09-10-2003, 08:22 AM
<b>உருப்படியாய்...
என்ன செய்தேன்...?</b>
இன்னும் எத்தனை தடவைதான்
புரண்டு புரண்டு
படுத்திருப்பேன்...?
எனது வீடு...
மயான அமைதியாய்க் கிடக்கிறது
எனது படுக்கை அறை
சிறைச்சாலைபோல்
காட்சியழிக்கிறது....!
சுவர்க்கடிகாரம் மட்டும்
டிக் டிக் என்று
சத்தம் செய்தபடி
பத்துமணி தாண்டி
ஓடிக்கொண்டிருந்தது
எழுந்திருக்க மனமில்லாமல்
மீண்டும் கண்களை மூட
"சடீர்" என்று ஒரு சத்தம்
அது என் அன்னை
எனக்காகத் தயாரித்த
தேனீரை மேசையில்
வைக்கும் சத்தம்..!
அந்த சடீர் என்னும்
சத்தத்தின் அர்த்தம்...
இனியும் படுக்காதே
எழுந்திரு என்பதாகவே
தெரிந்தது...!
படுத்திருந்தபடியே...
யன்னல் திரையை
மெதுவாக விலக்கி
வீதியை எட்டிப்பார்த்தேன்
அங்கே...
மதிய சாப்பாட்டு
இடைவேளைக்காக
இன்றைய படிப்பாளிகள்
நாளைய உழைப்பாளிகள்
உரையாடிக்கொண்டே
செல்வது தெரிந்தது
ஓ.........
மணி பன்னிரண்டு
ஆகிவிட்டதா...??
கட்டிலைவிட்டு எழுந்து
கடமைகள் முடித்து
இப்போது வரவேற்பறையில்
இருக்கிறேன்
எதுவுமே செய்துவிட
விரும்பாதவனாய்...
ஆசனத்தில் அமர்ந்தபடி
அண்ணார்ந்து பார்க்கிறேன்
அடிக்கடி
அழுதுகொண்டிருக்கும்
என் கைத்தொலைபேசி
என்றும் இல்லாமல்
இன்றைக்கு ஏன்
அமைதியாய் ஒரு
ஓரமாய்க் கிடக்கிறது...?
தொலைபேசியை எடுத்து
நானே அழைத்தேன்
அந்த நேரம்தான்...
நண்பர்கள் எல்லோரும்..
வெளியே சென்றுவிட்டார்கள்
சிலபேர்
குளித்துக்கொண்டிருக்கிறார்கள்
சிலபேர்
நித்திரையாம்
வெறுப்புடனே
சமையல் அறைக்குச் செல்கிறேன்
சாப்பாட்டைப் பார்த்துவிட்டு
சாப்பிட மனமில்லாமல்
மீண்டும்
வரவேற்பறைக்கு வந்து
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைக்காட்சியில்...
தொடர் நாடகங்கள்
இந்த நாடகத்தைப் பார்ப்பதனால்
எனக்கென்ன நன்மை...?
இதைப்பார்த்து பொழுதைப்போக்க
நான் விரும்பவில்லை...
ஆகையினால்
அடுத்த தொலைக்காட்சியை
பார்க்க முயன்றேன்....
அங்கேயும் தொடர்நாடகம்
எதற்கு இத்தனை தொடர்கள்..?
எதற்கு இந்த
தொலைக்காட்சிகளின்
திடீர் வருகை...?
சில வேளைகளில்
இப்படி இருக்குமோ...???
ஒரு சின்ன கிராமத்தில் இருந்த...
பண்ணையில் இருந்து
மிக மலிந்தவிலையில்
பால்வாங்கி மகிழ்ச்சியோடு...
வாழ்ந்துவந்த
அந்த கிராமத்தைப்பார்த்து
பொறாமைப்பட்ட
பக்கத்துப் பெரிய கிராமத்துக்காரன்
அந்த சின்னக்கிராமத்திற்கு
தனது பண்ணையில் இருந்து
இலவசமாய் பால் கொடுத்தானாம்
இலவசப்பாலை அருந்திய
அப்பாவி மக்கள்
தங்களுக்கென்றொரு
பண்ணை
இருக்குதென்பதையே
மறந்தார்களாம்...!
பிறகென்ன...???
அந்தச் சின்னக்கிராமத்து
பண்ணை இருந்த
இடமே தெரியாமல்
மறைந்துவிட்டதாம்...!
அதன்பின்.........
பெரியகிராமத்துக்காரன்
பெரிய விலையில் அந்த
சின்னக்கிராமத்துக்கு
பால் கொடுத்தானாம்...!
இதுபோலத்தானோ
நாளை நம் கெதி...?
இதற்காகத்தானோ
இந்த தொ(ல்)லைக்காட்சிகளின்
திடீர் வருகை...?
இச்சே...........
வெறுப்புடனே...
அலுத்துப்போயிருக்க
மணி இரவு பத்தைத்தாண்டியது
மீண்டும்
படுக்கையறை நோக்கிச் செல்கிறேன்
ஆமாம்.....
இன்று நான்
உருப்படியாய் எதைச்செய்தேன்...???
