Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய உளவுத்தொழிலில் பாலி
#1
தேசத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய உளவுத்தொழிலில் பாலியல் செயற்பாடுகள் -சங்கரன்

பெண்களினால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது பழமொழி அதனால் பெண் பாலியல் உளவாளிகளின் வருகை உளவுத்துறைக்குள் வேகமாக அதிகரித்து வருகின்றது. பாலியல் நடவடிக்கைகளை பலம் பொருந்திய ஆயுதமாக பயன்படுத்தி உளவுத் தொழிலில் ஈடுபடும் பெண் உளவாளிகளினால் ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றி அமைக்க முடிகின்றது. உளவுத்தொழிலில் பெண்கள் மிகவும் திறமையாக பணியாற்றுகின்றார்கள் என புலனாய்வு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றார்கள். உடல் கவர்சியினாலும்ää கூந்தல் அழகினாலும் அதிகாரிகளையும் தலைவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உடையவர்களாக பெண் உளவாளிகள் விளங்குகின்றனர்.

கவர்ச்சியாகத் தோன்றும் பெண் உளவாளிகள் அழகு மிடுக்கினால் காதலியாகவோ வேறுவகையிலோ ஆண்களை உணர்ச்சி வசப்படுத்தும் வல்லமை உடையவர்களாக மாறுகின்றாள்.

உளவுத்தொழிலில் பாலியல் செயற்பாடுகள் இன்று மலிந்துவிட்டன அந்தவகையில் இலங்கையிலும் பாலியல் ஆயுதத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தமிழ் இளைஞர்களை சிங்கள புலனாய்வாளர்கள் தமது வலையில் வீழ்த்துவதற்கு பாலியல் சதிகளை விலை மாதர் ஊடாக இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

தமிழ் இளைஞர்களை புலனாய்வுத் தேவைக்கு உள்வாங்கும் நோக்குடன் பாலியல் தொழிற்பாட்டு நிலையம் ஒன்றை அனுராதபுரத்தில் அமைத்திருப்பதாக கூறப்படுகின்றது. தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்ற சிங்கள பெண் உளவாளிகளையும் சோரம் போன தமிழ் பெண்களையும் சிங்கள புலனாய்வுத்துறை பாலியல் உளவுச் செயற்பாட்டிற்கு பயன்படுத்துகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் சிங்களப் பெண் பாலியல் உளவாளிகள் ஊடுருவலாம். அரசியல் பணிக்கென இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசம் செல்லும் அரசியல் போராளிகளையும் சிங்களப் பெண் பாலியல் உளவாளிகள் தமது வலையில் வீழ்த்த முயலலாம் அரசுடன் ஒட்டுப்படையாக இயங்குவோருக்கு பாலியல் செயற்பாட்டிற்கு பூரண வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. கவர்சிகரமான பெண் உளவாளிகள் மூலம் அவர்களை தொடர்ந்து வசப்படுத்தியும் வருகின்றதை சிங்கள உளவுத்துறையும் அண்மைக்கால நடவடிக்கையில் இருந்து அறிய முடிகின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குமாரிகுரே விடயமும் ஒரு புலனாய்வு ஊடுருவல் பாலியல் செயற்பாடு என்று கூற முடியும். இரண்டாம் உலக யுத்தத்தின் பாதையினையும் மாற்றியதில் சிந்தியா என்னும் பெயர் கொண்ட பெண்னின் பங்களிப்பு கனிசமானது. சிந்தியாவின் அழகினாலும் கவர்ச்சியினாலும் ஆண்கள் அவளிடம் இலகுவில் அடிமையானார்கள். சிந்தியாவின் முதல் புலனாய்வுக் களம் போலந்து நாட்டு வெளிவிவகார அமைச்சில் வேலைபார்க்கும் உயர் அதிகாரியை தனது வலையில் வீழ்த்துவதாக இருந்தது. சிந்தியாவின் அழகுக்கோலத்தை எதிர்க்க முடியாது போன போலந்து அதிகாரி அந்த அழகிய மங்கையுடன் நெருக்கமானார். இருவருக்கும் ஏற்பட்ட பாலியல் பிணைப்பால் போலந்து இரும்பு அறையில் இருந்த இரகசியங்கள் எல்லாம் கட்டிலுக்கு வந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் போக்கையே மாற்றிய உலகப்பிரசித்திபெற்ற இடமே அந்தக்கட்டில்தான்.

