01-27-2005, 04:00 AM
August Sun
[size=14]August Sun (ஐரா மடியம்மா) பிரசன்னா வித்யநங்கேயின் இயக்கத்தில் வெளிவந்த ஐரா மடியம்மா எனும் சிங்களத் திரைப்படம் கனேடியத் திரையரங்கில் காண்பிக்கப் பட்டது.
1990இன் நடுப்பகுதியில் போரினால் பாதிக்கப் படும் மூன்று குடும்பங்களை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.ஒன்று முஸ்லீம் மக்கள் போராளிகளால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு அகற்றப்பட்ட போது அம்மக்களின் நிலையை காட்டி நின்றது. அதில் அரபாத் எனும் சிறுவனின் குடும்பம் முக்கியப் படுத்தப் பட்டு ஊரைவிட்டுச் செல்லும் போது boat இல் போக நேர்ந்ததால் தனது நாயை விட்டு அவன் பிரிந்து அழுதபடியே செல்கின்றான். ரூபா. 4,000 மட்டும் அனுமதிக்கப் பட்ட நிலையில் மக்கள் பணத்தை எப்படியெல்லாம் போராளிகளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றார்கள் என்பதும் காட்டப்பட்டது.அடுத்து ஒரு இளம் சிங்களப் பெண் தனது காணாமல் போன பைலட் கணவனை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக நம்பி கணவனைத் தேடும் முயற்சியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகச் சென்று கலந்துரையாட இருக்கிறார் என்று அறிந்து தனது கணவனை அவன் ஒருத்தனால் தான் கண்டுபிடித்துத் தர முடியும் என்று அவனிடம் மன்றாடித் தானும் அவனுடன் கணவனைக் கண்டு பிடித்து விடும் நம்பிக்கையில் கிளம்புகின்றாள்.அடுத்து வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு குடும்பத்தில் இளைஞன் பணத்திற்காக ஆமியில் சேர்கின்றான். அவன் தங்கை விபச்சாரியாகின்றாள். தங்கையை விபச்சார விடுதியில் கண்டு கலங்கி அவளுக்காக ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் தனது கடமையை அவன் உணர்ந்து கொள்கின்றான்.போர் சூழலால் பாதிக்கப்படும் மூன்று குடும்பங்களின் நிலை காட்டப்பாட்டாலும் இயக்குனர் பிரசன்னா தமிழ் மக்களை அப்புறப்படுத்தி சிங்கள முஸ்லீம்களுக்கு முக்கியத் துவம் கொடுத்திருப்பது சர்வதேச ரீதியில் திரையிடப்படும் திரைப்படம் என்பதால் பொருத்தமாக இல்லை.பைலட்டின் மனைவியாக வரும் நடிகை Nimmi Harasgama மிக அழகாக இருக்கின்றார். கணவனை இழந்த சோகம் அவர் முகத்தில் அதிகம் தெரியவில்லை. நிருபராக வந்த Peter D’Almeida சிறப்பாக நடித்துள்ளார். ஒரு அழகான இளம் பெண்ணோடு இரவு பகலாகப் பயணம் செய்யும் போது எழும் உணர்வுகளை மிக யதார்த்தமாக தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். இறுதியில் அவர்களைச் சந்திப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் முஸ்லீம்களின் பிரச்சனையால் சந்திக்க முடியாமல் போய் விட்டதாக அறியத் தந்த போது கணவன் உயிருடன் இருக்கின்றான் எப்படியும் சந்தித்து விடலாம் என்று நம்பி வந்தவள் சோகம் தாளாது நிருபரை அணைத்துக் கொண்டதும் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தடுமாற்றமும் மனிதனின் யதார்த்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது.கதையின் முக்கிய பாத்திரங்களை திரைப்படத்தின் தொடக்கத்தில் மூன்று வேறுபட்ட இடங்களில் காட்டி இறுதியில் ஒரே இடத்தில் அவர்களைக் கொண்டு வந்து திரைப்படத்தை முடித்திருக்கின்றார் இயக்குனர்சிறந்த திரைப்படமாக இருந்த போதும் <b>சிங்கள மக்களை மையப்டுத்தியிருப்பதால் தமிழ் பார்வையாளர் நிராகரிக்கும் ஒரு சிறந்த படமாகிப் போய் விட்டது.</b>
by கறுப்பி (Sumathi Ruban?)
