Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுராதா ரமணன் பரபரப்பான புகார
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20041130/kpm.jpg' border='0' alt='user posted image'>

சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது
ஜெயேந்திரர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார்
பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பு புகார்


சென்னை, நவ. 30-

``சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்" என்று பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பான புகாரை கூறியிருக்கிறார்.

அறிக்கை

பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று திடீரென்று சென்னை திருவான்மிïரில் உள்ள தனது வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர் 6 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அநëத அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடந்தது என்ன?

உங்கள் சகோதரியிடமிருந்து சில உண்மை வார்த்தைகள்:

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பத்திரிகையாள, தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கம்.

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் கைதான தினத்திலிருந்து அவரைப் பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளில் ஒன்றிரண்டில் என் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. `நடந்தது என்ன' என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களும், என் மீது அன்பு வைத்திருக்கும் பலரும் கேட்டு வருகிறார்கள்.

வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து வந்திருக்கும் நான் இப்பொழுது தேவையற்ற பரபரப்புகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், என்னைப் பற்றிய செய்திகளை நானே சொல்லாமல், ஆளாளுக்கு நினைத்தபடி எழுதுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ப தாலேயே உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.

உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். `அனுராதா ரமணன்' என்கிற தனிப்பட்ட நபராக என்னைப் பார்க்காமல், உங்கள் சகோதரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளாகவே இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சங்கரமடம் அழைப்பு

1992-ம் வருடம் சுபமங்களா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து விலகி, `வளை யோசை' என்ற சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம் சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகவும் அழைப்பு வந்தது.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். `கடவுளே அழைத்திருக்கிறார்' என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். என்னை அழைத்துப்போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தாள். அவளுடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனாள்.

முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் `அம்மா' என்ற ஆன்மீகப் பத்திரிகை பற்றி விவரித்து, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் சொன்னார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பத்திரிகை தொடர்பாக ஜெயேந்திரருடன் பேச ஒவ்வொரு முறையும் அந்த பெண்மணியே என்னைத் தன் காரில் காஞ்சிக்கு அழைத்துப் போவாள். பத்திரிகை தொடர்பாக முழுமையான ஈடுபாட்டுடன் பல யோசனைகளை நான் முன்வைத்தேன்.

மதிய நேரம்

பக்தர்களை சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய்வெடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறையும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில், காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலையில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயிருப்பார்கள். மற்றபடி நான், என்னை அழைத்துப் போகும் பெண்மணி, ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும் போது, யாருடைய இடைïறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடுவதும் உண்டு.

முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப் பற்றியே இருந்த ஜெயேந்திரரின் பேச்சு திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் மேலும் அதிர்ச்சி, என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும், அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு புயலால் தாக்கப்பட்டவள் போல் நிலை குலைந்து போனேன்.

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவது போல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப் பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதிர்ச்சி

ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க, பதறி எழுந்தேன். `ச்சீ, நீ ஒரு மனுஷனா?' என்று கத்தினேன். `இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம்' என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினாள். `வழக்கம் போல இவகிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே?' என்று அவர் அந்த பெண்ணிடம் கேட்டு `இல்லை' என்று அவள் சொன்னதால் அதிர்ந்தார். அவளைப் பலவாறு திட்டினார்.

உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டேன். அந்த பெண் என்னைவிட வலுவானவள். தடுத்து நிறுத்தினாள்.

`இதோ பார், சம்மதித்தால், உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம், சுற்றி இருப்பவர்கள் என் மனிதர்கள் கணவனை இழந்த பின்னும், பொட்டும், அலங்காரமுமாக சுற்றிக் கொண்டிருப்பவள் நீ. என்னைப் பற்றி வெளியே நீ சொன்னால், உன்னுடன் தொடர்பு வைத்திருப்பதாக பத்து ஆண்களை உனக்கெதிராக சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது' என்று ஜெயேந்திரர் சொல்ல, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். அந்த பெண் என் பின்னாலேயே வந்து சமாதானம் செய்ய முற்பட்டாள்.

