Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிரடிப்படையினர் அடாவடித்தனத்துக்கு இருபுலிகள் பலி
#1
அம்பாறை மாவட்டம் பாவட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அரசியற் பணிகளில் ஈடுபட இன்று காலை 7.30 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிககுள் சென்ற இரு போராளிகள் காஞ்சிரங்குடா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். (திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:

காலை 7.30 மணியளவில் பாவட்டை சமாதான செயலகத்திலிருந்து படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபடுவதற்காய் உந்துருளி ஒன்றில் சென்ற இரு போராளிகளும், காஞ்சிரங்குடா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து 400 மீற்றர்கள் தொலைவில் உள்ள பகுதியை சென்றடைந்தபோது வெள்ளை நிற ரவுன் ஏசி; ரக வாகனத்தில் சாதாரண உடையில்; காத்திருந்த சிறப்பு அதிரடிப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதில் ஒரு போராளி அந்த இடத்திலேயே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும் மற்றைய போராளியின் கைகளை பின்புறமாகக் கட்டிவிட்டு சுட்டுக்கொன்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்;.சங்கதி

இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் குறிப்பிட்ட வாகனத்தில் ஏறி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்குள் சென்றதை தாம் கண்டதாக மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் சின்னக்கடையைச் சேர்ந்த வெள்ளையன் ரமேஸ் (அகவை 32) மற்றும் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சுஜிவேந்தன் (அகவை 18) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் எமக்கு அறியத் தந்துள்ளனர்.சங்கதி

தற்போது இப்போராளிகளின் வித்துடல்கள் விடுதலைப் புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு அவரிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.சங்கதி

இதேவேளை படையினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.சங்கதி

:
Reply
#2
அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று - பொத்துவில் வீதி காஞ்சிரங்குடா சந்தியில் இன்று காலை 7.45 மணியளவில் விடுதலைப் புலிப் போராளிகள் இருவர் சிறிலங்கா காவல்துறை சீருடையணிந்த துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.


ரமேஸ் மற்றும் சுஜிவேந்தன் ஆகிய போராளிகளே இந்த துப்பாக்கிதாரிகளினால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்னர்.

கொல்லப்பட்ட போராளிகள் இருவரும் பாவட்டாவில் உள்ள செயலகத்திலிருந்து அரசியல் பணிக்காக தம்பிலுவில் உள்ள மாவட்ட அரசியல்துறை காரியாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த சமயம் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் வழிமறித்த துப்பாக்கிதாரிகள்இ மோட்டார் சைக்கிளிலிருந்து இவர்களை இறக்கி கைகளை கட்டிய பின்பு சுட்டுக்கொன்றதோடு மோட்டார் சைக்கிளையும் தமது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் உடும்பன்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரமணி செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்இ

துப்பாக்கிதாரிகள் காவல்துறை சீருடை தரித்து காணப்பட்டமையினால் சிறிலங்கா காவல்துறையினர் தான் வாகனத்தை நிறுத்துகின்றார்கள் எனக்கருதியே தமது போராளிகள் அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வேண்டியேற்பட்ட்து.

இச்சம்பவத்திற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் தேச விரோத ஆயுதக் குழுக்களே பொறுப்பு. கொலையாளிகளின் வாகனம் காஞ்சிரங்குடாஇ திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம்கள் வழியாகவே தப்பிச் சென்றுள்ளன. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் விசேட அதிரடிப்படை முகாம் உள்ளது

இப்படியான நிலையில் இச்சம்பவமானது விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கான பொறுப்பை இப் பிரதேசத்தின் பாகாப்பிற்கு பொறுப்பான சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் தான் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இரண்டு போராளிகளின் வித்துடல்கள் தற்போது தங்களால் தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இச்சம்பவத்தையடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அப்பிரதேசத்தில் கடைகள் யாவும் தற்போது மூடப்பட்டுள்ளன.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
தலைவா இன்னமும் எத்தனை போராளிகளை நிராயுதபாணிகளாக இழக்கப்போகிறோம்?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
ஒவ்வொரு முறையும் இப்படி நடப்பதும் அதைக் கண்டித்து
அறிக்கை விடுவதுமாக இருந்தால் மக்களும் இதனை சாதாரண
நிகழ்வாகவே பார்க்கும் நிலைமை வந்துவிடப்போகிறது Confusedhock: :evil: .
Reply
#5
இவர்களின் அடாவடித் தனங்களுக்கு சமாதிகட்டும் காலம் வெகு விரைவில் வரும் அது வரையும் காத்திருப்போம்.
viji
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)