Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!
#1
புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!
[சனிக்கிழமை, 25 மார்ச் 2006, 17:19 ஈழம்] [கொழும்பு நிருபர்]
புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகொன்று இன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவத்தில் 8 கடற்படையினரைக் காணவில்லை என்றும் 10 கடற்படையினர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.eelampage.com/?cn=25049
Reply
#2
சபாஷ்!! நல்ல செய்தி!!! தொடர வேண்டும்!!!!
Reply
#3
உடனே புலிகளில் பழி போட்டு விடுவினமே? :roll: :roll:
[size=14] ' '
Reply
#4
<b>Tamil rebels 'blow themselves up' </b>
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4845004.stm

<b>Eight Sri Lankan sailors presumed dead in Tamil Tiger Suicide blast</b>
http://www.turkishpress.com/news.asp?id=114979

<b>Sri Lanka sailors feared dead in rebel sea blast - Navy</b>
http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False


<b>Tamil rebels blow up boat to avoid capture</b>
http://www.iol.co.za/index.php?set_id=1&cl...43288901195B264

<b>Six suspected Tamil Tigers killed in boat blast off western Sri Lanka, military says </b>

http://english.ohmynews.com/ArticleView/ar...281630&rel_no=1
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
புலிகள் தாக்குவில்லை. ஆனால் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது படகை வெடிக்க வைத்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிபிசி தமிழ் ஓசையிட்டம் தெரிவித்து உள்ளாரே
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#6
<span style='color:brown'><b>மீன்பிடி படகு வெடித்ததில் சோதனையிட முயன்ற கடற்படையினர் 8 பேரைக் காணவில்லை</b>
<img src='http://www0.bbc.co.uk/worldservice/images/2006/02/20060211165536lankanavyboat203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் வடக்கே மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் குதிரமலை என்னுமிடத்தில் மீன்பிடி இழுவைப் படகொன்றைக் கண்ட அதிவேக டோரா படகில் சென்ற கடற்படையினர் அதனைச் சோதனையிட முயன்றபோது அந்தப் படகு வெடித்துச் சிதறியதில் கடற்படையினர் 8 பேர் காணாமல் போயிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் படகிலிருந்த எஞ்சிய 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி இழுவைப்படகும். கடற்படையின் டோரா படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெடித்துச் சிதறிய மீன்பிடி படகில் 6 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

- பீபீசி தமிழ்
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

<b>கல்பிட்டி கடலில் 8 கடற்படையினரை காணவில்லை; 11 பேர் காயங்களுடன் மீட்பு 6 புலிகள் உயிரிழந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு</b>
<img src='http://www.virakesari.lk/vira/html/admin/head/head_img/uploaded/doora.jpg' border='0' alt='user posted image'>

கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் நேற்று மாலை றோலர் மீன்பிடிப்படகு ஒன்றை கடற்படையின் டோறா பீரங்கிப்படகு அண்மித்ததையடுத்து அந்த மீன்பிடிப்படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறாப் படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தில் மீன்பிடிப்படகில் இருந்த ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கடற்படை வட்டாரங்கள், தமது டோறாப்படகில் இருந்த 19 பேரில் எட்டுப்பே ரைக்காணவில்லையென்றும் ஏனைய பதினொருபேரும் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவித்தன.

நேற்றுமாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் மேற்குப் புறமாக 17 கடல்மைல் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான றோலர் மீன் பிடிப்படகு ஒன்றை அவதானித்த கடற்படையின் டோறாபடகு அந்த மீன்பிடிப்படகை அண்மித்து, அதனை சோதனையிட முயன்றபோது அந்தப்படகு வெடித்துச் சிதறியது. இதனால், அந்தப்படகில் இருந்த ஆறுபேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கடற்படை வட்டாரங்கள் , றோலர் படகு வெடித்துச் சிதறியதால் தமது டோறா பீரங்கிப்படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், டோறாவில் இருந்த 19 பேரில் எட்டுப்பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்தன. அதேநேரம், டோறாவில் இருந்த 11 பேர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாவது:

கடற்படையினர் எட்டுப்பேரைக் காணவில்லை. பதினொரு கடற்படையினர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விடுதலைப்புலிகளின் றோலர் படகே வெடித்துச் சிதறியிருக்கலாம். இச்சம்பவத்தில்



காணாமல் போன படையினரைத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். இது குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் இது குறித்து தெரிவிப்போம் என்றன.

இச்சம்பவத்தையடுத்து தலைமன்னார் கடலில் பாதுகாப்பைப்பலப்படுத்தியுள்ள கடற்படையினர், வீதிகளில் கடும் சோதனைகளை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

-Veerakesari

</span>
Reply
#7
<b>கடற்பிட்டி கடலில் டோறா வெடித்துச் சிதறியது - எட்டு கடற்படையினரைக் காணவில்லை </b>

புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற் படைக்குச் சொந்தமான டோறா பீரங்கிப் படகு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தப் படகில் பயணித்த எட்டுக் கடற் படையினர் காணாமல் போயு ள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குதிரைமலைக் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கடல் ரோந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் படகொன்று வெடித்துச் சேதமடைந்ததுடன் இதில் 19 கடற்படையினர் படகில் இருந்ததாகவும் 11 கடற்படையினர் உயிருடன் மீட்க்கப்பட்டதாகவும் ஏனைய 8 கடற்படையினரது நிலை இதுவரை தெரியவில்லை.

கரையில் இருந்து பல கடல்மைல் து}ரத்திற்கு அப்பால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் மன்னாரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிடுகையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படைப் படகு நெருங்கிச் சென்றபோது, ஆறுபேரைக் கொண்ட அந்தப் படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறா படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதில் பயணித்த 11 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழமை போன்று விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடற்படையின் இந்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

செய்தி: சங்கதி
[size=14] ' '
Reply
#8
வலுவிழந்து போகும் சிங்கள கடற்படையின் வலிமை மிக்க ஆயுதம்
http://www.tamilnaatham.com/articles/2006_...sh/20060403.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)