04-20-2004, 06:29 AM
தீக்குள் விரலை வைத்தேன்
எஸ். கே. விக்னேஸ்வரன்
""பிரயாண அனுபவங்கள் என்று மட்டும் இந்நூலைக் கூறி விட முடியாது. இலங்கையின் அரசியலை வரலாற்று ரீதியாக அலசியதோடு, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களது இன்றைய துயர் தரும் பிரச்சினையை அவற்றின் அடி நாதத்துடன் அங்குள்ள கலை இலக்கியப் படைப்புகளையும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார்."" - தீக்குள் விரலை வைத்தேன் நூலைப்பற்றி நூýன் அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்ஸீசெ. கணேசýங்கன் அவர்கள்.
""இலங்கையின் வாழ்க்கையில் உணர்ந்தவை, சந்தித்தவை என்பதாகத் தொடங்கும் நூல், தொடங்கும் இடத்தில் இருந்து விடுபட்டு, அரசியல், பண்பாடு, இலக்கியம், போர்ச்சூழல் என்ற தளங்களில் பிரவேசிக்கின்றது. சமகாலப் பயண இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாகக்கூட இந்நூலைக் கருதலாம்."" - இது நூலை வெளியிட்ட ராஜராஜன் பதிப்பகத்தார்ஸீதமது பதிப்புரையில் இந்நூல் பற்றி வெளிப்படுத்துகின்ற மதிப்பீடு.
""பயண இலக்கியம் என்பது கண்ணில் பார்த்து ரசித்தவற்றை அப்படியே சுவைபட எழுதுவது என்ற நடைமுறையை மாற்றி, பார்த்தவற்றைக் கருவியாகக் கொண்டு பார்க்க முடியாதவற்றை நுட்பமாக அறிந்து எழுதுதல் என்பதாக நான் என்னை அறியாமலே வளர்ச்சி அடைந்தேன்."" - இது மகேந்திரன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ள விதம்பற்றிக் கூறுகின்ற ஒரு பகுதி.
இந்த மூன்று மதிப்பீடுகளும் இந்நூல், வெறும் பயண அனுபவமாக இல்லாமல், அதை ஒட்டி இலங்கையின் சமகால நிலைபற்றிய 'பன்முகப் பார்வை"யுடன் எழுதப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
நூல்பற்றிய தனது சொந்தப் பதிவுகளை முன்வைக்கப்போகும் ஒருவருக்கு இத்தகைய குறிப்புகள் தவிர்க்க முடியாமல் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. தனது சொந்த அபிப்பிராயங்களைச் சொல்கின்ற அதே வேளை இந்தக் குறிப்புகள் பற்றிய அபிப்பிராயத்தையும் சொல்ýயாக வேண்டிய நிலை அவருக்கு வந்துவிடுகிறது. ஒரு வகையில் இவை வாசகர்கள் ஓர் அபிப்பிராயத்தை மேற்கொள்வதற்கான வழிகாட்டல் குறிப்புகளாக அமைந்தாலும், இன்னொரு வகையில் நூýல் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக மட்டுமன்றிச் சொல்லப்படாத விடயங்கள் பற்றியும் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சந்தேகமில்லாமல் "தீக்குள் விரலை வைத்தேன்" மேலே குறிப்பிட்டிருப்பது போல் ஒரு வித்தியாசமான நூல்தான். 'பயணக்கதை' என்ற பெயரில் அது வளமையான எந்தக் 'கதை விடல்'களையும் செய்யவில்லை. நூýன் முன் அட்டையிலோ அல்லது முன்பக்கங்களிலோ அது ஒரு பயணம் சம்பந்தப்பட்ட நூல் என்று எங்கேயும் குறிப்பிடப்பட வில்லை. பின்புற அட்டையில் செ. கணேச ýங்கன் கூறுகின்ற, அவரது அறிமுகவுரையிýருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியில் இது 'பயண நூல் மட்டுமல்ல' என்ற வசனம் வருகிறது. ஒரு வகையில் இதை ஒரு பயண நூல் என்ற வகையீட்டில் அடக்க யாரும் விரும்பவில்லையோ என்று தோன்றுகின்றது. பதிப்பகத்தார்கூட 'பயண இலக்கிய மரபில்' எழுதப்பட்டுள்ளது என்றும் 'பரிசோதனை முயற்சி' என்றும்தான் கூறுகிறார்கள். இந்த வகையீட்டிற்கு நியாயமான காரணங்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று நூல் எழுதப்பட்ட காலம், பயணம் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னானது. ஆசிரியரின் இந்த இலங்கைப் பயணம், தன் பயண அனுபவங்களையும் அங்குள்ள நிலைமையையும் பற்றிஸீஎழுதுவதற்காகவென மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணம் அல்ல. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்றுச் சென்று வந்த ஒரு பயணம்.ஸீஅவருடைய பெரும்பாலான பயண ஒழுங்குகள், சந்திப்புகள் அனேகமாக மு. போ. எ. சங்கத்தினராலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனவே இப்பயணத்தை முழுக்க முழுக்க ஒரு சுயாதீனமான ஆசிரியரின் தேடலுக்கான பயணம் என்று சொல்வது சாத்தியம் இல்லை. இந்தக் காரணங்கள் 'பயண நூல்' என்று இதை வகைப்படுத்தலாமா என்ற கேள்வியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
