Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#1
அபாயம்

இலங்கை முஸ்லீம் இனத்தவர் தமக்கிடையே பரப்பும் இரகசிய ஈ மெயில் தகவல்கள் இங்கு தருகிறேன். இவை தமிழர்களுக்கு எதிரானவை.

ஆசிரியர் கருத்து: புலிகளது திட்டவரைவை நிராகரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழி
இல்லை
மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட புலிகளது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான
(ஐளுபுயு) திட்ட வரைவு அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் பலத்த
விவாதங்களையும் கலந்துரையாடலையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு வடக்கை முழுமையாகத் தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முனைப்பை அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஒரு தனி அரசை ஸ்தாபிப்பதற்கான தொடக்க நிலைப் பிரயத்தனமாக அதைக் கருதலாம்.
அரசுக்கும் ஐளுபுயு யிற்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, அதைத் தீர்க்க நோர்வே
அனுசரணையாளர்களால் முடியாதுபோனால், சர்வதேச நீதிமன்றத்திடம் போக வேண்டுமென்று அவர்கள்
கோருவது ஒன்றே இதை நிறுவப் போதுமானது.
கிழக்கு வடக்கில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் வாழ்கிறார்கள் என்ற யதார்த்தத்தை
திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்திருப்பது, மிகப் பெரும் ஏமாற்றத்தையே தருகிறது. ஒப்புக்கு
ஐளுபுயு யில் பல தரப்பினரும் அங்கம் வகிப்பது பற்றிய விடயத்தை உள்ளடக்கி இருப்பதால்
மட்டும் ஒன்றையும் சாதிக்க முடியாது.
இதில் முஸ்லிம்களது அரசியல் அபிலாi~கள் அறவே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதைத்
தெளிவாக நிராகரிக்கும் முனைப்பே அதில் மேலோங்கியுள்ளது. சென்ற வருடம் கைச்சாத்தான
புரிந்துணர்வு உடன்படிக்கையின் முகவுரையில், ‘முஸ்லிம்கள் இனப்பிரச்சினையோடு நேரடியாகச்
சம்பந்தப்பட்டவர்கள் அல்ல’ என்ற வாசகம் உள்ளடக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும்
அறிவோம். புலிகளும் அரசும் இதை ஏற்றுக் கொண்டே அப்போதே ஒப்பமிட்டிருந்தனர். புலிகள்
அந்நிலைப்பாட்டிலிருந்து சிறிதளவும் மாறவில்லை என்பதையே இவ்வரைவும் புலப்படுத்துகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு அடிமைச் சாசனம் என்பது பரவலாக
ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. அவ்வாறாயின் இத்திட்ட வரைவை என்னவென்று சொல்வது?
பதிலை நாம் அனைவரும் நன்கறிவோம்.
முஸ்லிம்களைப் புறநீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. எனினும்
புரிந்துணர்வு உடன்படிக்கையே இதற்கு ஒரு சட்ட வலுவைக் கொடுத்தது. இதனால்தான் அதைத்
திருத்தியமைக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தனர்.
ஆயினும் அது அறவே கவனத்தில் எடுக்கப்படவில்லை.
முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கான நியாயத்தன்மையும், முஸ்லிம்களது சமத்துவமான
தனித்தரப்புக் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டே வந்துள்ளன. ஹகீம்-பிரபா
கூட்டறிக்கையில் உடன்பட்ட அடிப்படை அம்சங்கள் கூட நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. பல
பிரதேசங்களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு
வந்துள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், முஸ்லிம்களுக்கு அரசியல்
பிரச்சினைகள் உள்ளன என்பதை இத்திட்டவரைவு ஏற்கவில்லை. எப்போதும் கலாச்சாரச்
சிறுபான்மையாக மட்டுமே முஸ்லிம்களைப் பார்த்துவந்த புலிகள், குறைந்தபட்சம் அவர்களது
கலாசாரத் தனித்துவத்தையேனும் ஏற்கும் ஒரு வாசகத்தையேனும் இதில் உள்ளடக்கவில்லை என்பது
கூர்ந்து நோக்கத்தக்கது. மதச்சார்பற்ற இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் கீழ்
வாழுமாறு முஸ்லிம்களைக் கேட்பது போலிருக்கிறது. காணிப் பகிர்வில் கூட இன விகிதாசாரம்
திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
சாதகமாகப் பரிசீலிப்பதற்கான குறைந்தபட்ச நியாயங்களையாவது இவ்யோசனைகள்
உள்ளடக்கியிருக்கவில்லை என்பது பெரும் ஏமாற்றமே. பிரச்சினையின் முஸ்லிம்
பரிமாணத்தையும் அதன் அரசியல் தன்மையையும், முஸ்லிம்களது சுயநிர்ணய உரிமையையும்
தனித்துவத்தையும் தெளிவாக மழுங்கடிக்கும் உள்நோக்கமுடைய இந்தத் திட்டவரைவை
நிராகரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியே இல்லை. தங்களது அரசியல் அபிலாi~களை
உள்ளடக்கிய ஒரு மாற்றுத் தீர்வை முன்வைப்பதே இன்று முஸ்லிம்கள் முன்னுள்ள ஒரே தெரிவாகும
இது தமிழர்களுக்கு மட்டுமானது எனக் குறிப்பிட்டிருப்பது வியப்பைத் தருகின்றது - அமைச்சர்
ரவூப் ஹகீம் தலைவர் - முஸ்லிம் காங்கிரஸ
இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கானது என புலிகள்
குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதே புலிகள் வடக்கு கிழக்கு தமிழர்களதும் முஸ்லிம்களதும்
தாயகம் என்று ஏலவே குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இது தமிழர்களுக்கு
மட்டுமானது எனக் குறிப்பிட்டிருப்பதானது வியப்பைத் தருகின்றது.
இடைக்கால நிருவாகத்தில் முஸ்லிம்களுக்கு என்ன வகையான பிரதிநிதித்துவத்தினை வழங்குவது
என்பது பற்றி மட்டுமே மட்டுப்படுத்திப் பேசப்படுகின்றது. முஸ்லிம்களது பிரச்சினை
பிரதிநிதித்துவம் பற்றியதானதல்ல. அவர்களது வாழ்விடம் தொடர்பான அதிகாரம்
பற்றியதாகும். எப்படி தமிழ் மக்கள் தமது தாயகப் பூமியில் சுயாட்சிக் கோரிக்கையினை
முன்வைக்கின்றனரோ, அதுபோன்று எமது தாயகப் பூமியில் முஸ்லிம்களுக்கான சுயாட்சிக்
கோரிக்கையினை நாம் முன்வைப்போம்.
இந்தத் தீர்வுப் பொதி எந்த வகையிலும் நன்மை தரும் எனக் கருத முடியாது - பேரியல் அ~;ரப்
(பா.உ) தலைவி - தேசிய ஐக்கிய முன்னணி
முஸ்லிம்களது அபிலாi~களை டுவுவுநு குறிப்பிட வேண்டும் என்பதில்லை. ஆனால் வடக்கு கிழக்கு
முஸ்லிம்களதும் தாயகம் என ஏற்றுக் கொள்வதாயின், அதில் அவர்களுக்கும் இடம் இருந்திருக்க
வேண்டும். அப்படி எதுவும் அவர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
எனவே, எந்த வகையிலும் இந்தத் தீர்வுப் பொதியானது நன்மை தரும் என நாம் கருத முடியாது.
வடக்குக் கிழக்கு என்பது டுவுவுநு யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள்
குறிப்பிடுகின்றார்கள்.
உண்மையில் கிழக்கைப் பொறுத்தவரை, அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்களே.
அவர்களை விடுத்து முன்வைக்கப்படும் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் எம்மால் ஏற்றுக்
கொள்ள முடியாது.
முஸ்லிம்களது தேவை என்ன என்பதனை நாம்தான் முன்வைக்க வேண்டும்- எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் (பா.உ)
இது தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்படுகின்றது என்று (ழுn டிநாயடக ழக வயஅடை pநழிடந)
அவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் சார்பாக என்று
குறிப்பிடவில்லை. தமிழ் பேசும் மக்கள் சார்பாகவோ அல்லது வடக்கு கிழக்கு வாழ் மக்கள்
சார்பாகவோ இது முன்வைக்கப் பட்டிருக்குமாயின் நாம் பேச முடியும்.
தமிழ் மக்கள் சார்பாக ஒரு திட்டத்தை முன்வைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு.
எனவே, நாம் இதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. முஸ்லிம்களது தேவை என்ன என்பதனை
நாம்தான் முன்வைக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பும் அதிலுள்ள ஆபத்தான
கூறுகளும்- -முக்தார்
விடுதலைப்பபுலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கான
முன்மொழிவினை, அதிலுள்ள நிருவாக அம்சங்களின் அடிப்படையில் விரிவாக இக்கட்டுரையில்
ஆராய்வது எனின், அது மிக நீண்டுவிடும். ஆகவே மேற்குறிப்பிட்ட ஆவணத்தில்
சொல்லப்பட்டுள்ள சில அம்சங்கள் குறித்தும், அதில் சொல்லப்படாது மறைந்து கிடக்கும்
சில விடயங்கள் குறித்தும் எடுத்துக் காட்டுவது அவசியம். குறிப்பாக அவற்றின் அரசியல்
அம்சங்களையே இக்கட்டுரை எடுத்தாள்கிறது.
சிங்கள ஆளும் குழுமத்தினர் இவ்வளவு காலமும் வடக்கு கிழக்கை பாரம்பரியத் தாயகமாகக்
