Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஈராக்கில் சிறைச்சாலைகளில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த சில படங்களை டெய்லி மிரர் பத்திரிகையும் வேறு சில ஊடகங்களும் அண்மையில் வெளியிட்டன. அவற்றின் மேற்குலகத்தினரால் மனித உரிமை பேணுப்படும் முறையை பாருங்கள் .....
<b>An American stands over a group of bound Iraqi prisoners. (AP Photo/Courtesy of The New Yorker)</b>
<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120899_iraq_pow_abuse116_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>A hooded prisoner has wires attached to his hands and is forced to stand on a box under threat of electrocution. It is believed that the wires were not actually connected to a live electrical supply. (AP Photo/Courtesy of The New Yorker)</b>
<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120897_iraq_pow_abuse115_ap.jpg' border='0' alt='user posted image'>
Two US soldiers pose next to a human pyramid of naked Iraqi soldiers. (AP Photo/Courtesy of The New Yorker)
<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120901_iraq_pow_abuse117_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>A new picture keeps the prisoner abuse scandal on the front pages. US soldiers with dogs surround a naked Iraqi prisoner as he cowers against a cell door. (AP Photo/Courtesy of The New Yorker)</b>
<img src='http://news.bbc.co.uk/media/images/40134000/jpg/_40134441_iraq_pow_abuse131_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>An American soldier points at the genitals of a naked Iraqi prisoner. (AP Photo/Courtesy of The New Yorker)</b>
<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120905_iraq_pow_abuse123_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>The body of an Iraqi prisoner, wrapped in cellophane and packed in ice. The picture is believed to have been taken at Abu Ghraib prison. (AP Photo/Courtesy of The New Yorker)</b>
<img src='http://news.bbc.co.uk/media/images/40120000/jpg/_40120903_iraq_pow_abuse122_ap.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மனித உரிமை மீறலை வெளிப்படுத்தும் இந்த படங்கள் உண்மையானவை அல்ல என்று மேற்குலக அரசாங்கம் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த படங்கள் குறித்த ஆய்வு ஒன்று ......
Army photos: Claims and rebuttals
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40104000/jpg/_40104961_front_mirror_203.jpg' border='0' alt='user posted image'>
<b>The paper claims British soldiers handed over the photos</b>
<b>Ever since the Mirror newspaper published photos of British soldiers allegedly torturing an Iraqi prisoner their authenticity has been questioned.
On Thursday Minister Adam Ingram said the photos "were categorically not taken in Iraq".
The special investigation branch had "independent corroboration" that this was the case, he said.</b>
தொடர்ந்து படிக்க .... http://news.bbc.co.uk/1/hi/uk/3680327.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>மனித உரிமை மீறல் படங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் டெய்லி மிரர் பத்திரிகை தற்போது ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ் படைகளிடம் (Queen's Lancashire Regiment) மன்னிப்பு கோரியுள்ளது.</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40156000/jpg/_40156213_mirror2ok.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40156000/jpg/_40156215_mirror3ok.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40155000/jpg/_40155919_morgan203.jpg' border='0' alt='user posted image'>
<b>போலியான படங்களை வெளியிட்டமையால் பிரிட்டிஷ் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் Piers Morgan உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>ஈராக் ஜெயில் மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டதை அமரிக்க படைவீரர் ஒருவர் ஒப்புகொண்டுள்ளார்.</b>
US soldier admits Iraq jail abuse
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40132000/jpg/_40132977_sivits-ap203.jpg' border='0' alt='user posted image'>
Sivits is the first soldier implicated in the scandal to face trial
<b>An American soldier has pleaded guilty to abusing Iraqi prisoners, at a court martial in Baghdad.</b>
Specialist Jeremy Sivits is the first US soldier to face trial over the abuses at Abu Ghraib jail, which caused widespread outrage.
Spec Sivits could now face up to a year in prison.
