11-09-2004, 04:35 PM
<b>சமாதானமும் தமிழ் ஊடகங்களும் - ஈரூடக தன்மை</b>
<i>நிலாந்தன் </i>
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
இப்பந்தியின் வாசகரும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த வரும் இப்பொழுது வர்த்தருமான ஒருவர் என்னிடம் கேட்டார்? ?ஏன் எப்பொழுதும் சமாதானத்தைப் பற்றியே எழுதிவருகிறீர்கள்?? என்று.
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
முன்பு, யுத்தம் செய்த நாட்களில் சாகித்திய விருது, ஆளுனர் விருது போன்ற விருதுகளை நிராகரிக்கும் ஒரு போக்கே தமிழ்படைப்பாளிகள் மத்தியில் காணப்பட்டது. இந்தவிருதுகளை நிராகரிப்பது என்பது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப் பொழுது இத்தகைய விருதுகளைப் பெறுவது தவறிவல்லை என்பதான ஒரு சிந்தனை காணப்படுகின்றது. ஏன் என்று கேட்டால் ?இப்பொழுது சமாதான காலம்தானே எனவே மேற்படி விருதுகளைப் பெறுவதில் தவறென்ன?? என்ற தொனிப்பட பதில் வருகிறது.
அதாவது நிலவும் சமாதானத்தைப்பற்றிய ஒரு தெளிவான தரிசனம் தமிழ் படைப்பாளிகள் பலரிடமும் இல்லை. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த ஹீரு கலைக் கூடத்திலும் இது தெரிந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கூடிவாழ்ந்த ஒரு பொற்காலத்தைப்? பற்றிச் சில தமிழ் படைப்பாளிகள் அங்கே உரையாற்றியதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
படைப்பாளிகளின் கதியே இதுவென்றால் சாதாரண சனங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
இதற்கெல்லாம் காரணம் இம்முறை யுத்தநிறுத்தம் அசாதாரணமாக நூதனமாக நீடித்து நிற்பதே. அதிலும் குறிப்பாக அது ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதலையும் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் தாங்கி முறியாது ஜீவித்திருப்பதே. ஒப்பீட்டளவில் இது ஒரு பலமான சமாதானம் தான். இதுதான் சமாதானத்தைப் பற்றிய சரியான ஒரு சித்திரத்தை பெறுவதிலிருந்து கணிசமான அளவு சாதாரண தமிழர்களையும் ஏன் சில ஊடகவியலாளர்களையும் கூட தடுக்கிறது எனலாம். இது காரணமாகவே சமாதானத்தைப்பற்றி சாதாரண மக்களிடம் உள்ள பொதுவான சித்திரம் கலங்கலானதாகக் காணப்படுகின்றது.
இக்கலங்கலான சித்திரத்தை தெளிய வைப்பதில் தமிழ் ஊடகங்கள் எவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெற்றிருக்கின்றன? அல்லது பொறுப்போடு நடந்திருக்கின்றன?
இக்கேள்விகளுக்கு விடைகாண்பது என்றால் முதலில் தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை எப்படி அணுகுகின்றன என்பதனைப்பார்க்க வேண்டும்.
<b>இது விசயத்தில் பொதுவாக இரண்டு பலமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது, சமாதானத்தை ஒரு விறுவிறுப்பான செய்தியாக மட்டும் பாவிப்பது. இதன் மூலம் ஒரு சந்தர்பத்தில் சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கைகள் உயர்ந்து கொண்டுபோகும். இன்னொரு சந்தர்பத்தில் இந்த நம்பிக்கைகள் சோர்ந்து விழும், இது சாதாரண வாசகர்களை எப்பொழுதும் திகில் நிறைந்த காத்திருப்போடு ஊசலாடும் ஒரு நிலையில் வைத்திருப்பதோடு அவர்களை முடிவெடுக்கும் சக்தியற்றவர்களாக செய்திகளின் பின்னோடிகளாக மாற்றி விடுகின்றது. </b>
<b>இரண்டாவது, சமாதானத்தை விமர்சனபூர்வமாக அணுகும் ஒரு போக்கு இதன் படி இப்பொழுது நிலவுவது சமாதானமேயல்ல இது ஒரு யுத்த ஓய்வு மட்டுமே என்பதோடு இது இதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகக்கூடிய ஒரு களயதார்த்தம் கொழும்பிலும் இல்லை இந்த பிராந்தியத்திலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் இப்போக்குரியவர்கள் இந்த சமாதானத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.</b>
இந்த இரண்டு போக்குகளையும் மேலும் சிறிது விரிவாக பார்;பதன் மூலமே சமாதானத்துக்கான தமிழ் ஊடக தர்மம் எத்திசையில் செல்கிறது என்பதை சரியாக அடையாளம் காணமுடியும். எனவே இந்த இரண்டு போக்குகளையும் மேலும் ஆழமாகப் பார்ப்போம்.
