Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க
#1
தமிழ் நாட்டில் பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டிய நிலைக்கு பெண் கவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பிரபல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றில் இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால் கேட்கப்படும், காணப்படும் ஒரு செய்தி "பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே" இவர்களை என்ன செய்யலாம்.

உடலை முன் வைக்கிற கவிதைகளை பெண்கள் எழுதி வருவது குறித்து தனது கவலைகளை பிரம்மராஜன் பகிர்ந்து கொண்ட தகவல்( கவிஞர்கள் சந்திப்பு, காலச்சுவடு 51 பக்கம் 51-52) அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதே கருத்தைதான் வெகுசன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் சில வெகுசன கவியரங்கப் பிரபலங்களும் முன் வைக்கிறார்கள். இவர்களுக்கும் கவிதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என்பது சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் உலகக் கவிதை தெரிந்த பிரம்மராஜன் ஒரு சாதாரண பேராசிரியரைப் போல இப்படிச் சொல்வது உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.

ஐயா கவிதையில் இடம்பெறும் கடல் கடலாக இல்லாதது போலவே, தேவாரத்தில் நடனமிடும் சிவன் சிவனில்லாதது போலவே, கவிதையில் இடம் பெறும் பாலியலும் பாலியல் அல்ல. அது உருவகமே. புலன்களும் உடலும் புனைவினுடாக இயங்கும் பொழுது கவிதைநிலை தோன்ற முடியாது. என்ற கட்டாயம் இல்லை. முரண்பாடுகளின் விளையாட்டு கவிதைகளில் அதிகம் தான். உள்ளுறையும் இறைச்சியும் பழகிய தமிழ்க் கவிதைக்கு உருவகம் பழகாமல் போகும் என்ற கட்டாயம் ஏதும் உண்டா? "யோனி" என்ற சொல் கவிதைக்குள் வரும்போது அது பெண்ணுடைய ஒரு உறுப்பா அல்லது கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? கவிதைக்குள் ஒரு சொல் அது உணர்த்தும் வெற்றுப் பொருளாகவோ, ஒரு வாக்கியம் வெற்று வாக்கியமாகவோ அமையுமா? Meta languugage, meta poetry பற்றி மீடியா பிரபலங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரம்மராஜனுக்கு? குற்றாலப் பதிவுகள் அமர்வுகளில் நாள் முழவதும் பேசி மாளவில்லையா?

அப்படி என்னதான் பெண்கள் எழுதி விட்டார்கள்.? சுகிர்தாரணியின் இரண்டொரு கவிதைகள் உடல் வேட்கையைப் பேசுகின்றன. குட்டிரேவதி தனது இரண்டாவது தொகுப்புக்கு "முலைகள்" எனத் தலைப்பிட்டார். இது தவிர வேறு எந்த உயிர்கொல்லி ரசாயன ஆயதங்களும் இவர்களிடம் இல்லை. எனது கவிதைகளில் காணக்கிடப்பவை எல்லாம் இயற்கையும் தாய்மையும் இணைந்த அழகியல் தத்துவம், அறம், அதிகாரம், இவைகளின் விதவிதமான உருவக நாடகங்கள் மற்றும் சில வெளிப்படையான அரசியல் கவிதைகள். உமாமகேஸ்வரி "வெறும்பொழுது" என்ற தலைப்பில் மிகப்பெரிய தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒரு கவிஞர் 50 ஆண்டுகள் எழுதித் தொகுக்கும் போது கூட இவ்வளவு பெரிய தொகுப்பு வருவதில்லை.

பத்தாண்டு காலவெளியில் இவ்வளவு கவிதைகளை எழுதியுள்ளார். சல்மாவின் இரண்டு தொகுதி கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் தான் "யோனி" என்ற வார்த்தை வருகிறது. அக்கவிதையில் இரண்டு உடல்களுக்கிடையிலான அரசியல் பேசப்படுகிறது. இவரும் ஆபாசக் கவியாக சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் எழுதியிருக்கும் மீதி 99 சதவீத கவிதைகள் எதை முன்னிறுத்திப் பேசுகின்றன. என்பது குறித்து இப்பிரபலங்களுக்கு அக்கறையில்லை இப்பெண்களிடம் பதிவாகியுள்ள பெண் இருப்புச் சார்ந்த கேள்விகளும் சமூகம் சார்ந்த கேள்விகளும் உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் வலிகளும் இழப்புகளும் அவர்களுக்கு சமூக அக்கறையற்ற செயல்கள்.