அழுகை

உள்ளே இருக்கும் மனிதரின் உண்மையான முகம் தெரியாமல், வெளியே காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களைப் பார்த்ததும், அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அந்தப் பெண்ணிடம் பேசக்கூடப் பிரியப்படாமல், அவள் காரைத் தவிர்த்து, பஸ் பிடித்து சென்னை திரும்பினேன்.

வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அன்றிரவு தூக்கம் போனது. பெண் எழுத்தாளராக இருந்து கொண்டு, பெண்களைக் கேவலப்படுத்தும் மனிதர்களைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைப்பதா என்று தவிப்பு ஒரு பக்கம், இந்த உண்மை வெளிப்பட்டால், ஒரு தனி மனிதனின் கேவலமான நடவடிக்கைகளால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிகச்சிறந்த பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தின் மேன்மையே குலைந்து, நாட்டிலேயே பெரும் கலவரம்மூள நான் காரணமாகி விடுவேனோ என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று மனதில் போராட்டம்.

மறுநாளே அந்தப் பெண் என் வீடு தேடி வந்தாள். வாய்க்கு வந்தபடி கத்தினாள். என்னைக் கன்னத்தில் அறைந்து என் பெற்றோரையும் தாக்கினாள்.

அடிபட்டு பொறி கலங்கிப்போன நான், உடனடியாக எனக்கு சிநேகிதியாக விளங்கிய ஒரு பெரிய பெண் போலீஸ் அதிகாரியை சந்தித்து உடைந்து அழுதேன். நடந்தவற்றைக் கூறினேன். துடித்துப் போனார். `எழுத்துப் பூர்வமாக புகார் கொடு. உடனடியாக சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன்' என்று ஆதரவாகச் சொன்னார்.

ஆனால், என் பெற்றோரைப் போலவே கோடிக்கணக்கானவர்கள் மதிக்கும் சங்கர மடத்தின் கவுரவத்தையே பாதிக்குமே என்று புகார் கொடுக்கத் தயங்கினேன். போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். உடல் ரீதியாக அடிபட்டதிலும், மன ரீதியாக பெரும் கொந்தளிப்பிற்கு ஆளானதிலும், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கேயே செயலிழந்து விழுந்தேன். உடனடியாக ஒரு வாகனம் வரவழைத்து என்னை போலீஸ் அதிகாரியான அந்த சிநேகிதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பக்கவாதம்

என் இடது கால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு விட்ட தாக மருத்துவர்கள் சொல்லி சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தனர். தனிமையில் என் அம்மா வின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உண்மைகளை அவளிடமும் சொன்னேன். மிகுந்த அதிர்ச்சிக் குள்ளானாள். பொங்கி அழுதாள்.

கிட்டத்தட்ட அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் எழுத முடியாதபடி என் உடல் நிலை மோசமாகவே இருந்தது.

இதற்கிடையில் ஜெயேந்திரரிடமிருந்து மறுபடி மிரட்டலும், கேட்கும் பணம் தருவதாக பேரங்களும் தொடர்ந்தன. எதையும் நான் பொருட்படுத்தவில்லை.

ஜெயேந்திரர் கைப்பட எழுதியதாக ஒரு மன்னிப்புக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டிய அவருடைய உதவியாளர் அதைக் கையோடு வாங்கிப் போய் விட்ட சம்பவமும் நடந்தது.

மன்னிப்பு

என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க விரும்புவதாக ஜெயேந்திரரிடமிருந்து மீண்டும் மீண்டும் தூது வர, மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் என் நெருங்கிய உறவினர் துணை வர சென்னையில் தங்கியிருந்த ஜெயேந்திரரை சந்திக்க சம்மதித்தேன்.

என்னை சந்தித்ததும், "போதாத காலம். என் புத்தி பிசகி விட்டது. மன்னித்து விடு. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஜெயேந்திரர் கேட்டார்.

"காவியைத் துறந்துவிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பதவியிலிருந்து இறங்கி சாதாரண மனிதராக வெளி நடப்பு செய்யுங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார்" என்றேன்.

