Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலியெதிர்ப்பு அரசியல்
#21
ஊமை Wrote:அப்பு கிருபன். எஸ் புலியை யார் எதிர்த்தாலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். நீர் முடிந்தால் புலிகள், விடுதலைப்போராட்டம் தவிர்ந்த கருத்துக்களை முன்வையும் வாதாட நாம் தயார். இங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் புலிகள் தான். அதனால் கொல்லன் தெருவில் ஊசி விற்காமல் சற்று அடக்கி வாசிக்கவும்.

பல விடயங்கள் அலசப்படுகின்றன, வந்து உங்களுடைய திறமையைக் காட்டவேண்டியதுதானே.

கொல்லன் தெருவில் ஊசி அதிகமாகத்தான் உள்ளது, ஆனால் ஊசியைப் பாவிக்கத்தான் தெரியாமல் பலர் உள்ளனர்.

தமிழர்கள் நிம்மதியாக இருந்தால்போதும் என்றும் தமிழீழத்துக்குக் குறைவான சில தீர்வுகளை எட்டமுடியும் என்றும் சிலர் கருதுகின்றனரே, அவர்களை எப்படி தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று உங்கள் அறிவுரைமூலம் மாற்ற முயற்சிக்கலாம் என்று சொல்லுங்கள். வரவேற்கின்றோம்.
<b> . .</b>
#22
ஊமை Wrote:தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?

தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை எங்கே ஐயா கண்டீர்? இத்தலைப்பில் எழுதியவற்றை முதலில் இருந்து வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று இருக்காதீர்கள். பூச்சாண்டியும் காட்டாதீர்கள்.
<b> . .</b>
#23
kirubans Wrote:அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.

<b>புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பின் அல்லது அவர்களை புரிந்துகொள்ள பின்வருவனவற்றுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும்.


1.புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்று தலைமையின் வடிவம் தான் என்ன?

2.புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?

3.சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் தான் என்ன?

4.ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடு தான் என்ன?

5.அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன?

6.மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

7.உங்கள் அரசியல் மற்றும் கருத்துகள் மக்கள் நலனுடன் எப்படி எந்த வகையில் இணங்கிப் போகின்றது.?

8.நீங்கள் எதைத்தான் செய்ய விரும்புகின்றீர்கள்?

9.மாற்றுக் கருத்து என்பது என்ன? அதனுடன் நீங்கள் எப்படி இணங்கி அல்லது விலகி போகிறீர்கள்?

10.ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் உடனான உங்கள் உறவுகள் என்ன? உலகளாவிய மக்களுடனான உங்கள் உறவு என்ன? இரண்டுடனும் ஒரேவிதமான உறவு இருக்கமுடியுமா?


இது போன்று எதார்த்தம் சார்ந்த விடையங்களில், உங்கள் கருத்துகள் தான் என்ன? இதற்கும் மக்களுக்கு என்ன உறவு உள்ளது என்பதை உரசிப் பார்க்க வேண்டுகோள் விடுகின்றோம்.

</b>

புலி எதிர்ப்பாளர்களை பதில் கூறுங்கள் என அவர்களால் பதிலளிக்க முடியாத
கேள்விகளை கேட்டு மடக்கியிருக்கிறது. அக்கேள்விகள் கட்டாயம் புலி எதிர்ப்பாளர்களை கோபப்படுத்தும் என எதிர்பார்த்தேன்.
கோபப்படுத்தி விட்டது போலுள்ளதே????
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#24
இந்தக் கேள்விகளுக்கு...

குறந்தது 3 பரிமானங்கள் உண்டு...

1. இக்கேள்விகள் மூலம் இன்னென்ன வடிவத்தில் புலி எதிர்ப்பைக் காட்ட சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை இனங்காட்டல்...!

2. இக்கேள்விகளுக்கு யதார்த்தச் சூழலை வைத்து விடை தேட அனுமதிப்பது என்ற போர்வையில் நடைமுறை புலி எதிர்ப்பை இனங்காட்டலும் அதன் மீதி ஆர்வத்தைத் தூண்டலும்..!