குட்டிரேவதி தன் தொகுப்புக்கு "முலைகள்" என தலைப்பிட்டுவிட்டார் அல்லவா அதனால் தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மழை பொய்த்து விட்டது போலும். உலக சமூகங்களிலேயே இந்திய சினிமாவில் பெண்களை படு கேவலமாக சித்தரிக்கும் சமூகம் வேறில்லை. நம் கோடம்பாக்கத்தில் ஒரு நான்கு நிமிட பாடல் காட்சியில் சுமார் 50 ஜோடி முலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருக்க முடியாது. இக்காட்சிகளுக்கான பாடல்களை எழுதித்தரும் பல பாடலாசிரியர்களில் ஒருவரால் தமிழ்பெண் கவிகைளப் பார்த்து ஒழுக்கம் கெட்டவர்கள் என கூசாமல் சொல்ல முடிகிறது. இவருடைய சினிமாப் பாடல்களைப் பாடி ஈவ்டீசிங் கேஸில் கைதான இளைஞர்கள் பலர். அந்த கைதுப் பட்டியலை நான் காவல்துறையினரிடம் கோரி பெறயிருக்கிறேன். இந்த ஈவ்டீசிங் கவிஞர் பரப்பிவரும் அவதூற்றை சில மதவாத கவிஞர்களும் வழிமொழிகிறார்கள்.

பெண் எழுதினாலே அது ஒரு சமூக மீறலாக அதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. ஆக அவர்களுடைய சொல் ஒவ்வொன்றுமே ஒரு அரசியல் செயற்பாட்டுக்கான அசைவுகளாக அர்த்தம் பெறுகிறது. ஆக அடிப்படையிலேயே ஒரு சமூக ஜீவியாகவும் சமூகநலம் விழையும் போராளியாகவும் வெளிப்படுவது பெண்களுக்கு இயற்கையான ஒரு நிகழ்வாகிறது. இங்கு இவர்களுடைய எழுத்துக்களை ஆபாசம் என்று சொல்வதும் சமூகக்கேடானது என்று சொல்வதும் எந்த ஒரு அறிதல் முறைக்குள்ளும் அடங்காத ஆணாதிக்க பாசிசக் குரலாகும்.

உண்மையில் பெண்கள் யாரும் ஆபாசமாக எழுதுவதில்லை. பெண் எழுத்தென்பது அதன் இயல்பிலேயே அரசியல் வயப்பட்டது. அவ்வரசியல் அறம், ஆண்களை நிலைகுலையச் செய்கிறது. எனவே தான் இவர்கள் இல்லாத ஒன்றை பெண் கவிதைகளின் மேல் ஏற்றி ஆபாச வக்கிரமென அவதூறைப் பரப்புகிறார்கள். உதாரணத்துக்கு என்னுடைய எழுத்துகளுக்கு இங்கே விளக்கம் தருகிறேன்.

