Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இன்று இலங்கையின் சுந்திர தினம். இந்த பக்கத்தை படித்து பாருங்கள்,
http://mauran.blogspot.com/2005/02/blog-post_04.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அப்பு மதன் அல்லது பிபிசி!
ஒரு பழமொழி தெரியுமோ! "விடிய விடிய ராமர் கதை, ...........". அப்படி வெட்டி ஒட்டி பழகிய உமக்கு! ஆனால் எதை எங்கு எப்படி எந்த தலைப்பிற்கு கீழ் ஒட்டுவதென்று தெரியவில்லை! தயவுசெய்து தெரியாவிடில் மோகனுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.
ஒரு சிலரின் விளம்பரத்திற்கு செயற்படும் நீர்? அதை மறைப்பதற்காகத்தான் எல்லாவற்றையும் சுட்டுக் கொண்டுவந்து இங்கே பசை பூசுகிறீர் என நினைக்கிறேன். "ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" புரியுமா தெரியாது!!!!!!!!!
" "
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
அதுசரி தம்பி ஆருக்கு சுதந்திரதினம். அப்பிடியொண்டு இருக்கிறதா?
எப்ப வந்தது? தெரியாமல் கேட்கிறன் சொல்லுங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 114
Threads: 9
Joined: Dec 2004
Reputation:
0
Ţº¸ý þÐܼš ÒâÂÅ¢ø¨Ä. §ÅÈ¡ÕìÌ ¸§É¡ÛìÌò¾¡ý ;ó¾¢Ãõ. «Å÷ º¢Ã¢îͦ¸¡ñÎ þÕôÀ¨¾ À¡÷òÐÁ¡ ÒâÂÅ¢ø¨Ä... :wink:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
ஷியாம் அண்ணா நான் சொல்லுறது சரியோ தெரியாது :?
பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.
அது உண்மையா
அப்படி செய்த மகாத்மாக்கள் யார்
இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
. .
.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
அந்த நேரத்திலை இருந்த இராமநாதன் போன்றோர்க்கு பாகிஸ்தானை பிரித்த ஜின்னா மாதிரி தீர்க்கதரிசனம் இருக்கவில்லை.
இப்ப இருக்கிற தலைவனை ஏமாத்துகிற அளவுக்கு சிங்களத்தில் ஒரு தலைவரும் இல்லை பிள்ளை. எங்கடை தலைவரின் தீர்க்கதரிசனம் சிங்களத் தலைமையிடையே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்குமாறு செல்வம் எம்.பி. வேண்டுகோள்
தென்னிலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களினால் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் 57 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் தலைவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்களப் பேரினவாதிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டு 57 வருடங்கள் கடந்த நிலையிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது விடுதலைக்காக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் சமாதானப் பேச்சுகள் முடக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசமும் தமிழ் மக்களும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படும் நாளே தமிழர்களின் உண்மையான சுதந்திர நாளாகும்.
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இன்றைய தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
இலங்கையின் சுதந்திர தினமென்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை துக்கதினமாகவே இருப்பதால் இன்றைய நாளை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்றைய சுதந்திர தினத்தை பகிஷ்கரித்து தமிழ் மக்கள் துக்கதினம் அனுஷ்டிக்க வேண்டுமெனக் கோரி மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில்:
சுதந்திர தினம் தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை துக்க தினமாகவே அமையும். தமிழர்களாகிய எம்மைப் பேரினவாதச் சிங்கள அரசாங்கம் நசுக்குவதற்கு ஆரம்பித்த நாள்தான் இலங்கையின் சுதந்திர தினமாக அமைந்திருக்கின்றது. 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் சுதந்திரத்தினைப் பெற்ற இலங்கைத் தீவில் சிறுபான்மை இனம் என்ற முத்திரை குத்தப்பட்டு, வந்தேறு குடிகள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் பல்வேறுபட்ட வகையில் தமிழர்களைப் புறக்கணிப்பதில் சிங்கள ஆட்சி பீடத்தில் ஏறிய பேரினவாதச் சக்திகள் முனைப்புப் பெற்றுச் செயற்பட்டன.
நில ஆக்கிரமிப்புகளைச் செய்து மொழி உரிமையைப் பறித்து தனிச் சிங்களச் சட்டம் என்ற இன அழிப்பு வேலைக்கு அடித்தளங்கள் போட்டு, தமிழ் மக்களை அடக்குமுறைச் சகதிக்குள் தள்ளினார்கள்.
இவ்வாறான அடக்குமுறைகளுக்கு தமிழர்களை இட்டுச்சென்ற நாளே சுதந்திர தினமாகும்.
இந்த நாள் சிங்களவர்களுக்கு மட்டுமே சுதந்திர தினமாகும். தமிழர்கள் இன்றும் சுதந்திரம் பெறவில்லை. தமிழர்களுக்கு என்ற தனித்துவம் இன்னும் அமையப்படவில்லை. தொடர்ந்து வந்த இனவாதப் போக்குடைய சிங்கள அரச தலைவர்கள் மேலும் மேலும் தமிழர்களை ஓரம் கட்டவே எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இராணுவ ஆக்கிரமிப்பில் நிலத்தினை இழந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசு பல்வேறுபட்ட அடக்குமுறைகளையே மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை இராணுவம் சொந்த நிலத்தில் சொந்தக் கடலில் சுந்திரமாக தொழில் செய்ய முடியாமல் தமிழர்களைத் தடுத்தும், பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் வருகின்றது. இந்த நிலையில் ஒரு பக்கம் சுதந்திரம் என்ற தொனிப்பும் மறுபக்கம் அடக்குமுறை என்ற இன அழிப்பு நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதனை வெளிப்படையாக உணரலாம்.
இயற்கையின் அனர்த்தத்தினால் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுத்து சொந்த இடத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும் என்ற உலக நாடுகளிடம் உதவிப் பிச்சைக்கு கையேந்தும் இன்றைய அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக சொந்த வீடுகளை உயர் பாதுகாப்பு வலயம் என்ற இராணுவ ஆக்கிரமிப்புக்குள் பறிகொடுத்த தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணப்பாடு ஏன் ஏற்படவில்லை?
இதுவே இன ரீதியான பாகுபாட்டினை, இன ரீதியான அடக்குமுறையினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. எனவே, தமிழர்களை அடக்குவதற்கு காழ்கோளாக ஆரம்ப நாளாக இருந்த சுதந்திர தினத்தினைக் கரிநாளாக, தமிழர்களை இருண்ட வாழ்வை நோக்கி நகர்த்திய நாளாகவே நாம் கருதுகின்றோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>