த.சரீஷ்
09.09.2003 (பாரீஸ்)
என்ன செய்தேன்...?</b>
இன்னும் எத்தனை தடவைதான்
புரண்டு புரண்டு
படுத்திருப்பேன்...?
எனது வீடு...
மயான அமைதியாய்க் கிடக்கிறது
எனது படுக்கை அறை
சிறைச்சாலைபோல்
காட்சியழிக்கிறது....!
சுவர்க்கடிகாரம் மட்டும்
டிக் டிக் என்று
சத்தம் செய்தபடி
பத்துமணி தாண்டி
ஓடிக்கொண்டிருந்தது
எழுந்திருக்க மனமில்லாமல்
மீண்டும் கண்களை மூட
"சடீர்" என்று ஒரு சத்தம்
அது என் அன்னை
எனக்காகத் தயாரித்த
தேனீரை மேசையில்
வைக்கும் சத்தம்..!
அந்த சடீர் என்னும்
சத்தத்தின் அர்த்தம்...
இனியும் படுக்காதே
எழுந்திரு என்பதாகவே
தெரிந்தது...!
படுத்திருந்தபடியே...
யன்னல் திரையை
மெதுவாக விலக்கி
வீதியை எட்டிப்பார்த்தேன்
அங்கே...
மதிய சாப்பாட்டு
இடைவேளைக்காக
இன்றைய படிப்பாளிகள்
நாளைய உழைப்பாளிகள்
உரையாடிக்கொண்டே
செல்வது தெரிந்தது
ஓ.........
மணி பன்னிரண்டு
ஆகிவிட்டதா...??
கட்டிலைவிட்டு எழுந்து
கடமைகள் முடித்து
இப்போது வரவேற்பறையில்
இருக்கிறேன்
எதுவுமே செய்துவிட
விரும்பாதவனாய்...
ஆசனத்தில் அமர்ந்தபடி
அண்ணார்ந்து பார்க்கிறேன்
அடிக்கடி
அழுதுகொண்டிருக்கும்
என் கைத்தொலைபேசி
என்றும் இல்லாமல்
இன்றைக்கு ஏன்
அமைதியாய் ஒரு
ஓரமாய்க் கிடக்கிறது...?
தொலைபேசியை எடுத்து
நானே அழைத்தேன்
அந்த நேரம்தான்...
நண்பர்கள் எல்லோரும்..
வெளியே சென்றுவிட்டார்கள்
சிலபேர்
குளித்துக்கொண்டிருக்கிறார்கள்
சிலபேர்
நித்திரையாம்
வெறுப்புடனே
சமையல் அறைக்குச் செல்கிறேன்
சாப்பாட்டைப் பார்த்துவிட்டு
சாப்பிட மனமில்லாமல்
மீண்டும்
வரவேற்பறைக்கு வந்து
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைக்காட்சியில்...
தொடர் நாடகங்கள்
இந்த நாடகத்தைப் பார்ப்பதனால்
எனக்கென்ன நன்மை...?
இதைப்பார்த்து பொழுதைப்போக்க
நான் விரும்பவில்லை...
ஆகையினால்
அடுத்த தொலைக்காட்சியை
பார்க்க முயன்றேன்....
அங்கேயும் தொடர்நாடகம்
எதற்கு இத்தனை தொடர்கள்..?
எதற்கு இந்த
தொலைக்காட்சிகளின்
திடீர் வருகை...?
சில வேளைகளில்
இப்படி இருக்குமோ...???
ஒரு சின்ன கிராமத்தில் இருந்த...
பண்ணையில் இருந்து
மிக மலிந்தவிலையில்
பால்வாங்கி மகிழ்ச்சியோடு...
வாழ்ந்துவந்த
அந்த கிராமத்தைப்பார்த்து
பொறாமைப்பட்ட
பக்கத்துப் பெரிய கிராமத்துக்காரன்
அந்த சின்னக்கிராமத்திற்கு
தனது பண்ணையில் இருந்து
இலவசமாய் பால் கொடுத்தானாம்
இலவசப்பாலை அருந்திய
அப்பாவி மக்கள்
தங்களுக்கென்றொரு
பண்ணை
இருக்குதென்பதையே
மறந்தார்களாம்...!
பிறகென்ன...???
அந்தச் சின்னக்கிராமத்து
பண்ணை இருந்த
இடமே தெரியாமல்
மறைந்துவிட்டதாம்...!
அதன்பின்.........
பெரியகிராமத்துக்காரன்
பெரிய விலையில் அந்த
சின்னக்கிராமத்துக்கு
பால் கொடுத்தானாம்...!
இதுபோலத்தானோ
நாளை நம் கெதி...?
இதற்காகத்தானோ
இந்த தொ(ல்)லைக்காட்சிகளின்
திடீர் வருகை...?
இச்சே...........
வெறுப்புடனே...
அலுத்துப்போயிருக்க
மணி இரவு பத்தைத்தாண்டியது
மீண்டும்
படுக்கையறை நோக்கிச் செல்கிறேன்
ஆமாம்.....
இன்று நான்
உருப்படியாய் எதைச்செய்தேன்...???
த.சரீஷ்
09.09.2003 (பாரீஸ்)
sharish

