Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு
#1
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம்
(யாழ். அலுவலக நிருபர்)


இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு.

தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு.

இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற த?94;ப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படியே நாம் செய்வோம். ஒற்றை ஆட்சிக்குள்ளும் ஒரு படைக்குக் கீழும் வாழ்வதாயின் இங்கு வாழும் உரிமையுண்டு.

ஜெனிவாவில் பேசினாலும் நோர்வேயின் தலைமையினாலும் இந்தியாவின் உறவாலும் நாட்டைப் பிரித்து உங்களிடம் தரமுடியாது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் சொல்வதே தீர்ப்பு. சிங்கள மொழிதான் எல்லோருக்கும் தாய்மொழி. இங்கு வேறு எந்த மொழி யும் இருக்க முடியாது.

எல்லா மக்களையும் பாதுகாப்பது சிங்கள இராணுவம்தான். உங்களையும் நாங்கள்தான் பாதுகாப்போம். நோர்வே இராணுவமோ இந்திய இராணுவமோ உங்களை பாதுகாக்காது. புலிகளும் உங்களைப் பாதுகாக்கமாட்டார்கள். உங்களை எம்முடன் உறவு வைத்துக் கொள்ள சொல்கிறோம்.

உங்கள் பிள்ளைகள் எங்கள் படையில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். அமெரிக்கா எமக்கு காசு தரும். சிங்களத்தை படியுங்கள். உங்களுக்கு நல்ல காலம் உண்டு.

புலிகளால் எங்களை வெல்ல முடியாது. யாழ்ப்பாணத்தை பிடிக்கமுடியாது. யாழ்ப்பாணம் பத்து வருடங்களாக எம்மிடமே இருக்கிறது. புலிகளில் கொஞ்சப்பேர்தான் இருக்கிறார்கள். எங்களிடம் இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் நாங்கள் சொல்வதுபோல நடவுங்கள். உங்களை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி
<b>
?

?</b>-
Reply
#2
http://www.freewebs.com/seeynilam/2965299230092980.htm
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
<b>இனவெறி சிங்களரோடு சேர்ந்து வாழ முடியாது</b>


சிறீ லங்காவில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழர்களாகிய நீங்கள் வந்தேறு குடிகள். இதையே எமது மகாவம்சம் கூறுகின்றது. எமது சிங்கள நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. இவ்வாறு 'அன்பான யாழ்ப்பாண மக்களே இது எங்களோட நாடு" என்ற தலைப்பில் யாழ்ப்பாண நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ---> செய்தி மூலம்: சங்கதி இணையத்தளம்



இச் செத்தியினை பார்த்ததும், என்னை மறந்து நானே சிரித்துவிட்டேன். ஈழத்தமிழர்கள் பூர்வீகக் குடிகள்தான் என்பதை மறைக்க மனிதரை வெறுக்கும் மூடர்கள் படாதபாடுபடுவதை பார்க்கையில் சரிப்பு வாராமல் என்ன செய்யும். இனவெறிபிடித்த கொடிய சிங்களவரின் கோரமுகத்தை காணாத உலகம் இன்றாவது கண்டு கொள்ளுப்மா எனபதுவே எனது நீண்டநாள் எதிர்பார்ப்பு. நாகர்கோவிலில் சிறுவர்களை நரபலியெடுத்த நாசகாரிகளையும், உயிர்கொலை நிகழ்வதை தடுக்க முறையிட யாருமற்ற நிலையில், இனி தம்மை அனைத்தையும் தாண்டிய சக்தியே காத்திடவேண்டுமென கண்ணீர்வடித்தவர்களை நவாலி தேவாலயத்தில் குண்டுகளை கொட்டி கொலை வெறியை தீர்த்த சிங்களத்து அரசு அது. பெண்களை பொருட்டாக எண்ணாது, தமிழ்பொண்கள் என்பதற்காய் தறுக்கர்கள் தாகாத செயல்கள் பல செய்து இரத்தம் பற்களில் வடிய இனவெறி வக்கிரத்து கொட்டித்தீர்த்தார்.

அன்பே அறம், தர்மமே கருமம் என போதித்த புத்த பொருமானை இளிவுபடுத்தும் நோக்கோடு, இனவாதம் கலந்து புனையப்பட்ட ஏடாம் மகாவம்சமதை. மனுதர்மம் என்றுசொல்லி மானிடரை கொன்றொளிக்கும் சூழ்ச்சிக்கு ஆதாரமென சொல்கின்ற சிங்கள வெறிபிடித்த பிசாசுகளை மனிதநேயமுள்ள மானிடன் எப்போதும் அடையாளம் கண்டுகொள்வான். தமிழனின் பத்து தலைகளை கொய்துதான் சிங்களவனுக்கு வாழ்கை என சொல்கின்ற நூலினை ஆதாரம் என சொன்னால், அதனை உலகம் நம்புமா? எனது வேற்றுநாட்டு நண்பன் ஒருவன் இதை கேட்டதும் சிரித்தான். இப்படி பட்டவர்களுடன் எவ்வாறு சேர்ந்து வாழ்கின்றீர்கள் என வினவினான். நான் சொன்னோன் அதனால்த்தான் நாம் தனித்து போய் வாழ விரும்புகின்றோம், ஆனால் விடுகிறார்களில்லையே என்றேன். அவன் எனக்கு சொன்னது இதுதான். உலகம் தர்மத்தின் சக்கரத்தில் சுழல்கின்றது அந்தவகையில் உங்கள் போராட்டம் நியாமானது, ஆகையால் உங்கள் போராட்டம் வெல்லும். உங்களிற்கென்றெ ஒரு நாடு அமையும். அப்போது உன்கூட சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் மகிழ்ந்து கொள்வேன் என்றான். எனதுகண்கள் ஏனோ கசிந்தன.

சிங்கள அரசுகளால் தமிழர்கள் கொன்றொழிக்கப்படும் பொழுது சேர்ந்து வாழ்வது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர வேறு வளி எதுவும் தமிழருக்கு இல்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)