09-07-2005, 12:35 PM
தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு
கே. டானியல்
இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே குறிப்பாக வட பகுதியில் நிலவி வரும் சாதி அமைப்பு முறைக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கான இயக்க பூர்வமான காலத்தை 'சுமார் ஐம்பது ஆண்டு காலம்' என்று ஓரளவுக்குக் குறிப்பிடலாம். இந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்னால் இதன் கோர ரூபம் எப்படி இருந்திருக்கும் என்பதனை இந்த ஐம்பது ஆண்டு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக் கெடுத்துக் கொள்வது யாருக்கும் கடினமாக இராது.
பரிணாம வளர்ச்சிக் கணக்கெடுப்பில் இருந்து பார்க்குமிடத்து நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் பிறப்போடு இந்தச் சாதி அமைப்பு முறையும் பிறப்பெடுத்ததென்று குறிப்பிடுவது பொருத்தமாயினும் இங்கு இந்த சாதி முறைக்கு எதிரான பொது இயக்கங்கள் பிறப்பிக்கப்பட்ட காலத்தைக் கணக்கிற் கொண்டுதான் இதன் வயது ஐம்பது ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படுகிறது..
தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பிரதேசம் என உரிமை கொண்டாடும் பிரதேசங்களுள் கேந்திரப் பிரதேசமாகக் கணிக்கப்படும் வடபிரதேசம் எங்கும் உள்ள கிராமப்பிரிவுகளுக்குச் சென்று உன்னித்து ஊடுருவிப் பார்த்தால் இந்தச் சாதி அமைப்பு முறையின் சின்னங்களைத் தரிசிக்கமுடியும். கிராமங்களில் அமைப்பு முறையும்/ ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும்/ அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும்/ அவர்கள் வாழும் நிலங்களும்/ அவைகளைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் நிலத்தோம்புப் பெயர்களும்/ ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும்/ குளங்களும்/ கிணறுகளும்/ மடங்களும்/ வேறும்பல சரித்திரச் சின்னங்களும்/ கால் நடைகளின் பட்டிக் குறிகளும்/ வீதிப் பெயர்களும்/ கிராமப் பெயர்களும்/ பேச்சு முறைகளும்/ பழக்க வழக்கங்களும்/ நன்மை தின்மை வைபவங்களின் நடை முறைகளும்/ மிகவும் தீண்டப்படாதாருடன் தொடர்பு கொள்வதற்காகச் சங்கடப் படலையோடு கூடிய படிலைத் தலைவாயிலும்/ அதற்குசற்று முன் வரிசையில் (உள்ள சாதியினருடன் பேசிக்கொள்வதற்காக அமைந்த) சவுக் கண்டியும்/ தம்மோடொத்தவர்கள் மட்டும் உள்ளே வர வசதியாக அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும்/ பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதைத் தெளிவாக உணர முடியும். .
இந்தச் சாதி அமைப்பு முறைக்கும் அதன் வெறியாட்டாங்களுக்கும் சவாலாகத் தலையெடுத்து வந்த எதிர்ப்புச் சாதனங்களுடன்தான் சாதி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.1915-18ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட பகுதியில் சுன்னாகத்தைச் சேர்ந்த வி. எம். கந்தையா என்பவரை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'ஆதி திராவிடன்' மாத இதழுடன் இந்தச் சாதி எதிர்ப்பு இயக்கம் மெது மெதுவாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இந்த 'ஆதி திராவிடன்' அடிப்படையில் சமய சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமையால் சாதி எதிர்ப்பு இயக்கத்தில் இது பிரதானப்படுத்துமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து 1920-25 கால இடைவெளியில் சூ. எ. சின்னப்பு என்பவரை ஆசிரியராகக் கொண்ட 'மேல் நோக்கம்' என்ற பத்திரிகை ஒரு படி முன்னேறிச் சாதிக் கொடுமையின் தம்மைகளை ஆத்மார்த்தக் கருத்துக்களோடு சேர்த்துக் கொண்டதும்/ அந்த வேளை அச்சுத்தொழிýல் பயிற்சி பெற்று இன்றும் ஈழகேசரி பொன்னையா என்று கெüரவமாக அழைக்கப்படும் பெரியார் 'முன்னேற்றம்' பத்திரிகையை நெறிப்படுத்தியதும் குறிப்பிடக்கூடியனவாகும். இந்த காலக்கட்டத்தில் தீவிரமான சாதி ஒழிப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துணிச்சலுக்கு இலக்கணமாக விளங்கிய அமரர் என்ற பத்திரிகையும்/ அப்பத்திரிகை மூலமாகப் போராட்டமயமான கருத்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கமும்'தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தின் தொடக்கமாய் அமைந்தது எனலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டுவந்த இன்னல்களுக்கு எதிராக எழுந்துநின்று குரல் கொடுக்கும் பணியில் ஒப்புதல் தெரிவித்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்களுள் அன்று இராமநாதன் கல்லூரி ஆசிரியராக இருந்த ருத்திரகோடீஸ்வர ஐயர்/ மத்தியூஸ் பாதிரியார்/ யாழ்பாணக்கல்லூரி அதிபர் லொக்கூட்/ பிக்கனல் பாதிரியார் ஆகியோர் குறிப்பிடக்கூடியவர்களாவர். அவ்வேளை இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்து நெவில்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும் அமார் யேக்கப் ஸ்ரீகாந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு' மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிýருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியாக நிற்கவில்லை என்பதும்/ காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது..
இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப்படுத்த படவில்லையாயினும்/ உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும் எதிர்ப்பு நடவடிக் கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் தலைமகனாகிய யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை..
1927ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலண்டனிýருந்த தனது நண்பர் மூலமாக இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை/ இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். 'வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்' என்ற கொள்கையின்கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற ஆ.ட.யினால் நியமிக்கப்பட்ட டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச்சாட்சியமளிக்க சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதிýருந்துதான்/ 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவாரோ?' என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோர வடிவங்களை எடுத்தன/ என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே டொனமூர் கமிஷன் “வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தியபோதும் உள்நாட்டு அரச இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுமை நடத்தி வந்தமையால் ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. அரசு இயந்திரங்கள் தீவிரமடைந்தன. விதானை/ உடையார்/ மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள்/ காவல் படையினைச் சேர்ந்தவர்கள் சிவில் சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒரு சில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குள் கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழிவிட்டன. சுற்றுப்புறச் சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர். இம்சிக்கப்பட்டனர்..
பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை - சுடலைகளில் பிணம் சுடத் தடை - பொது ஸ்தாபனங் களின் உள்நுழையத்தடை -சுதந்திரமான வாகனப் போக்குவரத்துத்குக்குத் தடை - கோவிற் பக்கம் செல்லத்தடை - மேளம் அடிக்கத்தடை - மீசை விடத் தடை - கடுக்கன் அணியத் தடை - குளங்களில் குளிக்கத் தடை - பந்தல் போட்டு வெள்ளை கட்டத்தடை - முழங்கால் மட்டத்திற்குக் கீழ் வேட்டி அணியவும்/ மேல் அங்கி அணியவும்/ சால்வை போடவும் தடை - வண்டியில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை - புகை வண்டியின் ஆசனங்களில்/ பஸ் ஆசனங்களில் இருக்கத்தடை - கடை போன்றவை வைக்கத்தடை - செய்த வேலைக்குக் கூý கேட்கத்தடை - குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை - பால்மாடு வளர்க்கத்தடை - விறுமர்/ அண்ணமார்/ காளி/ பெரியதம்பிரான்/ வீரபத்திரர்/ வைரவர்/ நாச்சிமார்/ காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களை விட ஏனைய பெயர்களில் கோவில்களை அமைக்கத்தடை - குடை பிடிக்கவும்/ வெள்ளை வேட்டி அணியவும்/ செருப்பு அணியவும் பெண்கள் குடுமி போட்டுக் கொள்ளவும் தடை - தாவணி போடத்தடை தங்கத்தாý/ நகை நட்டுக்கள் அணியத் தடை இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேச வழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப்பட்டன. சர்வ சன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராக/ கொண்டிருந்த சைவசித்தாந்த சபைக்குத் தற்காýகத் தலைவராக ஆறுமுக நாவலரின் மருமகனாகிய த. கைலாசப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சிந்தாந்த அறக் கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு. யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர்/ தாமும் சைவ சித்தாந்த அறக் கல்வியைப் பெற வேண்டும் என்று கோரி/ மாநாட்டுத் தலைவர் கைலாசப்பிள்ளை மறுக்கவே. அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப்பட்டோர்/ அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று/ டொனமூர்க் கமிஷனுக்கு தந்தி மூலம் இலண்டனுக்கு அனுப்பிவைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம்/ இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனில் இருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதராவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம். 1930ம் ஆண்டுக்காலப் பகுதியின் ஹண்டி. எச். பேரின்ப நாயகத்தைத் தலைவராகவும்/ செனட்டர் நாகýங்கம்/ ஒறேற்றர் சுப்பிரமணியம்/ கலைப் புலவர் நவரத்தினர்/ ஏ. எஸ். கனக ரத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது. இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதும்/ சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு/ 'சம ஆசனம் - சம போசனம்' என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்திற்கென தமிழக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அழைக்கப்பட்டு/ சமபந்தி சமபோசனப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும்/ சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை/ ஒட்டகப்புலம்/ சுளிபுரம்/ புன்னாலைக்கட்டுவன்/ காங்கேசன்துறை/ பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14 பாடசாலைகள் சாதி வெறியர்கள் வைத்த தீயில் வெந்து சாம்பராயின..
