Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொறுமை சீண்டப்படுகின்றது.
#1
மீண்டும் மீண்டும்
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.

மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.

சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.

எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.

ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-

பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே

ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு

சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்

சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.

என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-

எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.

-தயா ஜிப்ரான் -
.
.!!
Reply
#2
நன்றி தயா... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#3
உங்கள் உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறீர்கள் தொடருங்கள்
; ;
Reply
#4
தயா இது உங்களின் குமுறல்கள் அல்ல ஒரு இனத்தின் குமுறல்கள் தொடருங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)