எவ்வாறாயினும் இந்நூல் இலங்கையின் சமகால நிலைபற்றி, அதற்கான பின்னணிகளை வரலாறு, பண்பாடு, கலைப் படைப்புகள், ஆய்வுகள் மற்றும் தனிநபர் அபிப்பிராயங்கள், அனுபவங்கள் என்பவற்றினூடாகத் தேடிக் கண்டடைந்து பதிவுசெய்ய முயன்றிருக்கிறது என்பது உண்மையே. இந்தத் தேடலும் அதற்கான உழைப்பும் ஆசிரியரிடம் காணக்கூடியதாக இருக்கிற விசேடமான பாராட்டுக்குரிய அம்சங்கள். எளிமையான சிக்கலற்ற நடை, வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஓட்டம் என்பன நூலுக்கு இன்னும் சிறப்பைத் தருகின்றன. பல்வேறு மட்டங்களில் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்பட்ட ஆய்வுகள், சேகரிக்கப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட செய்யப்படாத நிகழ்வுகள் போன்றவற்றை ஒன்றாக ஒரே நூýல் காணக் கிடைப்பது இந்நூலுக்குரிய தனிச் சிறப்பு.
தனது பயணம் திருமலை, மலையகம், கொழும்பு என்ற அளவுக்குள் குறுக்கப்பட்டிருந்தபோதிலும், முடிந்தளவுக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் பற்றிய தகவல்களையும் அவர் திரட்டித் தொகுத்துள்ளார். இலங்கையின் இன்றைய நிலை, வரலாற்றுப் பின்னணி, அரசியல், பண்பாட்டுப் போக்குகள் என்பவை பற்றிய தகவல்களை, இலங்கை பற்றிப் போதியளவு தெரிந்துகொண்டிருக்காத வாசகர்களுக்கு இந்த நூல் வழங்குகிறது என்று சொல்லலாம்.
இலங்கை வாழ் மக்களது நடவடிக்கைகள் பண்பாடு, பழகுமுறை, உணவுப் பழக்க வழக்கங்கள், கலைப்படைப்புகள் என்பவை தொடர்பான ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்புகள், அவற்றை அவர் தனது பிற அனுபவங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் இயல்பு, வரலாற்று வேர்களைக் காண எடுக்கும் முயற்சி என்பவற்றில் அவர் காட்டும் அக்கறை என்பவற்றிற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நடேசையா தொடர்பான அவரது பதிவுகள், மலையக மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய சித்திரிப்பு, யாழ் டச்சுக் கோட்டை பற்றிய விபரங்கள், கண்டி அரசனின் இயல்பு, யாழ் நூலகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், யாழ்ப் பாணத்திýருந்து முஸ்ýம்கள் வெளி யேற்றப்பட்டமை போன்றவை அவரது கூர்ந்த கவனிப்புக்கும் தேடலுக்குமான சில உதாரணங்கள். ('சேகுவாரா' இயக்கம் என அழைக்கப்படுகின்ற 'மக்கள் விடுதலை முன்னணி' பற்றிய அவரது தகவல்களில், அதன் பெயர்ஸீஎப்படி அவருக்குத் தெரியாமல் போயிற்று என்பது ஆச்சரியமூட்டுகிறது.ன தனது பயணத்தை மையமாக வைத்துச் சுவையான வாசிப்புக்கு உகந்த விதத்தில் அவர் இலங்கையைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
335 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இருபத்தி எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாயங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையாகத் தோன்றவில்லை. பெருமளவுக்கு அவை வெவ்வேறு விடயங்கள் பற்றிப் பேசுபவையாக இருந்தபோதும், நூலுக்கான நோக்குடன் அல்லாமல் வேறு ஏதோ காரணத்திற்காக (சில வேளை தொடராக வெளியிடும் வசதிக்காக இருக்கலாம்) பிரிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. ஆயினும் இது நூýன் வாசிப்பு ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு கவனமான எடிட்டிங் அல்லது செப்பனிடல் மூலமாக இதை மேலும் இறுக்கமாக்கியிருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சில விபரப் பிழைகள், தகவல் குறைகள் போன்றவற்றையும் (அச்சுப்பிழைகள் அல்ல) இதன் மூலம் தவிர்த்திருக்க முடியும். உதாரணமாக, இலங்கை வாழ் முஸ்ýம்களை 'இஸ்லாமியத் தமிழர்' என்று (பக்கம் 20) எழுதுவது தமிழர் சிங்களவர் மோதல் 'மிகுந்த தொன்மையைக் கொண்ட'தாக (பக். 