1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாýபர் காங்கிரசினர்/ அவ்வேளை சாதி வெறியர்களின் கோபாக்கினிக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலக்கட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப் புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதýல் பýயிடப்பட்டவன் புத்தூர்ப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதி மிகுதியால் பனை மரத்தில் ஏறி இருந்த ஒரு அப்பாவிப் பஞ்சமன் மரம தறித்து வீழ்த்தப்பட்டு - கொல்லப்பட்டு - அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடி சாம்பராக்கப்பட்டான். ஏனைய கிராமப்புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப்பிரதேசத்தில் நில ஆதிக்கமுறையும்/ சாதி ஒடுக்கு முறையும் மேலோங்கி யிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச் சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும்/ வீட்டு முற்றங்களின் நீள வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல பாரம்பரிய பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்கு சற்று வேறுபட்ட/ சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம் பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதý குடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்து செல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும்/ ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டணை கொடுக்க/ அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்து தர்பார்த்தன வழக்கத்தையும் மாட்டுக்குப் பதிலாக/ அடிமை மனிதனை ஏரில் பூட்டி/ உழுது பயிரிட்டமையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன..
கýயாணப் பெண்களுக்குச் சீதனம் கொடுக்கும்போது அந்தச் சீதன வரிசையில் ஒரு கோவியனும்/ ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீரவேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது. இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்று வரை இருந்து வருவதைக் காணலாம்..
இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும்/ நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண்/ வாய் பொத்த கோவியன்/ அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் பரியாரி' என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்துக்குச் சவரம் செய்வதும்/ 'கட்டாடி' என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத் தனத்தொண்டுகளாகும். இவைகளுக்குப் பின்பு பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங் கொள்ளாக் காட்சியாக இருக்கும்..
http://tamil.sify.com/dalit/dalit10/fullst...php?id=13553620
கே. டானியல்
இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே குறிப்பாக வட பகுதியில் நிலவி வரும் சாதி அமைப்பு முறைக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கான இயக்க பூர்வமான காலத்தை 'சுமார் ஐம்பது ஆண்டு காலம்' என்று ஓரளவுக்குக் குறிப்பிடலாம். இந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்னால் இதன் கோர ரூபம் எப்படி இருந்திருக்கும் என்பதனை இந்த ஐம்பது ஆண்டு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக் கெடுத்துக் கொள்வது யாருக்கும் கடினமாக இராது.
பரிணாம வளர்ச்சிக் கணக்கெடுப்பில் இருந்து பார்க்குமிடத்து நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் பிறப்போடு இந்தச் சாதி அமைப்பு முறையும் பிறப்பெடுத்ததென்று குறிப்பிடுவது பொருத்தமாயினும் இங்கு இந்த சாதி முறைக்கு எதிரான பொது இயக்கங்கள் பிறப்பிக்கப்பட்ட காலத்தைக் கணக்கிற் கொண்டுதான் இதன் வயது ஐம்பது ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படுகிறது..
தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பிரதேசம் என உரிமை கொண்டாடும் பிரதேசங்களுள் கேந்திரப் பிரதேசமாகக் கணிக்கப்படும் வடபிரதேசம் எங்கும் உள்ள கிராமப்பிரிவுகளுக்குச் சென்று உன்னித்து ஊடுருவிப் பார்த்தால் இந்தச் சாதி அமைப்பு முறையின் சின்னங்களைத் தரிசிக்கமுடியும். கிராமங்களில் அமைப்பு முறையும்/ ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும்/ அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும்/ அவர்கள் வாழும் நிலங்களும்/ அவைகளைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் நிலத்தோம்புப் பெயர்களும்/ ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும்/ குளங்களும்/ கிணறுகளும்/ மடங்களும்/ வேறும்பல சரித்திரச் சின்னங்களும்/ கால் நடைகளின் பட்டிக் குறிகளும்/ வீதிப் பெயர்களும்/ கிராமப் பெயர்களும்/ பேச்சு முறைகளும்/ பழக்க வழக்கங்களும்/ நன்மை தின்மை வைபவங்களின் நடை முறைகளும்/ மிகவும் தீண்டப்படாதாருடன் தொடர்பு கொள்வதற்காகச் சங்கடப் படலையோடு கூடிய படிலைத் தலைவாயிலும்/ அதற்குசற்று முன் வரிசையில் (உள்ள சாதியினருடன் பேசிக்கொள்வதற்காக அமைந்த) சவுக் கண்டியும்/ தம்மோடொத்தவர்கள் மட்டும் உள்ளே வர வசதியாக அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும்/ பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதைத் தெளிவாக உணர முடியும். .