எனது "சங்கரபாணி" ,"நீரின்றி அமையாது உலகு", இரண்டு தொகுப்புகளையும் எடுத்துக்கொண்டால் கூப்பிடும் தூரத்தில் உனது தீவு மறைமுக அரங்கம் அகதி வெள்ளைப் பாய்மரங்களும் சங்கிலிகளும் புலி இரும்புத் தொப்பி ஞாயிற்றுக்கிழமைச் சந்தை வீடுகளால் ஆன இனம், படுகளம், மரணங்கள் உருவாக்கப்படுகின்றன." குருவி" "கடவுளைச் செய்பவள்" போன்ற கவிதைகளுக்கு இணையான அரசியல் பார்வை கொண்ட கவிதைகள் தமிழில் இதுவரை இல்லை என்று சொல்லலாம். பிறவற்றில் வெறும் அரசியல் இருக்கும். ஆனால் கவிதையிருக்காது எனது கவிதைகள் ஆத்மநாமிற்குப் பிறகு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் ஆத்மநாமின் மிடிஸ்கிளாஸ் பார்வை படியாமலும் எழுதப்பட்டுள்ள அரசியல் கவிதைகள். எனது கவிதைகளில் இடம் பெறும் ~யோனி| என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று . நெருப்பாலான பிரபஞ்சத் சக்தியின் ஆதிமூலம் சங்க இலக்கியம் காட்டும் பெண் உடல்களில் இன்றும் தேங்கி இயங்கும் அணங்கு எனும் நெருப்பு உருமாறி அருட்பெரும் சோதியாகி நின்ற உருவகமே எனது கவிதைகளில் இடம்பெறும் யோனி. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெறும் சோதியை எனத்தொடங்கும் திருவெம்பாவையின் முதலடியில் சிவனைக்குறிக்கும் சோதியானது சிவனொடு சேர்ந்த சக்தியே தவிர வேறல்ல. இது மாணிக்க வாசகர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியது.

நான் சாக்தேய மரபில் வரும் ஒரு கவி. இந்த அடிப்படையில் நான் கூறுவது இது தான். பெண்களின் அறிவார்ந்த வளர்ச்சி சமூகக் குற்றம் செய்துவரும் கவி கொக்ரக்கோ கோக்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எதையுமே வாசிக்காமல் தமிழ் இலக்கிய மரபோ பிற இந்திய இலக்கிய மற்றும் உலக இலக்கிய மரபோ அறியாத தமிழை விற்றுப்பிழைக்கும் வியாபரிகள் "பெண்கவிகள் தரம்கெட்டுவிட்டதாகச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்" ஜனநாயக மறுப்போடும் பாசிச ஆணாதிக்க திமிரோடும் மத அடிப்படைவாத கவிஞர்கள் பொத்தாம் பொதுவாக பெண் கவிகைள சினிமா நடிகைகளைப் போல சித்தரிக்கிறர்கள். இவற்றை வெகுசன ஊடகங்களும் வரவேற்கின்றன. இவை கடுமையான கண்டனத்திற்கு உரியன.

(மூட்டுவென் கால் ,தாக்குவென் கால் ஓரென் யானுமோர் பெற்றி மேலிட ஆஆ ஒல்லென கூவு வென் கொல் அலமறல் அசைவளி அலைப்பவென் உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே எனக்கூறும் ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்களின் கௌன்ட்டவுனில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.)

குமுதம் தீராநதி இதழுக்கு "பெண்பால் அகதிகள்" என்ற தொடரை எழுதி வரும் மாலதி மைத்ரியின் தொடர் கட்டுரைகள் தொடர்ச்சியாக ஊடறுவில் வெளிவரும்.

http://udaru.blogdrive.com/archive/75.html


oct 2005










Leave a Comment:

Name
Reply
#2
நாரதர் ஒண்டுமட்டும் தெளிவா விளங்குது.
பின்னுக்கு வாற ஆக்களிட்ட முறையா வேண்டிக்கட்டப் போறீர்.

அருமையான கட்டுரை.
பிறகு ஆறுதலா எழுதிறன்.
Reply
#3
நாரதர் ...இது நல்லாயில்லை சொல்லுப்போட்டன்...கவிதை இப்படி தான் இது கவிதை என்று களத்திலை வருஷங்களாக கப்பலோட்டி கிணத்துதவளையாக வைச்சிருக்கிறம். எங்கடை பிழைப்பை கெடுக்காதைங்கப்பா

நாரதர்...ஏதோ புதுசு புதுசாக கவிதை விசயங்களைப்போட்டு இங்கை ரென்சனை கிளப்பாதையப்பா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#4
Quote:கவிதை இப்படி தான் இது கவிதை என்று களத்திலை வருஷங்களாக கப்பலோட்டி கிணத்துதவளையாக வைச்சிருக்கிறம். எங்கடை பிழைப்பை கெடுக்காதைங்கப்பா

அது தானே.. இதுவெல்லோ கவித

உனக்காக நானே.....

நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.

நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்

நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்

நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.

நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.