21) குறிப்பிடுவது, திட்டமிட்டக் குடியேற்றம் மன்னாரிலும் நடந்ததாக வருவது (பக். 23), இலங்கைப் பயணத் திகதிகளைப் பற்றிய விபரமெதுவும் இல்லாமல் (பக். 29) இருப்பது, யாழ்ப்பாணத்திýருந்து புýகளால் வெளியேற்றப்பட்ட முஸ்ýம்களின் தொகை பற்றிய தகவற்பிழை (சரியான தகவல் 40000 முஸ்ýம்கள் - பக். 82), தமிழ் மொழி முஸ்ýம்களால் அராபிய மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தகவல் (பக். 85) இன்னமும் குடியுரிமை பெறாத இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய மலையக மக்கள் இலங்கையில் இருக்கிறார்கள் (பக். 118) போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.
தவிரவும் ஆசிரியரது பயணம் மு. போ. எ. சவினால் ஒழுங்கு செய்யப்பட்டதாலோ என்னவோ வேறு சில தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. இலங்கையில் உள்ள பிற அரசியல், இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டவர்களுடனான தொடர்பும் அவர்களுடைய கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன எனத் தோன்றுகின்றது. இந்த விடயம் தொடர்பாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர் இ. மு. போ. எ. சவை ஒரு பரந்த ஜனநாயகப் பண்புள்ள அமைப்பாகக் கருதிவிடுவதுதான். ""முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியப் பேரரங்கு யாரையும் ஒதுக்கிப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை.""(பக். 35) என்று அவர் எழுதும்போதே இந்தத் தவறு நிகழ்ந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் பல இடங்களில் தவறான சில முடிவுகளை எடுக்கக் காரணமாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக, சிங்கள எழுத்தாளர் முன்னணி பற்றிய மிகை மதிப்பீடு, "இஸ்லாமியத் தமிழர்" என்ற பதத்தைப் பயன்படுத்துதல், இலங்கையின் இனப் பிரச்சினையோடொட்டிய சிக்கல்களை முடிந்தளவுக்கு மேலெழுந்த வாரியாகவே சொல்ýவிட்டு விடல் போன்ற ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலை மு. போ. எ. சவின் வரையறைகளுக்கு மேலாக வளர்ந்து நிற்கிறது. மலையக மக்களிடையே 'மலையகத் தமிழர்' என்ற தேசிய அடையாளமும் முஸ்ýம்களிடையே "இலங்கை முஸ்ýம்கள்" என்ற தனித்துவமும் தேசிய அடையாளமும் இன்று பலம் பெற்றுவிட்டிருக்கின்றன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற பொதுவான பதாகையின் கீழ் இன்று இவர்களை இணைத்துவிட முடியுமான நிலை இல்லை. அவர்களது தனித்துவமும் தேசிய அடையாளமும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலான ஓர் அரசியல் கூட்டு மட்டுமே நடைமுறை நிலைமைக்குப் பொருத்தமானது என்ற சூழலே இன்று நிலவுகிறது. 'இஸ்லாமியத் தமிழர்" போல என்ற வகையீடு முஸ்ýம்களை வெறுமனே 'கிறிஸ்தவத் தமிழர்" போல 'இஸ்லாமிய மதத் தமிழர்கள்' என்று குறிப்பிடுகிறது. இது இன்று எழுந்துள்ள இனத்துவச் சிக்கல்களைப் பற்றிய தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது. முஸ்ýம்கள் தம்மைச் "சோனகர்" என்று அழைப்பது குறித்து இன்று தீவிரமாகச் சிந்தித்து வருகிறார்கள் என்றால் அது அவர்கள் தமது தனித்துவ அடையாளத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் கோருகின்றார்கள் என்பதன் வெளிப்பாடுதான். இந்தத் தனித்துவ அடையாளம் தமிழர்களுடனான உறவை மோசமாக்கும் என்ற கருத்து வெறுமனே ஆபத்தானது மட்டுமல்ல, பல பின்விளைவுகளைத் தரக்கூடிய அடக்குமுறை அம்சத்தை உள்ளகத்தே கொண்டதும் ஆகும்.