முழு செய்திகளும் ஆங்கிலத்தில் .... http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/3727289.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மனித உரிமைகள் பற்றிகேட்க பட வேண்டிய கேள்வி தான். இவர்களே இப்படி செய்தால் இலங்கை ஆமி எங்னம். காலம் தான் பதில் செல்ல வேண்டும்.
தகவல்களிற்கு நன்றி
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அமெரிக்க வெகுமதி இதுதானா?
ஈராக்கிய முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை சர்வாதிகாரியாக வர்ணித்த அமெரிக்கா, அவரிடம் இருந்து ஈராக்கிய மக்களுக்கு விடுதலை வழங்கப்போவதாகவும் அங்குள்ள பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கப்போவதாகவும் கூறியே போரை ஆரம்பித்தது. ஆனால், போருக்குப் பின்னர் அங்கு நடப்பவை என்ன? வியட்நாமில் வாங்கிய அடியைப் போல், ஈராக்கிலும் அமெரிக்கா அடி வாங்கப்போகிறது என்று "சுருதி' வாசித்தவர்கள் தற்போது ஒருபடி மேலேபோய் ""வியட்நாம் என்ன வியட்நாம் அதைவிட பன்மடங்கு அடி அமெரிக்காவுக்கு விடுவது நிச்சயமாகிவிட்டது'' என்று சற்றே உயர்ந்ததொனியுடன் கூறுகின்றனர்.
அத்துடன் அமெரிக்கப்படை ஈராக்கைவிட்டு எப்போது வெளியேறப்போகிறது என்ற ஆதங்கமும் அவர்களிடத்தில் எழுந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு அப்பாவி ஈராக்கியர்களை அமெரிக்க வல்லூறுகள் கொத்தி தின்று கொடுமைப்படுத்தி வருகின்றன.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியபோது எதிர்பார்த்ததிற்கு மாறாகவே சதாமின் படைகள் பல நாட்டுப் படைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் வெகுசீக்கிரத்தில் கூடு கலைந்தன. காலப்போக்கில் சதாமின் புதல்வர்கள் கொல்லப்பட்டும், பரதேசியாய் சதாம் பிடிபட்டதுடனும் தான் நினைத்ததை சாதித்துவிட்டதாக அமெரிக்க வல்லூறு நினைத்தது. உலகமும் அப்படித்தான் நினைத்தது. ஆனால் அந்த நினைப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
""சதாம் பிடிபட்டுவிட்டார் தானே. இனி என்ன கவலை'' என்று எதேச்சதிகாரமாக நடந்துகெõண்ட அமெரிக்கப் படையினர், தாம் நினைத்ததெல்லாம் சரி என்றும் தாம் செய்பவையெல்லாம் பிழையல்ல என்றும் தப்புக்கணக்குப் போட்டனர். இந்த தப்புக் கணக்குத்தான் ஈராக்கியர்களை உசுப்பிவிட்டிருக்கிறது.
குறிப்பாக சிறைப்பிடித்தவர்களை அமெரிக்கப் படையினர் நடத்தியவிதம் ஈராக்கியர்களுக்கு அமெரிக்கா வழங்கிய வெகுமதி இதுதானா? என்ற கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறது.
இந்த வெகுமதியை கொடுக்கத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தையும் பெறாமல் ஈராக் மீது அமெரிக்கா அவசரப்பட்டு போர் தொடுத்ததா? அல்லது தன்னை தட்டிக்கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் அது இவ்வாறு செய்ததா?
இதற்கு பதில் கூறவேண்டியவர் உலகின் தலைமை பொலிஸ்காரனாக தன்னை நினைத்துக்கொள்ளும் ஜனாதிபதி புஷ் தான். ஆனால் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்டாற்போல் அவர் செயற்பட்டு வருகிறார்.
போர் குற்றவிதிகளை மீறி ஈராக்கிய கைதிகளை கொடுமைப்படுத்துவதற்கான மறைமுக உத்தரவை மூடிய கதவுக்கு பின்னால் இருந்துகொண்டு வழங்கிவிட்டு அது வெளியுலகிற்கு அம்பலமானவுடன் தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது படையினரையே சட்டத்தின் முன் பலிக்கடாவாக்கிவிட்டார்.