நன்றி- இவோன் யாழ் களத்தில

..
Reply
#5
sayanthan Wrote:
Quote:கவிதை இப்படி தான் இது கவிதை என்று களத்திலை வருஷங்களாக கப்பலோட்டி கிணத்துதவளையாக வைச்சிருக்கிறம். எங்கடை பிழைப்பை கெடுக்காதைங்கப்பா

அது தானே.. இதுவெல்லோ கவித

உனக்காக நானே.....

நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.

நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்

நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்

நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.

நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.

நன்றி- இவோன் யாழ் களத்தில

சயந்தன் அண்ணா,
உங்கட கவிதை நல்லா இருக்கண்ணா,
இப்படி இன்னும் கவிதை எழுத என் வாழ்த்துகள்.
நன்றி :wink:
Reply
#6
Quote:நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.

நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்

நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்

நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.

நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.

நன்றி- இவோன் யாழ் களத்தில
நல்ல ஆரம்பம். எல்லாரும் கவிக்கடலாய்ப்பிறக்கிறதில்லைத்தானே. பழகப்பழக தானே கவி மெருகுறும். எடுத்த உடனை கவிப்பேரரசாக முடியுமா என்ன? ஆதலால் தொடந்து எழுதுங்க. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நாரதர், தமிழினி.. உது என்ர கவித இல்ல! சின்னக்குட்டியார்.. கவிதயெண்டால் தாங்கள் ஒரு இலக்கணம் யாழ் களத்தில வைச்சிருக்கிறம் எண்டும் அதை நாரதரை குழப்ப வேணாம் எண்டும் சொல்லிருந்தார்.. எனக்கும் அது தான் சரியெண்டு பட்டுது.. அதுதான் யாழ் களத்தில இவோன் எழுதின சில கவிதைகளை போட்டுக்காட்டி கவிதயெண்டால் இப்பிடி இருக்க வேணுமெண்டு சொன்னன்..

இன்னுமொரு கவிதை இதுவும் இவோன் தான் எழுதினது.. ஆஹா.. என்ன சோக்கா எழுதியிருக்கிறார்.. இப்பிடி நிறைய கவிதைகளை நான் யாழ் களத்தில பார்த்தாலும் இந்த கவிதையில ஒரு தனித்தவம் தெரியுது..

ஐரோப்பியச் சதி

தமிழீழத்திற்கு எதிரான
ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைகுக் காரணம்
சிங்கள கொள்கை
வகுப்பாளர்கள் கும்பல்
தேச விரோதிகளுடன்
இணைந்து லண்டனில்
களியாட்டம் ஒன்றை
நடத்தி உள்ளனர்.


சிறிலங்காவின் அனைத்து
அரசியல் கட்சிகள்
பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும்
உள்ளடக்கிய குழுவை
உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசுஇ
அக்குழுவை லண்டனைத்
தலைமையகமாகக் கொண்டு
இரகசியமாக செயல்பட
வைத்து வருகிறது.
----------------------------------

கவிதை மூலம்: புதினம்.

..
Reply
#8
ஆனா இந்த யாழ் கவிதா இலக்கணத்துக்க வராத கவிதயெல்லாம் நாங்க எடுக்கச் சொன்னா எடுத்திரணும்,என்ன?
எனெண்டா இது எங்கட களம், நாங்க சொன்னது தான் கவிதை.
பிறகு போட்டவனக் கேப்பம் வீட்ட இந்த கவிதை எல்லாம் மனிசிக்குக் காட்டுவியோ எண்டு....

நீங்களும் உங்கட சுயமும்,எங்கயப்பா சுபா அகாவக் காணேல்ல...
Reply
#9
Quote:பிறகு போட்டவனக் கேப்பம் வீட்ட இந்த கவிதை எல்லாம் மனிசிக்குக் காட்டுவியோ எண்டு....

காட்டினால் என்னங்கிறன்..? அவ்வளவும் எதுக்கு அவாவே எடுத்து வாசிச்சுப் போட்டு எங்களுக்கும் காட்டட்டுமன்..