நூýல் எடுத்தாளப்படுகின்ற கவிதைகள், கதைகளில் பலவும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு அல்லது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட பிரச்சினைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. தேசிய விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம், இனத்துவ முரண்பாடுகளின் தன்மை, மலையகத்தின் எழுச்சி போன்ற பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல படைப்புகள்வந்துள்ளன. ஆத்மா, பெüசர், றஷ்மி, சோலைக்கிளி, எச். எம். பாறுலீக், முகமட் அபாலீ, அஸ்ரப் சிஹாப்தீன் போன்ற முஸ்ýம் படைப்பாளிகளையோ உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்றோரையோ சந்திக்க முடிந்திருந்தால், சாந்தனின் இடைக்காலப் படைப்புகளுடன் மூன்றாவது மனிதன், சரிநிகரில் வெளியான அரசியற் கட்டுரைகள், படைப்புகள் என்பவற்றுடன் பரிச்சயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தால், எம். ஏ. நுஃமான், எஸ். எல். எம். ஹனிபா, எஸ். பால கிஸ்ணன், ஹஸ்புல்லா, மெüலவி சுஃபியான் போன்றோருடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் இலங்கைப் பிரச்சினையின் இன்றைய நிலை தொடர்பான இன்னொரு பக்கத்தைத் தெளிவாக முன்வைத்திருக்க முடியும்.
பெண்ணியம் தொடர்பான ஒரு சில கருத்துகள் நூýல் ஓரிடத்தில் வந்து போகின்றன. பெண் மீதான ஒடுக்குமுறை, பாýயல் வன்முறை, அவளுக்குச் சமுதாயத்தில் உண்டான இடம் என்பன தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் இன்று இலங்கையில் மிகவும் இயல்பான விடயங்களாகிவிட்டன. முதலாளித்துவப் பத்திரிகைகளில்கூட இந்த விடயங்கள் வெளிவருகின்றன. ஆயினும், பெண்ணியச் சிந்தனைகள் பலமாக இங்கு வேரூன்றிவிட்டதாகக் கூற முடியாது. கலை, பண்பாடு, மொழி போன்ற விடயங்களில் இது இன்னமும் இறுக்கமான நிலையிலேயே உள்ளது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதற்காகப் பல பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவந்துள்ளனர். ஆயினும் இந்தப் போராட்டத்தில் மு. போ. எ. சவிற்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நூýல் இந்தப் பக்கம் பேசப்படவே இல்லை. ஆசிரியரின் பயணத்திற்குக் காரணமான இலக்கிய மாநாடுகள், அவற்றுடன் தொடர்புள்ள இலக்கியச் சந்திப்புகள் போன்றவற்றை ஒட்டிய கருத்தாடல்கள் விவாதங்கள் அனுபவங்கள் பற்றிய விபரங்களை இந்நூல் அவ்வளவு விரிவாகவோ ஆழமாகவோ தர முற்படவில்லை. அதே வேளை பிற விடயங்களில் அதன் பார்வை அனுபவம் முழுமையுறாமல் இருக்கிறது. இது இன்னும் சிறப்புற வந்திருக்கக்கூடிய ஒரு நூலை, இடைத்தர நூல் என்ற மட்டத்தில் இருத்திவிடுகிறது. கூடவே இக்குறிப்பின் ஆரம்பத்தில் தரப்பட்ட மதிப்புரைகளுக்குரிய கனதியைப் பெற்றுக்கொள்ளவும் நூல் தவறிவிடுகிறது.
ஆயினும் தீக்குள் விரலை வைக்கத் துணிந்த ஆசிரியரின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இலங்கையின் தற்கால நிலை தொடர்பாக இலங்கையரல்லாத ஒருவரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல் என்ற வகையில் இது முதலாவதும் சிறப்பானதுமான ஓர் இடத்தைத் தனக்கெனப் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
தீக்குள் விரலை வைத்தேன்
சி. மகேந்திரன்
வெளியீடு:
ராஜராஜன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி. நகர், சென்னை - 17.