முதலாவது போக்கின் படி, யாராவது வெளிநாட்டுத்தூதுவர்கள் வந்தால் அல்லது அரசாங்கம் ஏதாவது அறிக்கை விட்டால் அல்லது சந்திரிகாவோ அல்லது மங்கள சமரவீரவோ எதையாவது சொன்னால் அதை அண்ணாந்து பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு திருப்பம் வரப்போகின் என்று காத்திருப்பதும் பின்பு சிறிது காலம் செல்ல நம்பிக்கைகள் தளரும் போது முன்பு எழுதியதிற்கு மாறாக எழுதுவதும் பிறகு சிறிதுகாலம் செல்ல மறுபடியும் அறிக்கைகள் தூதுவர்களின் பின் இழுபடுவதுமாக வாசகர்கள் நப்பாசைகளுடன் வைத்திருக்கப்படுகின்றார்கள். சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் இந்தப்போக்கு காணப்படுகின்றது. குமார் ரூபசிங்க ஜெகன்பெரேரா போன்றோர் இந்தகைய ஒரு போக்கையே பிரதிபலிக்கிறார்கள்.
இந்த ஊடக்காரர்கள் அல்லது விமர்சகர்கள் ஒன்றை நன்கு விளங்கி வைத்திருக்கிறாhர்கள். அதாவது சனங்கள் யுத்தமற்ற ஒரு சூழலை விரும்புகின்றார்கள் என்பது. எனவே சமாதானத்தின் மீதான நம்பிக்கைகளை அவற்றின் விறுவிறுப்புக்கெடாமல் வைத்திருப்பது இவர்களின் வேலையாக இருக்கிறது. இது உண்மையில் சலிப்பூட்டும் ஒரு விசயமும் கூட. சொன்ன பொய்களையே திரும்பத் திரும் வேறுவிதமாக சொல்வதைப் போன்றது இது. வாசகர்களின் ஞாபகமறதிதான் இந்தப் போக்கின் பிரதான முதலீடு சில பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொகுத்துபார்த்தால் இதுதெரிய வரும். அங்கே சூடான செய்திக்கு முக்கியத்துவம் தருவது என்ற வணிகக் கோட்பாட்டுக்கும் அப்பால் வேறு எந்த ஆழமான கொள்கைகளும் இருப்பதில்லை.
இனி இரண்டாவது போக்கை பார்ப்போம். இதில் விவகாரங்கள் நிகழ்காலத்திற்குரியவைகளாய் மட்டும் அணுகப்படுவதில்லை. அவை அவற்றுக்கேயான வராலாற்றுப் போக்கில் வைத்து விளங்கிக் கொள்ளப்படுவதோடு அந்த வரலாற்று அனுபவங்களின் படி விமர்சிக்கவும் படுகின்றன.
இதன்படி இப்பொழுது நிலவும் சமாதான முயற்சிகளை குறித்து அநேகமாக எதிர்மறையான கருத்துக்களை வைக்கும் ஒரு போக்கு இது சிங்களத்தலைவர்களை நம்ப முடியாது; அவர்கள் என்றைக்குமே திருந்தமாட்டார்கள்; எனவே இந்த சமாதான முயற்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளரப்போவதில்லை போன்ற கருத்துக்களை நிறுவுவதன் மூலம் சமாதானம் எனப்படுவது ஒரு மாயையே தவிர வேறு ஒன்றுமில்லை என்ற சித்திரத்தை உருவாக்க இப்போக்கு முயல்கின்றது.
