Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து திருமாவளவன் தலைமையில
#1
சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில்

பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான்,


நன்றி புதினம்
கவிஞர் அறிவுமதி,






இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு,

தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு,

தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன்,






உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன்,

உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழப்பன்,

புலவர் கி.த.பச்சையப்பன்,

மக்கள் புதிய தமிழகத்தின் நிறுவனர் துரையரசன்

ஆகியோர் கண்டன உரையாற்றினர்.






"இந்தியப் பேரரசே! தமிழினத்தை அழிக்கும் சிங்கள இனவெறியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்காதே" என்ற பாரிய பதாகையில் புங்குடுதீவு தர்சினியின் சடலம் கிடத்தப்பட்ட புகைப்படமும், அவரது உறவினர் கதறி அழுகிற புகைப்படமும் வைக்கப்பட்டு ஈழத்து அவலத்தை தமிழகத்தில் எடுத்துச் சொல்லியது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தும், சிங்கள காடையர்களின் இனவெறிப் படுகொலையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.




எங்கள் தங்கை தர்சினிக்கு வீர வணக்கம்!

எங்கள் ஐயா பரராஜசிங்கத்துக்கு வீரவணக்கம்!

திருகோணமலையில் இன்று கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வீரவணக்கம்!!

ஆகிய முழக்கங்கள் உரத்து எழுப்பப்பட்டன.

"சிங்களவருக்கு இந்திய அரசு எந்த உதவியும் வழங்கக் கூடாது! "தமிழீழத்தை அங்கீகரி" ஆகிய ஈழத் தமிழர் ஆதரவு பதாகைகளை ஆண்களும் பெண்களும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை காவல்துறையினர் ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தனர். "தமிழனுக்காக அழுவதற்காகக் கூட நேரக்கெடு விதிக்கிற" அவலச் சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினோர் சுட்டிக்காட்டினர்.

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதுவித உதவியையும் எந்த நிலையிலும் வழங்கக்கூடாது. அமைதிப் பேச்சுகளில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலான பங்களிப்பைச் செய்ய வேண்டும்; அப்பாவித் தமிழர்கள் மீதான சிங்கள இராணுவப் படுகொலைகளை உடனே நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் உரையாற்றியோர் வலியுறுத்திப் பேசினர்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)