Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வை(க்) கோ(ல்) சாமி
#21
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->ஜெயா ஜெயித்தால் நல்லது என நாம் விரும்புவதற்குக்காரணம். எமது சுயநலமே. தமிழ்நாட்டின் நலன் கருணாநிதியிடம் இருக்கலாம். எமது நலன் தற்போது அம்மணியிடம்தான் உள்ளது. அவர் துணிந்தவர். எதையும் எதிர்த்து நிற்கக்கூடியவர். கருணாநிதியால் ஓங்கி எமக்காக குரல் கொடுக்ககூட முடியவில்லை. துணிச்சல் இல்லாத கருணாநிதியால் பயன் இல்லை. ராஜீவ் கொலைக்குப்பின் புலியெனசொல்லி அவரது அரசு கவிழ்க்கப்பட்ட பயத்தில்pருந்து இன்னும் மீண்டு வரவில்லை.  

எமக்கு நல்லர் பொல்லாதவர் இப்போது முக்கியமில்லை. ஆதரவுக்குரல். சிங்களவனை கொஞ்சம் அடக்க எமக்கு ஒரு துணை.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மோனை ..ஜெயா ஜெயிச்சால் நன்மை ஏதோ எல்லாம் சொல்லுறியள் விளங்கினால் சொல்லுங்கோ கோபப்படமால்.......முதலில் மக்காள் வைகோ-ஜெயா கூட்டு வெறும் தேர்தல் கூட்டு அரசியல் கொள்கை கூட்டில்லை உந்த லெக்சன் முடிய ஜெயா அன்ரி என்ன கோதாரி குணம் கொள்வா அப்ப கண்டு கொள்ளுங்கோ

ஜெயா அன்ரி ஆளுமையை பற்றி கதைச்சமாதிரி கிடக்கு..சோபன் பாபு வோடை காதலில் தோல்வியடைஞ்சு தூக்க மாத்திரை அடிக்கக்கை எங்கை ஆளுமை போனது...ஆனப்பட்ட நெடுஞ்செழியனையே நிக்க வைத்து கதைத்து ஆண்களுக்கு கெதிரான மனவிகாரத்தை தீர்த்தது உந்த மனிசி... அடிப்படையில் பார்ப்பனிய எண்ணமோட்டமுடைய மனிசி என்ன நேரத்தில் என்ன செய்யுமெண்டு சொல்ல முடியாது

வை கோ வுக்கு கூட ஸ்ராலினின் முதல்வர் சீட்டு ஈகோ பிரச்சன தான்... ஸ்ராலின் முதல்வர் சீட்டு இல்லாமால் வேறு கூட்டரசாங்கம் ஏற்படுமென்றால்...மீண்டும் வைகோ திமுக கூட்டரசாங்கத்தில் ஆச்சியமில்லை....மறு புறத்தில் ஜெயா- விஜயகாந்த் கூட்டரசாங்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியபடுதற்க்கில்லை......உந்த அன்ரியின் குணம் தெரிந்தவை மறந்தும் சொல்லமாட்டினம் உவவாலை ஈழ தமிழருக்கு நன்மை கிடக்குமென்று
Reply
#22
சின்னக்குடி,

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... விஜயகாந்த் தனியாக நின்றால் பெரும் தோல்வி அடையப்போவது உறுதி.... ஒரு சீட்டு வென்றாலே அதிசயம் தான்....

சென்ற தேர்தலில் மதிமுக 211 தொகுதிகளில் நின்று 204 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.... வைகோவை விட எல்லாம் விஜயகாந்த் பெரிய ஆள் இல்லை.... அதைவிட மோசமான தோல்வியைத் தான் சந்திப்பார்....
,
......
Reply
#23
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஒன்று மட்டும் உண்மை! எம் தேசத்து விடுதலையைப் பெற நாம் தான் முயலவேண்டுமே தவிர, மற்றவர்களை மட்டும் நம்புவது தப்பு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட அருமையான கருத்து.....

ஈழ விடுதலையை விரும்பினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏதும் செய்ய இயலாது.... அனுதாபம் தான் பட முடியுமே தவிர ஆயுதங்களை ஏந்த முடியாது.... ஆனாலும் ஈழமக்கள் இன்னல் படும் போதெல்லாம் தமிழ்நாட்டு தமிழனுக்கு இதயம் அறுந்து போகும்.... அவனால் முடிந்ததெல்லால் இங்கிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் அவ்வளவுதான்... கசப்பாக இருந்தாலும் உண்மை இது தான்....

கலைஞர் கைது செய்யப்பட்டபோது உலகெங்கிலும் இருந்த ஈழத்தமிழர்களும் துடிதுடித்துப் போனார்கள்.... ஆனால் கண்டன அறிக்கைத் தந்ததை தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? அதுபோல் தான் இதுவும்.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நான் இங்கு கருதியது ஆட்சிப் பீடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைத் தான். தமிழ்நாட்டுமக்கள் எப்படி மறைமுகமாக ஈழப் போராட்டத்தில் உதவி செய்வதை வெளிப்படுத்த தேவையில்லை. இத்தனை கஸ்டத்திலும் அவர்களின் உதவிகளைக்கு தலைவணங்க வேண்டும்.

இதை விட பலர் இப்பிரச்சனைக்காக தீக்குளித்ததையும், சிறையில் வாடுவதையும் அனைவரும் அறிவோம். எனவே வெறுமனே அரசியல்வாதிகளின் வாய்ப் புகழ்ச்சிகளுக்கும் உண்மையான நேசத்தமிழர்களின் பற்றுக்குமிடையிலான வேறுபாட்டை உணரவேண்டும்
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)