3. (அ) இக்கேள்விகளுக்கு தகுந்த விடைகள் அளிக்கப்பட முடியாது என்று நிரூபிக்க முயற்சி எடுக்கப்பட்டாதாக இனங்காட்ட முற்படல்... அதன் மூலம் புலி எதிர்ப்பு எந்தளவுக்கு வெற்றிச் சாத்தியமற்றது எனக் காட்ட முற்படல்.... (ஆ) அல்லது புலி எதிர்ப்பை வெற்றியாக்க எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதை சாதுரியமாக ஒப்பீட்டு ரீதியாக இனங்காட்டல்...!

(இதை நிரூப்பிக்க வேண்டின் கேட்டவரே கேள்விகளுக்கு தன்னாலான ஒரு விளக்கத்தையும் கொடுத்து மறுதலிப்பையும் கொடுத்திருக்கலாம்...ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் விட்டது கருத்தியல் மயக்கதைக் கொடுத்து மேலே சொன்ன 1ம் 2ம் 3 (ஆ) பரிமானங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பதையே பெரிதும் விரும்புவதாகக் இனங்காட்டுகிறது...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#25
அப்படி வேறு இருக்கா :? :roll:
#26
ஊமையவர்களே சற்று தப்பாக எனது கருத்தை விளங்கியிருக்கிறீங்கள் போலுள்ளது. மீண்டும் முயற்சிக்கிறேன்.

இந்த விவாத தலைப்பு புலிகள் மீது விசமப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததாக நான் எண்ணவில்லை அதைத்தான் கூற முனைந்தேன். புலிகளின் தியாகம் கட்டுப்பாடுää வீரம் கொள்கைப்பற்றுறுதி போன்றவற் விளங்கியவர்கள் உணர்ந்தவர்களிற்கு நீங்கள் சொல்லாமலேயே புலிகளை விமர்சிக்கவோ தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்ளையோ கூற மாட்டார்கள்.
புலியெதிர்ப்பு அரசியலில் ஏமாற்றுப்படக்கூடியவர்கள் உங்களை மாதிரி அங்கிருந்து அழிவுகளை நேரில் கண்டு அனுபவித்து உறவுகளை இழந்து உண்மைநிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இந்த அவலங்களில் ஒரு சிறுபகுதியை தன்னும் அனுபவிக்காது புலத்தில் வழர்ந்துவருவோரின் பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் நேரில் அனுபவிக்காத ஒன்றை சரியாக பலத்த பிரச்சாரயுத்திகளின் மத்தியில் விளங்கிக்கொள்ளுவது கடினமென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
புலத்தில் இருக்கும் எதிர்கால சந்ததியின்முன் "மானமுள்ள தமிழனிற்கு கோவம் வரும்---" "அகதிக்காசில் வயிறுவளர்த்துகொண்டு..." என்று செந்தமிழ் பாசத்தை பொழிந்தீர்கள் எண்டால் நீங்கள் புலிகளிற்கும் தமிழ்தேசியத்திற் எதிராக பிரச்சாரம் செய்வேர்பக்கம் தான் புலத்திலுள்ள எதிர்கால சந்ததியை தள்ளிவிடுவீர்கள்.

தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது எனவே புலி எதிர்பரசியல் நடத்துவோரோடும் தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்துவோரோடும் விவாதம் செய்து கருத்தாடி திருத்தமுடியாதொன்பதை நானும் நம்புகிறேன். எமது முயற்சி இவர்களை திருத்துவதல்ல. கருத்துச்சுதந்திரம் உள்ள மேலத்தேயத்தில் எவ்வளவு நியாயமான உண்மையையோ நிதானமாக முன்வைத்தால்தான் அது வெற்றியளிக்கும்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போரளிகளாக இருப்பார்கள் பலரிற்கு மாவீரர்களையும் தனிப்பட்டரீதியில் தெரிந்திருக்கும்ää உங்களிற்கு தெரிந்தவர்கள் அங்கவீனமுற்று இருப்பார்கள். போரினால் எமக்கு இவ்வாறு கிடைத்த நேரடி அனுபவங்களை போராட்டத்தின் நியாயத்தன்மையை ஆளமாக களங்கம் இன்றி உணரும் வகையில் பக்குவப்படுத்தியுள்ளது.