அத்தோடு, சிறைக்கைதிகளை கொடுமைப்படுத்திய ஒரு சிலருக்கு அற்ப தண்டனை வழங்கிவிட்டு மீண்டுமொரு தடவை அவர் உலகை ஏமாற்றிவிட்டார் என்பதே உண்மை. இதனை அதிகாரமிக்க ஏனைய வல்லரசுகளும் ஏனைய நாடுகளும் ஏன் அமெரிக்க கைப்பொம்மையாக வர்ணிக்கப்படும் ஐக்கியநாடுகள் சபையும் கண்டும் காணாமல் இருப்பதுதான் வேடிக்கை.
இத்தனைக்கும் காரணமான "அபு கிரைவ்' சிறைச்சாலையில் ஈராக்கியர்கள் அனுபவித்துவரும் கொடூரமான துன்பங்கள் குறைந்தபாடில்லை. அங்கு நடைபெற்ற, நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் எப்படியோ காலத்துக்கு காலம் அம்பலமான வண்ணமுள்ளன.
சதாமின் ஆட்சிக்காலத்தில் தாமும் தம்பாடுமென இஸ்லாமிய விழுமியங்களின் படி வாழ்ந்து வந்த ஈராக்கியர்கள் இன்று விசாரணை என்ற போர்வையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லியடங்கா. விசாரணைக்கென கைது செய்யப்படுபவர்கள் வாழ்வில் புகுந்து விளையாடிவரும் அமெரிக்கப் படையினர், கைதிகளுக்கு தாங்கமுடியாத சித்திரவதைகளை செய்தது மட்டுமல்லாமல் அவர்களை நிர்வாணமாக்கி எள்ளிநகையாடியுள்ளனர். கைதிகளை நிர்வாண கோலத்தில் நிற்கவைத்து அவர்களின் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியது முதல் பாலியல் சேஷ்டை வரையான அத்தனை கொடுமைகளும் "அபு கிரைவ்' சிறைச்சாலையில் அரங்கேற்றமாக நடந்துமுடிந்துள்ளன.
காலப்போக்கில் இதனை அமெரிக்கர்கள் மறந்து போனாலும் ஏன் உலகம் கூட மறந்தாலும் ஈராக்கியர்கள் மறக்கமாட்டார்கள். அமெரிக்கப் படையினருக்கு ஈராக்கிலேயே சவக்குழி பறிக்கவே அவர்கள் விரும்புவார்கள். இதனை அமெரிக்கப்படையினர் உணர்ந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
"அபு கிரைவ்' சித்திரவதைகளை மூடிமறைக்க எவ்வளவோ முயன்றும் அதில் தோற்றுப்போய்விட்ட அமெரிக்கா, அதற்குப் பரிகாரமாக அந்த சிறையில் இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களை விடுவித்தால் தனக்கு ஏற்பட்ட களங்கம் தீர்ந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி கருதினார். ஆனால், நடந்ததோ வேறு; அவரது நினைப்பு தவிடுபொடியாகியிருக்கிறது.
சிறையில் இருந்து மீண்டவர்கள் அங்கு தமக்கு நடந்த சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அழுதுபுலம்பியவாறு வெளிநாட்டு ஊடங்களின் முன்னால் கொட்டித்தீர்த்துள்ளனர்.
இது "தலையிடியுடன்' இருந்த அமெரிக்க ஆளும் தரப்புக்கு "குலப்பன் காய்ச்சலைக்' கொடுத்திருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறதோ என்று உள்மனதிற்குள் கலக்கம் எடுத்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாத அமெரிக்க ஆளும்தரப்பு, ஈரõக்கில் தனது ஆக்கிரமிப்பை மேலும் இறுக்கமாக்கவே முனைகிறது. ஏனெனில், ஈராக்கில் நாளுக்குநாள் குண்டுத்தாக்குதல்கள் அதிகரிப்பதும் உயிரிழப்புகள் தொடர்வதும் இது அமெரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிடுவதும் சாதாரண விடயமாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஈராக்கை கைவிட்டு விரைவாக வெளியேறிவிடவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.