கொண்ட முஸ்லிம் மக்களுக்கு உரித்தான, தமிழ் மக்களுக்கு உரித்தான அதிகாரங்கள்
அனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்; ஆண்டு அனுபவித்தனர்.
அவ்வதிகாரங்களின் உண்மையான உரித்தாளிகளை அடக்குமுறைக்குள்ளாக்கினர். அவ்வாறான
அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகள் முன்மொழிந்துள்ள இடைக்காலத்
தன்னாட்சி அதிகார அமைப்பு தனக்குரியதாக ஆக்கிக் கொள்வதென்பது, கொள்கையளவில்
சரியானதே. பிரச்சினை என்னவெனில் அவ்வளவு அதிகாரங்களையும் இடைக்காலத் தன்னாட்சி
அதிகார அமைப்பானது பெற்றுக் கொள்ளும் அதே கணத்தில், அதன் பொருள் அவ்வளவு
அதிகாரங்களும் விடுதலைப்புலிகளுக்கு என்றாகிறது. இதற்கு மேல், அமைக்கப்படப்போகின்ற
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில் இடம்பெறும் முஸ்லிம் பிரதிநிதிகள், வெறுமனே
ஜனநாயகம் என்ற பேரில் விவாதங்களை நடத்துபவர்களாக மட்டுமே அச்சபையில் இருப்பர்.
நடைமுறையில் இச்சபைக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் ஏகபோக ஆட்சிக்கே களம்
அமைக்கப்படுகின்றது.
பன்முகத்தன்மைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அறவே இடமளிக்காத விடுதலைப் புலிகள்
அமைப்பிடம் ஒரு அடிப்படைப் பண்பு மாற்றமானது இற்றைவரைக்கும் ஏற்படவில்லை என்பதையும்,
முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த 20 வருடங்களாக விடுதலைப்புலிகளின் ஆயுத, அரசியல்
அணுகுமுறைகளையும் இணைத்துப் பார்க்கும்போது- விடுதலைப் புலிகளை அறுதிப்பெரும்பான்மையாகக்
கொண்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக அமையும்
என்று மிக எளிதாகவே அரசியல் ஊகம் செய்து பார்க்க முடிகின்றது.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கென ஒரு தேசிய கீதம் அவசியமென்று
முன்மொழியப்படும். விடுதலைப்புலிகள் அமைப்புக்குரிய விடுதலை கீதமானது, இடைக்காலத்
தன்னாட்சி அதிகார அமைப்பிற்கான தேசிய கீதமாக வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பிற்கென ஒரு கொடி அவசியம் என்ற பிரேரணை வரும்.
அது விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிக்கொடியாக நிறைவேற்றப்படும். மேலும் சட்டம்,
ஒழுங்கு என்ற பெயரில் புலிகளின் காவல்துறை, நீதித்துறை போன்றவை
சட்டபூர்வமாக்கப்படும். இவ்வாறாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பானது
அறுதிப்பெரும்பான்மை கொண்டு விடுதலைப் புலிகள் மயப்படுத்தப்படும்.
இவ்வாறான மாற்றங்களையெல்லாம் தமிழ் மக்கள் வியப்புடனும், ஆட்சேபனைகள் இன்றியும்
ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளனர். தாம் ஒரு தனியான தேசிய இனம் என்ற வகையிலும்.
இராணுவ சமபலம் தம்பக்கம் உள்ள வாய்ப்பான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு ஊடாக தமக்கும்
அதிகாரங்கள் வந்தடையும் என்பதனாலும் - இன்றைய நிலையில் தமிழ் மக்களில்
மிகப்பெரும்பாலானவர்கள், விடுதலைப் புலிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உடன்படுவார்கள்..
விடுதலைப் புலிகளின் ஏகபோகக் கொள்கையில் உடன்பாடு இல்லாத தமிழ் அரசியல் சக்திகள்
கூட, குறிப்பிட்ட காலத்திற்கு இவற்றையெல்லாம் சகித்துக் கொள்வார்கள். சிங்கள
மேலாதிக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில், இதைத் தவிர
தமிழ் மக்களுக்கு மாற்றுவழிகள் இப்போதைக்கு இல்லை.
ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நிலை?
கடந்த இருபது வருடங்களாக தமிழ் மேலாதிக்கத்தினாலும், விடுதலைப் புலிகளின்
எதேச்சாதிகார ஆயுத வன்முறைகளினாலும் மோசமாக அடக்கப்பட்டு வரும் முஸ்லிம்களால் -
புலிக்கீதம், புலிக்கொடி, புலிக் காவல்துறை, புலி நீதித்துறை போன்றவற்றை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
சிங்களப் பிரதிநிதிகளை அறுதிப்பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்கா அரசின்
பாராளுமன்றமும் சட்டங்களும் சாசனங்களும் தமிழ் மக்களை எப்படி நடத்தியதோ,
அப்படித்தான் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பினது சட்டங்களும் சாசனங்களும்
நடைமுறையில் முஸ்லிம்களையும் நடத்தும். சில சமயம் இது அதைவிடவும் மோசமானதாக இருக்கவும்
வாய்ப்புள்ளது என்பது நமது அனுபவமாகும்.
இலங்கைத் தீவினை ஒரே ஆள்புல எல்லையாகக் கொண்டு, பாராளுமன்றத்தில் சிங்கள
எண்ணிக்கைப் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டது. இதன் தொடர் விளைவுகளை அனைவரும்
அறிவோம். அவ்வாறே வடக்கு கிழக்குப் பிரதேசம் தனியான ஆள்புல எல்லையாகக்
கொள்ளப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பில், தமிழ் எண்ணிக்கைப்
பெரும்பான்மை நிலைநாட்டப்படும். அது தமிழ் மேலாதிக்கத்திற்கு தவிர்க்க முடியாது புதிய
பாதையைத் திறந்து கொடுக்கும். முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில்
தள்ளப்படும். முன்னரைப் போலன்றி இப்போது சட்டபூர்வ வழிமுறைகளின் துணையுடன் இச்செயல்
நேரடியாகச் செய்து முடிக்கப்படும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் ஐந்து வருடங்கள்
விடுதலைப் புலிகளின் அறுதிப்பெரும்பான்மையின் கீழ் இது நடைபெற்று, பின்னர் தமிழ்
எண்ணிக்கைப் பெரும்பான்மையான - மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக்கப்பட்டு அதன் கீழ்
நடைபெறும்.
- இலங்கையில் சிங்கள சிங்கக் கொடிக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் தமிழ் புலிக்
கொடி
- இலங்கையில் சிங்கள தேசிய மேலாதிக்கத்திற்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் தமிழ்
தேசிய மேலாதிக்கம்
- இலங்கையில் து}ய சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில் து}ய தமிழ்
ஆயுதப் படைகள்
- இலங்கையில் சிங்கள வரலாற்றுப் பாடத்திட்டங்களுக்குப் பதிலாக - வடக்கு கிழக்கில்
தமிழ் வரலாற்றுப் பாடத்திட்டங்கள்
இப்படியான அரசியல் ஆபத்துக்களில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம்
தப்பித்துக் கொள்ளவும், எமது நியாயமான அரசியல் அபிலாi~களை விட்டுக் கொடுக்காதும் -
அதேவேளை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாi~களுக்கு உண்மையாகவே நாம் குறுக்கே
நிற்காது அவற்றுக்கு ஆதரவாகச் செயற்படவும் ஏதேனும் வழிகள் உள்ளனவா? இதுபற்றி வேறொரு
கட்டுரையில்தான் ஆராய முடியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா? பிரிக்கப்பட வேண்டுமா? -
பேராசிரியர் மயுர சமரகோனின் நிலைப்பாடு -
இந்நாட்டின் வடக்கு கிழக்கு பிரச்சினை இரு தசாப்தங்களைக் கடந்துவிட்டது. இதனை
தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல பயனின்றிப் போயின. ஆரம்பத்திலேயே
இப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருப்பின் இன்று இந்தளவு பாரது}ரமானதாக அது மாறியிருக்காது.
அன்று சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையாகவே அது இருந்தது. ஆனால் இன்று நேரடியாகவே
முஸ்லிம்களும் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டனர். கடந்த காலங்களில் அடிக்கடி
முஸ்லிம்களுக்கும் டுவுவுநு யினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்கள் இதற்கு பெரும்
ஆதாரமாகும்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் பல்வேறு
தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மிக
முக்கியமானதாகும். இவ்வொப்பந்தத்தின் தாக்கம் இன்றுவரை இருப்பதனை நாம் காணலாம்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஏற்பவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது.
இவ்வொப்பந்தத்தில் அதிகாரப்பகிர்வு என்பது முக்கிய ஒரு ~ரத்தாக காணப்பட்டது.
இவ்வடிப்படையில் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் அன்றிருந்த அவசர கால
சட்டத்தின் கீழ்தான் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாகவே
இணைக்கப்பட்டன. அத்தோடு இவ்விணைப்பு தொடர வேண்டுமா அல்லது இல்லையா என்பதனை
அபிப்பிராய வாக்கெடுப்பொன்றின்படியே தீர்மானிக்க வேண்டும் என்ற ஒரு விதியும்
இவ்வொப்பந்தத்தில் அடங்கியிருந்தது.
ஆனால் இந்த மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு (சுநகநசநனெழஅ) இன்றுவரை
மேற்கொள்ளப்படவில்லை. வாக்கெடுப்பின் மூலம்தான் ஒரு விடயத்துக்கு மக்களாணை பெறப்பட
வேண்டும். எனினும் 1987 முதல் 2003ஆம் ஆண்டுவரை இது தொடர்பில் அபிப்பிராய
வாக்கெடுப்பொன்றை நடத்தாமல் இருப்பது மக்கள் அபிப்பிராயத்தை மதிக்காத, ஒரு ஜனநாயக
விரோத நடவடிக்கையாகும்.
வடக்குக் கிழக்கை இணைத்ததன் மூலம் நிறையப் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு அதன்
பிரதிபலனை டுவுவுநு இயக்கம்தான் நேரடியாக அனுபவித்தது. இவ்வொப்பந்தத்தின் இறுதிப்பயன்
என்னவெனில் வடக்கில் மாத்திரம் சுருங்கியிருந்த டுவுவுநு யினரின் கட்டுப்பாட்டுப்
பிரதேசம் கிழக்கிலும் வியாபித்தமையாகும். எனினும் கிழக்கில் பெரும்பான்மையினர்
முஸ்லிம்களே. டுவுவுநு யினரின் செயற்பாடுகள் கிழக்கில் விஸ்தரிக்கப்பட்டதன் காரணமாக
அங்கிருந்த முஸ்லிம்களும் சிங்களவர்களும் பல நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிங்கள-தமிழ் கலவரங்கள் மாத்திரமல்ல முஸ்லிம்-தமிழ் கலவரங்கள் கூட அங்கு தோன்றக்
காரணமாகி விட்டன. இக்கலவரங்களின் பின்னணியில் டுவுவுநு இயக்கம் நேரடியாகவும்
மறைமுகமாகவும் இருந்து வருகின்றது. காலவோட்டத்தில் எந்தவொரு சக்திக்கும் எதிர்சக்தி
தோன்றுவது இயல்பான ஒரு விடயமாகும். இவ்வுண்மைதான் வடக்குக் கிழக்கு கலவரங்களின் பின்ன
ணியாகும். இவ்வகையில் டுவுவுநு யினரின் கிழக்கு மாகாண ஆதிக்கத்தை முஸ்லிம்,
சிங்களவர்கள் எதிர்த்தபோதுதான் அங்கு பல வன்செயல்கள் தோற்றம் பெற்றன.
அண்மையில் இடம்பெற்ற வாழைச்சேனை, மூது}ர், மணிராசகுளம் சம்பவங்களும், அன்று நிகழ்ந்த
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு நிகழ்வுகளும் இந்த உண்மைகளைத்தான் உணர்த்துகின்றன. இராணுவம்
விழிப்புடன் இருந்தபோது இப்பிரச்சினைகளை ஓரளவு கட்டு;ப்பாட்டுக்குள் வைத்திருக்க
முடிந்தது. ஆனால் அண்மையில் இராணுவம் முடக்கப்பட்டதன் காரணமாகவும் வேறுபல அரசியல்
காரணங்களாலும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு வருவதை
அவதானிக்கலாம்.
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையில் தலையீடு செய்ய
ஜனாதிபதிக்கு முடியும். இன்னொரு வகையில் முஸ்லிம் சிறுபான்மையினரைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒன்றிணைவதன்
மூலமும் இப்பிரச்சினையை ஓரளவு தீர்த்திருக்கலாம். எனினும் பொதுஜன ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தை அமைத்தபோது இவற்றை மறந்த நிலையில் செயற்பட்டது. ஆனால் அவர்கள் இன்று,
தாம் அதிகாரத்தில் ஒருபோதும் இருக்கவேயில்லை என்ற தோரணையிலேதான் கதைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
1994 முதல் 2001 வரையான காலப்பகுதியில் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு பிரச்சினையை
தீர்க்க முடியுமாயிருந்தது. இன்றும் ஜனாதிபதி தனது அதிகாரம் பற்றி பிரஸ்தாபிக்கும்
அளவுக்கு முக்கிய பிரச்சினைகளில் அக்கறை காட்டியது குறைவு.
இவ்விடயத்தில் பதில் சொல்ல வேண்டிய இன்னொரு தரப்பினர்தான் முஸ்லிம்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள். இது விடயத்தில் முஸ்லிம்
காங்;கிரஸ{க்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ்
என்ன செய்தது? என்பது ஒரு பெருத்த கேள்வியாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள்
அதிகாரம் உள்ள கட்சியோடு இணைவதன் மூலம் தமக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி
சிந்தித்தார்களே ஒழிய தம் மக்களின் நலன்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
இதற்கான சிறந்த உதாரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக் காலத்திலான காங்கிரஸின்
செயற்பாடுகளை குறிப்பிடலாம். 1994களில் சந்திரிகா அரசாங்கத்தில் காங்கிரஸ் மிக
பலமான நிலையிலே காணப்பட்டது. ஆனால் அன்று அவர்கள் கிழக்குப் பிரச்சினையை
தீர்ப்பதற்காக வேண்டி என்ன செய்தார்கள்?
நாங்களும் பெரும்பான்மை முஸ்லிம்களும் இக்கேள்வியைத்தான் எழுப்புகின்றோம். இவை
கடந்தகால நிகழ்வுகள் என்று கூறி தப்பிவிட முடியாது. ஏனெனில் தற்போதைய அரசாங்கத்திலும்
முஸ்லிம் காங்கிரஸ் பிரதான பாத்திரத்தை ஏற்றுள்ளது. எனினும் தெளிவான நோக்கமொன்று
இல்லாத ஒரு கட்சியாகவே அது இருந்து வருகிறது. காங்கிரஸ் உறுதியாக இருந்திருப்பின் கடந்த
காலத்தில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டிருக்காது.
வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையினராகவும் கிழக்கில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையினராகவும் இருப்பதனால் இவை பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்படுகிறது. ஆனால் வடக்குக் கிழக்கில் பொதுவாகவே மூவினங்களும் வாழ்கின்றனர்.
எனினும் வடக்கும் கிழக்கும் பிரிந்திருந்தால் தத்தம் கலாசார தனித்துவங்களை
பாதுகாத்துக் கொண்டு தத்தம் பிரச்சினைகளை வேறு வேறாகத் தீர்த்துக் கொண்டு சுதந்திரமாக
இருக்க முடியும்.
அன்றிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதனை மைய இலக்காகக் கொண்டே மாகாண சபை முறை
அமைக்கப்பட்டது. எனினும் வடக்கை கிழக்குடன் இணைத்ததன் மூலம் இருந்த பிரச்சினை
தீர்க்கப்;படாது தொடர்ந்திருக்க பொதுவகைப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றது. இவ்வகைப்
பிரச்சினைகளில் முதன்மையானது வடக்கில் மாத்திரம் சுருங்கியிருந்தடுவுவுநு யினரின்
அதிகாரங்கள் கிழக்கிலும் வியாபித்தமையும் அவர்களது அடாவடித்தனங்கள்
அதிகரித்தமையுமேயாகும்.
இவ்விரு மாகாணங்களும் வௌ;வேறாக இயங்குவதன் மூலம் அப்பிரதேசங்களில் வாழும்
இனக்குழுமங்கள் பயனடைவதுடன் அங்கு வாழும் சிறுபான்மையினரும் ஏனையோரும் தத்தம்
சுதந்திரத்தையும், சிறப்புரிமைகளையும் பேணிக் கொள்ள முடியும். மாகாணங்களை
வேறுபடுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது சிலரது
வாதமாகும். ஆனால், இணைக்கப்பட்டதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா?
இல்லையானால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரிப்பதன் மூலம் தீர்வு ஏற்பட முடியும்.
அப்படி செய்யும்போது இப்பிரதேசங்களில் டுவுவுநு யினரின் அதிகாரங்களும் மிகவும்
குறைந்துவிடும். இன்னொரு வகையில் கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சக்திகளின்
தலையீட்டையும் குறைக்க முடியும். உண்மையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் புத்திஜீவிகளை
பயன்படுத்தி தீர்வை நோக்கி போகமுடியுமாக இருந்தபோதிலும் கடந்த காலங்களில் இவர்களின்
தேசிய கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தை பிரிப்பதன் மூலம் முஸ்லிம் நிர்வாகமொன்று உருவாகிவிடுமோ? என்று பலர்
சந்தேகிக்கின்றனர். வடக்குக் கிழக்கை பிரிப்பதனை டுவுவுநு இயக்கம் அனுமதிக்குமா? என்பது
பிரச்சினையான இன்னொரு விடயம். இதுபோன்ற இடங்களில்தான் அரசு நேரடியாக தலையிட
வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு தேசிய கொள்கையொன்று இருப்பது அவசியமாகும்.
குறிப்பாக, சிங்கள, முஸ்லிம்களின் தனித்துவம் பேணல், அவர்களது நிலங்களை பெற்றுக்
கொடுத்தல் போன்றவை இங்கு
மிக முக்கியமானதாகும். சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் தத்தம் நிலங்களிலிருந்து
விரட்டிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ள போதிலும் அவற்றை பெற்றுக் கொடுக்க எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் போதுமானவையல்ல. இது தொடர்பான வேண்டுதல்கள் அடிக்கடி விடுக்கப்பட்ட
போதிலும் அரசாங்கம் இதுதொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை.
கிழக்கு மாகாணம் இவ்வாறு பிரிக்கப்படுமாயின் அரசைப் போன்றே எதிர்க்கட்சியும்
இவ்விடயத்தில் உதவ வேண்டும். இனவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இதுபோன்ற ஒன்றை
செய்வதன் மூலம் வடக்குக் கிழக்குப் பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்க முடியும்.
மயுர சமரகோன்-
சிரே~;ட விரிவுரையாளர், சமூக விஞ்ஞான பீடம், சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.
தமிழில் : ரு.மு. றமீஸ்