இந்த பக்குவத்தை புலத்தில் வழர்ந்துவரும் எமது எதிர்கால உறவுகளிடம் எதிர்பார்ப்பது நியாயமென்று நான் நினைக்கவில்லை. அவர்களை மூளைச்சலவை செய்வதில் எதிரி அக்கறை காட்டுகிறான்.
அதை எமது பக்கம் நியாயம் இருப்பினும் நிதானமாக கூறித்தான் வெற்றிகொள்ளமுடியும்.

புலியெதிர்ப்பு அரசியல் நடத்துவோரின் வாதங்களிற்கு எவ்வாறு பிரதிவாதம் நிதானமாக வைக்கப்படவேண்டு என்று கூறுங்கள் அது ஆக்கபூர்வமாக இருக்கும்.

இத்தோடு இன்னுமொன்றை கூற விரும்புகிறேன். எமது மக்கள் மத மூடநம்பிக்கைகளிற்கு எவ்வாறு அடிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசியத்திற்கு ஆதரவுக்கருத்தெழுதுவோர் சிலரில் காணலாம். இந்த ஆதரவுக்கருத்து கூறுவேரின் கண்மூடித்தனமான வர்ணனை எவ்வாறு எதிரியின் கொச்சைப்படுத்தலுக்கு துணைபோகிறது என்பதை உணர்வார்களா?
எம்மில் சிலர் தலைவராக தளபதியாக பிரபாகரனை பார்க்காது கடவுளாக வர்ணித்து எதிரியின் ஏளனத்திற்கு உதாரணங்களாக தம்மை பிரகடனப்படுத்துகிறார்கள்? எமது சமுதாயாத்தால் நேர்மையான நீதியான கடமையுணர்வுள்ள தலைவராகவும் இராணுவ அரசியல் இராஜதந்திர யுக்திகள் தெரிந்த இயற்கை அறிவுள்ள ஒரு சிறந்த தளபதியாக ஏன்பார்காது கடவுள்நிலைக்கு அவரை உயர்த்தி அவரை சங்கடத்திற்கு உள்ளாக்குறீர்கள்?
#27
ஊமை Wrote:
narathar Wrote:[புலிஎதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னும் கருத்தியலை உடைப்பதாயின் அல்லது அம்பலப்படுத்துவதாயின் அதனை விமர்சனம் செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியம் என்பது இக்கருத்துத் தடைகளால் வளர்ந்தது அல்ல.
தேசியம் பற்றிய தெழிவு அரசியற்கருத்தாடலின் மூலம் மட்டுமே வரும்.புலிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு தடைசெய் என்று சொல்வதை புலிகளே ஏற்றுக் கொள்ளார்.கருனா விடயம் ஒருவர் புலியாக இருப்பதனால் மட்டுமே தேசியவாதி ஆகிவிட மாட்டார் என்பதைக் காட்டியது.தேசியம் பற்றிய அரசியற்தெழிவு ஒருவரை எந் நிலையிலும் போராட்டப் பாதையில் இருந்து நிலைதளம்ப விடாது.70 மற்றும் 80 களில் அரசியல்மயப்படுத்தப்படவர்களே இன்றும் தேசியம் பற்றிய தெழிவோடு போராட்டத்தை முன்னகர்த்திச்செலுகின்றனர்.90, மற்றும் 00 அரசியல் விவாதங்கள் எதுவுமற்ற வெறுமைக்குள் வந்தவர்களே தளம்பி உள்ளனர்.கருத்தை கருத்தால் வெல்லாத அரசிற்காலப் பகுதிகளில் வந்த தம்பிமார் சிலரே இக்களத்திலும் கருத்தியல்தடையை கொண்டு வர விரும்புகினம்.
கருத்தை கருத்தால் வெல்வோம்,அதுவே நிலைத்து நிற்கும், மாற்றுக்கருத்து என்றும்,பல்னிலைத் தன்மை என்றும் ,தேசியத்தை உடைப்பதற்கான இந்திய அரசியற்வூயகத்தை உடைப்பதற்கு அதுவே உதவும்,கருத்துத் தடை அல்ல.

தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?