ஆனால், இப்படி சமாதானத்தை விமர்சிப்பது அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியின்படி ஒரு கட்டத்தில் யுத்தத்திற்கு கிட்டப்போய் நிற்கிறது. அதாவது இழுபட்டுச் செல்லும் இந்த சமாதானத்தை விடவும் யுத்தம் பரவாயில்லை ? என்று கேட்கத் தோன்றும். இது போன்ற சில கேள்விகள் அண்மையில் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் வந்திருந்தன. வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் எழுதிய ஒரு பந்தியின் மீதே தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு சிவராம் கடந்த ஞாயிற்க்கிழமை வீரகேசரியில் பதில் கூறியிருந்தார். இந்த இரண்டாவது போக்கில் உள்ள பிரச்சனையே இதுதான். இந்த சமாதானம் பொய் என்றால் யுத்தத்தை ஏன் தொடங்கக் கூடாது? என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
முதலாவது போக்கின் படி சாதாரண சனங்களை கையாலாகத சமாதானத்தின் செயலற்ற பார்வையார்களாகக் காத்திருக்க வைப்பதை விடவும் இரண்டாவது போக்ன்ன படி அவர்களை என்றைக்கோ ஒரு நாள் வெடித்தெழுப்போகும் ஒரு யுத்தத்தை நோக்கி தயார்படுத்தி வைத்திருப்பதே சரி என்று கூறுகிறார்கள், மேற்படி இரண்டாவது போக்குக்குரியவர்கள்.
<b>ஆனால், சாதாண சனங்களோவெனின் இந்த இரண்டு போக்குகளுக்குமிடையே கிழி பட்டுக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது. போல தோன்றிய சுமார் மூன்று தாசாப்தங்களைக் கடந்து வந்த மக்கள் இவர்கள். கடந்த முப்பது ஆண்டுகால அனுபவம் மட்டுமே அவர்களுக்குப்போதும். வேறு எந்த அரசியல் விளக்க கூட்டங்களோ அல்லது அரசியல் வகுப்புக்களோ தேவையில்லை. சமாதானத்தின் உள்ளுடனை அல்லது சமாதானத்தின் சூத்திரக்கயிறுகளை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள் இல்வைலயோ அதன் நிச்சயமற்ற தன்மையை கண்டுபிடிப்பது அவர்களுக்கு பெரியவேலையில்லை.</b>
இந்த சமாதானம் நிலைக்காது என்று அவர்களுக்கு தெரிகிறது. ஆனால், அது புத்திநிலைப்பட்ட ஒரு விளக்கம் மட்டுமே. அதே சமயம் மனமோ யுத்தமற்ற ஒரு சூழலைத்தான் விரும்புகிறது. கடந்த முப்பது ஆண்டுகால யுத்தக்களைதீர இந்த முப்பது மாதகால சமாதானம் போதுமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், விருப்பத்திற்கும் புத்திபூர்வ விளக்கத்திற்கும் இடையில் சனங்கள் கிழி படுகிறார்கள் என்பதே மெய்நிலை. சனங்களிடம் உள்ள இந்த ஈரூடக நிலையைத்தான் தமிழ் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. ஒன்றில் சமாதானத்தை குருட்டுத்தனமாக விசுவாசிக்க வேண்டும். அல்லது அதை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் யுத்தத்தை தவிர வேறு தெரிவு இல்லை என்று நிறுவவேண்டும். கட்சிசார்ந்த ஊடகங்கள் அல்லது தீர்மானம் எடுக்கும் தரப்பினரின் உணர்வலைகளை பிரதிபலிக்கும் ஊடகங்கள் இது விசயத்தில் திட்டவட்டமான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். மாறாக, இவையல்லாத வேறு ஊடகங்கள் ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டையே எடுக்கின்றன. அதாவது அவை சாதாரண சனங்களின் ஈரூடக நிலையையே அதிகம் பிரதிபலிக்கின்றன.
நிலவும் ஒப்பீட்டளவில் மிக நீண்ட யுத்த நிறுத்தம் இந்த ஈரூடகத் தன்மையை மேலும் பேணி வைத்திருக்கிறதே தவிர குறைக்கவில்லை. அக்காசி வந்தென்ன , பீற்றசன் வந்தென்ன ஆர்மிரேஜ் வந்தென்ன இந்த ஈரூடக நிலை பெரியளவில் மாறப்போவதில்லை. ஏனெனில், யுத்தத்தை ஒத்திவைப்பதுதான் சமாதானம் என்ற ஒரு நிலை உள்ள வரை நாட்டின் அரசியலானது ஈரூடக தன்மை பொருந்தியதாகக் காணப்படுவதே இயல்பு.
