Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகள் கைது தொடர்பாக விசாரணை: ஹக்ரூப் ஹொக்லெண்ட்
#1
<b>விடுதலைப் புலிகள் கைது தொடர்பாக விசாரணை: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </b>

[சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 00:01 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகள் 5 பேரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஹொக்ரூப் ஹொக்லெண்ட் மேலும் கூறினார்.

சிறிலங்கா இராணுவத்தினரே விடுதலைப் புலிகள் 5 பேரை கைது செய்தனர் என்பதற்கான சாட்சியங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சி. எழிலன் கூறியிருந்தார்.

இருப்பினும் வழமை போல் சிறிலங்கா இராணுவத் தரப்பு இச்சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.



ஆதாரம் புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)