பக். 336; விலை ரூ. 125
http://tamil.sify.com/kalachuvadu/kalachuv...php?id=13431757
எஸ். கே. விக்னேஸ்வரன்
""பிரயாண அனுபவங்கள் என்று மட்டும் இந்நூலைக் கூறி விட முடியாது. இலங்கையின் அரசியலை வரலாற்று ரீதியாக அலசியதோடு, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களது இன்றைய துயர் தரும் பிரச்சினையை அவற்றின் அடி நாதத்துடன் அங்குள்ள கலை இலக்கியப் படைப்புகளையும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார்."" - தீக்குள் விரலை வைத்தேன் நூலைப்பற்றி நூýன் அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்ஸீசெ. கணேசýங்கன் அவர்கள்.
""இலங்கையின் வாழ்க்கையில் உணர்ந்தவை, சந்தித்தவை என்பதாகத் தொடங்கும் நூல், தொடங்கும் இடத்தில் இருந்து விடுபட்டு, அரசியல், பண்பாடு, இலக்கியம், போர்ச்சூழல் என்ற தளங்களில் பிரவேசிக்கின்றது. சமகாலப் பயண இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாகக்கூட இந்நூலைக் கருதலாம்."" - இது நூலை வெளியிட்ட ராஜராஜன் பதிப்பகத்தார்ஸீதமது பதிப்புரையில் இந்நூல் பற்றி வெளிப்படுத்துகின்ற மதிப்பீடு.
""பயண இலக்கியம் என்பது கண்ணில் பார்த்து ரசித்தவற்றை அப்படியே சுவைபட எழுதுவது என்ற நடைமுறையை மாற்றி, பார்த்தவற்றைக் கருவியாகக் கொண்டு பார்க்க முடியாதவற்றை நுட்பமாக அறிந்து எழுதுதல் என்பதாக நான் என்னை அறியாமலே வளர்ச்சி அடைந்தேன்."" - இது மகேந்திரன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ள விதம்பற்றிக் கூறுகின்ற ஒரு பகுதி.
இந்த மூன்று மதிப்பீடுகளும் இந்நூல், வெறும் பயண அனுபவமாக இல்லாமல், அதை ஒட்டி இலங்கையின் சமகால நிலைபற்றிய 'பன்முகப் பார்வை"யுடன் எழுதப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
நூல்பற்றிய தனது சொந்தப் பதிவுகளை முன்வைக்கப்போகும் ஒருவருக்கு இத்தகைய குறிப்புகள் தவிர்க்க முடியாமல் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. தனது சொந்த அபிப்பிராயங்களைச் சொல்கின்ற அதே வேளை இந்தக் குறிப்புகள் பற்றிய அபிப்பிராயத்தையும் சொல்ýயாக வேண்டிய நிலை அவருக்கு வந்துவிடுகிறது. ஒரு வகையில் இவை வாசகர்கள் ஓர் அபிப்பிராயத்தை மேற்கொள்வதற்கான வழிகாட்டல் குறிப்புகளாக அமைந்தாலும், இன்னொரு வகையில் நூýல் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக மட்டுமன்றிச் சொல்லப்படாத விடயங்கள் பற்றியும் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சந்தேகமில்லாமல் "தீக்குள் விரலை வைத்தேன்" மேலே குறிப்பிட்டிருப்பது போல் ஒரு வித்தியாசமான நூல்தான். 'பயணக்கதை' என்ற பெயரில் அது வளமையான எந்தக் 'கதை விடல்'களையும் செய்யவில்லை. நூýன் முன் அட்டையிலோ அல்லது முன்பக்கங்களிலோ அது ஒரு பயணம் சம்பந்தப்பட்ட நூல் என்று எங்கேயும் குறிப்பிடப்பட வில்லை. பின்புற அட்டையில் செ. கணேச ýங்கன் கூறுகின்ற, அவரது அறிமுகவுரையிýருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியில் இது 'பயண நூல் மட்டுமல்ல' என்ற வசனம் வருகிறது. ஒரு வகையில் இதை ஒரு பயண நூல் என்ற வகையீட்டில் அடக்க யாரும் விரும்பவில்லையோ என்று தோன்றுகின்றது. பதிப்பகத்தார்கூட 'பயண இலக்கிய மரபில்' எழுதப்பட்டுள்ளது என்றும் 'பரிசோதனை முயற்சி' என்றும்தான் கூறுகிறார்கள். இந்த வகையீட்டிற்கு நியாயமான காரணங்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று நூல் எழுதப்பட்ட காலம், பயணம் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னானது. ஆசிரியரின் இந்த இலங்கைப் பயணம், தன் பயண அனுபவங்களையும் அங்குள்ள நிலைமையையும் பற்றிஸீஎழுதுவதற்காகவென மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணம் அல்ல. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்றுச் சென்று வந்த ஒரு பயணம்.ஸீஅவருடைய பெரும்பாலான பயண ஒழுங்குகள், சந்திப்புகள் அனேகமாக மு. போ. எ. சங்கத்தினராலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனவே இப்பயணத்தை முழுக்க முழுக்க ஒரு சுயாதீனமான ஆசிரியரின் தேடலுக்கான பயணம் என்று சொல்வது சாத்தியம் இல்லை. இந்தக் காரணங்கள் 'பயண நூல்' என்று இதை வகைப்படுத்தலாமா என்ற கேள்வியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