நன்றி சூரியன் இணையம்
<i>நிலாந்தன் </i>
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
இப்பந்தியின் வாசகரும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த வரும் இப்பொழுது வர்த்தருமான ஒருவர் என்னிடம் கேட்டார்? ?ஏன் எப்பொழுதும் சமாதானத்தைப் பற்றியே எழுதிவருகிறீர்கள்?? என்று.
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
முன்பு, யுத்தம் செய்த நாட்களில் சாகித்திய விருது, ஆளுனர் விருது போன்ற விருதுகளை நிராகரிக்கும் ஒரு போக்கே தமிழ்படைப்பாளிகள் மத்தியில் காணப்பட்டது. இந்தவிருதுகளை நிராகரிப்பது என்பது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப் பொழுது இத்தகைய விருதுகளைப் பெறுவது தவறிவல்லை என்பதான ஒரு சிந்தனை காணப்படுகின்றது. ஏன் என்று கேட்டால் ?இப்பொழுது சமாதான காலம்தானே எனவே மேற்படி விருதுகளைப் பெறுவதில் தவறென்ன?? என்ற தொனிப்பட பதில் வருகிறது.
அதாவது நிலவும் சமாதானத்தைப்பற்றிய ஒரு தெளிவான தரிசனம் தமிழ் படைப்பாளிகள் பலரிடமும் இல்லை. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த ஹீரு கலைக் கூடத்திலும் இது தெரிந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கூடிவாழ்ந்த ஒரு பொற்காலத்தைப்? பற்றிச் சில தமிழ் படைப்பாளிகள் அங்கே உரையாற்றியதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
படைப்பாளிகளின் கதியே இதுவென்றால் சாதாரண சனங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
இதற்கெல்லாம் காரணம் இம்முறை யுத்தநிறுத்தம் அசாதாரணமாக நூதனமாக நீடித்து நிற்பதே. அதிலும் குறிப்பாக அது ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதலையும் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் தாங்கி முறியாது ஜீவித்திருப்பதே. ஒப்பீட்டளவில் இது ஒரு பலமான சமாதானம் தான். இதுதான் சமாதானத்தைப் பற்றிய சரியான ஒரு சித்திரத்தை பெறுவதிலிருந்து கணிசமான அளவு சாதாரண தமிழர்களையும் ஏன் சில ஊடகவியலாளர்களையும் கூட தடுக்கிறது எனலாம். இது காரணமாகவே சமாதானத்தைப்பற்றி சாதாரண மக்களிடம் உள்ள பொதுவான சித்திரம் கலங்கலானதாகக் காணப்படுகின்றது.
இக்கலங்கலான சித்திரத்தை தெளிய வைப்பதில் தமிழ் ஊடகங்கள் எவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெற்றிருக்கின்றன? அல்லது பொறுப்போடு நடந்திருக்கின்றன?
இக்கேள்விகளுக்கு விடைகாண்பது என்றால் முதலில் தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை எப்படி அணுகுகின்றன என்பதனைப்பார்க்க வேண்டும்.
<b>இது விசயத்தில் பொதுவாக இரண்டு பலமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது, சமாதானத்தை ஒரு விறுவிறுப்பான செய்தியாக மட்டும் பாவிப்பது. இதன் மூலம் ஒரு சந்தர்பத்தில் சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கைகள் உயர்ந்து கொண்டுபோகும். இன்னொரு சந்தர்பத்தில் இந்த நம்பிக்கைகள் சோர்ந்து விழும், இது சாதாரண வாசகர்களை எப்பொழுதும் திகில் நிறைந்த காத்திருப்போடு ஊசலாடும் ஒரு நிலையில் வைத்திருப்பதோடு அவர்களை முடிவெடுக்கும் சக்தியற்றவர்களாக செய்திகளின் பின்னோடிகளாக மாற்றி விடுகின்றது. </b>
<b>இரண்டாவது, சமாதானத்தை விமர்சனபூர்வமாக அணுகும் ஒரு போக்கு இதன் படி இப்பொழுது நிலவுவது சமாதானமேயல்ல இது ஒரு யுத்த ஓய்வு மட்டுமே என்பதோடு இது இதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகக்கூடிய ஒரு களயதார்த்தம் கொழும்பிலும் இல்லை இந்த பிராந்தியத்திலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் இப்போக்குரியவர்கள் இந்த சமாதானத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.</b>
இந்த இரண்டு போக்குகளையும் மேலும் சிறிது விரிவாக பார்;பதன் மூலமே சமாதானத்துக்கான தமிழ் ஊடக தர்மம் எத்திசையில் செல்கிறது என்பதை சரியாக அடையாளம் காணமுடியும். எனவே இந்த இரண்டு போக்குகளையும் மேலும் ஆழமாகப் பார்ப்போம்.