(ஒரு கருத்து) சிறுபான்மை முஸ்லிம்களும் இஸ்லாமிய வாழ்வும் - கலாநிதி முஹம்மது அம்மாரா
உலகின் சிறுபான்மை மக்களை சனத்தொகை அடிப்படையிலும் பொருளாதார, சமூக, அரசியல்
hPதியிலும் வகைப்;படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையிலான சிறுபான்மைச் சமூகங்கள்
உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமன்றி பிற மதங்களைப்
பின்பற்றுகின்றவர்களும் இவ்வாறு சிதறுண்டு வாழ்வது கவனத்திற்குரியது. இவ்வகையில்
"சிறுபான்மை" என்ற காரணத்திற்காக அவர்களது அரசியல், சமய, கலாசார உரிமைகள்
மறுக்கப்படும் நிலையையும் காணலாம். பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூகங்கள்
பாராபட்சமான முறையில் நடாத்தப்படுகின்றனர். இதனால் அந்நாடுகளில் சுயநிர்ணய உரிமைப்
போராட்டங்கள் தொடங்கிவிட்டன. உண்மையில் காலனித்துவம் விரிவுபடுத்தப்பட்டபோது பல
புதிய தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன. ஆனால் ஏகாதிபத்தியம் வெளியேறியபோது இன, மத,
மொழிப் பெரும்பான்மைகளிடமே ஆட்சி கைமாறியது. காலனித்துவத்தின் விளைவான ஒரு
பெரும்பான்மை ஜனநாயகம் இந்நாடுகளில் நிலைகொண்டது. விளைவாக சிறுபான்மைகள் அரசியல்
hPதியிலும் பண்பாட்டு hPதியிலும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கலாயின.
உலகில் எல்லா நாடுகளிலும் இனத்தால், மொழியால் வேறுபடும் சிறுபான்மைகள்
வாழ்கின்றனர். ஆனால், முஸ்லிம் சிறுபான்மைகளே கணிசமான நாடுகளில் சிதறி வாழ்வது
கவனத்திற்குரியது. உலக முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 பில்லியன் ஆகும்.
அதில் 1ஃ4 பங்கினர் சிறுபான்மையினரே. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் முறையே 20, 15
கோடி முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இதைவிட 1 லட்சம் தொகை அளவிலான
மிகக் குறைந்த சிறுபான்மையினராகவும் முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர்.
இவ்வாறு சிறுபான்மையாக வாழ்வதனால் ஏற்படும் பிரச்சினைகள் எத்தகையது? இஸ்லாமிய
வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் பெரும்பான்மை கலாசாரத்தால், சமூக அரசியல் சூழ்நிலைகளால்
ஏற்படும் நெருக்கடிகள் எத்தகையன? இது குறித்து ஒரு தெளிந்த கண்ணோட்டம் முன்வைக்கப்பட
வேண்டும்.
சிறுபான்மை சமூக அமைப்பு என்பது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு சமூக நியதி என்று
கூறலாம். மனித சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு தெய்வீக விதி. இத்தர்க்க hPதியான
உண்மையை ஏற்றுக்கொண்டு, பன்மைத்துவ சமூக அமைப்பு ஒன்றில் அனைவரும் சமமான உரிமைகளை
அனுபவிக்க வேண்டும். மத, மொழி, இன அடிப்படையிலான வேறுபாடுகளும் பாராபட்சங்களும்
மேலெழக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்
ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவ, யுூத சிறுபான்மைகள் எந்தளவு து}ரம்
நீதியாகவும் சமத்துவமாகவும் நடத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம்
புரிந்துகொள்கிறோம். "ஈமான் கொண்டவர்களே நீதி செலுத்துவதில் அல்லாஹ்வுக்கு
சாட்சியாளர்களாக இருங்கள். நீங்கள் சமூகத்தின் மீது கொண்டுள்ள குரோதம்; நீதி
செலுத்துவதை விட்டும் உங்களைத் தடுக்காதிருக்கட்டும். நீதமாக நடந்துகொள்ளுங்கள். அது
இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளது. அல்லாஹ் அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக
நீங்கள் செய்பவற்றை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்" (மாஇதா 8)
முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிற மதச் சிறுபான்மையினரை நேர்மையாக நடாத்துவதில்
அல்குர்ஆனின் இந்த அடிப்டையையே பின்பற்றினர். இக்கட்டளை முஸ்லிம்களுக்கு மட்டும்
உரியதன்று. முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை ஆட்சியாளர்களும் இது பொருந்தும். சிறுபான்மை
முஸ்லிம்களை எவ்வாறு சமத்துவமாகவும் நீதியாகவும் நடத்த வேண்டும் என்பதையும் இவ்வசனம்
விளக்குகின்றது. இப்பின்னணியில் சிறுபான்மை முஸ்லிம்களும் தமது அரசியல், பொருளாதார
உரிமைகளை சமத்துவமாக அனுபவிப்பதற்குத் தகுதியுடையவர்கள்;. அதற்காக ஜனநாயக hPதியில்
போராடுவது அவர்கள் மீதான பொறுப்பாகும்.
கலாசார hPதியில் நோக்கும் போது முஸ்லிம் சிறுபான்மை தமது தனித்துவங்களைப் பாதுகாத்து
வாழ்வதும் தமது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்வதும்
இன்றியமையாதவை. இப்பகுதியில் இரு முக்கிய அடிப்படைகளை சிறுபான்மை முஸ்லிம்கள்
கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. பிராந்திய, மொழி, துணைக் கலாசாரக் கூறுகள் போன்ற எல்லைகளைத் தாண்டி சிறுபான்மை
முஸ்லிம்களும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினரே என்ற இஸ்லாத்தின் கருத்து.
2. தனித்துவ உணர்வும் அதன் மீதான பற்றும் சமய நம்பிக்கைகளோடு இரண்டறக் கலந்தது என
வலியுறுத்தும் அல்குர்ஆனின் கோட்பாடு.
இவ்வி;ரு அடிப்படைகளையும் ஒப்புக்கொள்கின்றபோது தமக்கும் இஸ்லாமிய கலாசார,
பண்பாட்டு, கொள்கை தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பேணி வாழ்வது இன்றியமையாதது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்பின்னணியில் இவ்விரு அடிப்படைகளையும் பின்பற்றும்
போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் நிழலில் தீர்வுகளைத் தேடவேண்டியும்
உள்ளது. இங்குதான் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளைப் போலல்லாது சிறுபான்மை
முஸ்லிம்களின் பிரச்சினை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. எனினும் அப்பிரச்சினைகளுக்கு
மத்தியிலும் தனித்துவத்தைப் பாதுகாப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று.
சிறுபான்மை முஸ்லிம்கள் தனித்துவமாக வாழ்தல் என்பது மிகவும் விரிந்த ஒரு
கருத்தாக்கமாகும். சட்டம், பொருளாதார ஒழுங்கு, அரசியல் பங்குபற்றல், கலாசாரத்துறை,
ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய பின்னணியுடனான சுய அடையாளங்களைப் பேணி வாழ்வதையே இது
குறித்து நிற்கின்றது. இங்கு அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை விட கலாசாரப்
பண்பாட்டுப் பெறுமானங்களிலேயே மிகச் சிக்கலான பிரச்சினைகளுக்கு சிறுபான்மை
முஸ்லிம்கள் முகங்கொடுக்கின்றனர். காரணம் சட்டம், அரசியல் முறை என்பவற்றில்
இஸ்லாமிய ~hPஆவின் நெகிழ்ச்சியான பகுதியை ஓரளவு கையாழ முடியும். ஆனால், கலாசார
பகுதியில் குறைந்த பட்ச விட்டுக் கொடுப்பையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற கலாசாரத் தாக்கங்கள், நவீன முதலாளித்துவப் பொருளாதார நிறுவனங்கள், மதச்
சார்பற்ற பாடத்திட்டங்களின் அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள், வேகமாக மாறிவரும்
பண்பாட்டுச் சூழல் என்பவற்றுக்கு மத்தியில் குறைந்த தொகையில் வாழும் முஸ்லிம்கள்
இஸ்லாம
Reply
#2
நல்ல செய்தி.....
நாம் எல்லோரும் தமிழ் முதல் பின்தான் சமயம்.... ஏணோ இன்றுவரை மதத்தால், குணத்தால்.. மட்டுமே இருஇனத்தவருக்கும் பிரச்சனை.... அது இயற்கையாக இருக்கலாம்....
ஆனால் இது நவீன உலகம் ... எம்மதமும் சம்மதம் என்றுசொல்லிக்கொண்டு போகவேண்டும் மதத்தை பற்றியே எண்ணினால் நம் வாழ்நாழில் கனக்க அறியாமல் அப்படியே போகவேண்டியதுதான்
உதாரணம் ஜரோப்பாவில் சாமி சாமி என்று சாமி கும்பிடுவோர் எத்தனைபேர் அல்லது அவர்கள் அவர்களது கோயிலுக்கே போய் கடவுளை கும்பிட்டு எத்தனை வருடங்கள் இருக்கும் ..... ஆனால் உலகில் அவர்கள்தான் வளர்சிஅடைந்தவர்கள் அவர்களது கடவுளா அவர்களை முன்னேற்றியது ....!!!!!!!!????? நம்மை நாமே முடநம்பிக்கைகளால் ஏமாற்றுகிறோம்...கடவுள் இருக்கிறார்தான் அவரைவிடிற்று நாம் இவ்புதிய உலகோடு போட்டி இட்டு முன்னேறவேண்டுமே ஒழிய சமயம் சாதி என்றால் ஒரோ எல்லையில் நிற்கவேண்டியதுதான் எப்படி முன்வருவது ....