அது நடந்துவிட்டால் அது அமெரிக்காவுக்கு விழுந்த மற்றொரு அடியாகவே கருதப்படும். அப்படியான "அடி'யை வாங்குவதற்கு ஜனாதிபதி புஷ் தயாரில்லை. அதனால்தான் கிளர்ந்தெழும் ஈராக்கியர்களை பூண்டோடு பரலோகம் அனுப்பும் தீவிரமுயற்சியில் இறங்கியிருக்கிறது அமெரிக்கõ.
ஆனால், அமெரிக்கப் படையினரை முந்திக்கொண்டு நேருக்கு நேர் நின்று எதிர்ப்புக்காட்டும் அளவுக்கு ஈராக்கியர்கள் கொதிப்படைந்துள்ளதைப் பார்க்குமிடத்து அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகள் ஈராக்கில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
இதுவரை காலமும் அமெரிக்ககூட்டுப்படைக்கு எதிரõக ஒரு குழுவினரே செயற்பட்டு வந்தனர் என்றே அமெரிக்காவும் நம்பியது. உலகமும் நம்பியது. ஆனால், இனிமேல் அமெரிக்கப் படைக்கு எதிராக ஒட்டுமொத்த ஈராக்கியர்களும் திரெண்டெழுவார்கள் என்பதில் ஐயமில்லை.
அந்தளவுக்கு "அபுகிரைவ்' சிறைச்சாலை சித்திரவதைகள் அவர்களை பாதித்துள்ளன. அத்தோடுசிறைச்சாலையில் இருந்து மீண்டவர்கள் எப்படியாவது தம்மை சித்திரவதைப்படுத்தியவர்களை பழிக்குப்பழி வாங்கிவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளனர் என்று பக்தாத்திலுள்ள வெளிநாட்டு நிருபர் ஜோன் ஹென்றி தெரிவித்திருக்கிறார்.
""இனிமேல்தான் அமெரிக்கப்படை எதிர்ப்பை சந்திக்கப்போகிறது'' என்று தெரிவித்துள்ள அவர் அமெரிக்கப் படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டவிதத்தில் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்குமே இழுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இது இவ்வாறிருக்கையில், அமெரிக்கப் படையினர் ஈராக்கியர் கைதிகளை நடத்தியவிதம் சர்வதேச ரீதியிலும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. உலகின் எந்தவொரு மூலையில் அநியாயம் நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து அந்த விவகாரத்தை ஊதிப்பெருப்பித்து தனது அத்துமீறலை அரங்கேற்றும் அமெரிக்கா, ஈராக்கில் நடந்துகொண்ட முறைக்கு என்ன சொல்லப்போகிறது என்பதே அமெரிக்காவைப் பார்த்து சர்வதேசம் விடுக்கும் கேள்வி. இந்த கேள்விக்கு பதிலளித்தாற்போல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ் பீல்ட் முதலிலும் ஜனாதிபதி புஷ் அடுத்ததாகவும் மன்னிப்புக்கேட்கும் தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், இவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ள ஈராக்கியர்கள் தயாராக இல்லை. எப்படியாவது பழிக்குப்பழி வாங்கிவிடவேண்டுமென துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கப் படையினரைக் குறிபார்க்கும் ஈராக்கியர்களின் கண்களில் அமெரிக்கப் படையினருக்கு துணைபோகும் உள்நாட்டவர்களும் துரோகிகளாகவே தென்படுகின்றனர். அதன் விளைவுதான் நாளாந்தம் இடம்பெறும் குண்டுவெடிப்புகளும், உயிரிழப்புகளும்.
