Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்...2004
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40058000/jpg/_40058633_voting_203body_bbc.jpg' border='0' alt='user posted image'>

<b>முதல் கட்ட வாக்குப் பதிவு மும்முரம் வன்முறைக்கு 12 பேர் பலி</b>

நாட்டின் 14வது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதுவரை நடந்த தேர்தல் வன்முறைகளில் 6 துணை ராணுவப் படை வீரர்கள், தேர்தல் அதிகாரி, ஒரு நக்ஸலைட், லாலு கட்சியின் தொண்டர்கள் இருவர் உள்பட மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் இன்று 140 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 13 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடக்கிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இன்று சட்டப் பேரவைகளுக்கான முதல் கட்டத் தேர்தலும் நடக்கிறது. பகல் 2 மணி வரை அஸ்ஸாமில் 42 சதவீதமும், கர்நாடகத்தில் 40 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 35 சதவீத வாக்குகளும், சட்டீஸ்கரில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குஜராத்தில் மிக மோசமாக மதியம் 2 மணி வரை 23 சதவீத வாக்குகளே பதிவாயின.

இன்று காலை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நான்கு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை உடைத்துவிட்டுச் சென்றனர்.

இங்கு நக்சல்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 துணை ராணுவப் படையினர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்குச் சாவடியைத் தாக்கி அதிகாரிகளை விரட்டிய நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். ராஞ்சியில் தேர்தல் அதிகாரி ஒருவர் கிரனைட் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

அதே போல பிகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் போட்டியிடும் குர்சாகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஒரு வாக்குச் சாவடியின் வெளியே குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கு கலவரம் வெடிக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.

மேலும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தொண்டர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் வாக்குப் பதிவு படு விறுவுறுப்பாக நடந்து வருகிறது. காலை 10 மணிக்குள் அங்கு 20 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் வாக்குச் சாவடிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய கிரனைட் குண்டு தாக்குதலில் இரு வீரர்கள் பலியாயினர். தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் இருந்து காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் பரூக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அதே போல மிசோரமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுவரை மொத்தம் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டருக்கு கத்திக் குத்து விழுந்தது. மணிப்பூரில் ஒரு வாக்குச் சாவடி அதிகாரி கடத்திச் செல்லப்பட்டார்.

இன்று குஜராத், மகாராஷ்டிரத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 21 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. அதே போல 147 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 120 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது.

பிகார், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் தலா 11 மக்களவைத் தொகுதிகளிலும் அஸ்ஸாம். ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 6 தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

காஷ்மீர், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் தாதர், டையூ தாமன், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள்ல் உள்ள தலா ஒரு தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடக்கிறது.

வாக்குப் பதிவு நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் 316 கம்பெனிகள் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 20,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிகாரில் மட்டும் 6,400 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போல கர்நாடகத்தில் 5,000 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39866000/jpg/_39866316_machine.jpg' border='0' alt='user posted image'>

மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடக்கும். சுமார் 17.5 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர். இந்த முறை முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமே ஓட்டுப் பதிவு நடக்கிறது.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40056000/jpg/_40056815_vend203.jpg' border='0' alt='user posted image'>

[size=9]Our thanks to thatstamil and bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
முதல் கட்ட தேர்தல் 'எக்ஸிட் போல்': பாஜக முன்னிலை

நேற்று முதல் கட்டத் தேர்தல் நடந்த 140 மக்களைத் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட 'எக்ஸிட் போல்' முடிவுகளின்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்கு எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன.

பிரபல கருத்துக் கணிப்பாளர் பிரணாய் ராயின் என்.டி.டி.வி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏ.சி. நீல்சன் அமைப்பு ஆகியவை நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி,

தேர்தல் நடந்த 140 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு 75 இடங்களும், காங்கிரஸ் கூட்டணக்கு 53 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பா.ஜ.கவுக்கு பெரும் எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்கவுள்ளன. குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

அதே நேரத்தில் ஆந்திராவிலும் பிகாரிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவின் ஹைடெக் முதல்வர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன.