கீள் உள்ள இணைப்பை பயன்படித்தி விடுதலைப்பிலிகளின் மூத்த உறிப்பினர் க வே பாலகுமார் 08/05/05 அன்று கிளி நொச்ச்யில் நடைபெற்ற கருத்தரங்கில் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக கேட்கவும்.

http://www.tamilnatham.com/Speeches.htm



புலி எதிர்ப்பாளரை விமர்சிப்பது எவ்வாறு புலிகளை விமர்சிப்பதாகும் எனச் சொல்கிறீர்கள்?
#28
kirubans Wrote:
kuruvikal Wrote:இவர்கள் புலி எதிர்ப்பில்ல...தமிழீழ எதிர்ப்பு... தமிழர் எதிர்ப்பு... தமிழ் எதிர்ப்பு எல்லாம் பேசுவார்கள்..காரணம் மேற்குலகில் சொகுசாக இருக்கிறார்கள் எல்லா...! இவர்கள் இதென்ன இன்னும் பேசுவார்கள்... பிரபாகரனுக்கு மாற்றுத் தலைவராக டக்கிளசை பிரேரிப்பார்கள்..மாற்றுத் தளபதியாக கருணாவை நிறுத்துவார்கள்...மாற்று அரசியல் பொறுப்பாளராக ஆனந்த சங்கரியைப் போடுவார்கள்...புலனாய்வுத் தலைவராக தானே தன்னை உருவகிப்பார்கள்...வாயால் சுனாமியால் உயிர் இழந்தவர்களைக் கூட உயிர்ப்பிப்பார்கள்...உலக வங்கிக் கடனில்லாமலே சுனாமி அழிவை கடலைக் கொண்டே கட்டிவிப்பார்கள்..யார் இவர்கள்..அவர்களின் பலம் என்ன... சேகுவராவின் முகத்தைப் போட்டு சொந்தப் பெயரும் சுயரூபமும் என்பவர்களாச்சே... இந்திய உளவுப் பிரிவுக்கு அவசியமான ஒன்று பலமான புலிகளுக்குள் பிளவும்...மாற்றுத் தலைமையும்...(இதன் மூலம் தமிழ் மக்களைப் பிளவுபடுத்திப் பலவீனமாக்கலும் எதிர்பார்க்கப்படுகிறது..!) அதன் அடிப்படையில் யாழ் களத்திலும் கருத்துக்கள் விதைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை....இது ஒன்றும் அவர்கள் நினைப்பது போல சாதுரியமான செயலும் அல்ல...! இது தமிழர்கள் எமக்குப் பழகிய ஒன்றுதான்...! புலிகள் தோன்றியது முதல் தமிழ் மக்கள் மாற்றுக் கருத்துக்களையும் குழுக்களையும் கண்டுதானே வந்திருக்கிறார்கள்...இடைநடுவில் முளைத்த நாமே பலதைச் தரிசித்துவிட்டோம்...அதில் பலதையும் உருவாக்கியது இந்திய புலனாய்வாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும்...!

19,000 போராளிகளினதும் 80 ஆயிரம் பொதுமக்களினதும் உயிர்த் தியாகங்கள் பற்றியும்.. பல இலட்சம் மக்களினதும் துன்பியலைப் பற்றியும் இவர்கள் உணரக் கூடிய நிலையில இல்லை என்பதை பல கோடிப் பேர் பின்பற்றும் ஒரு மதத்தை அதன் அடிப்படையை படித்தும் விளங்கிக் கொள்ளாமல் வக்கிரத்துக்கு விலை போனபோதே தெரிந்து கொண்டாயிற்று,,,குறைந்தது அந்த மக்களின் நம்பிக்கைக்கு ஒரு சின்ன மரியாதை கூட கொடுக்க முடியாத வக்கிர சிந்தனையாளர்கள்...இப்படியும் பேசக் கூடியவர்கள் எப்படியும் வாழக் கூடியவர்கள்...இவர்கள் மனித சமூகத்துக்குள் வாழும் மனிதம் தொலைத்த....மனிதரல்லா விதி விலக்குகள்...இவர்களைப் பற்றிக் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் காட்டிக் கொண்டிருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

தரப்பட்ட கேள்விக்களுக்கு நியாயமான விடைகளை புலியெதிர்ப்பு அரசியல் செய்பவர்களால் தரமுடியாது என்பதற்காகவே இங்கு இணைக்கப்பட்டது. இது மயக்கத்திலிருப்பவர்களை சற்று சிந்திக்கச் செய்யும்.