சதாம் கைதுசெய்யப்பட்டதன் பின்னரே இங்கு இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்தன. அதற்கு முக்கிய காரணம் சதாமின் விரோதிகள் அவரைக்காட்டிக்கொடுத்தது தான். அமெரிக்காவின் டொலருக்கு ஆசைப்பட்டு தமது பகையைத் தீர்த்துக்கொண்ட சதாமின் விரோதிகளை முதலில் அரவணைத்த அமெரிக்கா, தற்போது அவர்களை கைகழுவப் பார்க்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகக் கருதப்பட்ட ஈராக்கிய இடைக்கால சபைத் தலைவரைக்கூட ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகம் கை கழுவியுள்ளது. கடந்த வாரம் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கத் துருப்பினர் அங்கு சல்லடைபோட்டுத் தேடினர். அவர்கள் எதனை தேடினர் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால், தனது தேடுதலை வெளியுலகம் சந்தேகக் கண்கொண்டு பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கப் படைக்கு சொந்தமான வாகனங்கள் சிலவற்றை சலாபியின் ஆதரவாளர்கள் கையாடிவிட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அமெரிக்கா. சலாபியின் ஆதரவாளர்கள் வாகனங்களைக் கையாடிய குற்றத்திற்காக சலாபியின் வீட்டுக்குள் திடீரெனப் புகுந்து சோதனை நடத்தியதன் நோக்கம் என்ன? இதற்கு அமெரிக்கப் படைதான் பதில் சொல்லவேண்டும்.
சதாம் ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்கப் படை யின் கைக்கூலியாக விளங்கிய சலாபிக்கே இந்த கதி என்றால், அமெரிக்காவுக்கு வால்பிடிக்கும் ஏனைய ஈரõக்கியர்களின் நிலை அந்தோகதி தான். வால்பிடிகளின் நிலை இப்படியென்றால் அமெரிக்கப் படையின் நிலையும் அந்தோ கதிதான். ஏனெனில் அமெரிக்கப் படையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்தவர்களுடன் அமெரிக்காவால் கைகழுவப்பட்டவர்களும் இணைந்துகொண்டால் நிலைமை என்னவாகும்?
அலெக்ஸ்/வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அழமான கருத்துக்கள். நன்றிகள் BBC
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆசிய சகாக்களை தோற்கடித்துவிட்ட அமெரிக்கச் சித்திரவதையாளர்கள்
லாவோஸிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் சித்திரவதையிலிருந்து விடுபட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் கூட கே.டேன்ஸ் என்ற பெண்மணி 10 மாதங்களாக உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அனுபவித்த வேதனையிலிருந்து இன்னமும் மீளவில்லை.
இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த அவுஸ்திரேலியப் பெண் 2000 ஆம் ஆண்டில் சிறை அதிகாரிகளால் பிஸ்டலினால் தாக்கப்பட்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் அவமதிக்கப்பட்டும் பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் இவரது கணவன் கெறி அதே சிறைச்சாலையின் இன்னொரு பகுதியில் இன்னும் மோசமான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார்.
கெறியின் கால்கள் 4-5 கிலோகிராம் எடையுள்ள மரக்கட்டைகளுக்குள் செலுத்தப்பட்டு விலங்கிடப்பட்டிருந்தன என்று டேன்ஸ் தெரிவித்தார். லாவோஸ் விசாரணையாளர்கள் கெறியை தங்கள் வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் அவர் மீது மின்சாரம் பாய்ச்சியதுடன் வாய்க்குள் பலவந்தமாக சாக்கடை நீரை ஊற்றினார்கள்.
பாதுகாப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்த டேன்ஸ் தம்பதியர் இரத்தினக்கல் அகழ்வு கம்பனிக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஏற்பட்ட பிணக்கொன்றில் அகப்பட்டதால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். அவுஸ்திரேலியத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வந்த இந்த வழக்கிலிருந்து கெறியும் டேன்ஸ{ம் 2001 ஆம் ஆண்டி ல் விடுதலை செய்யப்பட்டார்கள்.