எவ்வாறாயினும் இந்நூல் இலங்கையின் சமகால நிலைபற்றி, அதற்கான பின்னணிகளை வரலாறு, பண்பாடு, கலைப் படைப்புகள், ஆய்வுகள் மற்றும் தனிநபர் அபிப்பிராயங்கள், அனுபவங்கள் என்பவற்றினூடாகத் தேடிக் கண்டடைந்து பதிவுசெய்ய முயன்றிருக்கிறது என்பது உண்மையே. இந்தத் தேடலும் அதற்கான உழைப்பும் ஆசிரியரிடம் காணக்கூடியதாக இருக்கிற விசேடமான பாராட்டுக்குரிய அம்சங்கள். எளிமையான சிக்கலற்ற நடை, வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஓட்டம் என்பன நூலுக்கு இன்னும் சிறப்பைத் தருகின்றன. பல்வேறு மட்டங்களில் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்பட்ட ஆய்வுகள், சேகரிக்கப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட செய்யப்படாத நிகழ்வுகள் போன்றவற்றை ஒன்றாக ஒரே நூýல் காணக் கிடைப்பது இந்நூலுக்குரிய தனிச் சிறப்பு.
தனது பயணம் திருமலை, மலையகம், கொழும்பு என்ற அளவுக்குள் குறுக்கப்பட்டிருந்தபோதிலும், முடிந்தளவுக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் பற்றிய தகவல்களையும் அவர் திரட்டித் தொகுத்துள்ளார். இலங்கையின் இன்றைய நிலை, வரலாற்றுப் பின்னணி, அரசியல், பண்பாட்டுப் போக்குகள் என்பவை பற்றிய தகவல்களை, இலங்கை பற்றிப் போதியளவு தெரிந்துகொண்டிருக்காத வாசகர்களுக்கு இந்த நூல் வழங்குகிறது என்று சொல்லலாம்.
இலங்கை வாழ் மக்களது நடவடிக்கைகள் பண்பாடு, பழகுமுறை, உணவுப் பழக்க வழக்கங்கள், கலைப்படைப்புகள் என்பவை தொடர்பான ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்புகள், அவற்றை அவர் தனது பிற அனுபவங்களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் இயல்பு, வரலாற்று வேர்களைக் காண எடுக்கும் முயற்சி என்பவற்றில் அவர் காட்டும் அக்கறை என்பவற்றிற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நடேசையா தொடர்பான அவரது பதிவுகள், மலையக மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய சித்திரிப்பு, யாழ் டச்சுக் கோட்டை பற்றிய விபரங்கள், கண்டி அரசனின் இயல்பு, யாழ் நூலகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், யாழ்ப் பாணத்திýருந்து முஸ்ýம்கள் வெளி யேற்றப்பட்டமை போன்றவை அவரது கூர்ந்த கவனிப்புக்கும் தேடலுக்குமான சில உதாரணங்கள். ('சேகுவாரா' இயக்கம் என அழைக்கப்படுகின்ற 'மக்கள் விடுதலை முன்னணி' பற்றிய அவரது தகவல்களில், அதன் பெயர்ஸீஎப்படி அவருக்குத் தெரியாமல் போயிற்று என்பது ஆச்சரியமூட்டுகிறது.ன தனது பயணத்தை மையமாக வைத்துச் சுவையான வாசிப்புக்கு உகந்த விதத்தில் அவர் இலங்கையைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
335 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இருபத்தி எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாயங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையாகத் தோன்றவில்லை. பெருமளவுக்கு அவை வெவ்வேறு விடயங்கள் பற்றிப் பேசுபவையாக இருந்தபோதும், நூலுக்கான நோக்குடன் அல்லாமல் வேறு ஏதோ காரணத்திற்காக (சில வேளை தொடராக வெளியிடும் வசதிக்காக இருக்கலாம்) பிரிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. ஆயினும் இது நூýன் வாசிப்பு ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு கவனமான எடிட்டிங் அல்லது செப்பனிடல் மூலமாக இதை மேலும் இறுக்கமாக்கியிருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சில விபரப் பிழைகள், தகவல் குறைகள் போன்றவற்றையும் (அச்சுப்பிழைகள் அல்ல) இதன் மூலம் தவிர்த்திருக்க முடியும். உதாரணமாக, இலங்கை வாழ் முஸ்ýம்களை 'இஸ்லாமியத் தமிழர்' என்று (பக்கம் 20) எழுதுவது தமிழர் சிங்களவர் மோதல் 'மிகுந்த தொன்மையைக் கொண்ட'தாக (பக். 