Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மஹிந்தவின் இந்திய விஜயம், தோல்வி?
#1
மஹிந்தவுக்கு வந்த சோதனை..
ஜெயலலிதாவால் மட்டுமா அவமானம்......கேரளாவிலையும் அப்படியாம்

http://www.newkerala.com/news.php?action=f...llnews&id=76619
enrum anpudan
Reply
#2
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று நாள் இந் திய விஜயம் எதிர்பார்த்த வெற்றியையோ திருப்தியையோ அவருக் குத் தரவில்லை என்று புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரிய எதிர்பார்ப்போடு புதுடில்லி சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒட்டுமொத்தத்தில் வெறுங் கையுடன் இலங்கை திரும்பியிருக்கின்றார் என்கின்றனர் சுயாதீன நோக்கர்கள்.
* இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான அமைதி முயற்சிகளில் பங்களிக்க இப்பிரச்சினைக்குள் இந்தியாவை இழுத்துவிட இலங்கைத் தரப்பு எடுத்த முயற்சிக்கு இணங்காமல் நாசூக்காக மறுத்து விலகிக்கொண்டுவிட்டது புதுடில்லித் தலைமை.
* இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்குமானால் அச் சமயத்தில் இந்தியா நேரடியாக இலங்கைக்கு உதவிகளை வழங் கும் என்ற உறுதிமொழியை இந்தி யத் தரப்பிடமிருந்து எப்படியாவது பெற்றுவிட ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான இலங்கைத் தூதுக் குழு துடியாய்த் துடித்தது. ஆனால், அது சரிவரவில்லை. அத்தகைய இணக்கத்தை தயார் நிலை உறுதியை வழங்க இந்தியத் தலைமை மறுத்துவிட்டது.
* ஆகக்குறைந்தது, இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளுள் ஒன்றாக இந்தியத் தரப்பை இழுத்துச் செருகிவிடுவதற்கு இலங்கைத் தூதுக்குழு எடுத்த முயற்சிக்கும் இந்தியா இணங்க மறுத்துவிட்டது. ஏற்கனவே, இணைத்தலைமையை வகிக்கும் நான்கு நாடுகளுடனும் முரண்பட விரும்பாத புதுடில்லித் தலைமை இது தொடர்பான இலங்கைத் தரப் பின் கோரிக்கைக்குத் தெளிவாகப் பதில் தராமலேயே இலங்கைத் தரப்புக்கு ஏமாற்றிவிட்டது.
* கடைசியாக, உத்தேச இலங்கை இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தையாவது செயலுருப் பெற வைக்கும் முயற்சியில் ஜனாதி பதி மஹிந்த தரப்பு புதுடில்லியில் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட் டது. ஆனால், அதற்கும் கைவிரித்து விட்டது இந்திய மத்திய அரசு. இன் றைய சூழ்நிலையில் பாதுகாப்பு ஒப் பந்தம் என்ற பேச்சை எடுத்தாலேயே இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று புதுடில்லித் தலைமை இலங்கைக்குழுவுக்குத் தெரிவித்திருக்கிறது.
தமிழகக் கட்சிகள் மற்றும் எம்.பிக்களின் தயவில் தங்கிநிற்கும் இந்திய மத்திய கூட்ட மைப்பு அரசு, இலங்கையுடனான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்த விடயத்தை முன்நகர்த்தினால், அரசுக் கூட்டமைப்புக்கு ஆதரவான தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேருவதுடன் மத்திய அரசு கவிழும் நிலையும் ஏற்படும் என இந்தியத் தரப்பு இலங் கைத் தரப்புக்குச் சுட்டிக்காட்டியதாகக் கூறப் படுகின்றது.
அது மட்டுமல்லாமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயம், தமிழகத் தில் இலங்கை அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், உணர்வெழுச்சியைக் கிளப்பி விட்டிருக்கின்றது. இது இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்தவின் புது டில்லி விஜயத்தின் பெறுபேறாகக் கிடைத்த பெரும் பின்னடைவாகும்.
ஒருபுறம் ஜனாதிபதி மஹிந்தவைத் தமிழ கத்தில் வரவேற்பது தமக்கு எதிராக அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதி, மஹிந்தவை வரவேற்கத் தமிழக முதல் வர் ஜெயலலிதா மறுத்தமை ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவரது அரசுத் தலைமைக்கும் பெரிய அரசியல் அடியாகும்.
இவ்வாறு சுயாதீன நோக்கர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.

source: www.uthayan.com
enrum anpudan
Reply
#3
<b>பயனற்றுப்போன பயணம்</b>
அமெரிக்கா சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கு எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அவரே பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் அல்ல ஒரு பயங்கரவாத இயக்கம். படுகொலைகள் புரிவதில் அல்;-ஹைதா இயக்கத்தை விட மோசமான இயக்கம் எனக் கொட்டித்தீர்த்த போதும்- மங்கள சமரவீர எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிட்டவில்லை.

அமெரிக்க அரசு சிறிலங்கா அரசின் விருப்பத்தை நிறைவு செய்யாமல் போனமைக்கு தமிழ் மக்களுக்குச் சார்பானதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது அர்த்தமல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக அது மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் பாற்பட்டதென்றே ஆகும்.

இந்தியாவிற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அதனை அடுத்து சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் மேற்கொண்ட உத்தியோகபுூர்வ பயணங்கள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு மங்கள சமரவீரவின் பயணம் அமைந்தது.
...
......
........
இவை ஒருபுறம் இருக்கத்தக்கதாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இணைத்தலைமை நாடுகள் இனப்பிரச்சினை தொடர்பாக தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது வன்முறைகளைத் தவிர்த்தது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முற்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

இதனை அவர்கள் வெளிப்படையாகப் பல தடவை தெரிவித்தும் உள்ளனர். இதே சமயம் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வென்பது சாத்தியப்பட மாட்டாது என்பதும் அவர் களால் விளங்கிக் கொள்ளப்பட்டதொன்றாகவே கொள்ள முடியும். இதன் வெளிப்பாடாகவே மேற்குலகிலுள்ள சமஷ்டி பற்றிப் பரிசீலிப்பதற்கு அந்நாடுகள் தயாராக உள்ளன.

அது மாத்திரமன்றி நோர்வே வகிக்கும், ஏற்பாட்டாளர் பாத்திரத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அண்மைக்காலத்தில் கூட இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயன்றமை இனப்பிரச்சினை தொடர்பாக மேற்கு நாடுகளின்அணுகு முறையைப் புரிந்து கொள்ள முடியாமல் போனதன் வெளிப்பாடேயாகும்.

அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்குமானால் இணைத் தலைமை நாடுகள் என்ற hPதியில் அமெரிக்கா உட்பட்ட நான்கு நாடுகளால், மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முடிவுகளை கருத்திற்கொள்ளாது அந்நாடுகள் ஒன்றில் போய் ஆதரவு வேண்டி நிற்பது எத்தகைய அறிவிலித்தனமானது. மாறாக, மங்கள சமரவீரவின் பேச்சைக் கேட்டு அமெரிக்கா முடிவொன்றை எடுக்குமானால், அமெரிக்காவும், ஏனைய இணைத்தலைமை நாடு களும், இதுவரை எடுத்த தீர்மானங்களும், முடிவுகளும், தவறா னவை என்றல்லவா அர்த்தமாகிவிடும்?.

நன்றி: ஈழநாதம்
http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/08.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)