..
Reply
#10
என்ன என்ர தலை உறுளுது.
உது நானெழுதின கவிதையில்லை. சயந்தன் விசமத்தனமாகப் பிரச்சாரம் செய்யிறார். உவைகள் கவிஞர் காவடி எழுதியவை எண்டு தலைப்பிலயே போட்டுத்தான் பதிஞ்சனான். பிறகேன் என்ர பேரில இந்தக் கவிதைகளை வெளியிட வேணும்.
உப்பிடியெல்லாம் அதிபயங்கர இலக்கியத் திறமையோட கவிதையெழுதிற வல்லமை எனக்கில்லை.
ஆனாவில துவங்கிற பத்துச்சொல்லைத் தேடியெடுத்துப்பாத்தன். என்னால முடியேல. விட்டிட்டன்.

தமிழினியின்ர ரசிப்புத் தன்மையும் எனக்கில்லை. ஏனெண்டா காவடியின்ர கவிதைகள் எனக்குப் புரியவுமில்லை. அதால நான் பாராட்டவுமில்லை.
இருந்தாலும் நாரதருக்கு இதுதான் 'கவிதை' எண்டு விளங்கப்படுத்திறதுக்கு காவடியின்ர 'கவிதை'கள் பயன்படுறதையிட்டு அவற்றை யாழில பதிஞ்சவன் எண்ட முறையில நான் பெருமைப்படுறன்.
---------------------
புதினத்தில வந்த செய்திய ரெண்டுரெண்டு சொல்லா உடைச்சுப்போட்டு கவிதையெண்டு காவடி சொல்லிறார் எண்டெல்லாம் விமர்சிக்கக்கூடாது. இதுதான் கவிதை. இதுதான் அதியுன்னத கவிதை.
இதுதான் தமிழிலக்கியத்தின் உச்சக்கவிதைகள்.
போடுங்கள் உங்கள் ஜால்ராக்களை.
கவிஞர் காவடி கவிப்பேரரசாக வர இப்போதே என்ர வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------
Reply
#11
//நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.//


இத்தின வரி கட்டாயம் எழுதவேணுமெண்டு காவடிக்கு ஆரும் கட்டளை போட்டாங்களோ தெரியாது.
ஆறு வரிய நிரப்பிப்போட்டார்.

நல்லவேளை அவள் மலம்போனதுக்கு இவர் கழுவேல
Reply
#12
நாரதர்!

உது நல்லாயில்லை. ஒளவையார் என்ன பாவமய்யா செய்தார். எதற்காக அவரை தலையங்கத்தில் கொலை செய்கின்றீர்.

சயந்தன் இவோனின் 2வது கவிதையென்று ஒன்று போட்டிருக்கின்றீர். அது இவோன் புதினத்தில் சுட்டதாகவல்லோ போட்டிருக்கின்றார்.

ஆனாலும் அதன் தொடக்தில் அனுப்புவோர் முகவரியும் முடிவில் கையெழுத்தும் போட்டுவிட்டால் அசல்க் கடிதமாகிவிடும். எல்லாம் காலமய்யா!!!!!!
Reply
#13
வசம்பண்ணா,

யாரோ மட்டுறுத்தினர் தலயங்கத்தைத் திருத்தினவர்,அவரே எழுத்துப் பிழயையும் திருத்திவிடவும்.
நன்றி
Reply
#14
<b>ஐரோப்பியச் சதி

தமிழீழத்திற்கு எதிரான
ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைகுக் காரணம்
சிங்கள கொள்கை
வகுப்பாளர்கள்
கும்பல் தேச விரோதிகளுடன்
இணைந்து லண்டனில்
களியாட்டம் ஒன்றை
நடத்தி உள்ளனர்.


சிறிலங்காவின் அனைத்து
அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளையும்
அறிவாளர்களையும்
உள்ளடக்கிய குழுவை
உருவாக்கியுள்ள சிறிலங்கா
அரசுஇ அக்குழுவை
லண்டனைத் தலைமையகமாகக்
கொண்டு
இரகசியமாக செயல்பட
வைத்து வருகிறது. </b>



இவோன் Wrote:என்ன என்ர தலை உறுளுது.
உது நானெழுதின கவிதையில்லை. சயந்தன் விசமத்தனமாகப் பிரச்சாரம் செய்யிறார். உவைகள் கவிஞர் காவடி எழுதியவை எண்டு தலைப்பிலயே போட்டுத்தான் பதிஞ்சனான். பிறகேன் என்ர பேரில இந்தக் கவிதைகளை வெளியிட வேணும்.