21) குறிப்பிடுவது, திட்டமிட்டக் குடியேற்றம் மன்னாரிலும் நடந்ததாக வருவது (பக். 23), இலங்கைப் பயணத் திகதிகளைப் பற்றிய விபரமெதுவும் இல்லாமல் (பக். 29) இருப்பது, யாழ்ப்பாணத்திýருந்து புýகளால் வெளியேற்றப்பட்ட முஸ்ýம்களின் தொகை பற்றிய தகவற்பிழை (சரியான தகவல் 40000 முஸ்ýம்கள் - பக். 82), தமிழ் மொழி முஸ்ýம்களால் அராபிய மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தகவல் (பக். 85) இன்னமும் குடியுரிமை பெறாத இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய மலையக மக்கள் இலங்கையில் இருக்கிறார்கள் (பக். 118) போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.
தவிரவும் ஆசிரியரது பயணம் மு. போ. எ. சவினால் ஒழுங்கு செய்யப்பட்டதாலோ என்னவோ வேறு சில தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. இலங்கையில் உள்ள பிற அரசியல், இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டவர்களுடனான தொடர்பும் அவர்களுடைய கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன எனத் தோன்றுகின்றது. இந்த விடயம் தொடர்பாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர் இ. மு. போ. எ. சவை ஒரு பரந்த ஜனநாயகப் பண்புள்ள அமைப்பாகக் கருதிவிடுவதுதான். ""முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியப் பேரரங்கு யாரையும் ஒதுக்கிப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை.""(பக். 35) என்று அவர் எழுதும்போதே இந்தத் தவறு நிகழ்ந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் பல இடங்களில் தவறான சில முடிவுகளை எடுக்கக் காரணமாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக, சிங்கள எழுத்தாளர் முன்னணி பற்றிய மிகை மதிப்பீடு, "இஸ்லாமியத் தமிழர்" என்ற பதத்தைப் பயன்படுத்துதல், இலங்கையின் இனப் பிரச்சினையோடொட்டிய சிக்கல்களை முடிந்தளவுக்கு மேலெழுந்த வாரியாகவே சொல்ýவிட்டு விடல் போன்ற ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலை மு. போ. எ. சவின் வரையறைகளுக்கு மேலாக வளர்ந்து நிற்கிறது. மலையக மக்களிடையே 'மலையகத் தமிழர்' என்ற தேசிய அடையாளமும் முஸ்ýம்களிடையே "இலங்கை முஸ்ýம்கள்" என்ற தனித்துவமும் தேசிய அடையாளமும் இன்று பலம் பெற்றுவிட்டிருக்கின்றன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற பொதுவான பதாகையின் கீழ் இன்று இவர்களை இணைத்துவிட முடியுமான நிலை இல்லை. அவர்களது தனித்துவமும் தேசிய அடையாளமும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலான ஓர் அரசியல் கூட்டு மட்டுமே நடைமுறை நிலைமைக்குப் பொருத்தமானது என்ற சூழலே இன்று நிலவுகிறது. 'இஸ்லாமியத் தமிழர்" போல என்ற வகையீடு முஸ்ýம்களை வெறுமனே 'கிறிஸ்தவத் தமிழர்" போல 'இஸ்லாமிய மதத் தமிழர்கள்' என்று குறிப்பிடுகிறது. இது இன்று எழுந்துள்ள இனத்துவச் சிக்கல்களைப் பற்றிய தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது. முஸ்ýம்கள் தம்மைச் "சோனகர்" என்று அழைப்பது குறித்து இன்று தீவிரமாகச் சிந்தித்து வருகிறார்கள் என்றால் அது அவர்கள் தமது தனித்துவ அடையாளத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் கோருகின்றார்கள் என்பதன் வெளிப்பாடுதான். இந்தத் தனித்துவ அடையாளம் தமிழர்களுடனான உறவை மோசமாக்கும் என்ற கருத்து வெறுமனே ஆபத்தானது மட்டுமல்ல, பல பின்விளைவுகளைத் தரக்கூடிய அடக்குமுறை அம்சத்தை உள்ளகத்தே கொண்டதும் ஆகும்.