1941ம் ஆண்டு பிரான்ஸ்ää இத்தாலி தூதரகங்களினுள் ஊடுருவக்கூடிய ஒருவர் தேவைப்பட்டது. அதன்பிரகாரம் சிந்தியா தெரிவு செய்ய்பட்டு வோசிங்டன் நகருக்கு அனுப்பப்பட்டால் அங்கு அவள் மதுபான விருந்துகளில் பங்கு கொண்டு ஆடினாள் அதனூடாக இத்தாலி நாட்டு அதிபர் முசோலினியின் கடற்படை உதவியாளரான 'லைஸ்" என்பவரை தனது காதல் வலையில் சிக்க வைத்தாள். 'லைஸ்" தலைகால் தெரியாமல் சிந்தியாவின் மேல் காதல்கொண்டார் காமலீலைகளின் ருசியால் சிந்தியாவுக்கு முகவரானார். இந்த இரண்டாவது கட்டிலில் இத்தாலிய இரும்பறையில் பூட்டிவைத்திருந்த இரகசியங்கள் அம்பலமாகின.

சிந்தியா தனது நோக்கம் நிறைவேற காதலன் லைசை கைகழுவி விட்டு மாயமாக மறைந்தால் இறுதியில் லைசின் பலவீனமும் துரோகத்தனமும் தெரிய வந்ததினால் அவர் துரோகி என்ற பட்டத்துடன் பதவி இழந்து வீடு சென்றார். சிந்தியாவின் அடுத்த இலக்கு பிரான்ஸ் தூதரகமாக இருந்தது. தூதரின் பத்திரிகைத் தொடர்பாளரான பிரேசலுடன் ஊடுருவி காதல் தொடர்பை ஏற்படுத்திக்க கொண்டார் பிரேசலும் சிந்தியாவை தனது மூன்றாவது மனைவியின் வீட்டிற்கு அழைத்துச்சென்று அங்கு தங்குவதற்கு ஒரு அறையினை ஒதுக்கினார். இருவரும் காம லீலைகளில் ஈடுபடுவதற்கு தூதரகத்தில் தங்கினார்கள்.

காவலாளியும் அவர்களின் காமலீலைகளுக்கு இடம் கொடுத்தான். காவலாளி இடம் அளித்ததற்கு உதவியாக சிந்தியா வழமையாக பணமும் மதுவும் கொடுத்து வந்தாள். உளவு வேலைகளில் ஈடுபடும் நாட்களில் காவலாளிக்கு வழங்கும் மதுவில் மயக்க மருந்தினையும் கலந்து கொடுப்பாள் காவலாளி மயங்கிவிட சிந்தியாவும் பிரேசினுடன் காமத ;திருவிளையாடல்களில் ஈடுபட பிரித்தானிய உளவாளிகள் தூதரகத்தின் பாதுகாப்பு அறைக்குள் புகுந்து சாமர்த்தியமாக பூட்டுக்களை உடைத்து அங்கிருக்கும் இரகசியத் தகவல்களை நகலெடுத்துக்கொண்டு அதே சாமர்த்தியத்துடன் பூட்டுக்களில் தடையும் ஏதும் தெரியாமல் பூட்டி விடுவார்கள்.

சிந்தியா இருந்திரா விட்டால் பிரான்சையும் நேசநாடுகளையும் பிரித்தானியா வெற்றி கொள்வது கடினமென அதன் பாதுகாப்பு அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர். சிறிது காலத்தின் பின் 'உடலைவிற்று உளவு வேலையில் ஈடுபடுவது பற்றி வெட்கப்படவில்லையா?' என சிந்தியாவிடம் ஒரு பத்திரிகையாளர்கேட்டபோது அவளின் பதில் 'எனது பாலியல் செயற்பாட்டால் ஆயிரக்கணக்கான பிரித்தானியää அமெரிக்க உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் எனது நாடும் வெற்றிவாகை சூடியதால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.

சிந்தியாவைப்போல் இன்னுமொரு பெண் பாலியல் உளவாளியான ரெனியாவின் வாழ்க்கைச்சரிதத்தை நோக்குவோம். இவள் கிழக்கு ஜேர்மனியில் இரகசிய சேவையில் பயிற்சி பெற்றால் கியூபாவின் புரட்சித் தலைவர்களான கஸ்ரோவினையும் சேகுவேராவினையும் கண்காணிப்தற்கும் அவர்களின் திட்டங்கள் பற்றி அறிவதற்கும் எம்.எவ்.எஸ் என்ற ஜேர்மன் உளவு நிறுவனத்தாலும் கெ.ஜி.பி என்ற ரஸ்ய உளவு நிறுவனத்தாலும் ரெனியா பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தாள். ரெனியா தனது புலனாய்வுப்பணியை ஆரம்பிக்க படாதபாடுபட்டு சேகுவேராவுடன் காதல் கொண்டு அவனுக்கும் வேலை செய்தால் ஒரே நேரத்தி;ல் மூன்று நாடுகளுக்கு மூன்று பக்க முகவராக வேலைசெய்தாள். நடன நிகழ்வுகளில் அர்வம் இருந்ததினால் கலாசார பிரதிநிதியாகவும் பின்னர் கியூபாவில் கல்வி அமைச்சின் முக்கிய ஒரு அதிகாரியாகவும் பின்னர் பகுதி நேர பெண்கள் இராணுவ அமைப்பின் அதிகாரியாகவும் சேகுவேரா ரெனியாவை நியமித்தார்.