[size=14]August Sun (ஐரா மடியம்மா) பிரசன்னா வித்யநங்கேயின் இயக்கத்தில் வெளிவந்த ஐரா மடியம்மா எனும் சிங்களத் திரைப்படம் கனேடியத் திரையரங்கில் காண்பிக்கப் பட்டது.
1990இன் நடுப்பகுதியில் போரினால் பாதிக்கப் படும் மூன்று குடும்பங்களை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.ஒன்று முஸ்லீம் மக்கள் போராளிகளால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு அகற்றப்பட்ட போது அம்மக்களின் நிலையை காட்டி நின்றது. அதில் அரபாத் எனும் சிறுவனின் குடும்பம் முக்கியப் படுத்தப் பட்டு ஊரைவிட்டுச் செல்லும் போது boat இல் போக நேர்ந்ததால் தனது நாயை விட்டு அவன் பிரிந்து அழுதபடியே செல்கின்றான். ரூபா. 4,000 மட்டும் அனுமதிக்கப் பட்ட நிலையில் மக்கள் பணத்தை எப்படியெல்லாம் போராளிகளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றார்கள் என்பதும் காட்டப்பட்டது.அடுத்து ஒரு இளம் சிங்களப் பெண் தனது காணாமல் போன பைலட் கணவனை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக நம்பி கணவனைத் தேடும் முயற்சியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகச் சென்று கலந்துரையாட இருக்கிறார் என்று அறிந்து தனது கணவனை அவன் ஒருத்தனால் தான் கண்டுபிடித்துத் தர முடியும் என்று அவனிடம் மன்றாடித் தானும் அவனுடன் கணவனைக் கண்டு பிடித்து விடும் நம்பிக்கையில் கிளம்புகின்றாள்.அடுத்து வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு குடும்பத்தில் இளைஞன் பணத்திற்காக ஆமியில் சேர்கின்றான். அவன் தங்கை விபச்சாரியாகின்றாள். தங்கையை விபச்சார விடுதியில் கண்டு கலங்கி அவளுக்காக ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் தனது கடமையை அவன் உணர்ந்து கொள்கின்றான்.போர் சூழலால் பாதிக்கப்படும் மூன்று குடும்பங்களின் நிலை காட்டப்பாட்டாலும் இயக்குனர் பிரசன்னா தமிழ் மக்களை அப்புறப்படுத்தி சிங்கள முஸ்லீம்களுக்கு முக்கியத் துவம் கொடுத்திருப்பது சர்வதேச ரீதியில் திரையிடப்படும் திரைப்படம் என்பதால் பொருத்தமாக இல்லை.பைலட்டின் மனைவியாக வரும் நடிகை Nimmi Harasgama மிக அழகாக இருக்கின்றார். கணவனை இழந்த சோகம் அவர் முகத்தில் அதிகம் தெரியவில்லை. நிருபராக வந்த Peter D’Almeida சிறப்பாக நடித்துள்ளார். ஒரு அழகான இளம் பெண்ணோடு இரவு பகலாகப் பயணம் செய்யும் போது எழும் உணர்வுகளை மிக யதார்த்தமாக தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். இறுதியில் அவர்களைச் சந்திப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் முஸ்லீம்களின் பிரச்சனையால் சந்திக்க முடியாமல் போய் விட்டதாக அறியத் தந்த போது கணவன் உயிருடன் இருக்கின்றான் எப்படியும் சந்தித்து விடலாம் என்று நம்பி வந்தவள் சோகம் தாளாது நிருபரை அணைத்துக் கொண்டதும் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தடுமாற்றமும் மனிதனின் யதார்த்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது.கதையின் முக்கிய பாத்திரங்களை திரைப்படத்தின் தொடக்கத்தில் மூன்று வேறுபட்ட இடங்களில் காட்டி இறுதியில் ஒரே இடத்தில் அவர்களைக் கொண்டு வந்து திரைப்படத்தை முடித்திருக்கின்றார் இயக்குனர்சிறந்த திரைப்படமாக இருந்த போதும் <b>சிங்கள மக்களை மையப்டுத்தியிருப்பதால் தமிழ் பார்வையாளர் நிராகரிக்கும் ஒரு சிறந்த படமாகிப் போய் விட்டது.</b>
by கறுப்பி (Sumathi Ruban?)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