நூýல் எடுத்தாளப்படுகின்ற கவிதைகள், கதைகளில் பலவும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு அல்லது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட பிரச்சினைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. தேசிய விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம், இனத்துவ முரண்பாடுகளின் தன்மை, மலையகத்தின் எழுச்சி போன்ற பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல படைப்புகள்வந்துள்ளன. ஆத்மா, பெüசர், றஷ்மி, சோலைக்கிளி, எச். எம். பாறுலீக், முகமட் அபாலீ, அஸ்ரப் சிஹாப்தீன் போன்ற முஸ்ýம் படைப்பாளிகளையோ உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்றோரையோ சந்திக்க முடிந்திருந்தால், சாந்தனின் இடைக்காலப் படைப்புகளுடன் மூன்றாவது மனிதன், சரிநிகரில் வெளியான அரசியற் கட்டுரைகள், படைப்புகள் என்பவற்றுடன் பரிச்சயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தால், எம். ஏ. நுஃமான், எஸ். எல். எம். ஹனிபா, எஸ். பால கிஸ்ணன், ஹஸ்புல்லா, மெüலவி சுஃபியான் போன்றோருடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் இலங்கைப் பிரச்சினையின் இன்றைய நிலை தொடர்பான இன்னொரு பக்கத்தைத் தெளிவாக முன்வைத்திருக்க முடியும்.
பெண்ணியம் தொடர்பான ஒரு சில கருத்துகள் நூýல் ஓரிடத்தில் வந்து போகின்றன. பெண் மீதான ஒடுக்குமுறை, பாýயல் வன்முறை, அவளுக்குச் சமுதாயத்தில் உண்டான இடம் என்பன தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் இன்று இலங்கையில் மிகவும் இயல்பான விடயங்களாகிவிட்டன. முதலாளித்துவப் பத்திரிகைகளில்கூட இந்த விடயங்கள் வெளிவருகின்றன. ஆயினும், பெண்ணியச் சிந்தனைகள் பலமாக இங்கு வேரூன்றிவிட்டதாகக் கூற முடியாது. கலை, பண்பாடு, மொழி போன்ற விடயங்களில் இது இன்னமும் இறுக்கமான நிலையிலேயே உள்ளது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதற்காகப் பல பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவந்துள்ளனர். ஆயினும் இந்தப் போராட்டத்தில் மு. போ. எ. சவிற்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நூýல் இந்தப் பக்கம் பேசப்படவே இல்லை. ஆசிரியரின் பயணத்திற்குக் காரணமான இலக்கிய மாநாடுகள், அவற்றுடன் தொடர்புள்ள இலக்கியச் சந்திப்புகள் போன்றவற்றை ஒட்டிய கருத்தாடல்கள் விவாதங்கள் அனுபவங்கள் பற்றிய விபரங்களை இந்நூல் அவ்வளவு விரிவாகவோ ஆழமாகவோ தர முற்படவில்லை. அதே வேளை பிற விடயங்களில் அதன் பார்வை அனுபவம் முழுமையுறாமல் இருக்கிறது. இது இன்னும் சிறப்புற வந்திருக்கக்கூடிய ஒரு நூலை, இடைத்தர நூல் என்ற மட்டத்தில் இருத்திவிடுகிறது. கூடவே இக்குறிப்பின் ஆரம்பத்தில் தரப்பட்ட மதிப்புரைகளுக்குரிய கனதியைப் பெற்றுக்கொள்ளவும் நூல் தவறிவிடுகிறது.
ஆயினும் தீக்குள் விரலை வைக்கத் துணிந்த ஆசிரியரின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இலங்கையின் தற்கால நிலை தொடர்பாக இலங்கையரல்லாத ஒருவரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல் என்ற வகையில் இது முதலாவதும் சிறப்பானதுமான ஓர் இடத்தைத் தனக்கெனப் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
தீக்குள் விரலை வைத்தேன்
சி. மகேந்திரன்
வெளியீடு:
ராஜராஜன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி. நகர், சென்னை - 17.
பக். 336; விலை ரூ. 125
http://tamil.sify.com/kalachuvadu/kalachuv...php?id=13431757

