நடந்த தலித் எழில்மலை வீட்டின் முன் கூடிய கூட்டம்
---------
துணை நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக எம்.பி. தலித் எழில்மலையின் மனைவி, மகள் உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் தலித் எழில்மலை. பின்னர் அதிமுகவுக்குத் தாவி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியானார்.

இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது.

இந்த வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பங்களாவில் சத்யராஜ், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கும் அடிதடி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹாடோஸ் சாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் வீரமணி என்ற துணை நடிகர். தலித் எழில்மலையின் வீட்டின் அருகே வந்தபோது, செல்போன் ஒலிக்கவே வண்டியை நிறுத்திப் பேசினார்.

அப்போது தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், வாசலில் நின்று போன் எல்லாம் பேசக் கூடாது என்று வீரமணியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நான் வாசலில் நிற்கவில்லை. ரோட்டில் நின்று தான் பேசுகிறேன் என்று பதில் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்னம்மாள் கேட்டைத் திறந்து கொண்டு வேகமாக வந்து வீரமணியைப் பார்த்து அடிப்பது போல படு ஆவேசமாக பேசினார். உடனே அவரது மகள் எழில் காத்தரினும் தாயாருடன் சேர்ந்து கொண்டு வீரமணியை வாடா, போடா என்று ஒருமையில் விளித்து மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அவரது வீட்டில் இருந்த மேலும் சில பெண்களும் அங்கு வந்து வீரமணியை தாக்க ஆரம்பித்தனர்.

பின்னர் வீரமணியின் மோட்டார் சைக்கிளை தங்களது வீட்டுக்குள் கொண்டு சென்ற அந்தப் பெண்கள், அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

வீரமணி தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த மற்ற துணை நடிகர்கள் வீரமணிக்கு ஆதரவாக திரண்டனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் வீரமணிக்கு ஆதரவாக அங்கு கூடினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தலித் எழில்மலையின் வீட்டுக்குள்ளிருந்த சில பெண்கள் துப்பாக்கியை எடுத்துக் காட்டி சுட்டு விடுவதாக கூட்டத்தினரை மிரட்டினர்.

இந் நிலையில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் சத்யராஜ், நெப்போலியன் ஆகியோர் அங்கு விரைந்து தலித் எழில்மலையின் குடும்பத்தினரையும், துணை நடிகர்களையும் சமாதானப்படுத்தினர்.

ஆனால், அப்போது அங்கு வந்த எழில்மலையின் இன்னொரு மகளான வழக்கறிஞர் எழில் கரோலின், இதில் நீங்கள் தலையிடக் கூடாது என்று கூறி சத்யராஜ், நெப்போலியனைத் திட்டினார். மேலும் அவர்களையும் ஒருமையில் பேசினார்.

இதையடுத்து நெப்போலியன் அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் துணை நடிகர்களும், பொது மக்களும் தெருவில் அமர்ந்தனர்.

இந்தச் சம்பவத்தால் ஹாடோஸ் சாலை பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

தாக்கப்பட்ட துணை நடிகர் வீரமணியும் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்க்கையிலேயே பெண்கள் கூட இவ்வளவு ஆபாசமாக பேசுவார்கள் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இதுபோன்ற பெண்களை நான் பார்த்ததே இல்லை என்றார்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தலித் எழில்மலையின் மகள்கள் மற்றும் அவரது மனைவியை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

வீரமணி மீது தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாகப் பேசி பொருட்களை பறித்தது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், மகள் எழில் கரோலினா உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல வீரமணி மீது அத்துமீறி நுழைந்தது, சட்டவிரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

------------
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<img src='http://www.thatstamil.com/images18/cinema/kamal-425.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.thatstamil.com/images18/cinema/kamal-300a.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album15/l.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album15/e.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album15/2_G.jpg' border='0' alt='user posted image'>


விரு.. விரு.. விருமாண்டி விமர்சனம்

ஆர். ரமேஷ்

சின்னக்கோளாறுபட்டி, நல்லமனநாயக்கனூர் கிராமங்களுக்கிடையே நீண்ட நாள் பகை. சின்னகோளாறுபட்டியைச் சேர்ந்த விருமாண்டியின் (கமல்) பம்ப் செட் நிலத்தை வாங்க அதே ஊரைச் சேர்ந்த கொத்தாளத் தேவரும் (பசுபதி), நல்லமனநாயக்கனூரைச் சேர்ந்த நல்லம நாயக்கரும் (நெப்போலியன்) முயற்சிக்கிறார்கள்.

