12-22-2005, 03:35 PM
<b>யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை வரை 10 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </b>
இந்தத் தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் படையினர் மூவரும் இராணுவம் தாக்கியதில் பொதுமக்கள் 5 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ். புறநகர்ப்பகுதி, நல்லூர் முத்திரைச் சந்தி, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி, அச்சுவேலி, கந்தர்மடம் சந்தி, நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை, நெல்லியடி ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நல்லூர் முத்திரைச் சந்தியடியில் இன்று மாலை 6 மணியளவில் சிறிலங்கா படையினர் காவலுக்கு நின்றிருந்த போது அவர்கள் மீது அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் வடக்கில் உள்ள ஐந்து சந்திப் பகுதியில் இந்துக் கல்லூரிக்கும் பன்றிக்குட்டிப்பிள்ளையார் கோயிலுக்கும் இடையே இராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் 51 ஆம் டிவிசனுக்கு படையினரை இந்த இராணுவ வாகனம் ஏற்றி வந்தது. மறைவிடம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மூன்று ரி-56 ரக குண்டுகள் இராணுவ வாகனத்தை துளைத்தது. இருப்பினும் இராணுவத்தினர் உயிர் தப்பினர். இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை 5 நிமிட நேரம் நீடித்தது. தாக்குதலையடுத்து காங்கேசன்துறை வீதியூடாகச் சென்ற பொதுமக்களை இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்கினர்.
இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த
தேவரட்ணம் மகேஸ்வரன் (வயது 31)
பிரான்சிஸ் சேவியர் அனுஸ்டன் (வயது 28 )
நிசாந்தன் (வயது 28 )
கே. தெய்வேந்திரம் (வயது 39)
ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தட்டாதெருச் சந்தி, மனோகரா திரையரங்கு சந்திகள் மற்றும் ஐந்து சந்தி ஆகிய பகுதிகளில் அனைத்து போக்குவரத்துப் பாதைகளையும் இராணுவம் முடக்கி உள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலக கட்டடம் அருகே இராணுவத்தினர் மீது மாலை 4 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிப்பாய் ஒருவர் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வீதியூடாகச் சென்று கொண்டிருந்த ரூபன் ஜெயந்தன் (வயது 26) என்ற இளைஞரை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ரூபன் ஜெயந்தன், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு வெளியே 300 மீற்றர் தொலைவில் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் பிற்பகல் 1 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த குலதுங்க பண்டா என்பவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பேரூந்து நிலையத்தடியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கைக்குண்டு வீசுப்பட்டது. இதில் படையினர் ஒருவர் காயமடைந்தார்.
யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் சிறிலங்கா படையினர் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட இக் கைக்குண்டு வெடித்தில் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்கள் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
யாழ். நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை பகுதிகளில் கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரிக்கு அண்மையில் கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவ வாகனம் தப்பியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தொடரும் தாக்குதல்களையடுத்து கந்தர்மடம், அரசடி, ஐந்து சந்திப் பகுதிகளில் மேலதிக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிகளில் செல்லும் பொதுமக்களையும் வாகனத்தில் செல்வோரையும் படைத்தரப்பினர் கடும் சோதனைகளுக்குள்ளாக்கி தாக்கி வருவது அதிகரித்துள்ளது.
மேலும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோப்பாய் சிறிலங்கா காவல் நிலையம் மீது நேற்று புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 4 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
மல்லாகம் நாவலர் இராணுவ முகாம் மீது நேற்றிரவு கைக்குண்டு வீசப்பட்டது. இதில் படை தரப்புக்கு சேதமில்லை என்று படைதரப்பு தெரிவிக்கின்றது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
இந்தத் தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் படையினர் மூவரும் இராணுவம் தாக்கியதில் பொதுமக்கள் 5 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ். புறநகர்ப்பகுதி, நல்லூர் முத்திரைச் சந்தி, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி, அச்சுவேலி, கந்தர்மடம் சந்தி, நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை, நெல்லியடி ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நல்லூர் முத்திரைச் சந்தியடியில் இன்று மாலை 6 மணியளவில் சிறிலங்கா படையினர் காவலுக்கு நின்றிருந்த போது அவர்கள் மீது அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் வடக்கில் உள்ள ஐந்து சந்திப் பகுதியில் இந்துக் கல்லூரிக்கும் பன்றிக்குட்டிப்பிள்ளையார் கோயிலுக்கும் இடையே இராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் 51 ஆம் டிவிசனுக்கு படையினரை இந்த இராணுவ வாகனம் ஏற்றி வந்தது. மறைவிடம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மூன்று ரி-56 ரக குண்டுகள் இராணுவ வாகனத்தை துளைத்தது. இருப்பினும் இராணுவத்தினர் உயிர் தப்பினர். இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை 5 நிமிட நேரம் நீடித்தது. தாக்குதலையடுத்து காங்கேசன்துறை வீதியூடாகச் சென்ற பொதுமக்களை இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்கினர்.
இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த
தேவரட்ணம் மகேஸ்வரன் (வயது 31)
பிரான்சிஸ் சேவியர் அனுஸ்டன் (வயது 28 )
நிசாந்தன் (வயது 28 )
கே. தெய்வேந்திரம் (வயது 39)
ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தட்டாதெருச் சந்தி, மனோகரா திரையரங்கு சந்திகள் மற்றும் ஐந்து சந்தி ஆகிய பகுதிகளில் அனைத்து போக்குவரத்துப் பாதைகளையும் இராணுவம் முடக்கி உள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலக கட்டடம் அருகே இராணுவத்தினர் மீது மாலை 4 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிப்பாய் ஒருவர் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வீதியூடாகச் சென்று கொண்டிருந்த ரூபன் ஜெயந்தன் (வயது 26) என்ற இளைஞரை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ரூபன் ஜெயந்தன், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு வெளியே 300 மீற்றர் தொலைவில் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் பிற்பகல் 1 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த குலதுங்க பண்டா என்பவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பேரூந்து நிலையத்தடியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கைக்குண்டு வீசுப்பட்டது. இதில் படையினர் ஒருவர் காயமடைந்தார்.
யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் சிறிலங்கா படையினர் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட இக் கைக்குண்டு வெடித்தில் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்கள் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
யாழ். நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை பகுதிகளில் கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரிக்கு அண்மையில் கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவ வாகனம் தப்பியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தொடரும் தாக்குதல்களையடுத்து கந்தர்மடம், அரசடி, ஐந்து சந்திப் பகுதிகளில் மேலதிக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிகளில் செல்லும் பொதுமக்களையும் வாகனத்தில் செல்வோரையும் படைத்தரப்பினர் கடும் சோதனைகளுக்குள்ளாக்கி தாக்கி வருவது அதிகரித்துள்ளது.
மேலும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோப்பாய் சிறிலங்கா காவல் நிலையம் மீது நேற்று புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 4 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
மல்லாகம் நாவலர் இராணுவ முகாம் மீது நேற்றிரவு கைக்குண்டு வீசப்பட்டது. இதில் படை தரப்புக்கு சேதமில்லை என்று படைதரப்பு தெரிவிக்கின்றது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
<b> .. .. !!</b>

