09-11-2005, 07:52 AM
கெரில்லாத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம்: இராணுவ அதிகாரி தெரிவிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2005, 05:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளை கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கிழக்கு மாகாண சிரேஸ்ட இராணுவ அதிகாரியொவர் கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிராளி மீது வெற்றிகரமாகத் தாக்குல் நடத்தும் முக்கிய யுத்த நடவடிக்கையான இதனை செயற்படுத்துவதானது மிக மோசமான யுத்த நிறுத்த மீறலாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இவ்வாறானதே. பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளுக்காக நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் திடீரென வாகனத்தில் செல்ல தீர்மானித்ததாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்ததாகவும் அவர்கள் நடந்து சென்றிருந்தால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கிழக்கில் பாதுகாப்புப் படையினர் மீது முன்னர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் தற்போது அவர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
[ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2005, 05:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளை கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கிழக்கு மாகாண சிரேஸ்ட இராணுவ அதிகாரியொவர் கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிராளி மீது வெற்றிகரமாகத் தாக்குல் நடத்தும் முக்கிய யுத்த நடவடிக்கையான இதனை செயற்படுத்துவதானது மிக மோசமான யுத்த நிறுத்த மீறலாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இவ்வாறானதே. பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளுக்காக நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் திடீரென வாகனத்தில் செல்ல தீர்மானித்ததாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்ததாகவும் அவர்கள் நடந்து சென்றிருந்தால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கிழக்கில் பாதுகாப்புப் படையினர் மீது முன்னர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் தற்போது அவர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