இதைபாருங்கள் முக்கியமான ஒரு உண்மை.....
Quote:கலாசார
பகுதியில் குறைந்த பட்ச விட்டுக் கொடுப்பையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற கலாசாரத் தாக்கங்கள், நவீன முதலாளித்துவப் பொருளாதார நிறுவனங்கள், மதச்
சார்பற்ற பாடத்திட்டங்களின் அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள், வேகமாக மாறிவரும்
பண்பாட்டுச் சூழல் என்பவற்றுக்கு மத்தியில் குறைந்த தொகையில் வாழும் முஸ்லிம்கள்
இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணி வாழ்தல் என்பது மிகவும் நெருக்கடி மிக்க ஒரு
பிரச்சினையாகும். ஆசிய சிறுபான்மைகளை விட ஐரோப்பிய சிறுபான்மைகள்
இப்பிரச்சினைக்குப் பெரிதும் முகங்கொடுக்கின்றனர். காரணம் ஆசியாவில் மத
அடிப்படையிலான பெரும்பான்மைகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால்
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முற்றிலும் திறந்த, பின் நவீனத்துவ சமூக அமைப்பில்
முஸ்லிம்கள்
Reply
#3
மற்றும் இப்போ எல்லா சமயமும் முஸ்லீம் சமயத்தில் மட்டும் ஏன் ஒரு கண்வைக்கிறார்கள்..... யதார்தத்துடன் சிந்தித்துபாருங்கள்....
மனிதரை சமயம் ழூடர்கள் ஆக்கா.... ஆனால் மனிதர் சமயத்தால் ழூடர்கள் ஆகிறார்கள்...
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#4
Quote:1)
மதம்
மனிதர்களின் கற்பனை ஓவியம்
மனிதனே தன்னைத்தான் அழிக்கும் ஆயுதம்
அணுகுண்டு தோற்றுவிடும்
மதம் போடும் சண்டையிலே
எத்தனை துளிகள் வீழ்ந்தபோதும்
எத்தனை நதிகள் பாய்ந்தபோதும்
எல்லாம் கலப்பது கடலிலே என
மானிடர் இங்கு புரியமறுப்பதுமேனோ