ஆனால், என் காதுபட அங்கே வந்திருந்த வேறொரு வி.ஐ.பி. பெண்ணை வர்ணித்து அவர் தரக்குறைவாக பேசியதும் கொதித்துப் போனது மனது.

உண்மைத் தொடர்

ஜெயேந்திரர் துறவிக் கோலத்தைத் துறக்கவில்லை. எத்த னையோ அப்பாவிக் குடும்பங்களும், குறிப்பாய்ப் பெண்களும் ஜெயேந்திரர் போன்றவர்களின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்ளாமல், ஆபத்திற்குள்ளாவதைத் தடுக்கும் பொறுப்பு எனக்கிருப்பதாக உள் மனம் அரித்துக் கொண்டேயிருந்ததால், மிகுந்த யோசனைக்குப் பிறகு, ஒரு பத்திரிகையில் என் பெயரைச் சொல்லாமல் ஒரு உண்மைத் தொடர் எழுதத் துவங்கினேன். ஜெயேந்திரருக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அத்தொடர் முழுமையாக வெளிவரும் முன், நிறுத்தப்பட்டது.

சமூகத்தில் எனக்கு அவரால் தொடர்ந்து பல இன்னல்கள் இழைக்கப்பட்டன. என் உயிருக்கே ஆபத்து வரும் என்று மிரட்டல்கள் வந்தன. என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சில பெரிய மனிதர்களின் நல்லெண்ணத்தால்தான் நான் உயிர் பிழைத்திருந்தேன் என்று கூட சொல்வேன். அவர்களுக்கு என்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

என் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் வரையிலாவது உயிர் பிழைத்திருக்க வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் வாழ்ந்திருந்தேன்.

பக்குவப்பட்டது

யோக வகுப்புகளுக்குப் போய் வந்து என் மனம் மேலும் பக்குவப்பட்ட ஒரு கட்டத்தில், ஜெயேந்திரர் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல, சாதாரண மனிதன் தானே என்று, அந்த தனி மனிதனை மன்னித்து மறக்கும் நிலையை ஏற்றேன்.

பெண்களுக்கு துணையிருக்க வேண்டிய பெண் தெய்வங்களே ஸ்ரீ ஜெயேந்திரரைப் போன்றவர்களின் அநியாயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா என்று கோவில்களில் குமுறி அழுதிருக்கிறேன். தெய்வங்கள் இப்போது ஜெயேந்திரரை வேறு வழியில் பொதுவிற்கு கொண்டு வந்திருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு எதிராக எதையும் சொல்லி விடாதே என்ற மிரட்டல்கள் ஒரு புறம், உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் என்று வற்புறுத்தல்கள் ஒருபுறம்.

மறுபடியும் சொல்கிறேன். இந்த மேடையை ஜெயேந்திர ருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன்படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந்தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர் பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர் மீது வழக்கு தொடரவில்லை.

தவறான தகவல்கள்

எதைப்பற்றியும், சொல்லாமல், அமைதியாக இருப்பதையே நான் விரும்பினேன், விரும்புகிறேன். ஆனால் ஜெயேந்திரருடன் என்னைத் தொடர்புபடுத்தி ïகங்களின் அடிப்படையில் தவறான தகவல்களை சில பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்ததால் இந்த தன்னிலை விளக்கத்தை நான் தர முடிவு செய்தேன்.

ஜெயேந்திரரையும், என்னை காஞ்சிக்கு அழைத்துப் போன பெண்ணையும் மேலும் இழிவுபடுத்தும் சில விவரங்களை நான் இங்கே முழுமையாக சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு உறுதியை மட்டும் என்னால் தர முடியும். நான் சொன்னவை அத்தனையும் பொய்க்கலப்பற்ற சத்திய வார்த்தைகள்.

உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அறிக்கையிலேயே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்டு துரத்தாதீர்கள். ஏற்கனவே மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்.

துணிச்சல்

என்னைப் போல பாதிப்புக்குள்ளாகி வெளியே சொல்ல முடியாத வேறு சில பெண்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களும் துணிச்சல் கொண்டு பிற்பாடு வெளியே வரக்கூடும்.