ஆகா என்ன அருமையான கவிதை.. புல்லரிக்கிறது இவோன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:

இவரின் கவிதைகள் எங்கு வெளிவந்தன என அறியமுடியுமா?
ஏனென்றால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று நீங்கள் குறிப்பிடவில்லை அதுதான் கேட்கிறேன்.. :roll:

Vasampu Wrote:சயந்தன் இவோனின் 2வது கவிதையென்று ஒன்று போட்டிருக்கின்றீர். அது இவோன் புதினத்தில் சுட்டதாகவல்லோ போட்டிருக்கின்றார்.

வசம்பு அவர் கவிதையின் மூலம் தான் புதினம் என
போட்டிருக்கிறார்.. கவிதை வெளியிட்டது புதினம் அல்ல
என்று நினைக்கிறேன். 8)

சிலவேளை செய்தியைத் தான் காவடி கவிதையாக மாத்திட்டாரோ? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
sayanthan Wrote:
Quote:பிறகு போட்டவனக் கேப்பம் வீட்ட இந்த கவிதை எல்லாம் மனிசிக்குக் காட்டுவியோ எண்டு....

காட்டினால் என்னங்கிறன்..? அவ்வளவும் எதுக்கு அவாவே எடுத்து வாசிச்சுப் போட்டு எங்களுக்கும் காட்டட்டுமன்..



இல்ல ஒரு கவிதை சிறந்தது எண்டு தீர்மானிக்கிறது என்னுடய துணைவின் கையில் என்கிற போது சந்தோசமா இருக்கு.என்ன அவக்கு விருப்பம் எண்டா வாசிப்பா இல்லாட்டி தூக்கிப் போட்டுட்டுப் போவா.அவக்கு விரும்பினத அவ வாசிப்ப எனக்கு விரும்பினத நான் வாசிப்பன்.என்னுடய வாசிப்பையும் உணர்வையும் மற்றவர் மீது திணிப்பதில்லை.
என்ன அவ்வயாரில இருந்து மேல சொன்ன அறியப்பட்ட பெண் கவிஞர் மாரெல்லாம் வெக்கங் கெட்டவை,பெண்மய இழந்தவை.பாவம் கிழவி அப்பவே செத்துப் போட்டுது.இல்லாட்டி இவையின்ட இலக்கணத்தின் படி அவரெல்லாம் கவிஞர் ஆகி இருக்கேலாது.
Reply
#16
//சிலவேளை செய்தியைத் தான் காவடி கவிதையாக மாத்திட்டாரோ?//

உந்த நக்கல் தானே வேணாமெண்டுறது
Reply
#17
முலைகள், யோனி போன்ற சொற்களை(பெண்ணுறுப்புக்களை) ஆபாசமாகவும், கேவலமாகவும், வக்கிரமாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட சமூகத்தால் அச்சொற்கள் இயல்பாகக் கவிதைகளில் வரும்போது ஏற்றுக்கொள்ளவோ உள்வாங்கிக்கொள்ளவோ முடியாதுதான். பெண்ணின் உறுப்புக்களை பிறரை (கீழ்த்தரமாகப்)பேசுவதற்காகப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுப்போயின இவர்கள் நாக்கு - ஆனால் பண்பான வார்த்தைகளால் சமூக நடைமுறையை இயல்பாக சொல்வதை கேட்கக் கூச்சப்படுகின்றன செவிகள்.

காசி ஆனந்தனின் நறுக்குகள் கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.

முரண்
-----
இறைவனின்
வாகனம்
என்றான்
நாயை.

அவதாரரம்
என்றான்
பன்றியை.

இறைவனே
என்றான்
குரங்கை.

இவனே
திட்டினான்
என்னை-

"நாயே!"
"பன்றியே!"
"குரங்கே!"


Reply
#18
:oops: :oops: :oops: :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)