2)
பெயரிற்கு நீ இன்ன மதத்தவனாய் இரு
மதத்திற்காக உன்னை மாற்றாதே
மதத்திற்காக உன்னை அழிக்காதே
மதத்திற்காக உலகை சிதைக்காதே
மதத்திற்காக வானைக்கிழிக்காதே
நீயும் கிழிந்துபோவாய்

3)
புூக்கள் நிறப்பிரிகை
பார்த்து மகி;ழ்ந்திடும் மானிடர்கூட்டம்
கலப்பு புூக்களை
கைகளில் ஏந்திடும் கூட்டம்
மனிதக்கலப்பினை
கொன்றுபோடுவதுமேனோ
அவை புதிதாய் பிறப்பதை
புரியமறுப்பதுமேனோ
மதம்
மனிதனை ஏற்றி மிதிக்கும்
அடங்காத கற்பனை

4)
மதம் என்ற பெயரினால்
மனிதா நீ ஏன்
மதம்பிடித்து அலைகின்றாய்
அல்லர் என்பவனும்
இயேசவே என்பவனும்
சிவனே என்பவனும்
ஓன்றாய் மடிவது
ஒருங்கே அழிவது
எல்லாம் கண்முன்னே
காட்சிகளாய் கண்டபின்னும்
மதம் என்னும் அரக்கனை நீ
அணுகவே முயல்கி;ன்றாய்

5)
என்றுமே புரிய மறுப்பது
மனித மனம்
மாறிக்கொண்டேயிருப்பதும் அதுதூன்
மாற்றிக்கொண்டேயிருப்பதும் அதுதான்

6)
தென்றல் தொட்டுப்போனதாய்
திங்கள் சுட்டுச்சென்றதாய்
மகரந்த தீண்டல் மனதை வருடியதாய்
வீழ்ந்த துளி பாதம் குளிர்ந்ததாய்
சொல்லிக்கொள்கின்றாய்
என்காதல் என்ன செய்கின்றுதென
எப்போது சொல்லிக்கொள்வாய் ?

7)
அலட்டல் இல்லாத உன்
அமைதிப்பேச்சு
சிந்திவிடாத உன் புன்னகை
ஓளிர்ந்துகொண்டிருக்கும்
உன் விழிகள்
காற்றில் அசைந்து
கவிதைகள் பலசொல்லும் கருங்கூந்தல்
எல்லாவற்றையும் விட
அவசரமில்லாத உன் காதல்
எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு


அழுதுகொண்டுவரும் பிஞ்சிடம்
ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை
முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர்
என்னையும் ஏசியுள்ளார்
தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல
முகமும் தொலைத்து நிற்கின்றோம்
ஈழத்தின் அவலத்திலே

9)
எனக்கான உன் பரிவுப்பார்வை
குரலோசை குயில்கீதம்
மௌனம் காத்து
சம்மதமாக்கும் அந்த நிமிடம்
எனக்கு உன்னை
ரொம்பவே பிடிச்சிருக்கு

10)
எழுதிக்கொண்டேயிருப்பேன்
வானமும் புூமியும்
முட்டி மோதினாலும்
புூக்கள் வண்டினை நிராகரித்தாலும்
சூரியன் நொருங்கி
தேசம் இருண்டாலும்
நீ என்னருகில் உள்ளவரை
என் கரங்கள் ஓயாது
நன்றி: கரவைபரணி
Reply
#5
து}ரனின் பார்வையில்...
வரலாற்றுத் தவறுகளை சுமக்கப்போகும் இஸ்லாமிய தமிழ் தலைவர்கள்!