ஒரு தனிப்பட்ட மனிதரின் மோசமான அணுகுமுறை பற்றி நான் வெளிப்படையாக சொல்லியிருக்கிறேனே தவிர, நான் பெரிதும் மதிக்கிற காஞ்சி மடத்தையோ, இந்துக்களின் உணர்வுகளையோ அவமதிக்கும் எந்த நோக்கமும் சிறிதளவும் எனக்கு இல்லை.

பத்திரிகைகளையும் என்னையும் பிரித்து பார்க்க முடியாத படி, என் வாழ்வின் முக்கியத் திருப்பங்களில் எல்லாம் பத்திரிகைகள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இப்போதும் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாகவே என்னை நினைத்து மேற்கொண்டு என்னைப்பற்றிய அவ தூறுகளை எழுதாமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அனுராதா ரமணன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கண்ணீர்

இந்த அறிக்கையை முழுமையாக அனுராதா ரமணன் நிரு பர்கள் மத்தியில் வாசித்தார். அப்போது இடைஇடையே அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கொலை செய்ய முயற்சி

கேள்வி:- இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை?

பதில்:- சங்கரமடத்தின் கவுரவத்தை பாதிக்கும் என்று புகார் கொடுக்க தயங்கினேன். அதோடு தொடர்ந்து மிரட்டல்கள். என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் எனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன்.

அதோடு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு ஒரு கால், கை, வாய் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டேன். அங்கும் காஞ்சி மடத்து ஆட்கள் 2 பேர் வந்து என்னை தேடினார்கள்.

எனக்கு ``டிரிப்" ஏற்றப்பட்ட போது அதில் வேறு மருந்தை சேர்த்து கொடுத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதனால் அங்கு கொடுத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடவில்லை. சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும் மறுத்து விட்டு உடனடியாக அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி விட்டேன். என்மீது லாரியை ஏற்றவும், எனது மகள்கள் மீது ஆசிட் வீசவும் தயாராக இருந்தனர்.

போலீசில் வாக்குமூலம்

கேள்வி:- ஜெயேந்திரர் நடந்து கொண்டது பற்றி இப்போது போலீசில் புகார் செய்துள்ளீர்களா?

பதில்:- போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விஷயம் பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளேன். ஜெயேந்திரர் பற்றி தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளிவரும்.

யார் அந்த பெண்?

கேள்வி:- காஞ்சிக்கு ஜெயேந்திரரிடம் உங்களை அழைத்து சென்ற பெண் யார்?

பதில்:-அவரை பற்றி சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் கடவுள் தண்டனை உண்டு. நடந்த சம்பவத்துக்கு சாட்சி இல்லை. 4 சுவர்களுக்குள் நடந்தது பற்றி சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ஜெயேந்திரர் என்னிடம் கூறினார்.

இதை காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் சொல்லி கதறி அழுதேன். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைத்த பிறகு தான் உனக்கு அபிஷேகம், எனக்கு அலங்காரம் என்று சொல்லி விட்டு வந்தேன். 12 வருடங்களுக்கு பிறகு இப்போது உண்மை வெளிவந்துள்ளது. நான் சொன்னது அத்தனையும் சத்தியம்.

இவ்வாறு அனுராதாரமணன் கூறினார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

``ஜெயேந்திரர் மீது பாலியல் புகார் கூறியுள்ள அனுராதா ரமணன் எங்களது முழு ஆதரவை கேட்டுள்ளார். அவருடைய உயிருக்கும், உடமைக்கும் தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விïகம் அமைத்து செயல்படுவோம்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.

<img src='http://www.dailythanthi.com/images/news/20041130/anu.jpg' border='0' alt='user posted image'>[/img]
Reply
#2
இப்படி வெளியுலகத்துக்கு தெரியாமல் எத்தனை சுவாமிகள் இருக்கின்றனர்??? காமலீலைகளை அரங்கேற்ற கிடைத்த சுலபமான வழி எந்த சாமியார் வேடம், ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்,
தகவலுக்கு நன்றி ஆதிபன்
Reply
#3
குருக்கள் என்வோ செய்தால் குற்றமில்லையாம்.