நான் எழுதிய வேறு கருத்துக்கள் உமக்குப் பிடிக்காத ஒரே கரணத்தால்தான் நீர் இப்படியான பதிலை எழுதியுள்ளீர் என்று தெரிகின்றது.

ஒருவரின் கருத்தில் உள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க முற்படாமல், சும்மா பூச்சாண்டி காட்டவேண்டாம். என்னைபற்றி உமது கற்பனைகளுக்கு பதில் அளிக்க எனக்கு அவசியமில்லை. (எங்கோ தனிப்பட்ட ரீதியில் ஒருவரைத் தாக்கக் கூடாது என்று எழுதியுள்ளீரே, எழுதியதை நீர் கடைபிடித்தால் என்ன)

லண்டனில் இருந்தால் என்னுடன் நேரிலேயே உமது கருத்துக்களை வைக்க சந்தர்ப்பம் உள்ளது. அப்போது சொந்தப் பெயர் என்ன சுயரூபம் என்னவென்று நீர் புரிந்து கொள்வீர். விரும்பினால் தனிமடலில் எங்கு சந்திக்க விருப்பம் என்று சொல்லுங்கள். முகமூடிக்குள் இருந்து கொண்டு எதையும் எழுந்தமானத்தில் எழுதிவிட்டுப் போக நான் ஒன்றும் பேடியல்ல.

கிருபன் இங்கு சிலர் தமது பிற்போக்கான கருத்தோட்டங்கள் அம்பலப்படுத்தப்படும் தருணங்களில் ,தங்களை தீவிர புலி ஆதரவாளர் போன்ற மாயையய் உருவாக்கி ,பூன்ச்சாண்டி காட்டுகின்றனர்.இப் பூச்சாண்டி புலிகளை அறியாதாரிடம் பலிக்கலாம், அறிந்தவரிடம் அல்ல.
#29
உண்மையான தமிழன் புலிகளின் பெயரை தனது தேவைக்காக ஒருபோதும் பயன்படுத்தமாட்டான்...புலிகள் ஒரு அரசியல் சமூக விடுதலை வேண்டிப் போராடும் போராளிகள்...அவர்களின் கொள்கையும் கொள்கைப்பற்றும் எம்மைக் கவர்ந்திருக்கிறது...அவர்களுடன் ஒத்துப்போகக் கூடிய எமது கருத்து நிலையை வெளிப்படுத்தல் என்பது புலிகள் சார்ந்து வாழ்வதாக ஆகாது...! நிச்சயமாக புலிகள் பெயராலோ... அல்லது அவர்கள் நடத்தும் போராட்டத்தினைப் பயன்படுத்தியோ...தாயகத்தில் அல்லது புலத்தில் வாழ வேண்டிய எந்தத் தேவையும் இல்லாத தமிழர்களுள் நாங்களும் அடக்கம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#30
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சபாஸ் குருவிகள். எல்லோருடைய சார்பிலும் இந்த கருத்துக்கு நீங்கள் சரியான முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள்.

இனி தயவு செய்து இந்த கருத்தை யாரும் தொடர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்ச்சி பெறச்செய்ய வேண்டாம் என்று உங்களை மன்றாட்டாக கேட்டுக்கொள்கிறேன்.
#31
<b>தனிப்பட்ட கருத்துமோதல்களைத் தவிர்க்கவும்.</b> ஒருவர் இட்ட கருத்துக்கு உங்களிடம் பதில் கருத்து இல்லாவிட்டால், அல்லது அந்தக் கருத்தை புறக்கணிக்க நினைப்பின் கருத்து எழுதாமல் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து தனிப்பட்ட மோதல்களை தொடர்வதை களம் அனுமதிக்காது.

<b>தற்காலிகமாக இத்தலைப்பு மூடப்படுகிறது.</b> யாரவது தனிப்பட்ட தாக்குதல் அல்லாத கருத்தினை எழுதவிரும்பினால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.

[b]




Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)