சிறிலங்கா சனாதிபதி சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை, சமாதான நடவடிக்கைகளை புறந்தள்ளியுள்ள நிலையில் அதனை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி, முற்றாகவே அமைதி நடவடிக்கைகள் யாவற்றையும் செயலிழக்க வைக்கும் தனது அரசியல் மூலோபாயத்தை சனாதிபதி மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு செயற்படுத்திவருகிறார் என்பதையே அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் நிரூபித்து வருகின்றன.

மூன்று பிரதான அமைச்சுக்களை சந்திரிகா தன் வசப்படுத்திக்கொண்டதையடுத்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்கும் ஐ.தே.முன்னணி அரசு பெரும்பாலும் முற்றாகவே அதிகார வலுவற்ற பொம்மை அமைச்சரவை ஒன்றைக் கொண்டதாக மாறிவிட்டது.

இந்த நிலையில் ரணில் வெறுமனே ஒரு ~றப்பர் முத்திரை| பிரதமராக எத்தனை நாளைக்குத்தான் பதவியில் இருக்கமுடியும். இத்தகைய ஒரு நிலை அவரது அரசியல் ஆளுமைக்கு தகுந்த ஒன்றாக அமையாது என்பதுடன் அவரது எதிர்கால அரசியல் வாழ்வையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதும் உண்மையே.

இதை ரணில் நன்கு அறிவார்.

அதேசமயம் சந்திரிகாவின் இலக்கும் அதுவேயாகும்.

ரணிலின் அரசியல் ஸ்திரத்தன்மையை, அரசியல் செல்வாக்கை எத்தகைய ராஜதந்திரத்தை அல்லது சட்டபுூர்வ அரசியல் சதியை, பயன்படுத்தியேனும் சிதைப்பது சந்திரிகாவின் முக்கிய நோக்கமாக இருந்த அதேசமயம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப்பேச்சுவார்த்தையை ஆதரிப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதனை நிரந்தரமாக ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு செல்வதும் அவரின் திட்டமாகவும் இருந்தது.

இத்திட்டத்தின் மற்றொரு பக்கம் இன்னொரு அரசியல் சதியை இனவாத இலக்குடன் மேற்கொள்வதாகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுதலும் அவசியமாகும்.

அதாவது கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களிடையே பகைமை மற்றும் மோதல் உணர்வை, சமூக விரோத சக்திகளையும். தேசவிரோத தமிழ்க் குழுக்களையும் பேரினவாத வெறியர்களின் வழிகாட்டலில் செயற்படவைத்து அதிகரிப்பதும் சனாதிபதியின் தலைமையிலான பொ.ஐ. முன்னணியினரின் மறைமுகமான திட்டமுமாகும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவரிடையேயான நட்புறவும், பாரம்பரியப் புரிந்துணர்வும், பேரினவாதத் தலைமைகளின் மித்திரபேதத் தந்திரோபாயங்களால் கடந்த மூன்று தசாப்தங்களாக பெருமளவு சிதைவடைந்து இருதரப்பினருக்குமிடையே ஒரு விதமான பகையுணர்வு வளர சிங்களத் தலைமைகள் கையாண்ட யுக்திகள் பலவாகும். வடக்கிலும், கிழக்கிலும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும், ஏனைய மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்குமிடையே மத hPதியிலான முரண்பாடுகள் என எதுவுமே தலைது}க்கியதில்லை. இருதரப்பினரிடையே தாய்மொழியும் தமிழாக அமைந்திருந்தமையானது மத வேறுபாடுகளுக்கப்பால் இரு இனத்தவரிடையேயும் பரஸ்பர நல்லுறவு ஏற்படக் காரணமாகவும் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் தமிழ் என்ற மொழியால் இறுக்கமான உறவு - உணர்வுகளைப் பேணிவருவது பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு ஒரு போதுமே உடன்பாடாக இருந்தது கிடையாது. இந்த உறவு இறுக்கமானால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் இனத்தவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து ஒரு பெரிய வலிமையான சக்தியாகி சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானதும் ஆபத்தானதுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு சில தசாப்தங்களின் முன்னரே ஏற்பட்டுவிட்டது.

பண்டாரநாயக்கா முதல் - சந்திரிகாவரை சிங்களத் தீவிரவாத தலைவர்களும் காலத்திற்கு காலம் அவர்களின் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளின் அவசியத்தின் நிமித்தம் தமிழ் அரசியல்வாதிகளிடையே - அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி. பிளவுகளை ஏற்படுத்தி, முரண்பாடுகளை வளர்த்ததன் மூலம் சிறுபான்மையின் ஒருமித்த உரிமைக்கான போராட்ட உணர்வை நன்கு திட்டமிட்ட வகையில் சிதைத்தனர்.

குறிப்பாக முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கிடையே பதவிப் போட்டியை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கியதன் பின்னணியில் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரமான கைகள் இருந்தன.

இவையொன்றும் அந்தத் தலைமைகளுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் பதவி வெறியும், போட்டியுணர்வும் இன ஒருமைப்பாட்டையே சிதைத்து தங்களுக்குள்ளேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு அவமானகரமான வகையில் மோதிக்கொள்ளவே வழிவகுத்தது.

இஸ்லாமியத் தமிழ் தலைமைக்குள் எப்படி பேதங்களை உருவாக்கினார்களோ அதே வழியில் தமிழ் தலைமைகளுக்கும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தலைவர்களுக்குமிடையே எத்தகைய நல்லுறவும் ஏற்படவிடாதும் பார்த்துக் கொண்டார்கள்.

நாட்டின் இனப்பிரச்சினையை இதற்கு அவர்கள் பயன்படுத்திய விதம் ஒரு துரோகத் தனமான சதியாகும்.

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே இனத்துவ முரண்பாடுகளையும் மோதல்களையும், சமூக விரோத சக்திகளையும், கூலிப்படைகளையும் பயன்படுத்தி, சர்வதேச உளவு அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கிணங்க சிங்கள அரசியல்வாதிகள், பேரினவாத அமைப்புகளின் அனுசரணையுடன், ஏற்படுத்திய விதம் இரு தரப்பினரிடையேயும் நிரந்தரமான பகைமையுணர்வை விதைப்பதையே இலக்காகக்கொண்டதாகும்.

இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் இதற்கு பலியானவிதம் மிகவும் பரிதாபகரமானதாகும்.

தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அதேபோல் ஒரு கட்டம் வரும் போது, இஸ்லாமியத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் அரசு ஒடுக்கவே செய்யும் என்ற சிந்தனையோட்டமும் தொலைநோக்கு யோசனையும் இரு தரப்பு தலைமைகளுக்கும் இருந்தது கிடையாது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது இஸ்லாமியத் தமிழர்களின் உரிமைகளுக்குமான போராட்டம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவிடாது சிங்கள பேரினவாதம் அவர்களை பதவிப்பதர்களாக்கி விட்டது துயரமான விடயமே.