முதலாவது போக்கின் படி, யாராவது வெளிநாட்டுத்தூதுவர்கள் வந்தால் அல்லது அரசாங்கம் ஏதாவது அறிக்கை விட்டால் அல்லது சந்திரிகாவோ அல்லது மங்கள சமரவீரவோ எதையாவது சொன்னால் அதை அண்ணாந்து பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு திருப்பம் வரப்போகின் என்று காத்திருப்பதும் பின்பு சிறிது காலம் செல்ல நம்பிக்கைகள் தளரும் போது முன்பு எழுதியதிற்கு மாறாக எழுதுவதும் பிறகு சிறிதுகாலம் செல்ல மறுபடியும் அறிக்கைகள் தூதுவர்களின் பின் இழுபடுவதுமாக வாசகர்கள் நப்பாசைகளுடன் வைத்திருக்கப்படுகின்றார்கள். சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் இந்தப்போக்கு காணப்படுகின்றது. குமார் ரூபசிங்க ஜெகன்பெரேரா போன்றோர் இந்தகைய ஒரு போக்கையே பிரதிபலிக்கிறார்கள்.
இந்த ஊடக்காரர்கள் அல்லது விமர்சகர்கள் ஒன்றை நன்கு விளங்கி வைத்திருக்கிறாhர்கள். அதாவது சனங்கள் யுத்தமற்ற ஒரு சூழலை விரும்புகின்றார்கள் என்பது. எனவே சமாதானத்தின் மீதான நம்பிக்கைகளை அவற்றின் விறுவிறுப்புக்கெடாமல் வைத்திருப்பது இவர்களின் வேலையாக இருக்கிறது. இது உண்மையில் சலிப்பூட்டும் ஒரு விசயமும் கூட. சொன்ன பொய்களையே திரும்பத் திரும் வேறுவிதமாக சொல்வதைப் போன்றது இது. வாசகர்களின் ஞாபகமறதிதான் இந்தப் போக்கின் பிரதான முதலீடு சில பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொகுத்துபார்த்தால் இதுதெரிய வரும். அங்கே சூடான செய்திக்கு முக்கியத்துவம் தருவது என்ற வணிகக் கோட்பாட்டுக்கும் அப்பால் வேறு எந்த ஆழமான கொள்கைகளும் இருப்பதில்லை.
இனி இரண்டாவது போக்கை பார்ப்போம். இதில் விவகாரங்கள் நிகழ்காலத்திற்குரியவைகளாய் மட்டும் அணுகப்படுவதில்லை. அவை அவற்றுக்கேயான வராலாற்றுப் போக்கில் வைத்து விளங்கிக் கொள்ளப்படுவதோடு அந்த வரலாற்று அனுபவங்களின் படி விமர்சிக்கவும் படுகின்றன.
இதன்படி இப்பொழுது நிலவும் சமாதான முயற்சிகளை குறித்து அநேகமாக எதிர்மறையான கருத்துக்களை வைக்கும் ஒரு போக்கு இது சிங்களத்தலைவர்களை நம்ப முடியாது; அவர்கள் என்றைக்குமே திருந்தமாட்டார்கள்; எனவே இந்த சமாதான முயற்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளரப்போவதில்லை போன்ற கருத்துக்களை நிறுவுவதன் மூலம் சமாதானம் எனப்படுவது ஒரு மாயையே தவிர வேறு ஒன்றுமில்லை என்ற சித்திரத்தை உருவாக்க இப்போக்கு முயல்கின்றது.