பிகாரில் லாலு பிரசாத் யாதவின் உதவியாலும், ஆந்திராவில் தனி மாநிலம் கோரும் தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியுடன் கூட்டணி அமைத்ததாலும் காங்கிரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த முதல் கட்டத் தேர்தல் முடிவுகள் மற்ற 4 கட்டங்களிலும் தொடர்ந்தால், பா.ஜ.க கூட்டணிக்கு மொத்தம் 260 முதல் 280 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 160180 இடங்கள் கிடைக்கலாம் என்றும் பிரணாய் ராய் கூறுகிறார்.

மற்ற கட்சிகளுக்கு 100 இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது. 260 இடங்கள் மட்டுமே கிடைத்தால் பா.ஜ.கவுக்கு ஆட்சியமைக்க 12 இடங்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

மற்ற எக்ஸிட் போல் முடிவுகள் விவரம்:

என்.டி.டிவைப் போலவே இந்தியா டுடேயின் ஆஜ் தக் டிவியும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

அதன்படி 140 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு 93 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜீ டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 63 முதல் 78 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 35 முதல் 50 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைத்துள்ளது.

ஸ்டார் டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 80 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 53 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 7 இடங்களும் கிடைக்கும்.

சகாரா டிவி நடத்திய எக்ஸிட் போலின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 82 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 55 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இந்திய அரசியல் களத்தில் பெண்கள் படும்பாடு....!


சோனியா குறித்து அவதூறு: நீதிமன்றத்தில் ஆஜராக ஜெவுக்கு சம்மன்

சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதா திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

சோனியா காந்தி இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் அவரை வெளிநாட்டவர் என்றும், அவரது பதிபக்தி குறித்து விமர்சித்தும் ஜெயலலிதா பேசுவது சட்ட விரோதமானது, அது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம் என்று கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரைக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதனை விசாரித்த திருச்சி முன்சீப் கோர்ட் நீதிபதி கலாவதி, வரும் ஜூன் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஆண்டாளம்மா.. ஜெயலலிதா


ஜெயலலிதாவை மலடி என்று வர்ணித்து, கருணாநிதி தனது வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெண்கள் மத்தியில் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா.

எங்கள் அம்மாவை, வராது வந்த மாமணியை, நம்மில் ஒருவராக வாழ்ந்து வரும் காவியத் தலைவியை, என்றும் கருணாநிதி விமர்சித்து, வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டியுள்ளார்.

நான் திருப்பி அடித்தால் யாரும் தாங்க முடியாது என்று, கைகளைத் தூக்கக் கூட முடியாத, தள்ளாத வயதில், இவர் கொக்கரிக்கிறார் என்றால், இவரது இறுமாப்பை என்னவென்று சொல்வது?

கலியுக ஆண்டாளாக வாழ்ந்து வரும் எங்கள் தலைவியைப் பற்றி ஒன்றும் தெரியாத கருணாநிதி இனியும் அப்படிப் பேசினால், மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் ஓ.பி.

--------------------------------

பெண்களை இழிவுபடுத்துவது யார்?: கருணாநிதி

எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதை இல்லாமல் மமதையோடு முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

நம்முடைய கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருகிறார்கள். அதைப் பார்த்து ஆளுங்கட்சி பொறாமையில் ஏதேதோ பேசுகிறார்கள்.

நாம் இப்போது இரண்டு ஆளுங்கட்சிகளை தேர்தலில் சந்திக்கின்றோம். தேர்தலை முன்கூட்டியே நடத்தப்போகிறோம் என்பதைக் கணித்து முன்பே விளம்பர வெளிச்சம் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் இந்தியா ஒளிர்கிறதாம்.

பிரதமர் வாஜ்பாய் அண்மைக்காலமாக ஏதேதோ பேசுகிறார். வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு எனக்கு பிரதமராக விருப்பம் இல்லை என்கிறார். பிறகு அத்வானிதான் பிரதமர் என்கிறார். கூட்டணி ஆட்சி பிடிக்கவில்லை, பா.ஜ.க மட்டும் தனித்து ஆள வேண்டும் என்று கூறுகிறார்.

