Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் இவ்வாறு தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முதற்றடவையாக நேற்றுமுன்தினம் வருகை தந்த சு.ப.தமிழ்ச்செல்வன், கப்டன் அன்பரசியின் 8ஆம் ஆண்டு நினைவை யொட்டி விடுதலைப் புலிகளின் தரவை மீனகவளாகத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றினார். அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். போராட்ட வாழ்வில் இன்று எனக்கு மகிழ்ச்சியான, மறக்கமுடியாத நாளாகும். தென்தமிழீழத்துக்கு வருவதற்கு பல தடவைகள் முயற்சித்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பே தலைவர் அதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.கடந்த காலங்களில் தென் தமி ழீழம் அனுபவித்த கொடுமைகள் பல. பல்வேறு படுகொலைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. சர்வதேச சமூகம் பல் வேறு படுகொலைகள் பற்றிப் பேசுகின்றது. ஆனால், அவற்றுடன் ஒப் பிடும்போது தென்தமிழீழத்தில் நடை பெற்றபடுகொலைகள் மிகவும் பயங்கரமானவை.
இங்குள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். ஆனால், இன்று தென்தமிழீழம் வீரம் செறிந்த புூமியாக பல படையணிகளுடன் திகழ்கின்றது. இங்குள்ள மக்கள் தேசியத் தலைவரின் சிந்தனை களைப் புரிந்துகொண்டு கருணா அம் மான் தலைமையில் படையணிகளைக் கட்டிஎழுப்புவது எமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. - இப்படி தமிழ்ச்செல்வன் கூறினார்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நெடுந்தீவில் கடற்படையினர் புதியமுகாம் அமைக்கலாம் குரங்கு
பாஞ்சானில் புலிகள் முகாம் இருப்பதுகுற்றமா? சீற்றத்துடன் கேட்கிறார்
சு.ப.தமிழ்ச்செல்வன்
நெடுந்தீவில் கடற்படையினர் புதிய முகாம் அமைத்தபோது, அதை அகற்றக் கண்காணிப்புக் குழுவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எமது கட்டுப்பாட்டுப் பகுதி யான குரங்குபாஞ்சானில் எமது முகாம் அமைந்திருப்பதை மட்டும் கண் காணிப்புக் குழு அகற்ற முயல்கிறது. அது எப்படி நியாயமாகும்? எமது பகுதியில் எமது முகாம் அமைந்திருப்பதை எவரும் தடுக்கமுடியாது.
- இப்படிக் கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை நேற்று முன் தினமிரவு சந்தித்தபோதே தமிழ்ச் செல்வன் மேற்கண்டவாறு கூறினார்.
நட்பு முறையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:-எமது கட்டுப்பாட்டுப் பகுதியான குரங்குபாஞ்சான் பகுதியில் எமது முகாமைத் தொடர்ந்து வைத்திருப்ப தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அந்த முடிவில் எந்தவித மாற்றத் துக்கும் இடமில்லை. இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் - நெடுந்தீவில் - கடற்படையினர் புதிதாக முகாம் அமைத்தபோது, அதை நாம் எதிர்த் தோம்; கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்தோம். ஆனால், அந்த முகாமை அகற்ற கண்காணிப் புக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று எமது பகுதியில் அமைந் துள்ள முகாமை அகற்றும்படி கண்காணிப்புக்குழு எப்படிக் கேட்க முடியும்? எமது பகுதியில் எமது முகாம் அமைந்திருப்பதை எவரும் தடுக்க முடியாது.இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப் புலிகளுக்கு வழங்கவேண் டும் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனாலேயே, இடைக்கால நிர்வாக சபை தொடர்பான வரைவு ஒன்றை இலங்கை அரசு எமக்கு அனுப்பியுள் ளது. ஷபயங்கரவாதிகள்| என எம்மை
வர்ணித்து வந்த பல நாடுகள் கூட தற்போது அரசுக்கு அழுத்தம் கொடுத் துள்ளமையை எமக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகவே நாம் கருது கின்றோம்.
இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அரசு அனுப்பிய வரைவை எமது சட்ட வல்லுநர்கள் ஆராய்கின்றனர். அந்த வல்லுநர்கள் வழங்கும் யோச னைகளுடன் விரைவில் அரசிற்கு எமது பதிலை நாம் அனுப்புவோம். அந்த யோசனையை ஏற்பதும் அதன் அடிப்படையில் பேச்சை மீள ஆரம் பிப்பதும் அரசின் பக்கத்திலேயே உள் ளது. இது விடயத்தில் அரசு எடுக் கும் முடிவே எதிர்கால செயற்பாடுகளைத் தீர்மானிக்கும்.
இன்றுள்ள நிலையில், எம்மைப் பலப்படுத்துவது என்பது பெரிய விவகாரமாகப் பார்க்க வேண்டிய அவசிய மில்லை. எமது பலம்தான் இன்று நாம் பேச்சுக்குப் போவதற்குக் காரணமாக அமைந்தது. எமது பலத்தைத் தொடர்ந்து நாம் கட்டி வழர்க்க வேண் டும். நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் கூட, எமது பலத்தை நாம் பேணத் தான் வேண்டும். எல்லைக் கிராமங்க ளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அந்தப்பலமே தேவை.-இப்படி அவர் கூறினார்.
நன்றி : உதயன்
நெத்தியடி என்டால் இதுதானோ?கண்காணிப்போ, கண்துடைப்புக் குழுவோ..?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஓமோ விட்டுட்டுப் போக மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கினம். இல்லாட்டி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆச்சியின்ட கையாலா முதுகில தட்டல்லோ வாங்கத் திரியினம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஏன் உண்மைகள் சொன்னா வாயடைச்சுப் போச்சுதோ? ஏதாவது பதவியிருந்தால் கண்துடைப்பு குழுவில போய் சேரப்பாருங்கோவன். நல்ல அனுபவம் இருக்கு. பொய்களை உண்மையாக்கஃ
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
இந்தியனின் சமஸ்தானம் சமஸ்டி எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்துகளுக்கு. சிங்களவனின் சலுட்டுக்கு ஆசைப்பட்டதுகளுக்கு. தமது அரிப்புகளை அரசியலபிலாசைகளை இந்தியனைக் கொண்டு நிறைவேற்ற கால் நக்கித் திரிந்த தமிழனுக்கு. மானம் ரோசம் சூடு சொரனை உள்ள தமிழனுக்கு யாரும் கொடுத்து வாங்க என்ன பிச்சையா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பன்னிக்கூடம் சரியில்லை அதுதான் தணிக்கை. ஆத்திரம் வேண்டாம். ஆத்திரம் வரவேண்டியது காட்டிக் கொடுப்பவனுக்கும் இனத்தை கூட்டிக் கொடுப்பவனுக்குமல்ல. இனப்பற்றுள்ளவனுக்கு, இனமானம் உள்ளவனுக்கு, சுதந்திரத்தின் அருமை தெரிந்தவனுக்கு. உங்களைப் போன்றவருக்கு இல்லை சோதரனே. எவன் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வர அவர்கள் மானம் ரோசம் இழந்தவர்கள் இல்லை. மண்ணின் மைந்தர்கள். ஆரியாத்தையின் பேரர்கள். அடங்காத்தமிழனின் வாரிசுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
குரங்குபாஞ்சான்குளம்.. குரங்கு.. பாயுமா..? பிடிபடுமா..?
:?: :?: :?:
Truth 'll prevail
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பிடிபடாமல் தப்பியதுகள் தான் தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடுதுகள்.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவுகள் சமூகரீதியான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எப்படியாவது சமாதானத்தை குளப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கின்றார்கள். பேரினத்திற்கு மேலாக சமாதானத்தை குழப்பியடிக்கத் துடியாகத் துடிக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
விளங்கவில்லையா இது அவர்களுக்கான அதாவது முஸ்லிம்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தைக் குறிப்பிடுகின்றார்கள். அது சரி முஸ்லிம் என்ன இனமா? மொழியா? மதமா?
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan