Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
மன்னிக்கவும்.... பத்திரிகை சார்ந்த துறையில் பணிபுரிவதால் எந்த கருத்தையுமே சர்வே மாதிரி சொல்லுகிறேன் போலிருக்கிறது....
இங்கிருக்கும் பெரும்பான்மையோர் வைகோவின் கூட்டுக்கு முன்னரே ஜெ.வை விரும்பத் தொடங்கி விட்டனர்... மேலும் சிலர் வைகோ மாதிரி பல்டியும் அடிக்கின்றனர்... ஆதிபன் என்ற நண்பரும் அது போல பல்டி அடித்து இருக்கிறார்....
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->மனச்சாட்சியின் விலாசம் உங்களுக்கு தெரியாது என்று எனக்கும் தெரியும்.... இருந்திருந்தால் இப்போ இங்கே எல்லாரும் ஜெ.வுக்கு ஜே போட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உமது பேச்சு வேடிக்கையாக இருக்கின்றது. வெறுமனே அதிமுக, விட்டால் திமுக என்று இரு கட்சிகளுக்கும் புள்ளடி போட்ட கைகள் என்பதால் தான் என்னவோ, கருணாநிதியைப் பற்றி வெளிப்படுத்தினால் நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கின்றோம் என்று முடிவை உமது மனது எடுக்கின்றது என நினைக்கின்றோம்.
இப்போதும் சொல்கின்றோம். நாம் இருவரையும் ஒரே தட்டில் தான் வைத்துப் பார்க்கின்றோம். இருவருக்கும் வேறுபாடில்லை. ஆனால் சிலர் கருணாநிதியைப் பற்றி நம்பியபடியால் தான் நாம் சிலவற்றை எழுத வேண்டி ஏற்பட்டது.
எனவே புரிந்து கொள்ளுவீராக!!
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன், நீங்கள் வேண்டுமானால் இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கலாம்.... ஆனால் எப்படி இருவரும் சமம் என்பதை விளக்க வேண்டும் அல்லவா?
கண்டிப்பாக சொல்லுகிறேன்... ஜெ. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல.... உலகெங்கும் இருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் விரோதி தான்.... இந்தியாவில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதை எதிர்த்தார்.... தமிழனுக்கு நன்மை பயக்கும் என 150 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்தார்.....
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நிச்சயமா இதை நான் மறக்கவில்லை. அவ்வாறே கலைஞர் 5ம் வகுப்பு வரையிலான தமிழ்மொழிக்கல்வியைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முன்னோடி ஜெயலலிதா!
ஆனால் மறுதலையாக நான் என்ன சொல்கின்றேன் என்றால் கலைஞர் ஒரு உண்மையான யதார்த்தவாதியாக இருந்திருந்தால் நழுவல்போக்குள்ளவராக இருக்கமாட்டார். சொல்லப்போனால் அரசியல் சுகத்துக்காகத் தான் எல்லாம்.
அவ்வாறே ஈழப்போராட்டத்தையும் கொள்கின்றார். அதை அப்பட்டமான சுயநலமாகாகத் தான் நான் கருதுகின்றேன்.
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்....
கலைஞரின் கருத்து இது தான் : "ஈழம் கிடைத்தால் சந்தோசம்... அதற்காக அங்கு இருக்கும் இயக்கத்துக்கு (91ஆம் ஆண்டு சம்பவத்தால்) எந்த ஆதரவும் கொடுக்கப் போவதில்லை.... எப்போது ஈழமக்களுக்கு இன்னல் ஏற்பட்டாலும், அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம்..." என்பது தான்...
இன்னமும் கூட ஈழத்தில் இருந்து சென்னை வரும் தமிழர்கள் தினமும் கலைஞரை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.... அவர்களிடம் எப்போதும் ஈழ நிலவரம் குறித்து சில நேரங்களில் போராட்டம் குறித்த மகிழ்ச்சியும், சில நேரங்களில் மக்களின் இன்னல் கண்டு வருத்தமும் பகிர்ந்து கொள்கிறார்....
திமுகவின் மாநில மாநாடுகளில் எப்போதுமே போடப்படும் ஒரு தீர்மானம் "ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்பது தான்.....
,
......