ஆன்மீகம் எண்ட பெயரில் இந்து மதத்தில் இடைவெளியின்றி நடக்கும் சம்பவங்களில் இது ஒன்று மட்டுமே. இதைப் போல ஆயிரம் ஆயிரம் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள் ஆன்மீகத்தைப் போதிக்கும் புனிதர்களால் (?) நடாத்தப்பட்டுள்ளது. இவற்றைக் கணக்கிலெடுப்பது தெய்வக் குற்றம்.
<b>
?
- . - .</b>
Reply
#4
«Ãºý ±ù ÅÆ¢§Â¡ Áì¸Ùõ «ùÅÆ¢.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]

,,,,.
Reply
#5
முதலில் பாரத சமூகத்தில் தனக்கு நடந்த அநீதியை இப்பவாவது வெளியில் சொன்ன மனிதராக இந்தப் பெண்மணியை பாராட்ட வேண்டும்....!

அதேவேளை இவர் பெரிய எழுத்தாளர் என்பதற்காக இவர் இப்போ இந்த வேளையில் சொல்வதை உண்மை என்று உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை....காரணம் கெளரவத்துக்காக சுயபாதுகாப்புக்காக ஒரு பெரிய எழுத்தாளர் என்று காட்டிக்கொள்ளும் நபர் உண்மையை இவ்வளவு காலமும் மறைத்ததே தப்பு....!

இவர் உண்மையான சமூக நலன் உள்ளவராக இருந்திருந்தால் ஒரு சங்கரராமன் என்ற சாதாரண தனி மனிதனால் பாரத தேசம் மதித்த போலி மனிதனின் முகத்திரையை கிழிக்க முடிந்ததென்றால் ஏன் இவரால் இவ்வளவுகாலமும் கிழிக்க முடியவில்லை....????!

இவர்கள் போன்ற கெளரவத்துக்குப் பயந்த மனிதர்கள் எல்லாம் உண்மையான சமூக நலன் விரும்பிகளா...????! புரட்சிப் பெண்களா...இல்ல புரட்சிகர மனிதர்களா...அந்தச் சங்கரராமன் என்ற தனிமனிதன் தான் வாழ்ந்த சூழலின் புனிதம் கெடுகிறது என்று தெரிந்ததும் அதை வெளியிட எத்தனை கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து உயிரை விலை கொடுத்த பின்னரும் காலத்தின் நிர்ணயிப்பால் <b>ஜெயேந்தருக்கும் ஜெயலலிதாவுக்கும் தகராறு </b>வர வெளிவந்த உண்மைகளில் இவர்கள் குளிர்காய முற்படுவது ஒருவகையில் வருத்தமளிக்கிறது....!

இன்று ஏதோ ஒரு வகையில் நீதியின் சட்டத்தின் பிடிக்குள் சிக்கிய ஒரு கொடூர மனித விலங்கைப் பற்றி இவருக்கு இருந்த செல்வாக்கு எழுத்தாற்றல் கொண்டே ஒரு மறைமுகப் எழுத்துப் போரையே எப்பவோ நடத்தி இருக்கலாம்... அல்லது சங்கரராமன் போன்றோருடன் இணைந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கலாம்.... இவர் அப்படிச் செய்யாது உதுவரை காலமும் மெளனம் காத்து அநீதிக்கு துணை போயுள்ளார்....இவருக்குப் பின்னர் எத்தனை பேர் அந்தப் போலி மனிதனால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்...அல்லது அவர் சார்ந்தோரால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்....என்பதையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது...!

உண்மையில் இவர்களும் சந்தர்ப்பவாதிகளே அன்றி சமூகநலன்வாதிகள் அல்ல...! இவ்வளவு காலமும் கண் முன்னே பெண்களுக்கு எதிராக சமூகத்துக்கு எதிராக நடத்தவற்றை மூடி மறைத்த இவர்கள் பெண்ணிலைவாதிக்கும் தகுதி அற்றவர்கள்....! இந்தப் பேட்டியின் மூலம் இவரும் தனது பொய் முகத்தை வெளியில் காட்டியுள்ளார்...!அதற்காகவும் இவருக்கு நன்றி சொல்ல வேண்டும்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Sriramanan Wrote:குருக்கள் என்வோ செய்தால் குற்றமில்லையாம்.