1990 களில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டமைக்காக பர்மிய சிறையில் 7 வருட காலம் பல்வேறு இம்சைகளுக்கும் ஆளான போ கீக்கு சித்திரவதைகளினால் ஏற்பட்ட வடுக்களைப் பொறுத்தவரை டேன்ஸின் அனுபவத்திற்கு ஒன்றும் குறைந்ததல்ல. இலேசான உடற்கட்டமைப்பைக் கொண்ட இந்த மனிதர் இரும்புச் சங்கிலிகளால் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரபர் குழாய்களால் தாக்கப்பட்டதுடன் சிறை அதிகாரிகளின் ப10ட்ஸ் கால்களாலும் உதைக்கப்பட்டார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை காலை வேளைகளில் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவர் கூ றினார். சிலவேளைகளில் தான் நினைவிழந்து தரையில் வீழ்ந்ததாகவும் அவர் பேட்டி ஒன்றின்போது கூ றினார். ஆரம்பத்தில் நித்திரை செய்யவோ உணவு, நீர் அருந்தவோ தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு நேர்ந்த அநர்த்தங்கள் கம்ய10னிஸ ஆட்சியிலுள்ள லாவோஸ், இராணுவ ஆட்சியிலுள்ள பர்மா ஆகிய நடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் கடைப்பிடிக்கப்படும் சித்திரவதை முறைகளில் சிலவாகும். அரசாங்க சொத்துக்களை திருடியதாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு தங்களை அடைத்து வைத்திருந்த லாவோஸ் தலைநகரான வியன்ரயனில் உள்ள பொன்தோங் சிறைச்சாலையில் கைதிகள் தீயினால் சுடுதல், மூ ச்சைத் திணறவைத்தல், பாலுறுப்புக்களில் சித்திரவதை போன்ற துர்; பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
உலகிலுள்ள சில படு மோசமான சிறைகளில் நிறைந்து காணப்படும் கொடுமையான துர்;பிரயோகங்களை அம்பலப்படுத்துவதற்கென டேன்ஸ் நடத்தும் கழசநபைnpசளைழநெசள.உழஅ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் முரட்டுத்தனமான தாக்குதல்கள், உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூ டிய போதைப் பொருள் வழங்குதல், கடும் வெப்பத்திற்கும், குளிருக்கும் உள்ளாகுதல் போன்ற வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மாவில் இராணுவ ஜுந்தா ஆட்சியாளர்களின் மொத்தம் 39 சிறைச்சாலைகள் இயங்கும் அந்த நாட்டி ல் இடம்பெறும் சிறைச்சாலைத் துர்;பிரயோகங்களில் உளவியல் ரீதியிலான சித்திரவதைகள், தலைக்கு மேல் அழுக்குகளை கொட்டுதல் போன்ற சித்திரவதைகள் அடங்கும் என்று அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் கூறுகிறது.
வாய், காது, விரல்நுனி, பாலுறுப்புக்கள் ஆகியவற்றில் மின்சாரம் பாய்ச்சுதல், தலையில் சுத்தியலால் அறைவது போன்ற உணர்வு வரும்வரை தலையில் பல மணித்தியாலங்களாக நீர் சொட்டுக்களை விழவிடுதல் ஆகிய உடல் ரீதியாக வேதனையைக் கொடுக்கும் சித்திரவதைகள் செய்யப்படுவதாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கள் சிறைகளில் சித்திரவதைக் கூ டங்களை வைத்திருந்த லாவோஸ், பர்மா மற்றும் ஆசிய ஒடுக்குமுறை சர்வாதிகாரிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் அத்தகைய துர்; பிரயோகங்களும் இதைவிட மோசமான சித்திரவதைகளும் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இது சம்பந்தமான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பர்மாவில் மாற்று அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தமைக்காக 1000 க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டதற்காக பர்மிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்க அரசாங்கம் லாவோஸிலுள்ள பல்வேறு சிறைகளிலும் பரிதவிக்கும் சிறைக் கைதிகள் தவறாக நடத்தப்படுவது குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வியட்நாம், வட கொரியா போன்ற ஏனைய ஆசிய சர்வாதிகார நாடுகளும் சிறைச்சாலைகளில் கைதிகள் துர்; பிரயோகம் செய்யப்படுவது குறித்து அமெரிக்காவின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இருந்த போதிலும், ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் அமெரிக்காவினால் நடத்தப்படும் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் அமெரிக்க பாதுகாப்பு படைகளின் சீருடை அணிந்த ஆண், பெண் அதிகாரிகள் புரிந்த புதுமையான சித்திரவதைகளை எடுத்துக் காட்டியுள்ளன.