பின்னர் அவர் கூறிய கருத்தை அவரே மறுக்கிறார். அப்படி சொல்லவில்லை என்கிறார். அவருக்கே இப்படி குழப்பம் ஏற்பட்டால் மற்றவர்களின் நிலை?

அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். நான் பெண்களை இழிவுபடுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார். நமது கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்காக இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

பெண்கள் யாரையும் இழிவாக பேசுகிறவன் கருணாநிதி அல்ல. மாறாக அதைக் கண்டிப்பவன் நான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி தரக்குறைவாக பேசிய முதல்வர் ஜெயலலிதாவை நான் கண்டித்ததால் பெண்களை இழிவுபடுத்துகிறேன் என்று அர்த்தமா?

ராகுல்காந்தியின் கன்னிப்பேச்சைக் கேட்டு நான் உருக்கமுடன் கூறியதை கிண்டல் செய்த ஜெயலலிதாவிற்கு நான் பதில் அளித்து பேசியது, பெண்களை இழிவுபடுத்துவதா?

பெண்களை இழிவுபடுத்துவது யார்? நானா? ஜெயலலிதாவா? கணவர் ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின்னும் நான் வீழ்ந்தாலும் இந்தியாவில் வீழ்வேனே தவிர வேறு எங்கேயும் செல்ல மாட்டேன் என்று கூறி இங்கேயே வாழ்ந்து வருகிறாரே? அவரை பதிபக்தி இல்லாதவர் என்று கூறுவது இழிவான பேச்சு அல்லவா?

ஜெயக்குமாரின் துணைவியார் என்னுடைய சகோதரியைப் போன்றவர். அவருக்கு பதிபக்தி கிடையாது என்று சொன்னால் சொன்னவர் நாக்கை ஜெயக்குமார் அறுக்க மாட்டாரா? இதையெல்லாம் விட, சோனியாகாந்தியைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டாமா?

நான், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சோனியா காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் தம்பி வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை எல்லாம் மமதையோடு மரியாதை இல்லாமல் ஜெயலலிதா பேசுகிறார். மே 10ம் தேதி வரை தான் அவர் அவ்வாறு பேச முடியும். அதற்கு பிறகு இவ்வாறு பேச முடியுமா என்பதை ஜெயலலிதா எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார் கருணாநிதி.

ஆற்காடு வீராசாமி கண்டனம்:

இந் நிலையில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கருணாநிதி ராகுல்காந்தியின் கன்னிப்பேச்சைப் பற்றி உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். அது குறித்து ஜெயலலிதா கருணாநிதியை கேலி செய்து அநாகரிகமாகப் பேசியதைத் தொடர்ந்து கருணாநிதி ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருந்தார்.

அந்த விமர்சனத்தையே தாங்கிக் கொள்ள முடியாத அதிமுகவினர் தன்னுடைய தலைவியை திருப்திபடுத்துவதற்காக கருணாநிதி சொல்லாததையும், பேசாததையும் இட்டுக்கட்டி அறிக்கை என்ற பெயரால் ஒரு பக்கத்திற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்போதே பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்களுக்கு ஜெயலலிதா, சேலம் கண்ணன் மூலம் ஒரு கடிதம் அனுப்பி, அந்தக் கடிதத்தில் என்னுடைய வளர்ச்சியை கண்டு பொறடமைப்படுகிறார் என்றும் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் தன்னை முதலமைச்சராக ஆக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

எம்ஜிஆர் இறந்தவுடன் அவருடைய மனைவி ஜானகி மோரில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்று பழி சுமத்தியவர் தான் ஜெயலலிதா.

இத்தகைய அநாகரிகமான பேச்சுகளுக்கெல்லாம் இலக்கணமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு வக்கலத்து வாங்கி அறிக்கை விடுகின்றவர்களின் பரிதாப நிலையைக் கண்டு நாட்டு மக்கள் சிரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)