Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"இந்தியாவை சிக்க வைக்க தொடரும் பொறிகள்"!!!!!!!
#1
இந்தியாவை கருவியாக்கும் சிறிலங்கா பேரினவாதம்

ஆசிரியர் தலையங்கம்

போர் நிறுத்த அமுலாக்கம் தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தையை நோர்வேயில் நடாத்துவதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் சிறிலங்காப் பேரினவாத அரசு, ஆசிய நாடு ஒன்றில் தான் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக விட்டுக்கொடுப்பற்ற வகையில் நிற்பது காலத்தை இழுத்தடிக்கும் செயல்.

மறுபுறம் விடுதலைப் புலிகள் அனுசரணைப் பணியினை மேற்கொண்டு வரும் நோர்வேயில் நேரடிப் பேச்சுக்களை நடாத்த வேண்டியது அவசியம் என்பதை விடுதலைப் புலிகள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிவாரங்களுடன் இந்தியா சென்றுள்ளார்.

சிங்களப் படைகளுக்கு எவ்வளவு ஆயுதங்களையும், நவீனப் போர் விமானங்களையும், வல்லரசுகளின் போர்ப் பயிற்சிகளையும் அளித்தாலும் விடுதலைப் புலிகளின் போரியல் ஆற்றலுக்கு முகம் கொடுக்கக் கூடிய மனோபாவம் சிங்களப் படைகளுக்கு இல்லை. இந்நிலையில் வெளிநாடுகளின் இராணுவ உதவியை கையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசின் நிலைப்பாடு. மீண்டும் ஒரு போர் மூழுமானால் இந்தியாவை ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போருக்கு எதிரான கருவியாக இந்தியாவைப் பயன்படுத்தச் சிங்களப் பேரினவாதம் முயல்கின்றது.

இந்தியாவிடம் போர்ப்பயிற்சி, ஆயுதக் கொள்வனவு என அதன் தலையீட்டை அதிகப்படுத்தி குறைந்தபட்ச அதிகாரமற்ற தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குக் கிட்டவும் நெருங்காத ஒரு தீர்வுத் திட்டத்தைத் தள்ளி விடலாம் என்பது தான் சிங்கள இனவாதிகளின் கபடத்தனமான நோக்கம். அதனால் தான் கொழும்பு - புதுடில்லி என்று இப்போது பறக்கத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் பேரினவாத அடிவருடிகளின் கருத்துக்களுக்கு அல்லது அவர்களின் அபிலாசைகளுக்காக ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கான தாகத்துக்கு துரோகமிழைக்கும் சக்தியாகப் பாரதம் மாறிவிடக் கூடாது. அண்மைக் காலமாக கொழும்பு - டில்லி உறவுகள் களைகட்டத் தொடங்கி விட்டன. போர்க் கப்பல்கள் வருகை, இந்தியத் தளபதிகள் வருகைகள், கூட்டுக் கடற்படைப் பயிற்சி என்பன இரு நாட்டு உறவில் ஐக்கிய ம் ஏற்பட்டுப் பேரினவாதம் இந்தியாவை தோழனாகப் பெருமிதப்பட்டு நிற்கின்றது. ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரை இந்தியாவுடனான உறவு தொப்புள்கொடி உறவு. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த உறவைத் தொடர்ந்து பேணுவதற்கே ஈழத் தமிழினம் அவாக் கொண்டிருக்கின்றது.

ஆனால் டில்லியின் செயற்பாடுகள் கவலையை ஊட்டுகின்றன. சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவி புரிவதால் தமிழினம் கவலைப்படுகிறது. யாழ். பலாலி விமான நிலைய ஓடு பாதை இந்தியா விரிவாக்கம் செய்ய உதவுவதென்பது ஈழத் தமிழினத்தின் தலையில் குண்டுகள் போடும் செயல். பலாலி படைத் தளத்திலிருந்து பறந்து சென்றுதான் சிங்கள விமானங்கள் தமிழர் தாயகத்தில் குண்டு மழை பொழிந்தன. எத்தனை மனிதப் படுகொலைகள், வாழ்விடங்கள், கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் சிங்கள விமானக் குண்டு வீச்சில் சின்னா பின்னப்பட்டுப் போனது.