இதனையடுத்து நேரும் கொலைகளும். பழிவாங்கலும்தான் கதை. திரைக்கதையமைப்பில் நெருப்பும் பற்றிக் கொள்ளும் வேகம் இருப்பதால், கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

படத்தில் கமல், பசுபதி, அபிராமி மூவரும் சேர்ந்து நடிப்புத் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். திமிர்ந்த உடல், முறுக்கிய மீசை, மடக்கி விடப்பட்ட சட்டை, நக்கல் பேச்சு என நிஜ சண்டியராகவே வலம் வருகிறார் கமல்.

கமலுக்கு இணையாக, சில இடங்களில் கமலைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, வில்லனாக வரும் பசுபதி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அபிராமிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனை. அன்னலட்சுமியாகவே வாழ்ந்திருக்கிறார். கட்டாய மணம் செய்து வைக்கப்படும் காட்சியில் கலங்கடிக்கிறார். இந்தப் படம் மூலம் கிடைத்த பெயரை அடுத்த படங்களில் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

கமலும், அபிராமியும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் முத்தச் சத்தம். பின்னணி இசை, பாடல்களில் இளையராஜா ஜொலிக்கிறார். படம் முழுவதும் தனது இசைத் தோரணங்களைக் கட்டி, அழகு கூட்டியிருக்கிறார். முக்கியமாக கமல் அபிராமி சந்திப்பில் எல்லாம் ஒலிக்கும் பின்னணி இசையில் ஒரு 'ஜீலீர்'.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக மூக்காணங்கயிறு இல்லாத மாடுகளுடன் கதாநாயகன் மோதும் நிஜ ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படைப்பாளியாக கமல், திரைக் கதையமைப்பிலும், வசனத்திலும் கோலோச்சியிருக்கிறார். படம் முழுவதும் மதுரை பக்கத்துக்கு கிண்டல் தமிழ் விளையாடுகிறது.

திரைக் கதையமைப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் புதிது. மூன்று தளங்களில் திரைக்கதை நகர்கிறது. கொத்தாளத்தேவரின் பார்வை, விருமாண்டியின் பார்வை என்ற தளத்திலும், ரசிகர்களின் பார்வை என்ற மூன்று வித்தியாசமான தளங்களில் கதை பயணிக்கிறது. ஒவ்வொரு பார்வையிலும் கதைமாந்தர்களின் வேறுபட்ட முகங்கள் வெளிப்படுகின்றன.

இதே போன்ற முயற்சி சிவாஜி நடித்த 'அந்த நாள்' என்ற படத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

படத்தில் சின்னச் சின்ன குறைகள். டப்பிங் இல்லாமல் வசனங்கள் அனைத்தும் நேரிடையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்பது புரிய வில்லை. குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சியில் வெறும் கூச்சல்தான் கேட்கிறது.

ஜல்லிக்கட்டு முடிந்ததும் ஆரம்பிக்கும், கொம்புல பூவைச் சுத்தி என்ற பாடலில் வெற்றிக் களிப்பை அப்படியே, அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. படத்தில் பாடலை பாதியிலேயே முடிப்பது ஏனோ?

பொதுவாக கமலின் படங்களில் அழுத்தமான க்ளைமாக்ஸ் இருக்கும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். க்ளைமாக்ஸில் மரண தண்டனை கூடாது என்று ரோகிணியும், மாலனும் (பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தனும் இருக்கிறார்) பேசுவது, மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பேட்டியைப் பார்ப்பதுபோல் அழுத்தமில்லாமல் இருக்கிறது.

வன்முறை அதிகமே. படம் முடிந்ததும், யாராவது கையை தூக்கினால் அறுவாளை உருவுவது போல பிரமை வருகிறது.

காரமான 'ஆக்ஷன்' பொங்கல் விருந்து வைத்திருக்கிறார் கமல். போய் சாப்பிடலாம்!

<img src='http://www.thatstamil.com/images18/cinema/kamal-375.jpg' border='0' alt='user posted image'>


Thanks thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)