இந்தச் சாதி அமைப்பு முறைக்கும் அதன் வெறியாட்டாங்களுக்கும் சவாலாகத் தலையெடுத்து வந்த எதிர்ப்புச் சாதனங்களுடன்தான் சாதி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.1915-18ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட பகுதியில் சுன்னாகத்தைச் சேர்ந்த வி. எம். கந்தையா என்பவரை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'ஆதி திராவிடன்' மாத இதழுடன் இந்தச் சாதி எதிர்ப்பு இயக்கம் மெது மெதுவாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இந்த 'ஆதி திராவிடன்' அடிப்படையில் சமய சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமையால் சாதி எதிர்ப்பு இயக்கத்தில் இது பிரதானப்படுத்துமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து 1920-25 கால இடைவெளியில் சூ. எ. சின்னப்பு என்பவரை ஆசிரியராகக் கொண்ட 'மேல் நோக்கம்' என்ற பத்திரிகை ஒரு படி முன்னேறிச் சாதிக் கொடுமையின் தம்மைகளை ஆத்மார்த்தக் கருத்துக்களோடு சேர்த்துக் கொண்டதும்/ அந்த வேளை அச்சுத்தொழிýல் பயிற்சி பெற்று இன்றும் ஈழகேசரி பொன்னையா என்று கெüரவமாக அழைக்கப்படும் பெரியார் 'முன்னேற்றம்' பத்திரிகையை நெறிப்படுத்தியதும் குறிப்பிடக்கூடியனவாகும். இந்த காலக்கட்டத்தில் தீவிரமான சாதி ஒழிப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துணிச்சலுக்கு இலக்கணமாக விளங்கிய அமரர் என்ற பத்திரிகையும்/ அப்பத்திரிகை மூலமாகப் போராட்டமயமான கருத்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கமும்'தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தின் தொடக்கமாய் அமைந்தது எனலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டுவந்த இன்னல்களுக்கு எதிராக எழுந்துநின்று குரல் கொடுக்கும் பணியில் ஒப்புதல் தெரிவித்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்களுள் அன்று இராமநாதன் கல்லூரி ஆசிரியராக இருந்த ருத்திரகோடீஸ்வர ஐயர்/ மத்தியூஸ் பாதிரியார்/ யாழ்பாணக்கல்லூரி அதிபர் லொக்கூட்/ பிக்கனல் பாதிரியார் ஆகியோர் குறிப்பிடக்கூடியவர்களாவர். அவ்வேளை இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்து நெவில்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும் அமார் யேக்கப் ஸ்ரீகாந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு' மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிýருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியாக நிற்கவில்லை என்பதும்/ காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது..
இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப்படுத்த படவில்லையாயினும்/ உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும் எதிர்ப்பு நடவடிக் கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் தலைமகனாகிய யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை..
1927ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலண்டனிýருந்த தனது நண்பர் மூலமாக இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை/ இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். 'வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்' என்ற கொள்கையின்கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற ஆ.ட.யினால் நியமிக்கப்பட்ட டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச்சாட்சியமளிக்க சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதிýருந்துதான்/ 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவாரோ?' என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோர வடிவங்களை எடுத்தன/ என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே டொனமூர் கமிஷன் “வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தியபோதும் உள்நாட்டு அரச இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுமை நடத்தி வந்தமையால் ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. அரசு இயந்திரங்கள் தீவிரமடைந்தன. விதானை/ உடையார்/ மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள்/ காவல் படையினைச் சேர்ந்தவர்கள் சிவில் சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒரு சில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குள் கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழிவிட்டன. சுற்றுப்புறச் சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர். இம்சிக்கப்பட்டனர்..
பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை - சுடலைகளில் பிணம் சுடத் தடை - பொது ஸ்தாபனங் களின் உள்நுழையத்தடை -சுதந்திரமான வாகனப் போக்குவரத்துத்குக்குத் தடை - கோவிற் பக்கம் செல்லத்தடை - மேளம் அடிக்கத்தடை - மீசை விடத் தடை - கடுக்கன் அணியத் தடை - குளங்களில் குளிக்கத் தடை - பந்தல் போட்டு வெள்ளை கட்டத்தடை - முழங்கால் மட்டத்திற்குக் கீழ் வேட்டி அணியவும்/ மேல் அங்கி அணியவும்/ சால்வை போடவும் தடை - வண்டியில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை - புகை வண்டியின் ஆசனங்களில்/ பஸ் ஆசனங்களில் இருக்கத்தடை - கடை போன்றவை வைக்கத்தடை - செய்த வேலைக்குக் கூý கேட்கத்தடை - குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை - பால்மாடு வளர்க்கத்தடை - விறுமர்/ அண்ணமார்/ காளி/ பெரியதம்பிரான்/ வீரபத்திரர்/ வைரவர்/ நாச்சிமார்/ காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களை விட ஏனைய பெயர்களில் கோவில்களை அமைக்கத்தடை - குடை பிடிக்கவும்/ வெள்ளை வேட்டி அணியவும்/ செருப்பு அணியவும் பெண்கள் குடுமி போட்டுக் கொள்ளவும் தடை - தாவணி போடத்தடை தங்கத்தாý/ நகை நட்டுக்கள் அணியத் தடை இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேச வழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப்பட்டன. சர்வ சன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராக/ கொண்டிருந்த சைவசித்தாந்த சபைக்குத் தற்காýகத் தலைவராக ஆறுமுக நாவலரின் மருமகனாகிய த. கைலாசப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சிந்தாந்த அறக் கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு. யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர்/ தாமும் சைவ சித்தாந்த அறக் கல்வியைப் பெற வேண்டும் என்று கோரி/ மாநாட்டுத் தலைவர் கைலாசப்பிள்ளை மறுக்கவே. அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப்பட்டோர்/ அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று/ டொனமூர்க் கமிஷனுக்கு தந்தி மூலம் இலண்டனுக்கு அனுப்பிவைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம்/ இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனில் இருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதராவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம். 1930ம் ஆண்டுக்காலப் பகுதியின் ஹண்டி. எச். பேரின்ப நாயகத்தைத் தலைவராகவும்/ செனட்டர் நாகýங்கம்/ ஒறேற்றர் சுப்பிரமணியம்/ கலைப் புலவர் நவரத்தினர்/ ஏ. எஸ். கனக ரத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது. இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதும்/ சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு/ 'சம ஆசனம் - சம போசனம்' என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்திற்கென தமிழக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அழைக்கப்பட்டு/ சமபந்தி சமபோசனப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும்/ சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை/ ஒட்டகப்புலம்/ சுளிபுரம்/ புன்னாலைக்கட்டுவன்/ காங்கேசன்துறை/ பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14 பாடசாலைகள் சாதி வெறியர்கள் வைத்த தீயில் வெந்து சாம்பராயின..
1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாýபர் காங்கிரசினர்/ அவ்வேளை சாதி வெறியர்களின் கோபாக்கினிக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலக்கட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப் புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதýல் பýயிடப்பட்டவன் புத்தூர்ப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதி மிகுதியால் பனை மரத்தில் ஏறி இருந்த ஒரு அப்பாவிப் பஞ்சமன் மரம தறித்து வீழ்த்தப்பட்டு - கொல்லப்பட்டு - அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடி சாம்பராக்கப்பட்டான். ஏனைய கிராமப்புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப்பிரதேசத்தில் நில ஆதிக்கமுறையும்/ சாதி ஒடுக்கு முறையும் மேலோங்கி யிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச் சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும்/ வீட்டு முற்றங்களின் நீள வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல பாரம்பரிய பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்கு சற்று வேறுபட்ட/ சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம் பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதý குடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்து செல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும்/ ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டணை கொடுக்க/ அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்து தர்பார்த்தன வழக்கத்தையும் மாட்டுக்குப் பதிலாக/ அடிமை மனிதனை ஏரில் பூட்டி/ உழுது பயிரிட்டமையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன..
கýயாணப் பெண்களுக்குச் சீதனம் கொடுக்கும்போது அந்தச் சீதன வரிசையில் ஒரு கோவியனும்/ ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீரவேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது. இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்று வரை இருந்து வருவதைக் காணலாம்..
இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும்/ நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண்/ வாய் பொத்த கோவியன்/ அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் பரியாரி' என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்துக்குச் சவரம் செய்வதும்/ 'கட்டாடி' என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத் தனத்தொண்டுகளாகும். இவைகளுக்குப் பின்பு பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங் கொள்ளாக் காட்சியாக இருக்கும்..
http://tamil.sify.com/dalit/dalit10/fullst...php?id=13553620