அப10 கிறைப் சிறைச்சாலையில் மிகச் சாதாரணமாக இடம்பெற்ற இரண்டு வகை சித்திரவதைகளில் ஒன்று கைதிகளை பயப்பிராந்திக்கு உட்படுத்துவதற்காக நாய்களைப் பயன்படுத்துவதாகும். மற்றையது கைதிகளை பாலியல் ரீதியில் இம்சைப்படுத்துவது. இந்த இரண்டு வகை சித்திரவதைகளில் எதுவுமே தென்கிழக்காசிய சிறைகளில் செய்யப்படுவதில்லை என்று ஐ.பி.எஸ்.சால் பேட்டி, காணப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்தன.
சிறைக் கைதிகள் நாய்களைக் கொண்டு பயப்பிராந்திக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் எதுவும் இடம்பெற்றதாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை கண்காணித்து வரும் டானியல் அல்பேர்மன் தெரிவித்தார்.
மன்னிப்புச் சபையின் பர்மிய ஆராய்ச்சியாளர் டொனா கெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், சிறைக் கைதிகள் பாலியல் துர்;பிரயோகத்திற்கும் அவமதிப்பிற்கும் உட்படுத்தப்பட்டதாக தங்களுக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று கூ றினார்.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திவரும் சிறைச்சாலை துர்;பிரயோக சம்பவங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், சம்பவங்கள் கேட்பதற்கு மிகவும் கவலை தரக்கூடி யவை என்று முன்னாள் பர்மிய சித்திரவதை மதிப்பீட்டாளர் கூறினார். இந்த நிலைக்கு கைதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டமை குறித்து அறிந்தபோது தாம் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் சொன்னார். இதனால் ஏற்படும் வேதனை இலகுவில் நீங்கிவிட மாட்டாது என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்க மேஜர் ஜெனரல் அன்ரோனியோ டகுபா தயாரித்த அறிக்கை ஒன்றில் ஆட்கள் பல்வேறு பாலியல் நிலைகளுக்கு தள்ளப்படுவதும் தடுப்புக் கைதிகளை கரமுட்டி மைதனத்துக்கு நிர்ப்பந்திப்பதும் தும்புத்தடிகளைக் கொண்டு ஒருவரை இயற்கைக்கு விரோதமான பாலுறவில் ஈடுபடச் செய்வது போன்ற துர்;பிரயோகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு விடயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஆசிய சர்வாதிகார ஆட்சியாளர்களை தோற்கடி த்துள்ளது. ஒன்று, சிறைச்சாலைகளை அதன் எல்லைகளுக்கப்பால் ஆடம்பரமாக வைத்திருத்தல், 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பயங்கரவாதம் மீதான யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் வந்த ஆண்டுகளில் கைதிகள் மீதான சித்திரவதை சர்வசாதாரணம் என்று தெரிய வருகிறது.