ஆன்மீகம் எண்ட பெயரில் இந்து மதத்தில் இடைவெளியின்றி நடக்கும் சம்பவங்களில் இது ஒன்று மட்டுமே. இதைப் போல ஆயிரம் ஆயிரம் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள் ஆன்மீகத்தைப் போதிக்கும் புனிதர்களால் (?) நடாத்தப்பட்டுள்ளது. இவற்றைக் கணக்கிலெடுப்பது தெய்வக் குற்றம்.

ஏன் சிறீரமணன் கோயில்களில் மட்டுந்தானா இவை நடைபெறுகின்றன... பள்ளிவாசல்களிலும் விகாரைகளிலும் தேவாலயங்களிலும் ஏன் ஊருக்கு ஊர் வீடுகளிலும் தான் நடக்குது...வீட்டில் நடப்பது நாட்டில் நடப்பது அரச சபையில் நீதிச் சபையில் நடப்பது கோயில்களில் நடக்க என்ன நேரமா எடுக்கும்...???! இவை எல்லாம் நடக்க ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் இவை நடக்க வேண்டும்...!

மனிதனின் மனம் திருந்தினால் அல்லது அடக்கப்பட்டால் அன்றி இவ்வாறன அநீதிகளுக்கு நீதி கிடையாது...அப்படி அது விரைந்துகிடைக்க வேண்டும் என்றால் ஒரே வழி பயமுறுத்தி மனித மனத்தை அடக்க வேண்டியதுதான்...!

ஆன்மீக சொல்வது மனவடக்கம் பற்றி அதற்காக ஆன்மீகத்தில் தவறில்லை...அதை உச்சரித்துக் கொண்டு கடைப்பிடிக்கத் தவறுவதுதான் தவறு....ஆன்மீகப் பாதையில் தன்முன்னே அவளாய் நிர்வாணமாக நின்ற பருவப் பெண்ணை தாயினும் மேலாகக் கண்ட விவேகானந்தர் போன்ற இளைஞர்களையும் நீங்கள் பார்க்கத்த தவறக் கூடாது....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
மேலே ஆதீபன் தந்த செய்தியைத் தொடர்ந்து வரும் செய்திகள்... சமூகக் கொடூரங்களின் மூலம் எது அறிந்து கொள்ளுங்கள்....

<b>அனுராதாவை மடத்துக்கு அழைத்துச் சென்றது மைதிலி ராகவன்!?</b>

எழுத்தாளர் அனுராதா ரமணனை சங்கராச்சாரியாரிடம் கூட்டிச் சென்றது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மைதிலி ராகவன் தான் என்று தெரிய வருகிறது.

அவ்வப்போது சினிமாவில் துக்கடா ரோல்களில் நடித்து வரும் மைதிலி தான் அனுராதாவை அழைத்துக் கொண்டு மடத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு மைதிலியும் ஜெயேந்திரரும் அருகருகே நெருங்கி உட்கார்ந்து செய்த செய்கையைக் கண்டு அனுராதா அதிர்ந்து போயுள்ளார். அதன் பின்னர் தான் அனுராதாவிடமும் தகாக வார்த்தைகளைப் பேசிக் கொண்டு கையைப் பிடித்துள்ளார் ஜெயேந்திரர்.

மைதிலுக்கு சங்கர மடத்தில் பெரும் செல்வாக்கு இருந்து வந்துள்ளது. நினைத்த நேரத்தில் ஜெயேந்திரரை சந்திக்கும் அளவுக்கு நெருக்கம்.

சென்னை பெசன்ட் ரோடு சாரதி கோவில் அருகே வசிக்கும் மைதிலி, முன்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவருடன் மிக நெருக்கமாக இருந்தார். ஆனாலும் கட்சியில் சீட் ஏதும் வாங்கிக் கொடுக்காமல் கடைசி வரை மைதிலியை டபாய்த்துவிட்டார் அந்தப் பிரமுகர்.

