Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன்
#1
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன்

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதாக இலங்கை அரசு வதந்தி பரப்பியது. இலங்கை ரேடியோவும் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் அவரை பல நாட்களாக காணவில்லை என்றும் ஒலிபரப்பியது. விடுதலைப்புலிகள் இதை வன்மையாக கண்டித்தனர்.

இந்த நிலையில் பிரபாகரன் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்கிளிநொச்சி முகாமில் ஆலோ சனை நடத்தினார். தமிழ்செல்வன் உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்பும் அவர் தோன்றி இலங்கை அரசின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விடுதலைப்புலிகளுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்திய புகைப்படத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் பிரபாகரன் பேசும்போது "தமிழர் பகுதி யில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் முதல் சுனாமி. இப்போது தமிழர் பகுதியில் ஏற்பட்டு இருப்பது 2-வது சுனாமி நாம் சர்வதேச உதவிகளை மட்டுமே நம்பி இருக்கமுடியாது. மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். சுனாமி பாதித்த தமிழர் பகுதிகளில் மருத்துவ பணிகளை மேற்கொண்ட டாக்டர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

News Source : Maalaimalar
Photos: Tamilnet

<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_06.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
ஜனவரி 18, 2005

தோன்றினார் பிரபாகரன்: இலங்கைக்கு மூக்குடைப்பு

கொழும்பு:

வட கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார்.

இந்த சுனாமி அலையில் பிரபாகரனும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும் பலியாகிவிட்டதாக இலங்கை அரசு, கடற்படை, வானொலி ஆகியவை கூட்டு சேர்ந்து புரளி கிளப்பி விட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் பிரபாகரன்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று ஆய்வு நடத்திய பிரபாகரன் பின்னர் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினருடன் ஆலோசனைகள் நடத்தினார்.

பிரபாகரன் பேசுகையில், இந்தப் பேரழிவால் மக்கள் யாரையும் சார்ந்து வாழும் நிலை உருவாகி விடக் கூடாது. போதிய உதவிகள் செய்து அவர்களே தங்கள் எதிர்காலத்தை, மறுவாழ்வை உருவாக்கிக் கொள்ளும் வகையில் கை கொடுக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் பிரபாகரன் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்த இலங்கை அரசுக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Thatstamil
Reply
#3
வீண் புரளி முறியடிப்பு„ புலிகள் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சி நகாpல் தோன்றினார்

புலிகளின் தலைவர் பிரபாகரன்

கொழும்பு, ஜன.18- சுனாமியால் பலியானதாப புரளி கிளப்பப் பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் கிழக்கு பகுதியை சுனாமி தாக்கியது அல்லவா?அதில் முல்லைத்தீவு பகுதியும் கடுமையாக தாக்கப்பட்டது. அந்த ஆழிப்பேரலையின் தாக்கு தலில் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப்பிhpவு தலைவர் பொட்டுஅம்மன் ஆகியோர் பலியானதாக இலங்கை அரசு கதை கட்டியது. பிரபாகரன் இறந்து விட்டதாக கூறப்படுவதை ஆரம்ப முதலே புலிகள் இயக்கம் மறுத்து வந்தது. இந்தநிலை யில் புலிகள் தலைவர் பிரபாகரன் நேற்று முதன்முறையாக கிளிநொச்சி நகாpல் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி னார். சுனாமி பாதிப்பு புலிகளின் இதர முக்கிய தலைவர் களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சுனாமி தாக்கி யதால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனி மேலும் நிவா ரணங்களை நம்பியிருப்பவர்களாக வாழக் கூடாது. அவர்களது வாழ்வு வளம்பெற எதிர்கால திட்டங்களை தீட்ட வேண்டும் என்று இதர தலைவர்களுக்கு பிரபாகரன் அறி வுறுத்தியுள்ளார்.


Source: Dinakaran
Reply
#4
யாரையா அவர் நம்ம தலைவா் ஆச்சே அவாிட்டை இதோடை எத்தனை தரம் மூக்குடை பட்டிட்டினம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)