ஆனால், இப்படி சமாதானத்தை விமர்சிப்பது அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியின்படி ஒரு கட்டத்தில் யுத்தத்திற்கு கிட்டப்போய் நிற்கிறது. அதாவது இழுபட்டுச் செல்லும் இந்த சமாதானத்தை விடவும் யுத்தம் பரவாயில்லை ? என்று கேட்கத் தோன்றும். இது போன்ற சில கேள்விகள் அண்மையில் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் வந்திருந்தன. வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் எழுதிய ஒரு பந்தியின் மீதே தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு சிவராம் கடந்த ஞாயிற்க்கிழமை வீரகேசரியில் பதில் கூறியிருந்தார். இந்த இரண்டாவது போக்கில் உள்ள பிரச்சனையே இதுதான். இந்த சமாதானம் பொய் என்றால் யுத்தத்தை ஏன் தொடங்கக் கூடாது? என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
முதலாவது போக்கின் படி சாதாரண சனங்களை கையாலாகத சமாதானத்தின் செயலற்ற பார்வையார்களாகக் காத்திருக்க வைப்பதை விடவும் இரண்டாவது போக்ன்ன படி அவர்களை என்றைக்கோ ஒரு நாள் வெடித்தெழுப்போகும் ஒரு யுத்தத்தை நோக்கி தயார்படுத்தி வைத்திருப்பதே சரி என்று கூறுகிறார்கள், மேற்படி இரண்டாவது போக்குக்குரியவர்கள்.
<b>ஆனால், சாதாண சனங்களோவெனின் இந்த இரண்டு போக்குகளுக்குமிடையே கிழி பட்டுக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது. போல தோன்றிய சுமார் மூன்று தாசாப்தங்களைக் கடந்து வந்த மக்கள் இவர்கள். கடந்த முப்பது ஆண்டுகால அனுபவம் மட்டுமே அவர்களுக்குப்போதும். வேறு எந்த அரசியல் விளக்க கூட்டங்களோ அல்லது அரசியல் வகுப்புக்களோ தேவையில்லை. சமாதானத்தின் உள்ளுடனை அல்லது சமாதானத்தின் சூத்திரக்கயிறுகளை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள் இல்வைலயோ அதன் நிச்சயமற்ற தன்மையை கண்டுபிடிப்பது அவர்களுக்கு பெரியவேலையில்லை.</b>
இந்த சமாதானம் நிலைக்காது என்று அவர்களுக்கு தெரிகிறது. ஆனால், அது புத்திநிலைப்பட்ட ஒரு விளக்கம் மட்டுமே. அதே சமயம் மனமோ யுத்தமற்ற ஒரு சூழலைத்தான் விரும்புகிறது. கடந்த முப்பது ஆண்டுகால யுத்தக்களைதீர இந்த முப்பது மாதகால சமாதானம் போதுமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், விருப்பத்திற்கும் புத்திபூர்வ விளக்கத்திற்கும் இடையில் சனங்கள் கிழி படுகிறார்கள் என்பதே மெய்நிலை. சனங்களிடம் உள்ள இந்த ஈரூடக நிலையைத்தான் தமிழ் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. ஒன்றில் சமாதானத்தை குருட்டுத்தனமாக விசுவாசிக்க வேண்டும். அல்லது அதை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் யுத்தத்தை தவிர வேறு தெரிவு இல்லை என்று நிறுவவேண்டும். கட்சிசார்ந்த ஊடகங்கள் அல்லது தீர்மானம் எடுக்கும் தரப்பினரின் உணர்வலைகளை பிரதிபலிக்கும் ஊடகங்கள் இது விசயத்தில் திட்டவட்டமான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். மாறாக, இவையல்லாத வேறு ஊடகங்கள் ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டையே எடுக்கின்றன. அதாவது அவை சாதாரண சனங்களின் ஈரூடக நிலையையே அதிகம் பிரதிபலிக்கின்றன.
நிலவும் ஒப்பீட்டளவில் மிக நீண்ட யுத்த நிறுத்தம் இந்த ஈரூடகத் தன்மையை மேலும் பேணி வைத்திருக்கிறதே தவிர குறைக்கவில்லை. அக்காசி வந்தென்ன , பீற்றசன் வந்தென்ன ஆர்மிரேஜ் வந்தென்ன இந்த ஈரூடக நிலை பெரியளவில் மாறப்போவதில்லை. ஏனெனில், யுத்தத்தை ஒத்திவைப்பதுதான் சமாதானம் என்ற ஒரு நிலை உள்ள வரை நாட்டின் அரசியலானது ஈரூடக தன்மை பொருந்தியதாகக் காணப்படுவதே இயல்பு.
நன்றி சூரியன் இணையம்