இப்போது மைதிலி ராகவனிடம் போலீஸ் விசாரணை ஆரம்பித்துள்ளது. எந்தெந்த பெண்களை எல்லாம் சங்கர மடத்துக்கு தவறான காரணங்களுக்காக அழைத்துப் போனார் என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.

விசாரணையில் அவர் குறிப்பிட்டுள்ள சில பெயர்கள் போலீசாரையே தலை சுற்ற வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். விரைவில் இந்தப் பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறுகின்றனர்.

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்த சியாமளாவுக்கும் ஜெயேந்திரருக்கும் தவறான உறவு இருந்ததாகவும் போலீசார் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ஸ்ரீமயமான நடிகை, சுகந்த மணம் வீசும் நடிகை, 'மால்' நடிகை என பலரது பெயர்களும் மடத்தின் இருட்டுப் பக்கங்களுடன் இணைத்துச் சொல்லப்படுகின்றன.

நடிகைகள், பெண்கள் விஷயத்தில் கணவரிடமிருந்து பிரிந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் என்று பார்த்து வலை வீசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

வரும் தகவல்களைக் கேட்டால் காது கூசுகிறு..

that'stamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
குருவியாரே உங்களுடைய கருத்துக்களை நான் வரவேற்கிறேன். நான் நினைக்கிறேன் அனுராதா ரமணன் பத்தினித்தெய்வத்திடம் விலைபோய்விட்டதாக. இதற்காக அவவுக்கு எவ்வளவு பணம் கைமாறினதோ. காசுக்காக எழுத்தை விற்கிறவையிடம் நாங்கள் அதிகம் எதி÷பா÷க்கக்கூடாது. இன்னும் எத்தனை சம்பவங்களை பத்தினித்தெய்வம் உருவாக்கப்போகிறதோ.
Reply
#9
அனுராதா ரமணன் எனக்குபிடித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.ஆனால சில வேளைகளில் பெண்ணியம் பெண் விடுதலை சம்பந்தமான கருத்துகளில் த்ன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார். இவரும் எழுத்தாளர் பாலகுமாரனும் அடிக்கடி ராட்டுப்படுரவையள்.அவரற்கு உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.வாய்கிழிய(மன்னிக்கவும்)கைவலிக்க பெண்ணியம் பற்றி எழுதிறவர் சமுகத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த எழுத்தாளர்.பல மாதர் சங்க அமைப்புக்களுடன் தொடர்புடையவர்(தமிழ் நாட்டில்இப்பிடி சங்கங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு)தைரியமாக உடனேயே எதிர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.அதைவிட்டிட்டு இப்ப அறிக்கைவிடுவது சந்தேகமாகதான் இருக்கு(எந்த புத்திலை என்னபாம்பிருக்கோ யார்கண்டா???)அதுசரி உந்த சங்கராசாரிக்கு என்னவயசிருக்கும் இப்ப??யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்கோ பாத்தா வயசான மனுசன் மாதிரி தெரியிது செய்தியிலை அவற்றை சாப்பாடு கலையிலை கஞ்சி மத்தியானம் சில பழங்கள் இரவிலை இரண்டு சப்பாத்தி எண்டு எழுதினம் ஆனால் ஆடு:மாடு:கோழி எண்டு ஒரு பிடிபிடிக்கிற எனக்கே நாரி நோகுது
; ;
Reply
#10
ஆதீபன் நன்றிகள்.

ஆனால் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்ப சொல்லுவதில் அ÷த்தம் இல்லை.
இது ஒரு அரசியல் நாடகமாக எனக்குத்தென்படுகிறது.
<b> </b>
Reply
#11
செய்திகள் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு மாதிரியாக. ஒருசாரார் ஜெயேந்திரர் செய்திருப்பார் என்றும் மறுசாரார் ஜெயேந்திரர் செய்யாமலா அனுராதாரமணன் சொல்கிறார் என்றும்! எனவே தற்போதைக்கு நமக்கு நாமே னேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இணைய உலகிலும்கூட வெவ்வேறான கருத்துக்கள்.

எப்படி இருப்பினும் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்ற முடிவுக்கு தலைவணங்குதலே சரியாகும். தெய்வம் நின்று கொல்லும்!
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)