இன்று கிழக்கில் நடைபெறும் வன்முறைகளின் பின்னணியில் இயங்கும் அரச சார்பு, சமூக விரோத சக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவு ஏற்படுவதை சிதைப்பதையே ஒரே இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதை இஸ்லாமியத் தலைமைகளும், அடிப்படை மதவாத அமைப்புகளும் சிந்திக்க தவறிவிட்டன.

கிழக்கின் அசம்பாவிதங்களுக்கு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டும் சந்திரிகாவின் இரத்தக் கறை படிந்த கரங்களின் கொடூரத் தினை உடத்தலவின்ன படுகொலைகளின் போதாவது முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இன்று நடைபெறும் வன்முறைகளின் பின்னாலும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறை கரம் ஒன்று வேறு சில வெளிச்சக்திகளின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன் செயல்படுகிறது என்பது உண்மையாகும்.

இந்த மறைகரம் இனம் காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தநாட்டின் சமாதான முயற்சிகளைச் சிதைப்பதும், விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்வதும், தமிழ் - இஸ்லாமியத் தமிழ் மக்களிடையேயான உறவுகளைத் தகர்ப்பதும் தான் இந்த பேரினவாத வழிகாட்டலுடனான மறைகரத்தின் ~திருப்பணி| என்பதை இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் தமது பதவிப் பற்றின் காரணமாக இனங் காணத் தவறின் - இஸ்லாமியத் தமிழர்களை பெரும் அவலங்களுக்குள் தள்ளி விடும் வரலாற்றுத் தவறை புரிந்த குற்றம் அவர்களுக்குரியதேயாகும்.


நன்றி: ஈழநாதம் 05-12-03 & தமிழ்நாதம்.
Reply
#6
தமிழர் - முஸ்லிம்கள் ஒற்றுமை
11-12-2003 - உதயன்


இப்போது யுத்தம் இல்லைத்தான்இ என்றாலும் மக்களில் ஒரு பகுதியினர் அச்சம்இ பீதி எதுவுமின்றி நிம்மதியாக வாழக்கூடிய நிலை இல்லை. குறிப்பாகஇ கிழக்கு மாகாண மக்களுக்கு அவர்களிலும் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கு அந்தத் துர்ப்பாக்கியம். கிழக்கிலும் திருகோணமலைஇ மூதூர்இ கிண்ணியாப் பகுதிகளில் நிலைமை மோசம்இ அங்கே அடிக்கடி வன்செயல்கள் வெடிக்கின்றன. கோரக் கொலைகள்இ குத்து வெட்டுகள்இ குண்டு வெடிப்புகள் அபரிமிதமாக நடக்கின்றன.

தமிழ்இ முஸ்லிம் மக்களிடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் நல்லுறவுஇ அன்னியோன்யம்இ பந்தபாசம்இ சிநேகம் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் பொடிப் பொடியாக்கும் வகையிலான அநாகரிக அடாவடித்தனங்கள் அவை. அவற்றைக் கட்டவீழ்த்து விட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகள் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார்கள் ஒரு பகுதியினர்.பாதுகாப்புப் படையினரே அதை மறுத்துவிட்டனர். அவர்களை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விட்டனர். தீய சக்திகள்தான் வன்செயல்களில் ஈடுபடுகின்றன என்று இன்;னொரு பகுதியினர் கூறுகின்றார்கள். தீய சக்திகள் என்றால் அவற்றை அரசும் விடுதலைப் புலிகளும் இனங்காட்ட வேண்டும் என்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம். சும்மா தீயசக்திகளின் தலையில் போட்டுவிட்டு அரசும் புலிகளும் நழுவ முயற்சி செய்யக்கூடாது என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த நிலையில்தான் ரெலோ முதல்வரான சட்டத்தரணி ஸ்ரீகாந்தாஇ அசம்பாவிதங்களின் பின்னணியில் வெளிநாடு ஒன்று செயற்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். இலங்கை விவகாரம் குறித்து இலங்கையின் அரசியல்வாதிகள் இந்தியாவில் தீவிர பிரசாரம் செய்துவரும் இவ் வேளையில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அது பற்றிக் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது திருகோணமலைப் பகுதி அசம்பாவிதங்கள் பற்றி திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவருமான இரா.சம்பந்தன் காத்திரமான சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிண்ணியாவில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இடம்பெயர்ந்து ஈச்சந்தீவு விபுலானந்தா வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்த மக்களைச் சம்பந்தன் எம்.பியும் துரைரத்தினசிங்கம் எம்.பியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போய்ப் பார்த்தனர். அகதிகளுக்கு ஆறுதல் கூறித் தெம்பூட்டினார்கள். அப்போது சம்பந்தன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பயணத்துக்கு தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் ஆணி வேர் என்று அறிவுறுத்தினார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறுகையில்-
"தமிழ்இ முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்குக் கௌரவமான தீர்வு கிடைப்பதை சிஹல உறுமயக் கட்சி விரும்பவில்லை. தமிழ் பேசும் மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருவதை அந்தக் கட்சி அடியோடு விரும்பவில்லை. அதிகாரம் கிடைப்பதைக் குழப்பிவிடும் சிஹல உறுமயஇ ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் முயற்சிக்கு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்த எவரும் உடந்தையாக இருக்கமுடியாது" - என்றார். வன்செயல்களால் தனியாகத் தமிழர்களோஇ முஸ்லிம்களோ அல்லர்இ இரு இனத்தவர்களுமே பாதிக்கப்படுவதால் இருசாராரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இனவாரியாக கிழக்கு மாகாண மக்கள் எண்ணிக்கையையும் சம்பந்தன் எடுத்துக்காட்டி ஓர் எச்சரிக்கை விடுத்தார். "1981 இன் உத்தியோகபூர்வ ஆள் கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாண மக்களில் 75 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்கள். அதாவதுஇ 42 சதவீதம் தமிழர்கள். 32 சதவீதம் முஸ்லிம்கள். இவர்கள் தவிரச் சிங்களவர்கள் 25 சதவீதம். இந்தநிலையில்இ தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிரிந்து வாழவே கூடாது|| - இப்படி அவர் கூறினார்.

அரசுகளின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிகரித்துள்ள போதிலும் கூட்டாக தமிழ் - முஸ்லிம் மக்களே அங்கு பெரும்பான்மையினர். திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்இ முஸ்லிம்இ சிங்களம் ஆகிய மூன்று இனத்தவர்களின் விகிதாசாரத்திலும் அதிக ஏற்றத்தாழ்வு இல்லை. தமிழ்இ முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் ஆட்சி அதிகாரம் சிங்கள மக்கள் கையில் இருந்தாலும் அவர்களால் தாம் நினைத்தபடி எல்லாம் செய்யமுடியாது. திருகோணமலை புதிய சந்தை கட்டிமுடிந்து வருடக் கணக்காகியும் கட்டடம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை தமிழ்இ முஸ்லிம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவைத்து அவர்களிடையே பரஸ்பர சந்தேகத்தையும் பகையையும் ஏற்படுத்த முனைந்திருக்கும் உள்ளுர் சக்திகளுக்கு வெளிச் சக்திகள் உற்சாகமும் உதவியும் அளித்தால் எப்படி இருக்கும்? வன்செயல்கள் ஓயுமா? சமாதானம் ஏற்படுமா? சமூக ஒற்றுமை மலருமா? நல்வாழ்வு கிட்டுமா? அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.

நன்றி: உதயன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)