யாழ் குடா நாட்டில் இன்றும் அந்த வேதனைகளின் சுவடுகள் அழியாத பதிவுகளாக உள்ளன. சம நாட்களிலும் சிறிலங்காப் படையினர் இரத்த வெறி கொண்டு தமிழின அழிப்பில் பாலியல் வன்புணர்வில் தமிழ் மக்கள் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஜனநாயகப் பண்புகளின்றி மிருக வெறி பிடித்தவர்களாக சிங்கள இராணுவம் மனித வேட்டையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்தியா இன்னும் நடுநிலையில் நின்று பார்வையைச் செலுத்தாது இருப்பது கவலையளிக்கின்றது. தமது வல்லாதிக்கத்தின் மூலம் ஈழத்தமிழின விடுதலைக்கான பாதைக்குத் தடைகளை ஏற்படுத்த முனையக் கூடாது.

தமிழகத்தின் உணர்வுகள் இன்று ஈழ விடுதலையை நேசிக்கின்றன. சிங்களப் படைகளின் வஞ்சகச் செயல் வடிவங்கள் இப்போது தமிழகத்தில் குத்தத் தொடங்கியுள்ளன. நிட்சயம் தமிழகம் ஈழ விடுதலைக்கான இலட்சியத்தை வென்றடைய தோள் கொடுக்கும். அந்தளவிற்கு தேசியத் தலைவனை நேசிக்கின்றனர். மகத்தான தலைவனை மதிக்கின்ற பண்பட்ட உணர்வாளர்கள் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது புதுடில்லிக்குத் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்து. அதற்கான காலம் விரைவாகிக் கொண்டிருக்கின்றதும். இந்த நிலையில் சிங்கள அரசுடன் இந்தியா தமிழர்களுக்குத் துரோகமிழைக்கும் வகையில் தமது நட்புறவை வளர்த்துக் கொள்ள முயலக் கூடாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்கின்ற. அல்லது தமிழினத்தின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தமிழீழத் தமிழினத்தின் வேண்டுகை.


இது பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
http://www.battieelanatham.com/weeklymatte.../editorial.html
" "
Reply
#2
<b>* President Rajapaksa hopes to hold Rajiv Gandhi commemoration in Sri Lanka </b>

Thursday, December 29, 2005, 14:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka.

Dec 29, Colombo: President Mahinda Rajapaksa, who is on an official tour in India, today expressed his desire to hold next year's Rajiv Gandhi commemoration ceremony in Sri Lanka and to invite Indian Congress Party leader Sonia Gandhi as the Chief Guest.

Issuing a statement, the President's Office in Colombo said, "Visiting President Rajapaksa held discussions with the Indian Congress Party leader Sonia Gandhi after addressing the Indian business summit this morning."

Joined by Foreign Minister Mangala Samaraweera and President's Secretary Lalith Weeratunge, the two leaders discussed in detail the need to strengthen political, social and economic relations between Sri Lanka and India.

The Sri Lankan delegation led by President Mahinda Rajapaksa is due to hold discussions with a number of Indian Ministers this afternoon. The President intends to meet Ministers representing various fields and to hold discussions on areas in which India and Sri Lanka can function in collaboration, the President's Office said.

http://www.colombopage.com/archive/Decembe...29142549JV.html
" "
Reply
#3
அரோகரா..........

விட்டால் சோகம் கூடி ராஜபக்ஸனார், சோனியாவைக் கட்டிப்பிடித்து அழுதுபோடுவர் போலல்லவா கிடக்கு!!!!

உதுகள் கிடக்க ... சிறுபிள்ளையை பார்த்து "மிட்டாய் வாங்கித்தருகிறேன், அதைச் செய்/இதைச் செய்" என்கிற மாதிரியோ அல்லது வலது ஒண்டை எப்படியும் ஏமாற்றலாமெண்டு நினைக்கினமோ?????????? ஈழபதீஸ்வரா!!!!......

ரோகரா! அரோகரா.........
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)