Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்
#1
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்: அந்தமானிலும் நிலநடுக்கம்
ஜூன் 14, 2005

சாண்டியகோ போர்ட்பிளேர்:

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று காலை மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.


நாட்டின் வட பகுதியில் பொலிவியா, பெரு நாட்டு எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட இந்தோனேஷிய நில நடுக்கத்துக்கு (9.0) பின் ஏற்பட்டுள்ள 3வது மிகப் பெரிய பூகம்பம் இது என அமெரிக்க பூகம்பவியல் மையம் அறிவித்துள்ளது. (இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிலேயே கடந்த மார்ச் 28ம் தேதி உண்டானது.)

இன்றைய சிலி நாட்டு சக்தி வாய்ந்த பூகம்பத்தால் அமெரிக்காவின் ஹவாய் கடலோரப் பகுதியில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால், கடலடியில் நிலநடுக்கம் ஏற்படாததால் சுனாமிக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.

பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் உடைந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை.

இந் நிலையில் இன்று அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Reply
#2
http://www.newscientist.com/channel/earth/.../mg18624933.500
இந்த இணைப்பில் கூறுவதின் படி இந்துசமுத்திரப்பிரதோசத்திலும் என்னேரமும் வரலாம். உண்மை நிலவரம் பற்றி நாட்டுமக்களிற்கு தெரியுமா?

தற்பொழு எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகளின் நாடகங்களை எழுதுவதில் கவனமாக இருக்கிறார்கள்.

இதே விஞ்ஞானி பங்குளி 29 நடந்த பூகம்பம்பற்றி 2 வாரங்களிற் முன் எச்சரித்து இருந்தார். இணைப்பு:
http://www.newscientist.com/channel/earth/.../tsunami/dn7157
போர்ச்சூழலில் இப்படி ஒரு அனர்த்தம் நிகழ்ந்தால் எவ்வாறு எமது தாயகப்பகுதிகளிற்கு கால தாமதம் இள்றி ஆபத்துப்பற்றி அறிவிற்பது போன்ற விடயங்கள் பற்றி நாம் கொஞ்சம் விவாதித்தால் நன்றாக இருக்குமல்லவா?
புலத்திலுள்ளோர் தொழில் நுட்பரீதியில் எவ்வாறு அந்த தேவையை பூர்த்திசெய்யலாம் என்று கொஞசம் நாம் ஆராய்ந்து கருத்துப்பரிமாறிளால் என்ன?

இந்த விஞ்ஞாளியின் எச்சரிக்கை அடுத்து மேலும் பல விஞ்ஞாளிகள் ஆய்வாளர்களும் தொடர்ந்து கண்காணித்து புதிய தரவுகளை பெற்று நிலமையை ஆராய்ந்து அறிக்கைவிடுவார்கள் எள்று எதிர்பார்க்கலாம்.

இவற்றை வதந்திகளாக இல்லாமல் பொறுப்பான முறையில் மொழியாக்கம் செய்து எமது மக்களிற்கு விளங்கு வகையில் தாயரித்து வெளியிட்டால் என்ன?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)