ஆப்கானிஸ்தானில் பக்றம், கந்தஹார் இராணுவத் தளங்கள் மற்றும் கிய10பாவில் குவாந்தனாமோ இராணுவத் தளம் ஆகியவற்றில தடுப்புக் கைதிகளுக்கெதிராக இதே போன்ற (அப10 கிரெய்பில் பயன்படுத்தப்பட்டது போன்றே) கைங்கரியங்களை அமெரிக்க படையினர் பயன்படுத்தி உள்ளார்கள் என்று "ஹிய10மன் றைட்ஸ் வோச்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சவ10தி அரேபியா, எகிப்து, உஸ்பெகிஸ்தான், ஜோர்தான் ஆகிய உரிமை மீறல்களில் பெயர்பெற்ற நாடுகளையும் தோற்கடிக்கும் அளவுக்கு அமெரிக்கா சித்திரவதை நடவடி க்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அல்-ஹைடா சந்தேக நபர்கள் இந்நாடுகளிலுள்ள சிறைச்சாலைகளில் சித்திரவதை அல்லது தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாக நிய10யோர்க்கில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உண்மையில், அமெரிக்க இராணுவத்தினால் நடத்தப்படும் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளின் அளவு இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது யுத்தக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளின் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் கண்டுள்ளார்கள்.
மனித உரிமை பேணலைப் பொறுத்தவரையில் இது ஒரு "அசலைப் பரிகசிக்கும் போலி' போன்ற விடயமாகும். இது பெரிதும் பின்னடைவான ஒரு விடயம் என்று பாங்கொக்கிலுள்ள சுலலோங்கோண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் கைல்ஸ் உங்பகோண் கூ றினார். அமெரிக்கா ஒரு போதுமே நல்ல மனித உரிமை பேணல் வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூ றினார்.
இருந்தும் சில அம்சங்களில் அமெரிக்க இராணுவச் சிறைகளிலும் ஆசிய இராணுவச் சிறைகளிலும் ஒற்றுமை காணப்படுகிறது. அடித்தல், உதைத்தல், கைதிகளை இக்கட்டான நிலைகளில் வைத்து விலங்கிடுதல், நீரில் அமுக்கி சாகடி க்கப் போவதாக அச்சுறுத்தி அவர்களது தலைகளை நீருக்குள் அமிழ்த்துதல் போன்ற உடல் வேதனையைக் கொடுக்கும் சித்திரவதைகளில் இத்தகைய ஒற்றுமை காணப்படுகிறது.
மக்கள் அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பில் இருக்கும்போது சித்திரவதைகளிலிருந்தும் மனிதாபிமானமற்ற தண்டனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளை அலட்சியப்படுத்துவதிலும் இரு தரப்பினருக்குமிடையே ஒற்றுமை காணப்படுகிறது.
அமெரிக்காவில் சிறைக் கைதிகளை நடத்துவது தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சரத்துக்கள் குறித்து ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்ய10. புர்;ர்pன் நிருவாகம் அதன் எதிர்ப்பை பிரகடனப்படுத்தியுள்ள அதேவேளையில் கம்ய10னிஸ் ஆட்சியிலான லாவோஸில் சிறை அதிகாரிகள் மனித உரிமை அம்சங்களில் அலட்சியப் போக்கை கடைப்பிடி க்கிறார்கள்.
ஜெனீவா ஒப்பந்தம் பற்றியோ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரகடனம் பற்றியோ தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று அவர்கள் கூறியதாக லாவோஸ் சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்ட டேன்ஸ் தம்மை துன்புறுத்தியவர்களைப் பற்றி குறிப்பிடுகையில் கூ றினார். சிறை அதிகாரிகள் இதனை பரிகாசம் செய்ததுடன் லாவோஸ் ஒரு கம்ய10னிஸ் நாடென்றும் அந்த நாட்டின் இறைமையில் எந்தவொரு நாடும் தலையிட முடி யாதென்றும் கூறினார்கள். ஐக்கிய நாடுகள் சபையினாலும் கூ டத் தான் என்றும் தெரிவித்தார்கள்.
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
தலை கொய்து போடுறது மனித உரிமை மீறலில்லையெண்டு வாதாடுறாங்கள்போலை..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
|