பொலிவியா நாட்டின் புரட்சிக்கான திட்டத்தை சேகுவேரா உருவாக்கியபோது உளவு வேலை பார்ப்பதற்கு பொறுப்பாளராக ரெனியா நியமிக்கப்பட்டாள் அவளின் காமலீலைகளில் சேகுவேரா மீள முடியாது போனதால் 'சே" யினை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு உருவெடுத்தால் ரெனியா என்ற அந்தப் பாலியல் உளவாளி. 'சே" யுக்குள் சாதுரியமாக ஊடுருவி இருந்த ரெனியா தனது உண்மையான எஜமானர்களுக்கு சேயின் திட்டங்களையும் நடவடிக்கைகள் பற்றி எல்லாம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

1966ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி 'சே" புரட்சிக்கான நாளை குறித்திருந்தார் ஆனால் பத்து நாட்களுக்கு முன் பொலிவியப்படைகள் சேகுவேராவின் படைகளை தாக்கி அழிக்கத் தொடங்கி விட்டன. ரெனியாவால் அனுப்பப்பட்ட புலனாய்வுத் தகவலே இத் திடீர் தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. செகுவேராவின் மரணத்திற்கும் ரெனியாதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் கூறுகின்றன ஆனால் நேசநாடுகள் அவள் ஒரு தேசபக்தை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரெனியா என்ற பாலியல் உளவாளியின் வலையில் 'சே" சிக்குண்டதால் பொலிவியாவினதும்ää கியூபாவினதும் தலைவிதியே மாற்றி எழுதப்பட்டது. உலகின் முதலாவது பாலியல் உளவாளியென வர்ணிக்கப்பட்டவள் மாற்றாக்ஹரி. இவள் ஜேர்மனிக்காக உளவு வேலை செய்தால் அவளிடம் இருந்த மிகவும் பலம் பொருந்திய ஆயுதம் தன்னிகரில்லா பாலியல் செயற்பாடும் உடல் அழகுமாகும் அதன் மூலம் தனது உளவு வேலையை இலகுவாக்கினால். யாவா நாட்டில் ஹவாய் நாட்டு நடனத்தை கற்றபின்னர் பாரிஸ் நகரத்தில் மதுபான சாலைகளில் நாட்டியக்காறி ஆனால் அங்கு அவள் இராணுவத் தளபதிகளையும் அரசியல்வாதிகளையும் முழு இரவும் தனது நடனத்தால் மகிழ்வித்து கட்டில் வரை இழுத்துச்சென்று உத்தியோகபூர்வமான இரகசியத் தகவல்களை கறந்து அவற்வை ஜேர்மனிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள்.

இவள் பிரான்சின் உளவுத்துறையினரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டால். புலனாய்வு உலகின் வெற்றிகரதமான ஊடுருவல்களை கவர்ச்சிகரமான பாலியல் உளவாளிகள் மூலம் சாதிக்க முடிகின்றது. உளவாளி பெண்களின் காதல் மொழிக்கும் காம லீலைகளுக்கும் வரலாற்றில் அடிமையானவர்களை எண்ணி கணக்கிட முடியாது. பெண் பாலியல் உளவாளிகளின் பாலியல் செயற்பாட்டால் முடிதுறந்தவர்கள் பலர். பதவி இழந்தவர்கள் பலர் துரோகி என்ற பட்டம் பெற்று தூக்கு மேடைக்கு சென்ற ஆண்கள் பலர் என்பது வரலாற்றுப்பாடமாகும்.

தமிழர் தேசமும் இவ்விடையத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். பாலியல் விளையாட்டுக்கள் சர்வசாதாரணமாகிவிட்ட இன்றைய உலகில் தமிழரின் உரிமைப்போராட்டத்தை அளிக்கவும் சிங்கள அரசு பாலியலை பலம் பொருந்திய ஆயுதமாக பயன்படுத்த முனையலாம். அந்த பெண் உளவாளிகளின் வலையில் எவருமே மாண்டு விடக் கூடாது.


தகவல் www.sooriyan.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
Confusedhock: Confusedhock: Confusedhock:
Reply
#3
Confusedhock: Confusedhock: Confusedhock:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)